
பொங்கலுக்குப் படைக்கப்படும் கரும்பு இன்சுவையானது என்று மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், இக்கரும்பு பொருளாதார அளவிலும், தொழிலியல் துறையிலும் வெகுவாகப் பயன்படுகிறதென தெரியுமா? 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதாகக் குறிப்புகள் உரைக்கின்றன.