-சேலம் சுபா.தற்போது கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் ஆணுக்கு இணையாக, ஏன் ஆணை விடவும் கூடுதலாக முன்னேறி இருந்தாலும் இன்னும் குடும்பம் மற்றும் சமூகவெளியில் பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. துணிவு இருக்கும் பெண்கள் காவல் நிலையத்தை நாடி, தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடுகின்றனர். பல பெண்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சி, தங்கள் பிரச்னையை யாரிடம் சொன்னால் தங்கள் பாதுகாப்புக்கு இடைஞ்சல் வராது என்ற தெளிவின்றி குழப்பத்துடன் நாட்களைக் கழிக்கின்றனர். இவர்களைப் போன்ற பெண்களுக்கு நம்பிக்கை தரும்விதமாக பல பெண்கள் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் 'பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை' எனும் அமைப்பு..இந்த அமைப்பின் மூலம் பல பெண்கள் இன்று காவல்துறையில் புகார்கள் அளிக்கும் துணிவைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்களிடம் வரும் பிரச்னைகளைத் தன்னார்வத்துடன் பொறுப்பேற்று, அதைத் தீர்த்து வருவது பாராட்டுக்குரிய விஷயம். முழுக்க முழுக்கப் பெண்களால் மட்டுமே இயங்கும் இந்த அமைப்பின் மாநிலத் தலைவி சேலத்தைச் சேர்ந்த ஷர்மிளா சரவணனை சந்தித்தோம். அவருடன் துணைத்தலைவி அன்னபூர்ணா சித்தேஸ்வரனும் இருந்தார். இந்த அமைப்பு குறித்த நமது கேள்விகளும் ஷர்மிளாவின் பதில்களும் இதோ….எப்போது யாரால் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு? தொடங்கிய நோக்கம் பணிகள்?.செல்வகணேசன் என்பவரால் நான்கு வருடங்களுக்கு முன் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி சபை தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே நானும் அவருடன் இணைந்து அந்த அமைப்பில் பயணித்தேன். ஒரு வருடம் முன்புதான் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் மற்றும் பிரச்னைகளுக்கானத் தீர்வைத் தேடும் விதமாக பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை (World Council For Women Rights-WCWR) உருவாகியது. ஏற்கனவே உருவாகி கிடப்பில் போடப்பட்ட அமைப்பிற்கு உயிரூட்டும் விதமாக நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று அரசு அங்கீகாரத்துடன் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம் ..எவ்வளவுதான் படித்திருந்தாலும் பிரச்னை என்று வரும்போது பெரும் பாலான பெண்கள் தைரியமற்று பின்வாங்குகிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் எங்கள் அமைப்பை நாடும்போது, கண்டிப்பாக அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து உதவுகிறோம். இதற்காக காவல்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், வழக்கறிஞர்களும் எங்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவுகிறார்கள்..தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேல் பெண்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சேவையைத் திறம்படச் செய்து வருகிறார்கள். பல பெண்களின் பிரச்னைகளை வெளியே கொண்டுவந்து அதற்கான தீர்வையும் பெற்றுத் தந்துள்ளோம். எங்கள் அமைப்பில் சேரும் ஆர்வமுள்ள பெண்களை வரவேற்கிறோம் ..சமூகத்தில் உங்கள் அமைப்பின் செயல்பாடுகள் என்ன?.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் எங்கள் அமைப்பு பெண்கள் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகள் முதல் நகர்ப்புறப் பள்ளிகள் வரை சென்று வருகிறோம். மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் தருகிறோம். அவரவரின் சூழலுக்கேற்ப பப்பட் ஷோ போன்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் துறை சார்ந்த பெரியோர்களின் பேச்சு மற்றும் ஆலோசனைகள் மூலமும் விழிப்புணர்வைத் தருகிறோம் ..ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவியரை ஊக்குவிக்கும்விதமாக அவர்களுக்குப் பரிசுகளும் அவார்டுகளும் தந்து வருகிறோம். உடல் நலம் குறித்த முகாம்களை நடத்துகிறோம். உதாரணமாக மாதம் இருமுறை ஒவ்வொரு ஊர்களிலும் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வருகிறோம் . முக்கியமாக எங்கள் அமைப்பின்மூலம் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பெண்களுக்கான பிரச்னைகளும் அதற்கானத் தீர்வுகளும் அலசப்படுகிறது..