முகநூல் பக்கம்தமிழினியன்.1980ல் நடைபெற்ற ஒரு வேடிக்கையான வழக்கு! சென்னையில் ஒரு நாள் இரவு 12 மணியளவில் ஒரு தோழர் வீட்டில் காவல் துறையின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த 'ரகசியத் தகவலின் அடிப்படையில்' சோதனை இடுகின்றனர். கைகளில் கிடைக்கிற புத்தகங்கள், காகிதங்கள் என்று அனைத்தையும் அள்ளிக்கொள் கின்றனர்..பின்னர் அந்தத் தோழரை ஏதோ விசாரணைக்குக் கொஞ்ச நேரம் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி அழைத்துச் செல்கின்றனர். அங்குச் சென்றபிறகு அவரை லாக்அப்பில் அடைக்கின்றனர். எதற்கு என்று அவர் கேட்ட கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை. மாறாக, அவர் வீட்டில் அள்ளிய புத்தகங்கள், காகிதங்களைப் பட்டியல் இட்டு, இறுதிப் பக்கத்தில் கையெழுத்து வாங்குகின்றனர். அவரும் அவை எல்லாம் அவர் வீட்டில் எடுத்த புத்தகங்கள் தான் என்று உறுதி செய்துகொண்டு, கையெழுத்து இடுகிறார்!மறுநாள் அவரை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் நீதிபதி முன்னர் நிறுத்துகின்றனர். அப்போதும் அவருக்கு என்ன வழக்கு, எதற்காக இந்தக் கைது என்பதெல்லாம் தெரியாது. 15 நாள் சிறைக்காவல் என்று கூறப்படுகிறது.சிறைக்கு அழைத்துச் செல்வதற்காகக் காவல்துறை வண்டி ஒன்றில் ஏற்றப்படுகிறார்! அதில் இன்னொரு நபரும் இருக்கிறார். அவரிடம் அந்த நபர் தன் வழக்கு 'நக்சலைட் வழக்கு' என்று கூறுகிறார்.அந்த நபருக்கு இவர் ஆறுதல் கூறுகிறார். "கவலை வேண்டாம். எனக்காக நாளைக்கு வழக்கறிஞர் கள் வருவார்கள். அவர்களிடம் சொல்லி, தங்கள் ஜாமினுக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறுகிறார்.சென்னை சென்ட்ரல் சிறையில் இருவரும் அடைக்கப்படுகிறார்கள் தனித்தனியாக. மறுநாள் அங்குக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ் ஒன்றை இவர் படிக்கிறார். அதில் இவர் தேசவிரோதப் பிரசுரங்களைத் தயாரித்து, வேறு ஒருவர் மூலம் தெருக்களில் ஒட்டச் சொன்ன தற்காக 124-ஏ இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், பிரசுரங்களை ஒட்டிய நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர் வீட்டைச்சோதனைசெய்து அவற்றைக் கைப் பற்றியதாகவும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி.அந்த மற்றொரு நபர் – பிரசுரங்களை 'ஒட்டிய நபர்' வேறு யாரும் இல்லை. நேற்று அவருடன் காவல்துறை வண்டியில் வந்த அந்த நபர்தான் என்று செய்தி இருந்தது. இவருக்கோ வியப்பு! . 'அப்படி ஒரு பிரசுரத்தைத் தான் தயாரிக்க வில்லையே! மேலும் அந்த ஒட்டிய நபரை, தான் பார்த்ததே இல்லையே' என்று வியப்படைகிறார்!இரண்டொரு நாள்களில் 'அந்த நபர்' ஜாமினில் விடுதலை ஆகிறார். ஆனால் இவருக்கோ ஜாமின் மறுக்கப்பட்டது. இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்துக் கண்டித்து, சென்னையில் பல இடங் களில் எதிர்ப்புப் பிரசுரங்கள் வெளிவருகின்றன. 