இது ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி…!.பாரதிராஜாவின், 'புதுமைப்பெண்' படம் ரிலீஸ் ஆன சமயம்! பெத்தவங்க ஊருக்குப் போயிருந்தாங்க. நானும், என் தங்கையும் என் அண்ணனுடன், 'மார்னிங் ஷோ'வுக்குப் பிளான் போட்டாச்சு! சினிமா பார்க்கும் ஆவலில், சாப்பிடக்கூட இல்லை. சமைத்து வைத்துவிட்டு, மதியானம் வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று போய்விட்டோம். சினிமா முடிந்ததும், அண்ணா செகன்ட் ஷிஃப்ட் வேலைக்குப் போய்விட்டான்..'ஓ… ஒரு தென்றல் புயலாகி வருதே!'ன்னு பாடிக்கிட்டே வீட்டுக்குத் திரும்பினால்… அட ராமா…! கையில வீட்டுச் சாவி இல்லை! அண்ணா, தெரியாமல் கொண்டு சென்றுவிட்டான். நாங்களும், 'சாவி'யை மறந்துவிட்டோம்..இந்தக் காலம் போல ஃபோன் வசதி இல்லை. எங்கள் கையிலோ காலணா இல்லை..பசி! பசி! பசி! வெறும் வயிறோட மாலை வரை தள்ளியாச்சு!.அன்னிக்குன்னு பார்த்து, அண்ணனுக்கு ஓவர் டைம்!.யாராவது எதையாவது சாப்பிடக் கொடுப்பாங்களான்னு எதிர்பார்த்தோம்… நாங்களாகப் போய், 'பசிக்குது'ன்னு கேட்கவும் தயக்கம், வெட்கம், கௌரவம்!.யாரிடமாவது பணம் வாங்கி, பிஸ்கெட், வாழைப்பழம்னு சாப்பிட்டிருக்கலாமே? பசியில மூளையே வேலை செய்யலை போல..பசி! பசி! இரவு பத்து மணி அளவில் வந்த அண்ணன், நாங்கள் மாடிப் படியில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த பின்புதான், 'ஓ… சாவி?'னு பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்து நொந்து போனான்..அன்றைக்குத்தான் பட்டினியின் கொடுமை என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன்..ஒரு நாள், 'பசி'யே இவ்வளவு ஆழமானத் தழும்பாக இருக்குமானால், இவ்வுலகில் தினமும் சோறின்றித் தவிக்கும் உயிர்களின் கொடூர நிலைமையைக் கற்பனைக்கூட செய்ய முடியவில்லை!.எதுக்கு இப்ப பழைய ரீலை ஓட்டறன்னு கேட்கறீங்களா இனிய நட்புகளே… மேட்டர் இருக்கே!.சமீப காலமா சில, பல யூ–ட்யூப் வீடியோக்கள் கண்ணில் படுகின்றன. கண்டிப்பா நீங்களும் பார்த்திருப்பீங்க… புது மாப்பிள்ளைக்கு 101 விதமான உணவு வகைகளைச் செய்து விருந்து பரிமாறினார் பாசக்கார ஆந்திர மாமியார் ஒருவர். அதில் ஒரு கொழுக்கட்டையில் பூரணத்துக்குப் பதிலாக தங்கக்காசு வைத்திருந்தார்! (அது கொழுக்கட்டை அல்ல; 'பணக் கொழுப்பு'க் கட்டை.).தனது அன்புக் கணவருக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததைக் கொண்டாடும் வகையில், இனிப்பு, காரம், சாலட், சிற்றுண்டி என 60 விதமான டிஷ்ஸஸ் செய்து அசத்தினார் மங்கல மனைமாட்டி ஒருவர்!.ஷுகர், பி.