இதுவரை நீங்கள் சந்தித்து தீர்த்த பிரச்னைகளில் சில?.நிறைய உண்டு. துணி வியாபாரம் செய்யும் ஒரு பெண். இரண்டு குழந்தைகள் அவருக்கு. பணப்பிரச்னையில் மாட்டிக்கொண்டார். அவரின் தேவைக்காக கடன் தரும் ஆன்லைன் லிங்கை ஓபன் செய்து இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால், பணம் கடனாகத் தந்தவன் இந்தப் பெண்ணை மிரட்டி, மிரட்டி அதிகப் பணத்தைத் தருமாறு வற்புறுத் தியுள்ளான். ஒரு கட்டத்தில் நீ வாங்கியக் கடன் எண்பதாயிரமாக ஆகிவிட்டது. உடனே அதைக் கட்டு என்று அதிகமாக மிரட்டல் வர அந்தப் பெண் முடியாமல் தற்கொலை செய்துகொள்ளவும் தயாராக இருந்த கட்டத்தில் உதவி கேட்டு எங்களை நாடினாள். நாங்கள் காவல்துறையின் துணையுடன் போராடி அந்த லிங்கை முடக்கி வைத்தோம். இன்றும் அந்தப் பெண் கையெடுத்துக் கும்பிடுகிறாள்..இதேபோல் கொரானாக் காலத்தில் ஒரு மாணவியைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் ரீதியாக மிரட்டியும், கண்களை உருட்டியும், உதடுகளை மடித்தும் பயமுறுத்தியவர்களை அந்த மாணவி, அவள் ட்யூஷன் ஆசிரியையிடம் சொல்லி அவர் எங்களிடம் உதவி கேட்க, நாங்கள் காவலர்களை விட்டு மிரட்டச் சொன்னதில் இப்போது அந்த சிறுமி எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பள்ளிக்குச் சென்றுவருகிறாள்..செங்கல்பட்டில் ஒரு அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. பெண் பிள்ளைகள் வெளியில் வந்து நிற்கவும் முடியவில்லை. காரணம் குடிமகன்கள் சுவர் இல்லாத பள்ளியின் அருகில் குடித்துவிட்டு வீசி எறியும் பாட்டில்கள். பொதுமக்கள் எங்களிடம் அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பின்மைப் பற்றிச் சொல்ல… நாங்கள் அரசின் கவனத்திற்குப் பள்ளியின் நிலையைக் கொண்டுசென்று, அந்தப் பள்ளிக்குக் காம்பவுண்ட் சுவர் எழுப்பித் தந்துள்ளோம்..குடும்ப வன்முறை வழக்குகளும் எங்களிடம் அதிகம் வரும். மனநலம் குன்றிய கணவனின் கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் அவர் மனைவி எங்களிடம் வந்தார். இருவரையும் அழைத்துப் பேசியதில் கணவரின் பக்கமுள்ளக் குறையை முழுமையாக மனைவிக்குப் புரிய வைத்து கணவருக்கும், மனைவியின் அருமையை எடுத்துக்கூறி இன்று அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து குடும்பம் நடத்துகின்றனர்..பெற்ற மகள்களையே வீட்டைவிட்டு வெளியேறும்படி டார்ச்சர் தந்த தந்தையை அழைத்துப் பேசி மகள்களுக்கும், தந்தைக்கும் இடையில் இருந்த மனத்தாங்கல்களைச் சரி செய்து அனுப்பினோம் ..இப்படி நிறையச் சம்பவங்கள்… இப்போதுதான் பெண்களுக்கும் துணிவு வந்து தவறுகளைத் தட்டிக் கேட்கிறார்கள். அவர்களுக்கு எங்களைப் போன்ற அமைப்புகளே ஆதரவாக இருந்து அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கிறது. எங்களுக்குப் பலமாக இருந்து உதவுவதில் காவல்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் எங்கள் அமைப்பின் சார்பில்பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் போராட்டங்கள் போன்றவைகளை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்..சமீபத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து?.மிகவும் வேதனை தரும் விஷயம் அந்தப் பெண்ணின் மரணம். இந்தப் பெண்ணுக்கான நீதி வேண்டும். போராட்டங்கள் மற்றப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்புக் கேடயமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. தட்டிக் கேட்காமல் இருக்கும்வரை தவறுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இம்மாதிரி சம்பவங்கள் நிகழும்போது மட்டுமே பொதுமக்களாகிய நாம் கொந்தளிக்கிறோம். பின் மறந்தும் போகிறோம் என்பதும் வேதனையே. தவறு செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனையைத் தந்தால் மட்டுமே மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம்.."பெண்களுக்கு நிகழும் அநீதிகளை தைரியமாக வெளியில் கொண்டு வாருங்கள்… உதவுவதற்கு நல்ல மனம் கொண்ட காவல்துறையினரும் எங்களைப் போன்றவர்களும் காத்திருக்கிறோம்" மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்லி முடித்தார் ஷர்மிளா.
