படித்ததில் பிடித்தது!.இளநீர் சாப்பிட்டால் சளி அகலும் என்பதே உண்மை.நம் ரத்தத்தில் இருப்பது போல் சரியான அளவில் மின் உப்புகள் இளநீரில் இருப்பதால் இளநீர் இயற்கை தந்த நல்லதொரு டானிக். இதை வெட்டிய உடனே பருகிவிட வேண்டும். இதில் அதிக அளவில் சர்க்கரை பொருள்களும், தாது உப்புகளும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன. குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் சத்துகள் இதில் உள்ளன..தேங்காய் முதிர்ச்சியடையும்போது இவை சுக்ரோஸாக மாறிவிடுகிறது. முற்றின தேங்காயில் 90 சதவிகிதம் சுக்ரோஸ் ஆகும். பொட்டாசியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம் போன்ற தாது உப்புகளே உள்ளன. பொடாஷியத்தின் அளவு தென்னைக்கு இடப்படும். "பொடாஷ்" சத்து உரங்களின் அளவைப் பொறுத்தது. இவைகள் நம் உடலிலிருந்து சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற உதவுகிறது.புரதச் சத்து இளநீரில் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரம் பாலில் உள்ள புரதச் சத்தைவிட உயர்வானது..இளநீரில் அஸ்கார்டிக் அமிலமும் வைட்டமின் பி பிரிவு அமிலங்களும் உள்ளன. 22 – 37 மி.கி/100 மி.லி. ஆகும். காபி, டீயை கைவிட்டு எல்லோரும் இதை பருகலாம். மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு..மருத்துவ குணங்கள்:.ஜீரண கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து.வளர்ச்சியை அதிகரிக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன.வேர்க்குரு, வேனற்கட்டி, பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புகளைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.இளநீர் பருகுவது உடல் சூட்டையும் குறைக்கிறது. குடல் புழுக்களை அழிக்கிறது.முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிறந்த பானம்.சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகிறது.இது சிவப்பு ரத்த அணுக்களை அழிக்காது. ரத்தத்தில் உள்ள பிளாஷ்மாவோடு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் கருதப்படுகிறது.ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற இளநீர் உதவுகிறது..– ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்.……………………………. மருத்துவ டீ வகைகள் நான்கு….கொய்யா இலை டீ.சுவாசக்குழாய்ப்பகுதியில் அலர்ஜியால் இருமல் , தும்மல் என சிரமப்படுகிறவர்கள் கொய்யா இலை டீ குடிக்கலாம் .கொய்யா இலையில் எப்படி தயாரிப்பது? கொய்யா இலைகளை பறித்து வெயிலில் நன்கு காயவைத்து சேகரித்து வைக்கவும். இந்த காயவைத்த இலைகளை இரண்டு எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி, தேநீர் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். அந்த நீரை வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். இதுதான் கொய்யா டீ. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது..சங்கு புஷ்ப டீ.கொதிக்க வைத்த பாலில்லா தேநீரில், சில சங்குப் பூக்களை போட்டு, 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொள்ள வேண்டும் .அதில் எலுமிச்சைச் சாறு சில சொட்டுக்கள் விட்டு தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ விருப்பப்படி பருகலாம் . இந்த டீ மன அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. இந்த டீயில் இருக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ் என்ற ரசாயனம் புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறது. அத்துடன் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.அதில் ஆன்டி கிளைகேஷன் இருப்பதால் வயது முதிர்வை தடுத்து இளமையை பாதுகாத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது..ஆவாரம் பூ டீ.ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி டப்பாவில் சேகரித்து வைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உலர்ந்த பூக்களை தூளாக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ தூளைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது வெல்லம் சேர்த்து அருந்த நீரிழிவு கட்டுப்படும் .நீரிழிவால் உண்டாகக்கூடிய தாகம், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகளையும் கட்டுப்படுத்தும்.ஆவாரம்பூ பால் டீ: ஆவாரம்பூ தூளுடன் நீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்கவைத்து டீ அருந்தினால் சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுத்து, தோல் வறட்சியை சரி செய்யும்..நாட்டு பன்னீர் ரோஜா டீ.உலர்ந்த பன்னீர் ரோஜா இதழ்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து சிறிது தேன் அல்லது கல்கண்டு பொடி சேர்த்து அருந்த சுவை அள்ளும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், உடலின் வெப்பத்தை சீராக்கும். கர்ப்பப்பையில் உருவாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும், மலத்தை இளக்கும் தன்மையும் கொண்டது..– இந்திராணி தங்கவேல், சென்னை
