முதிர் கன்னி!

முதிர் கன்னி!
Published on

கவிதைத் தூறல்

பி.சி.ரகு, விழுப்புரம்
ஓவியம்
: தமிழ்

*முப்பத்தி ஐந்து ஆண்டுகள்
முடிந்து போய்விட்டன
அவள் வாழ்வில்!

*முடிச்சு போடத்தான்
முன்வரவேயில்லை
யாரும் அவள் கழுத்தில்!

*திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாமே
யாராவது தயவு செய்து
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அவளுக்கு சொர்க்கத்தின் முகவரியை!

*பெண் பார்க்க பலர் வந்து
'பொன்' அதிகம் கேட்டதால்
கன்னியாகவே அவள் இன்னும்
காலம் கழிக்கிறாள்!

*டிக்கடி கல்யாணம் ஆவதுபோல்
அவளுக்கு கனவுகள் வருகிறது
ஆனால், நிஜத்தில் ஒரு நிச்சயதார்த்தம் கூட
நடைபெறவில்லை!

*பாவம் அவள்
யாரும் சிறைவைக்காமலே
சீதையாக சிறைபட்டுக் கிடக்கிறாள்!

*தாலியையும்
குழந்தையையும்
குடும்பப் பொறுப்புகளையும்
சுமக்க வேண்டிய நேரத்தில்
கவலைகளையும்
கண்ணீரையும்
சுமந்து கொண்டிருக்கிறாள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com