கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!
Published on
-எஸ்.பவானி, திருச்சி
அபத்தம்

காலில்
கட்டோடு வந்தவரிடம்
காலில் அடியா என
அபத்தமாய் கேட்டவருக்கு
பதில் சொல்கிறார்
தலையை மட்டும்
ஆட்டி.

*******************************

அவசரம்

காலிங் பெல்லை
அழுத்திவிட்டு
காத்திருக்கிறான்
கதவில்
பூட்டு தொங்குவதை
கவனிக்காத ஒரு
அவசரக்காரன்.

*******************************

மணி ஓசை

கோவில் மணி
பக்தர்களுக்கு அருள்கிறது
பள்ளியின் மணி
படிப்பதற்கு அழைக்கிறது
தலைவர்களுக்கோ
ஆங்காங்கே ஒலிக்கிறது.
தொண்டர்களின்
ஜால்ரா மணி.

*******************************

அநாவசியம்

ணவர் நாத்திகம்
மனைவி ஆன்மீகம்
இது
எப்படி சாத்தியம்
மற்றவர் ஆராய்வது
அநாவசியம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com