படித்ததில் பிடித்தது!.இளநீர் சாப்பிட்டால் சளி அகலும் என்பதே உண்மை.நம் ரத்தத்தில் இருப்பது போல் சரியான அளவில் மின் உப்புகள் இளநீரில் இருப்பதால் இளநீர் இயற்கை தந்த நல்லதொரு டானிக். இதை வெட்டிய உடனே பருகிவிட வேண்டும். இதில் அதிக அளவில் சர்க்கரை பொருள்களும், தாது உப்புகளும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன. குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் சத்துகள் இதில் உள்ளன..தேங்காய் முதிர்ச்சியடையும்போது இவை சுக்ரோஸாக மாறிவிடுகிறது. முற்றின தேங்காயில் 90 சதவிகிதம் சுக்ரோஸ் ஆகும். பொட்டாசியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம் போன்ற தாது உப்புகளே உள்ளன. பொடாஷியத்தின் அளவு தென்னைக்கு இடப்படும். "பொடாஷ்" சத்து உரங்களின் அளவைப் பொறுத்தது. இவைகள் நம் உடலிலிருந்து சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற உதவுகிறது.புரதச் சத்து இளநீரில் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரம் பாலில் உள்ள புரதச் சத்தைவிட உயர்வானது..இளநீரில் அஸ்கார்டிக் அமிலமும் வைட்டமின் பி பிரிவு அமிலங்களும் உள்ளன. 22 – 37 மி.கி/100 மி.லி. ஆகும். காபி, டீயை கைவிட்டு எல்லோரும் இதை பருகலாம். மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு..மருத்துவ குணங்கள்:.ஜீரண கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து.வளர்ச்சியை அதிகரிக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன.வேர்க்குரு, வேனற்கட்டி, பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புகளைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.இளநீர் பருகுவது உடல் சூட்டையும் குறைக்கிறது. குடல் புழுக்களை அழிக்கிறது.முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிறந்த பானம்.சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகிறது.இது சிவப்பு ரத்த அணுக்களை அழிக்காது. ரத்தத்தில் உள்ள பிளாஷ்மாவோடு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் கருதப்படுகிறது.ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற இளநீர் உதவுகிறது..– ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்.……………………………. மருத்துவ டீ வகைகள் நான்கு….கொய்யா இலை டீ.சுவாசக்குழாய்ப்பகுதியில் அலர்ஜியால் இருமல் , தும்மல் என சிரமப்படுகிறவர்கள் கொய்யா இலை டீ குடிக்கலாம் .கொய்யா இலையில் எப்படி தயாரிப்பது? கொய்யா இலைகளை பறித்து வெயிலில் நன்கு காயவைத்து சேகரித்து வைக்கவும். இந்த காயவைத்த இலைகளை இரண்டு எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி, தேநீர் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். அந்த நீரை வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். இதுதான் கொய்யா டீ. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது..சங்கு புஷ்ப டீ.கொதிக்க வைத்த பாலில்லா தேநீரில், சில சங்குப் பூக்களை போட்டு, 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொள்ள வேண்டும் .அதில் எலுமிச்சைச் சாறு சில சொட்டுக்கள் விட்டு தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ விருப்பப்படி பருகலாம் . இந்த டீ மன அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. இந்த டீயில் இருக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ் என்ற ரசாயனம் புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறது. அத்துடன் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.அதில் ஆன்டி கிளைகேஷன் இருப்பதால் வயது முதிர்வை தடுத்து இளமையை பாதுகாத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது..ஆவாரம் பூ டீ.ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி டப்பாவில் சேகரித்து வைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உலர்ந்த பூக்களை தூளாக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ தூளைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது வெல்லம் சேர்த்து அருந்த நீரிழிவு கட்டுப்படும் .நீரிழிவால் உண்டாகக்கூடிய தாகம், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகளையும் கட்டுப்படுத்தும்.ஆவாரம்பூ பால் டீ: ஆவாரம்பூ தூளுடன் நீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்கவைத்து டீ அருந்தினால் சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுத்து, தோல் வறட்சியை சரி செய்யும்..நாட்டு பன்னீர் ரோஜா டீ.உலர்ந்த பன்னீர் ரோஜா இதழ்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து சிறிது தேன் அல்லது கல்கண்டு பொடி சேர்த்து அருந்த சுவை அள்ளும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், உடலின் வெப்பத்தை சீராக்கும். கர்ப்பப்பையில் உருவாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும், மலத்தை இளக்கும் தன்மையும் கொண்டது..– இந்திராணி தங்கவேல், சென்னை