-சேலம் சுபா.தற்போது கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் ஆணுக்கு இணையாக, ஏன் ஆணை விடவும் கூடுதலாக முன்னேறி இருந்தாலும் இன்னும் குடும்பம் மற்றும் சமூகவெளியில் பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. துணிவு இருக்கும் பெண்கள் காவல் நிலையத்தை நாடி, தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடுகின்றனர். பல பெண்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சி, தங்கள் பிரச்னையை யாரிடம் சொன்னால் தங்கள் பாதுகாப்புக்கு இடைஞ்சல் வராது என்ற தெளிவின்றி குழப்பத்துடன் நாட்களைக் கழிக்கின்றனர். இவர்களைப் போன்ற பெண்களுக்கு நம்பிக்கை தரும்விதமாக பல பெண்கள் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் 'பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை' எனும் அமைப்பு..இந்த அமைப்பின் மூலம் பல பெண்கள் இன்று காவல்துறையில் புகார்கள் அளிக்கும் துணிவைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்களிடம் வரும் பிரச்னைகளைத் தன்னார்வத்துடன் பொறுப்பேற்று, அதைத் தீர்த்து வருவது பாராட்டுக்குரிய விஷயம். முழுக்க முழுக்கப் பெண்களால் மட்டுமே இயங்கும் இந்த அமைப்பின் மாநிலத் தலைவி சேலத்தைச் சேர்ந்த ஷர்மிளா சரவணனை சந்தித்தோம். அவருடன் துணைத்தலைவி அன்னபூர்ணா சித்தேஸ்வரனும் இருந்தார். இந்த அமைப்பு குறித்த நமது கேள்விகளும் ஷர்மிளாவின் பதில்களும் இதோ….எப்போது யாரால் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு? தொடங்கிய நோக்கம் பணிகள்?.செல்வகணேசன் என்பவரால் நான்கு வருடங்களுக்கு முன் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி சபை தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே நானும் அவருடன் இணைந்து அந்த அமைப்பில் பயணித்தேன். ஒரு வருடம் முன்புதான் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் மற்றும் பிரச்னைகளுக்கானத் தீர்வைத் தேடும் விதமாக பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை (World Council For Women Rights-WCWR) உருவாகியது. ஏற்கனவே உருவாகி கிடப்பில் போடப்பட்ட அமைப்பிற்கு உயிரூட்டும் விதமாக நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று அரசு அங்கீகாரத்துடன் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம் ..எவ்வளவுதான் படித்திருந்தாலும் பிரச்னை என்று வரும்போது பெரும் பாலான பெண்கள் தைரியமற்று பின்வாங்குகிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் எங்கள் அமைப்பை நாடும்போது, கண்டிப்பாக அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து உதவுகிறோம். இதற்காக காவல்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், வழக்கறிஞர்களும் எங்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவுகிறார்கள்..தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேல் பெண்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சேவையைத் திறம்படச் செய்து வருகிறார்கள். பல பெண்களின் பிரச்னைகளை வெளியே கொண்டுவந்து அதற்கான தீர்வையும் பெற்றுத் தந்துள்ளோம். எங்கள் அமைப்பில் சேரும் ஆர்வமுள்ள பெண்களை வரவேற்கிறோம் ..சமூகத்தில் உங்கள் அமைப்பின் செயல்பாடுகள் என்ன?.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் எங்கள் அமைப்பு பெண்கள் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகள் முதல் நகர்ப்புறப் பள்ளிகள் வரை சென்று வருகிறோம். மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் தருகிறோம். அவரவரின் சூழலுக்கேற்ப பப்பட் ஷோ போன்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் துறை சார்ந்த பெரியோர்களின் பேச்சு மற்றும் ஆலோசனைகள் மூலமும் விழிப்புணர்வைத் தருகிறோம் ..ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவியரை ஊக்குவிக்கும்விதமாக அவர்களுக்குப் பரிசுகளும் அவார்டுகளும் தந்து வருகிறோம். உடல் நலம் குறித்த முகாம்களை நடத்துகிறோம். உதாரணமாக மாதம் இருமுறை ஒவ்வொரு ஊர்களிலும் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வருகிறோம் . முக்கியமாக எங்கள் அமைப்பின்மூலம் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பெண்களுக்கான பிரச்னைகளும் அதற்கானத் தீர்வுகளும் அலசப்படுகிறது..