வெற்றிலை ரசம்.தேவையானவை : வெற்றிலை – 6, புளிச்சாறு – 2ஸ்பூன், உப்பு – தேவைக்கு, வெல்லத் தூள் – ஒரு ஸ்பூன், தாளிக்க – நெய், கடுகு, சீரகம், பெருங்காயம்..செய்முறை : வெற்றிலையை அரைத்து, சாறெடுத்து வடிகட்டவும். புளிச் சாறுடன், வெற்றிலைச் சாறு கலந்து 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வெல்லத்தூள் சேர்க்கவும். இறக்கி வைத்த ரசத்தில், நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயப் பொடி போட்டு தாளிக்கவும். சுவையான, உடல் நலத்திற்கும் ஏற்ற ரசம் ரெடி.– எஸ்.ராஜம், திருச்சி.ஆலம்பாடி விந்தை.விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் என்ற ஊரின் தெற்கில் உள்ளது ஆலம்பாடி என்கிற கிராமம். இங்கே விஷேஷம் என்னவென்றால்,இந்த ஊரில் உள்ள திருமால், சாளக்ராம வடிவில் காட்சியளிக்கிறார்..பொதுவாக சாளக்ராமங்கள் நேபாளம் கண்டகி ஆற்றில்தான் கிடைக்கும் என்பார்கள். ஆனால், இந்த ஊரில் உள்ள தாமரை புஷ்கரணியில் கிடைத்த சாளக்ராமத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார்..சாதாரணமாக நாம் பார்க்கும் சாளக்ராமங்களைக் காட்டிலும் இது பெரியது. மூன்று துவாரங்கள் உடையது. இவற்றின் வழியே நோக்கினால் சங்கும், சக்கரமும் காணப்படுவதை பார்க்கலாம் என்றும், இது அபூர்வமானது என்றும், மக்களின் நம்பிக்கை..ஆல (கருமை) நிறமான சாளக்ராமம் கிடைத்ததால் இவ்வூர் ஆலம்பாடி எனப் பெயர் பெற்றது. இந்த பெருமாளின் திருநாமம் குண்டுச்சட்டிப் பெருமாள். இங்கு வழங்கப்படும் பிரசாதம் விபூதி என்பது மற்றொரு விந்தை!– வத்சலா சதாசிவன், சென்னை.முகம் பளிச்சென்றாக….குளிப்பதற்கு முன் பாலேட்டை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, கடலை மாவைத் தேய்த்து கழுவினால் முகம் பட்டு போல் பளபளப்பாக இருக்கும்.கேரட்டை நன்கு துருவி பாலுடன் கலந்து முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின் நீரில் முகம் கழுவினால், முகம் அழகாகும்.உருளைக் கிழங்கு சாறு இரண்டு ஸ்பூனோடு, ஒரு ஸ்பூன் கடலை மாவையும் கலந்து முகத்தில் தடவி, அது உலர்ந்த பின் கழுவிப் பாருங்கள். முகம் பொலிவோடு இருக்கும்.கடுகெண்ணையை தினமும் முகத்தில் தேய்த்து, பின் ஐஸ்கட்டியை முகத்தில் ஒத்தடம் கொடுத்து, வெந்நீரில் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.ஆரஞ்சு சாறு எடுத்து, அதை முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.வேப்பிலைக் கொழுந்து இலைகளை நன்றாக அரைத்து பரு உள்ள இடங்களில் பூசி வந்தால், பருக்கள் மறைந்து முகம் பளபளவென்று ஒளிரும்.கஸ்தூரி மஞ்சளுடன் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்றாக உடலில் தடவி, அது உலர்ந்த பின் குளித்தால், மேனி அழகு பெறும்.வெட்டிவேரைக் காய வைத்து, பொடித்து, ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.-ஆர். கீதா, சென்னை.ஜம் ஜப்பான்!.ஜப்பானில் 100 வயதுக்கு உட்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50000.ஜப்பானில் 6800 தீவுகள் உள்ளன.அந்த நாட்டு ரயில்கள் 18 விநாடிகளுக்கு மேல் தாமதமாக வருவதில்லை.அந்த நாட்டில் சதுரமான தர்பூசணி வளருகிறது.அங்கு குழந்தைகளைவிட வளர்ப்புப் பிராணிகள்தான் அதிகம்.கறுப்புப் பூனையை இவர்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள்.