ராமநாதன் எங்கள் வீட்டில் குடியிருந்தவர். சிறு வியாபாரி. எங்கள் காலனியில் உள்ள அரசமரப் பிள்ளையாரிடம் அவ்வளவு பக்தி! சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி போன்ற நாட்களில் கோயிலே கதியாகக் கிடப்பார்..ஆனால், அவர் நினைத்த அளவுக்கு தொழிலில் லாபம் இல்லை. யாரோ சொன்னார்கள் என்று தீவிர அய்யப்ப பக்தர் ஆனார். சபரிமலைக்கு மாலை போட்டு அமர்க்களம் செய்தார். நடுவே நண்பர் வாங்கிக் கொடுத்தார் என, 'சந்தோஷிமா' பூஜை செய்தார். ஜோசியர் சொன்னார் என்று வாராஹி, பிரத்யங்கிரா வழிபாட்டில் ஆர்வம் காட்டினார். ரஜினி, லாரன்ஸால் கவரப்பட்டு, ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் உபாசகர் ஆனார். இப்போது, ஷீரடி சாயி பக்தராக ஒன்பது வியாழக்கிழமை பூஜை செய்துகொண்டிருக்கிறார்… "சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குப் போனால் பலன் கிடைக்குமாமே! சதுரகிரி மலை போலாம்னு இருக்கேன்" – இது லேட்டஸ்ட்..ஆடு, மாடு, மான் மட்டுமே கூட்டம் கூட்டமாக வாழ்வது இல்லை; நமக்கும் அந்த மனோபாவம் நிறையவே உண்டு..எங்கே கூட்டம் சேர்கிறதோ அங்கே போய் விழுவது மனித சுபாவம்! ரிஸ்க் எடுக்க பயம்!.l கூட்டமாக இருக்கும் ஜவுளிக் கடைக்குப் போய், ஊர்ப்பட்ட விலையைக் கொடுத்து, பழைய ஸ்டாக்கை வாங்கி வந்த அனுபவம் யாருக்குத்தான் இல்லை?.l FBல சிநேகிதிகள், 'லைக்ஸ்' போட்டால், நாமும் போடுவது… (விஷயம் என்னன்னு தெரியாமலேயே.).l அண்ணி குடும்பத்துடன் போனாள் என்பதற்காக, நாமும் அமர்நாத், கேதார்நாத் போவது….l தேனிலவுக்கு லோன் போட்டு மொரீஷியஸ் போவது….l கல்யாணத்தில் சங்கீத், மெஹந்தி வைத்து, பொருத்தமே இல்லாமல் லெஹங்கா, டிஸைனர் குர்த்தா அணிவது….l பல காலமாய் ஜெயிக்கக்கூடிய சின்னத்துக்கே வோட்டு போடுவது….l அலுவலக நண்பர்கள், 'க்ரீன் டீ'யை மெச்சிப் பேசினால், நாமும் உடனே, 'க்ரீன் டீ'க்கு மாறுவது….l எல்லோரும் போராடுகிறார்கள் என்பதால் சுய சிந்தனை இல்லாமல் நாமும் போராடுவது….l ஹேர் கலரிங், டாட்டு… இன்ன பிற… .இவை எல்லாமே, 'மந்தை மனநிலை' எனப்படும் ஹெர்ட்மென்டாலிடியின் அறிகுறிகளாக மனோதத்துவம் சொல்கிறது. இந்த மந்தைநிலை, நிச்சயம் மாற வேண்டிய மந்தநிலை. இதனால் சுய விடுப்பு, ரசனை, சுய சிந்தனை எல்லாமே மாறிப்போய் நமக்குத் தேவையோ இல்லையோ, யாரையோ இம்ப்ரஸ் செய்ய, எதையோ செய்து கொண்டிருக்கிறோம்..புதிதாக, தனியாக, சொந்தமாக எதையாவது யோசித்து செய்தால், பிரச்னையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவோமோ? நாலு பேர் கேலி செய்வார்களோ? நம்ப ஸ்டார் ரேட்டிங் குறைஞ்சுடுமோங்கிற அச்சம்தான் இதற்குக் காரணம்!.வாழ்க்கையில ஜெயிச்சவங்களை கூர்ந்து கவனிச்சீங்கன்னா, அவங்க எல்லாருமே புதுமையா எதையாவது செஞ்சவங்கதான்!.எல்லோரும் போற பாதை சுலபமா இருக்கலாம். ஆனா, நீங்க உங்க உள்ளுணர்வால உந்தப்பட்டு, சுயமா போடற பாதைதான் சுவாரசியமா இருக்கும். கூட்டத்துல ஒரு பகுதியா இருக்கிறது சேஃப்தான். ஆனா, அது உங்களோட தனித்திறனை சிதைக்கிற அளவுக்குப் போயிடக் கூடாது..அண்டை வீட்டாரை, உறவினர்களை, நண்பர்களை நகல் எடுக்காமல், உங்கள் சொந்த மூளையை, திறமையை நம்பி முடிவெடுங்க….'மந்தை மனநிலை'யிலேயே இருந்தால் மகிழ்ச்சியும், நிறைவும் பெறாத தேடல் மனிதர்களாகவே இருப்போம், கடைசி மூச்சு வரை!.வாழ்க்கையில ஒரு, 'கிக்' வேணும்னா, 'யூனிக்'கா இருந்து பாருங்களேன்! டோன்ட் பி எ 'காப்பி கேட்' ப்ளீஸ்…