பி., கொலஸ்ட்ரால் என அந்த சீனியர் சிட்டிஸன்க்கு என்ன பிரச்னையோ, சர்ப்பரைஸ் சிக்ஸ்ட்டி விருந்து மேஜையைப் பார்த்து, 'சிக்' ஆகி ஒரு கணம் நின்றுவிட்டார்..'சாப்பாட்டு ராமன்' என்ற காணொளியிலோ, முழு ஆடு, முழு கோழிகள், கிலோ கணக்கில் பிரியாணி என வெட்டு வெட்டு என வெட்டுகிறார் ஒருவர்..'பாஹுபலி லஞ்ச்' என்ற பெயரில் கலர் கலராக, தட்டுத் தட்டாக உணவுகள்… இனிப்புகள்… சூப்புகள்… நாலு பேர் மட்டுமே சாப்பிடணும் என்பதால் அத்தனையும் வீண்!.ஒரு நபருக்கான உணவை, இருவர் பகிர்ந்து கூட சாப்பிடலாம்… தப்பில்லை. ஆனால், பத்து பேருக்கான உணவை ஒருவர், ஒருவேளை சாப்பிட வற்புறுத்துவது, அதையும், 'பெருமைக்குரிய உபசாரமாக' காட்டிக்கொள்வது முட்டாள்தனம், துரோகம் மட்டுமல்ல; வருந்தற்குரிய குற்றம்!.வீண் விரயம் செய்வதிலேயே மோசமானது, உணவுப் பொருட்களை விரயம் செய்வதுதான்!.சாப்பிடும் பண்டத்தில் உங்கள் பெயர் இருக்கிறதோ இல்லையோ, நீங்க வீணாக்குற உணவில் நிச்சயம் அடுத்தவர் பசி இருக்குங்குறத புரிஞ்சுக்குங்க பெண்களே…!.நாம்ப ஹோட்டல்ல, வீட்டுல, விருந்துகள்ல மிச்சம் வைக்குற உணவின் அளவு, எங்கோ ஓர் ஏழையின் உயிர் மிச்சம் இருக்கத் தேவைப்படும். அதை மனசுல வெச்சு சமைக்கவும்..ப்ளீஸ்… உணவை வீணாக்காதீங்க…!.மாறாக, பகிருங்க! அன்பையும் கூடவே சேர்த்து!
இது ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி…!.பாரதிராஜாவின், 'புதுமைப்பெண்' படம் ரிலீஸ் ஆன சமயம்! பெத்தவங்க ஊருக்குப் போயிருந்தாங்க. நானும், என் தங்கையும் என் அண்ணனுடன், 'மார்னிங் ஷோ'வுக்குப் பிளான் போட்டாச்சு! சினிமா பார்க்கும் ஆவலில், சாப்பிடக்கூட இல்லை. சமைத்து வைத்துவிட்டு, மதியானம் வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று போய்விட்டோம். சினிமா முடிந்ததும், அண்ணா செகன்ட் ஷிஃப்ட் வேலைக்குப் போய்விட்டான்..'ஓ… ஒரு தென்றல் புயலாகி வருதே!'ன்னு பாடிக்கிட்டே வீட்டுக்குத் திரும்பினால்… அட ராமா…! கையில வீட்டுச் சாவி இல்லை! அண்ணா, தெரியாமல் கொண்டு சென்றுவிட்டான். நாங்களும், 'சாவி'யை மறந்துவிட்டோம்..இந்தக் காலம் போல ஃபோன் வசதி இல்லை. எங்கள் கையிலோ காலணா இல்லை..பசி! பசி! பசி! வெறும் வயிறோட மாலை வரை தள்ளியாச்சு!.அன்னிக்குன்னு பார்த்து, அண்ணனுக்கு ஓவர் டைம்!.யாராவது எதையாவது சாப்பிடக் கொடுப்பாங்களான்னு எதிர்பார்த்தோம்… நாங்களாகப் போய், 'பசிக்குது'ன்னு கேட்கவும் தயக்கம், வெட்கம், கௌரவம்!.யாரிடமாவது பணம் வாங்கி, பிஸ்கெட், வாழைப்பழம்னு சாப்பிட்டிருக்கலாமே? பசியில மூளையே வேலை செய்யலை போல..