ஜப்பானின் கல்வியறிவு விகிதம் 100% ஆகும்.ஜப்பானியர்களுக்கு இது வரை 18 நோபல் பரிசுகள் கிடைத்திருக்கின்றன.நிறைய வீடுகளில் விருந்தினருக்கென தனியாக கூடுதல் காலணிகள் இருக்கின்றனதினமும் நாள் தவறாமல் காலையில் குழந்தைகள், பெரியவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் எல்லோரும் யோகாப்யாசம் செய்கின்றனர்.தாய்ப்பாலுக்கென தனி கடைகள் உள்ளன. இங்கு குளிர்ச்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தாய்ப்பால் கிடைக்கிறது.கோணப்பல் ஜப்பானில் அழகாகக் கருதப்படுகிறது. இதனால் பல்லை கோணலாக்கிக் கொள்ள பெண்கள் பல் மருத்துவரிடம் செல்கிறார்கள்நூடுல்ஸ் சாப்பிடும் போது உறிஞ்சி சத்தத்துடன் சாப்பிட வேண்டும். அப்போதுததான் அதை ரஸிப்பதாக அர்த்தம்.– பானு சந்திரன், சென்னை.முட்டைகோஸ் கோப்தா.தேவையானவை:முட்டைகோஸ் துருவியது – 3 கப், கடலைமாவு – 1 கப், எண்ணெய் – தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை :முட்டைகோஸினை, காரட் துருவது போல் துருவிக் கொள்ளவும். துருவிய கோஸ், கடலைமாவு, தூள் வகைகளை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். கோஸ் துருவலிலே தண்ணீர் நிறைய இருக்கும்.).அந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். குழிப்பணியார கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பிப் போட்டு வேகவிடவும். இதோ, சுவையான, எளிதில் செய்யக் கூடிய கோப்தா ரெடி! இதனை, க்ரேவி செய்து அதில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது அப்படியே கலந்து சாதத்துடனும் சாப்பிடலாம்.-கோவிந்தராஜன், சென்னை..சீரான ரத்த ஓட்டத்திற்கு….நாம் நோயின்றி இருக்க நமது உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். ரத்தம் சுத்தமாக இருந்தால் நோய் அண்டாது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை துளசி, சின்ன வெங்காயம், புளி, தேன், அவரைப்பிஞ்சு, முருங்கைக்கீரை வெந்தயம், பீட்ரூட், கேரட் முதலியவற்றிக்கு உண்டு..துளசி இலையை தினமும் காலை, மாலை என இரு வேளை மென்று சாப்பிட உடலில் உள்ள விஷக்கிருமிகள் நீங்கும். மார்பு சளி நீங்குவதோடு, ரத்தத்தை சுத்தமும் செய்யும்.சிறிதளவு புளியை உருண்டையாக உருட்டி, காலை, மாலை என இரு வேளை விழுங்கிட ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.சுத்தமான தேனும் ரத்தத்தை தூய்மையாக்க உதவும். தேனோடு பாலும் கலந்து சாப்பிட ரத்தம் விருத்தி அடையும்.பிஞ்சு அவரைக்காயுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொரியல் செய்து சாப்பிட ரத்தம் சுத்தமாக ஆகும்.முருங்கை கீரையுடன் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.மாதுளைச்சாறு ரத்தத்தை தூய்மையாக்கி, ரத்த விருத்தியைக் கொடுக்கும்.மணத்தக்காளி கீரை மற்றும் வெந்தயக்கீரை ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.தினமும் வெந்தயத்தை மோரில் கலந்து குடித்து வர ரத்த சுத்தி தரும்.கேரட், பீட்ரூட் இவற்றை சாறு பிழிந்து அருந்தி வர ரத்தம் சுத்தமாகும்..பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் நல்ல மருத்துவ பலன்கள் இருப்பதால் தவறாது இவற்றை உணவில் சேர்த்து நாம் பயனடையலாம்.– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