இதுவரை நீங்கள் சந்தித்து தீர்த்த பிரச்னைகளில் சில?.நிறைய உண்டு. துணி வியாபாரம் செய்யும் ஒரு பெண். இரண்டு குழந்தைகள் அவருக்கு. பணப்பிரச்னையில் மாட்டிக்கொண்டார். அவரின் தேவைக்காக கடன் தரும் ஆன்லைன் லிங்கை ஓபன் செய்து இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால், பணம் கடனாகத் தந்தவன் இந்தப் பெண்ணை மிரட்டி, மிரட்டி அதிகப் பணத்தைத் தருமாறு வற்புறுத் தியுள்ளான். ஒரு கட்டத்தில் நீ வாங்கியக் கடன் எண்பதாயிரமாக ஆகிவிட்டது. உடனே அதைக் கட்டு என்று அதிகமாக மிரட்டல் வர அந்தப் பெண் முடியாமல் தற்கொலை செய்துகொள்ளவும் தயாராக இருந்த கட்டத்தில் உதவி கேட்டு எங்களை நாடினாள். நாங்கள் காவல்துறையின் துணையுடன் போராடி அந்த லிங்கை முடக்கி வைத்தோம். இன்றும் அந்தப் பெண் கையெடுத்துக் கும்பிடுகிறாள்..இதேபோல் கொரானாக் காலத்தில் ஒரு மாணவியைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் ரீதியாக மிரட்டியும், கண்களை உருட்டியும், உதடுகளை மடித்தும் பயமுறுத்தியவர்களை அந்த மாணவி, அவள் ட்யூஷன் ஆசிரியையிடம் சொல்லி அவர் எங்களிடம் உதவி கேட்க, நாங்கள் காவலர்களை விட்டு மிரட்டச் சொன்னதில் இப்போது அந்த சிறுமி எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பள்ளிக்குச் சென்றுவருகிறாள்..செங்கல்பட்டில் ஒரு அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. பெண் பிள்ளைகள் வெளியில் வந்து நிற்கவும் முடியவில்லை. காரணம் குடிமகன்கள் சுவர் இல்லாத பள்ளியின் அருகில் குடித்துவிட்டு வீசி எறியும் பாட்டில்கள். பொதுமக்கள் எங்களிடம் அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பின்மைப் பற்றிச் சொல்ல… நாங்கள் அரசின் கவனத்திற்குப் பள்ளியின் நிலையைக் கொண்டுசென்று, அந்தப் பள்ளிக்குக் காம்பவுண்ட் சுவர் எழுப்பித் தந்துள்ளோம்..குடும்ப வன்முறை வழக்குகளும் எங்களிடம் அதிகம் வரும். மனநலம் குன்றிய கணவனின் கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் அவர் மனைவி எங்களிடம் வந்தார். இருவரையும் அழைத்துப் பேசியதில் கணவரின் பக்கமுள்ளக் குறையை முழுமையாக மனைவிக்குப் புரிய வைத்து கணவருக்கும், மனைவியின் அருமையை எடுத்துக்கூறி இன்று அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து குடும்பம் நடத்துகின்றனர்..பெற்ற மகள்களையே வீட்டைவிட்டு வெளியேறும்படி டார்ச்சர் தந்த தந்தையை அழைத்துப் பேசி மகள்களுக்கும், தந்தைக்கும் இடையில் இருந்த மனத்தாங்கல்களைச் சரி செய்து அனுப்பினோம் ..இப்படி நிறையச் சம்பவங்கள்… இப்போதுதான் பெண்களுக்கும் துணிவு வந்து தவறுகளைத் தட்டிக் கேட்கிறார்கள். அவர்களுக்கு எங்களைப் போன்ற அமைப்புகளே ஆதரவாக இருந்து அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கிறது. எங்களுக்குப் பலமாக இருந்து உதவுவதில் காவல்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் எங்கள் அமைப்பின் சார்பில்பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் போராட்டங்கள் போன்றவைகளை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்..சமீபத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து?.மிகவும் வேதனை தரும் விஷயம் அந்தப் பெண்ணின் மரணம். இந்தப் பெண்ணுக்கான நீதி வேண்டும். போராட்டங்கள் மற்றப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்புக் கேடயமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. தட்டிக் கேட்காமல் இருக்கும்வரை தவறுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இம்மாதிரி சம்பவங்கள் நிகழும்போது மட்டுமே பொதுமக்களாகிய நாம் கொந்தளிக்கிறோம். பின் மறந்தும் போகிறோம் என்பதும் வேதனையே. தவறு செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனையைத் தந்தால் மட்டுமே மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம்.."பெண்களுக்கு நிகழும் அநீதிகளை தைரியமாக வெளியில் கொண்டு வாருங்கள்… உதவுவதற்கு நல்ல மனம் கொண்ட காவல்துறையினரும் எங்களைப் போன்றவர்களும் காத்திருக்கிறோம்" மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்லி முடித்தார் ஷர்மிளா.