ராமநாதன் எங்கள் வீட்டில் குடியிருந்தவர். சிறு வியாபாரி. எங்கள் காலனியில் உள்ள அரசமரப் பிள்ளையாரிடம் அவ்வளவு பக்தி! சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி போன்ற நாட்களில் கோயிலே கதியாகக் கிடப்பார்..ஆனால், அவர் நினைத்த அளவுக்கு தொழிலில் லாபம் இல்லை. யாரோ சொன்னார்கள் என்று தீவிர அய்யப்ப பக்தர் ஆனார். சபரிமலைக்கு மாலை போட்டு அமர்க்களம் செய்தார். நடுவே நண்பர் வாங்கிக் கொடுத்தார் என, 'சந்தோஷிமா' பூஜை செய்தார். ஜோசியர் சொன்னார் என்று வாராஹி, பிரத்யங்கிரா வழிபாட்டில் ஆர்வம் காட்டினார். ரஜினி, லாரன்ஸால் கவரப்பட்டு, ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் உபாசகர் ஆனார். இப்போது, ஷீரடி சாயி பக்தராக ஒன்பது வியாழக்கிழமை பூஜை செய்துகொண்டிருக்கிறார்… "சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குப் போனால் பலன் கிடைக்குமாமே! சதுரகிரி மலை போலாம்னு இருக்கேன்" – இது லேட்டஸ்ட்..ஆடு, மாடு, மான் மட்டுமே கூட்டம் கூட்டமாக வாழ்வது இல்லை; நமக்கும் அந்த மனோபாவம் நிறையவே உண்டு..எங்கே கூட்டம் சேர்கிறதோ அங்கே போய் விழுவது மனித சுபாவம்! ரிஸ்க் எடுக்க பயம்!.l கூட்டமாக இருக்கும் ஜவுளிக் கடைக்குப் போய், ஊர்ப்பட்ட விலையைக் கொடுத்து, பழைய ஸ்டாக்கை வாங்கி வந்த அனுபவம் யாருக்குத்தான் இல்லை?.l FBல சிநேகிதிகள், 'லைக்ஸ்' போட்டால், நாமும் போடுவது… (விஷயம் என்னன்னு தெரியாமலேயே.).l அண்ணி குடும்பத்துடன் போனாள் என்பதற்காக, நாமும் அமர்நாத், கேதார்நாத் போவது….l தேனிலவுக்கு லோன் போட்டு மொரீஷியஸ் போவது….l கல்யாணத்தில் சங்கீத், மெஹந்தி வைத்து, பொருத்தமே இல்லாமல் லெஹங்கா, டிஸைனர் குர்த்தா அணிவது….l பல காலமாய் ஜெயிக்கக்கூடிய சின்னத்துக்கே வோட்டு போடுவது….l அலுவலக நண்பர்கள், 'க்ரீன் டீ'யை மெச்சிப் பேசினால், நாமும் உடனே, 'க்ரீன் டீ'க்கு மாறுவது….l எல்லோரும் போராடுகிறார்கள் என்பதால் சுய சிந்தனை இல்லாமல் நாமும் போராடுவது….l ஹேர் கலரிங், டாட்டு… இன்ன பிற… .இவை எல்லாமே, 'மந்தை மனநிலை' எனப்படும் ஹெர்ட்மென்டாலிடியின் அறிகுறிகளாக மனோதத்துவம் சொல்கிறது. இந்த மந்தைநிலை, நிச்சயம் மாற வேண்டிய மந்தநிலை. இதனால் சுய விடுப்பு, ரசனை, சுய சிந்தனை எல்லாமே மாறிப்போய் நமக்குத் தேவையோ இல்லையோ, யாரையோ இம்ப்ரஸ் செய்ய, எதையோ செய்து கொண்டிருக்கிறோம்..புதிதாக, தனியாக, சொந்தமாக எதையாவது யோசித்து செய்தால், பிரச்னையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவோமோ? நாலு பேர் கேலி செய்வார்களோ? நம்ப ஸ்டார் ரேட்டிங் குறைஞ்சுடுமோங்கிற அச்சம்தான் இதற்குக் காரணம்!.வாழ்க்கையில ஜெயிச்சவங்களை கூர்ந்து கவனிச்சீங்கன்னா, அவங்க எல்லாருமே புதுமையா எதையாவது செஞ்சவங்கதான்!.எல்லோரும் போற பாதை சுலபமா இருக்கலாம். ஆனா, நீங்க உங்க உள்ளுணர்வால உந்தப்பட்டு, சுயமா போடற பாதைதான் சுவாரசியமா இருக்கும். கூட்டத்துல ஒரு பகுதியா இருக்கிறது சேஃப்தான். ஆனா, அது உங்களோட தனித்திறனை சிதைக்கிற அளவுக்குப் போயிடக் கூடாது..அண்டை வீட்டாரை, உறவினர்களை, நண்பர்களை நகல் எடுக்காமல், உங்கள் சொந்த மூளையை, திறமையை நம்பி முடிவெடுங்க….'மந்தை மனநிலை'யிலேயே இருந்தால் மகிழ்ச்சியும், நிறைவும் பெறாத தேடல் மனிதர்களாகவே இருப்போம், கடைசி மூச்சு வரை!.வாழ்க்கையில ஒரு, 'கிக்' வேணும்னா, 'யூனிக்'கா இருந்து பாருங்களேன்! டோன்ட் பி எ 'காப்பி கேட்' ப்ளீஸ்…