பசி! பசி! இரவு பத்து மணி அளவில் வந்த அண்ணன், நாங்கள் மாடிப் படியில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த பின்புதான், 'ஓ… சாவி?'னு பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்து நொந்து போனான்..அன்றைக்குத்தான் பட்டினியின் கொடுமை என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன்..ஒரு நாள், 'பசி'யே இவ்வளவு ஆழமானத் தழும்பாக இருக்குமானால், இவ்வுலகில் தினமும் சோறின்றித் தவிக்கும் உயிர்களின் கொடூர நிலைமையைக் கற்பனைக்கூட செய்ய முடியவில்லை!.எதுக்கு இப்ப பழைய ரீலை ஓட்டறன்னு கேட்கறீங்களா இனிய நட்புகளே… மேட்டர் இருக்கே!.சமீப காலமா சில, பல யூ–ட்யூப் வீடியோக்கள் கண்ணில் படுகின்றன. கண்டிப்பா நீங்களும் பார்த்திருப்பீங்க… புது மாப்பிள்ளைக்கு 101 விதமான உணவு வகைகளைச் செய்து விருந்து பரிமாறினார் பாசக்கார ஆந்திர மாமியார் ஒருவர். அதில் ஒரு கொழுக்கட்டையில் பூரணத்துக்குப் பதிலாக தங்கக்காசு வைத்திருந்தார்! (அது கொழுக்கட்டை அல்ல; 'பணக் கொழுப்பு'க் கட்டை.).தனது அன்புக் கணவருக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததைக் கொண்டாடும் வகையில், இனிப்பு, காரம், சாலட், சிற்றுண்டி என 60 விதமான டிஷ்ஸஸ் செய்து அசத்தினார் மங்கல மனைமாட்டி ஒருவர்!.ஷுகர், பி.பி., கொலஸ்ட்ரால் என அந்த சீனியர் சிட்டிஸன்க்கு என்ன பிரச்னையோ, சர்ப்பரைஸ் சிக்ஸ்ட்டி விருந்து மேஜையைப் பார்த்து, 'சிக்' ஆகி ஒரு கணம் நின்றுவிட்டார்..'சாப்பாட்டு ராமன்' என்ற காணொளியிலோ, முழு ஆடு, முழு கோழிகள், கிலோ கணக்கில் பிரியாணி என வெட்டு வெட்டு என வெட்டுகிறார் ஒருவர்..'பாஹுபலி லஞ்ச்' என்ற பெயரில் கலர் கலராக, தட்டுத் தட்டாக உணவுகள்… இனிப்புகள்… சூப்புகள்… நாலு பேர் மட்டுமே சாப்பிடணும் என்பதால் அத்தனையும் வீண்!.ஒரு நபருக்கான உணவை, இருவர் பகிர்ந்து கூட சாப்பிடலாம்… தப்பில்லை. ஆனால், பத்து பேருக்கான உணவை ஒருவர், ஒருவேளை சாப்பிட வற்புறுத்துவது, அதையும், 'பெருமைக்குரிய உபசாரமாக' காட்டிக்கொள்வது முட்டாள்தனம், துரோகம் மட்டுமல்ல; வருந்தற்குரிய குற்றம்!.வீண் விரயம் செய்வதிலேயே மோசமானது, உணவுப் பொருட்களை விரயம் செய்வதுதான்!.சாப்பிடும் பண்டத்தில் உங்கள் பெயர் இருக்கிறதோ இல்லையோ, நீங்க வீணாக்குற உணவில் நிச்சயம் அடுத்தவர் பசி இருக்குங்குறத புரிஞ்சுக்குங்க பெண்களே…!.நாம்ப ஹோட்டல்ல, வீட்டுல, விருந்துகள்ல மிச்சம் வைக்குற உணவின் அளவு, எங்கோ ஓர் ஏழையின் உயிர் மிச்சம் இருக்கத் தேவைப்படும். அதை மனசுல வெச்சு சமைக்கவும்..ப்ளீஸ்… உணவை வீணாக்காதீங்க…!.மாறாக, பகிருங்க! அன்பையும் கூடவே சேர்த்து!