
– அரிமா சிவ. எம்.கோ. வாழப்பாடி
ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு அதில் அம்மனின் அருள் வடிவங்களாக சக்தியின் அம்சங்களாக விளங்கும் சப்த மாதாக்கள் வழிபாடும் சிறந்த ஒன்றாகும். இந்த ஆடி மாதத்தில் அவர்களை எவ்வாறு எப்படி எந்த முறையில் வழிபடவேண்டும் என்பதை இக்கட்டுரையில் (கன்னிமார் சாமிகள்) காண்போம்.
பிள்ளை வரம் வேண்டியும், பெண்கள் திருமணம் கைகூடவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், சிந்து சமவெளி நாகரிக காலத்திற்கு முற்பட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த கன்னிமார் வழிபாடு. இந்த வழிபட்டால் ஏற்படும் பலாபலன் நன்மைகளையும், படித்தறிவோம்.
சப்த மாதாக்கள், சப்த கன்னியர் / கன்னிமார், எழு அன்னையர்… இவர்களது சிலைகள் ஆற்றங்கரை. கண்மாய்க்கரை, ஓடைக்கரை, ஏரிக்கரைகளிலும் சிவாலயத்திலும் இருப்பதை நாம் காணலாம். ஆதிபராசக்தி தனது சக்தியின் அம்சங்களாக ஏழு விதங்களில் வெவ்வேறு சக்திகளாகப் பிரிந்து, மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
மூளை, சிந்தனை, படிப்பு, பார்த்தல், உணர்தல், மகப்பேறு அருளல்,
படைப்பு வழங்கும் பிரம்மனின் அம்சம்.
படையல்: சர்க்கரைப்பாகு புட்டு.
ஓம் ஹம்ஸத் வஜாயை வித்மஹே,
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்!
உடல் நலம், நிம்மதி, அமைதி, சுமத்தல், இயக்குதல், இணைத்தல் வேலைகள் சிறந்திட உதவும். மங்களத்தை அளிப்பது இவரே.
மகேசுவரனின் அம்சம்.
படையல்: சுண்டல், நீர்மோர்.
ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ, ரௌத்ரீ ப்ரசோதயாத்!
3. ஸ்ரீ கௌமாரி (மணிபூரகம்)
(கால்)
கடக்க, ஓட, நடக்க உதவுபவள், தைரியம், ஞானம், வீரம், இளமையும்
வழங்குபவள்.
முருகனின் அம்சம் இவர்.
படையல்: எலுமிச்சை சாதம்.
ஓம் சிகித் வஜாயை வித்மஹே,
சக்தி ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ, கௌமாரீ ப்ரசோதயாத்!
பாதுகாப்பு வேலை, திருப்தி, சந்தோசம், செல்வம் அளிப்பவர். அபயகரம். செயல்பாடு உண்டு, வாழ உதவி, அணைக்க வழி செய்வது வளமான வாழ்வளிப்பது.
நாராயணணின் அம்சம் இவர்.
படையல்: பாயாச வகைகள்.
ஓம் தார்ஷ்யத் வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்!
உயிர்ப்பிக்கவும், உயிர் தோன்றவும், உயிர் வளரவும், இன்புறவும், வாழ்வு பேணவும், ஆயுள்பலம் பெறவும், சுகம் கிடைக்க, சொத்து சேரவும். அழகு பெறவும் உதவுபவள்…
இந்திரனின் அம்சம் இவள்.
படையல்: பலாச்சுளை.
ஓம் சீயாமவர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ஐந்திரீ ப்ரசோதயாத்!
6. ஸ்ரீ வராகி (விசுத்தி)
(பிருஷ்டம்)
ஓய்வு பெற்றிடவும், பயமின்மை, உடலை தாங்கவும், கழிவு நீக்கவும், ஓய்வு
தரவும், எதிரிகளை அழிக்கவும் பாதுகாப்பை வழங்கிடவும் உதவுபவள்.
இவள் வராக மூர்த்தியின் அம்சம்.
படையல்: கிழங்கு வகைகள், தயிர்சாதம், முறுக்கு, எள்ளுருண்டை.
ஓம் சியாமளாயை வித்மஹே;
ஹல ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ வராஹி ப்ரசோதயாத்!
நோயற்ற வாழ்வு, வாழ்வில் வெற்றி, தீயவை அழிக்கவும், நிர்மூலம் ஆக்கவும். மோட்சம் கொடுக்கவும், எதையும் உருவாக்கவும் உதவுபவள்.
கபால பைரவரின் அம்சம் இவள்.
படையல்: அவல் சாதங்கள்.
ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே,
சூல ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ சாமுண்டாம் ப்ரசோதயாத்!
மேற்கண்ட சப்தமாதாக்கள் வழிபாட்டினால் வற்றாத வளம், குறையாத செல்வம். ஞானம், யோகம், இறைவனை அடையும் வழி ஆகிய அனைத்தும் உடனடியாக கிடைக்கும். நம்மை, ஊரை, உலகை, பிரபஞ்ச பரவெளியை, பின்பு எல்லாவற்றையும் நமக்கு காட்டி உணர்த்துபவர்கள். ஆலய வழிபாடு தோன்றுவதற்கு முன்பே, வயல்வெளி வேளாண்மை தொழிலில் ஈடுபட்ட நம் முன்னோர்கள் இந்த இயற்கை சக்திகளை தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளனர். உடலில் 7 சக்கர சக்திகளாகவும் உள்ளனர்.