வெற்றிலை ரசம்.தேவையானவை : வெற்றிலை – 6, புளிச்சாறு – 2ஸ்பூன், உப்பு – தேவைக்கு, வெல்லத் தூள் – ஒரு ஸ்பூன், தாளிக்க – நெய், கடுகு, சீரகம், பெருங்காயம்..செய்முறை : வெற்றிலையை அரைத்து, சாறெடுத்து வடிகட்டவும். புளிச் சாறுடன், வெற்றிலைச் சாறு கலந்து 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வெல்லத்தூள் சேர்க்கவும். இறக்கி வைத்த ரசத்தில், நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயப் பொடி போட்டு தாளிக்கவும். சுவையான, உடல் நலத்திற்கும் ஏற்ற ரசம் ரெடி.– எஸ்.ராஜம், திருச்சி.ஆலம்பாடி விந்தை.விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் என்ற ஊரின் தெற்கில் உள்ளது ஆலம்பாடி என்கிற கிராமம். இங்கே விஷேஷம் என்னவென்றால்,இந்த ஊரில் உள்ள திருமால், சாளக்ராம வடிவில் காட்சியளிக்கிறார்..பொதுவாக சாளக்ராமங்கள் நேபாளம் கண்டகி ஆற்றில்தான் கிடைக்கும் என்பார்கள். ஆனால், இந்த ஊரில் உள்ள தாமரை புஷ்கரணியில் கிடைத்த சாளக்ராமத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார்..சாதாரணமாக நாம் பார்க்கும் சாளக்ராமங்களைக் காட்டிலும் இது பெரியது. மூன்று துவாரங்கள் உடையது. இவற்றின் வழியே நோக்கினால் சங்கும், சக்கரமும் காணப்படுவதை பார்க்கலாம் என்றும், இது அபூர்வமானது என்றும், மக்களின் நம்பிக்கை..ஆல (கருமை) நிறமான சாளக்ராமம் கிடைத்ததால் இவ்வூர் ஆலம்பாடி எனப் பெயர் பெற்றது. இந்த பெருமாளின் திருநாமம் குண்டுச்சட்டிப் பெருமாள். இங்கு வழங்கப்படும் பிரசாதம் விபூதி என்பது மற்றொரு விந்தை!– வத்சலா சதாசிவன், சென்னை.முகம் பளிச்சென்றாக….குளிப்பதற்கு முன் பாலேட்டை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, கடலை மாவைத் தேய்த்து கழுவினால் முகம் பட்டு போல் பளபளப்பாக இருக்கும்.கேரட்டை நன்கு துருவி பாலுடன் கலந்து முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின் நீரில் முகம் கழுவினால், முகம் அழகாகும்.உருளைக் கிழங்கு சாறு இரண்டு ஸ்பூனோடு, ஒரு ஸ்பூன் கடலை மாவையும் கலந்து முகத்தில் தடவி, அது உலர்ந்த பின் கழுவிப் பாருங்கள். முகம் பொலிவோடு இருக்கும்.கடுகெண்ணையை தினமும் முகத்தில் தேய்த்து, பின் ஐஸ்கட்டியை முகத்தில் ஒத்தடம் கொடுத்து, வெந்நீரில் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.ஆரஞ்சு சாறு எடுத்து, அதை முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.வேப்பிலைக் கொழுந்து இலைகளை நன்றாக அரைத்து பரு உள்ள இடங்களில் பூசி வந்தால், பருக்கள் மறைந்து முகம் பளபளவென்று ஒளிரும்.கஸ்தூரி மஞ்சளுடன் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்றாக உடலில் தடவி, அது உலர்ந்த பின் குளித்தால், மேனி அழகு பெறும்.வெட்டிவேரைக் காய வைத்து, பொடித்து, ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.-ஆர். கீதா, சென்னை.ஜம் ஜப்பான்!.ஜப்பானில் 100 வயதுக்கு உட்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50000.ஜப்பானில் 6800 தீவுகள் உள்ளன.அந்த நாட்டு ரயில்கள் 18 விநாடிகளுக்கு மேல் தாமதமாக வருவதில்லை.அந்த நாட்டில் சதுரமான தர்பூசணி வளருகிறது.அங்கு குழந்தைகளைவிட வளர்ப்புப் பிராணிகள்தான் அதிகம்.கறுப்புப் பூனையை இவர்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள்.ஜப்பானின் கல்வியறிவு விகிதம் 100% ஆகும்.ஜப்பானியர்களுக்கு இது வரை 18 நோபல் பரிசுகள் கிடைத்திருக்கின்றன.நிறைய வீடுகளில் விருந்தினருக்கென தனியாக கூடுதல் காலணிகள் இருக்கின்றனதினமும் நாள் தவறாமல் காலையில் குழந்தைகள், பெரியவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் எல்லோரும் யோகாப்யாசம் செய்கின்றனர்.தாய்ப்பாலுக்கென தனி கடைகள் உள்ளன. இங்கு குளிர்ச்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தாய்ப்பால் கிடைக்கிறது.கோணப்பல் ஜப்பானில் அழகாகக் கருதப்படுகிறது. இதனால் பல்லை கோணலாக்கிக் கொள்ள பெண்கள் பல் மருத்துவரிடம் செல்கிறார்கள்நூடுல்ஸ் சாப்பிடும் போது உறிஞ்சி சத்தத்துடன் சாப்பிட வேண்டும். அப்போதுததான் அதை ரஸிப்பதாக அர்த்தம்.– பானு சந்திரன், சென்னை.முட்டைகோஸ் கோப்தா.தேவையானவை:முட்டைகோஸ் துருவியது – 3 கப், கடலைமாவு – 1 கப், எண்ணெய் – தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை :முட்டைகோஸினை, காரட் துருவது போல் துருவிக் கொள்ளவும். துருவிய கோஸ், கடலைமாவு, தூள் வகைகளை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். கோஸ் துருவலிலே தண்ணீர் நிறைய இருக்கும்.).அந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். குழிப்பணியார கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பிப் போட்டு வேகவிடவும். இதோ, சுவையான, எளிதில் செய்யக் கூடிய கோப்தா ரெடி! இதனை, க்ரேவி செய்து அதில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது அப்படியே கலந்து சாதத்துடனும் சாப்பிடலாம்.-கோவிந்தராஜன், சென்னை..சீரான ரத்த ஓட்டத்திற்கு….நாம் நோயின்றி இருக்க நமது உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். ரத்தம் சுத்தமாக இருந்தால் நோய் அண்டாது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை துளசி, சின்ன வெங்காயம், புளி, தேன், அவரைப்பிஞ்சு, முருங்கைக்கீரை வெந்தயம், பீட்ரூட், கேரட் முதலியவற்றிக்கு உண்டு..துளசி இலையை தினமும் காலை, மாலை என இரு வேளை மென்று சாப்பிட உடலில் உள்ள விஷக்கிருமிகள் நீங்கும். மார்பு சளி நீங்குவதோடு, ரத்தத்தை சுத்தமும் செய்யும்.சிறிதளவு புளியை உருண்டையாக உருட்டி, காலை, மாலை என இரு வேளை விழுங்கிட ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.சுத்தமான தேனும் ரத்தத்தை தூய்மையாக்க உதவும். தேனோடு பாலும் கலந்து சாப்பிட ரத்தம் விருத்தி அடையும்.பிஞ்சு அவரைக்காயுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொரியல் செய்து சாப்பிட ரத்தம் சுத்தமாக ஆகும்.முருங்கை கீரையுடன் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.மாதுளைச்சாறு ரத்தத்தை தூய்மையாக்கி, ரத்த விருத்தியைக் கொடுக்கும்.மணத்தக்காளி கீரை மற்றும் வெந்தயக்கீரை ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.தினமும் வெந்தயத்தை மோரில் கலந்து குடித்து வர ரத்த சுத்தி தரும்.கேரட், பீட்ரூட் இவற்றை சாறு பிழிந்து அருந்தி வர ரத்தம் சுத்தமாகும்..பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் நல்ல மருத்துவ பலன்கள் இருப்பதால் தவறாது இவற்றை உணவில் சேர்த்து நாம் பயனடையலாம்.– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்