'இதற்குக் காரணம் சென்னைச் சிறையில் இவர் இருப்பதுதான். இது சட்டம், ஒழுங்குப் பிரச்னையை உருவாக்கும்' என்று கூறி, அவரை வேலூர் சிறைக்கு மாற்றுகின்றனர், இரவோடு இரவாக, சட்டவிரோதமாக!சில மாதங்கள் கழித்து, அவருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் வேறு ஊரில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமின் அளிக்கிறது. சில மாதங்கள் கழித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது! அதில் இணைக்கப்பட்ட ஆவணம் ஒன்றானது அவர் வீட்டில் கைப்பற்றப்பட்டவை பற்றியதாகும்.அதைப் பார்த்தவுடன் இவருக்கு வியப்பு! அவர் கையெழுத்துப் போட்ட புத்தகப் பட்டியலுடன், முதல் பக்கத்தில் புதிதாக ஒரு பட்டியல்! அதில்தான் காவல்துறை கூறுகிற 'சட்டவிரோதப் பிரசுரம்' இருந்தது. இவர் கையெழுத்து இட்ட புத்தகப் பட்டியலை 11, 12, 13 என்று பக்கம் இட்டுவிட்டு, காவல்துறை சேர்த்த புதிய பக்கத்தில் 1, 2,3 என்று எண் இட்டிருந்தனர். மிக அருமையான வழக்கு ஜோடிப்பு. நான்கு வருடங்கள் நீதிமன்ற விசாரணை!இவ்வளவு 'விவரமாக இருந்த' காவல் துறை ஒரு தவறைச் செய்திருந்தனர். குற்றப் பத்திரிகைப் படி 'சட்டவிரோதப் பிரசுரங்களை ஒட்டிய நபரை ரகசியத் தகவல் மூலம் ஒட்டிய இடத்திலேயே பிடித்த காவல் துறையினர்' அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரை விசாரித்து, அதன் அடிப்படையில் அவர் சொன்ன தகவல்படி இவரது வீட்டைச் சோதனை செய்தார்களாம். இவரும் அதை ஒத்துக்கொண்டு, 'தன்னிடம் மீதி இருந்த பிரசுரங்களை' காவல்துறையினரிடம் கொடுத்துவிட்டாராம். அதன்பின்னர் இவர் கைது செய்யப்படுகிறார். எனவே இருவரை யும் இரண்டு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் கைது செய்துள்ளனர் காவல்துறை யினர். இதுதான் வழக்கு.இவ்வளவு 'புத்திசாலித்தனமாக' வழக்கை ஜோடித்த காவல்துறை ஆய்வாளர் ஒரு தவறைச் செய்திருந்தார் தெரியாத்தனமாக. இருவரையும் கைது செய்ததற்கான 'கைது ஆவணத்தில்' இருவரையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கைது செய்ததாகக் கூறியிருந்தார்.அதாவது குற்றப்பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலுக்கும் 'கைது ஆவணத்தில்' கொடுக்கப்பட்டுள்ள தகவலுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய முரண் பாடு! இதை இவருடைய வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டி, இது பொய் வழக்கு என்று இவருக்காகக் குறுக்கு விசாரணை செய்த ஒரு பெரிய வழக் கறிஞரும் இறுதியாக வாதாடிய மற்றொரு பெரிய வழக்கறிஞரும் நீதிபதி முன் எடுத்துரைத்தனர். அதனடிப்படையில் ஐந்து ஆண்டுகள் வழக்கு முடிவடைந்து இவர் வழக்கிலிருந்து விடுதலை ஆனார்.இந்த வழக்கில் 'அப்ரூவர்' மேற்குறிப்பிட்ட அந்த 'அடையாளம் தெரியாத இரண்டாவது நபர்'! அவர் வேறு யாரும் இல்லை. காவல் துறை அதிகாரியின் வீட்டின் சமையல்காரர்!இந்தப் பொய் வழக்கில் சில மாதங்கள் சிறையில் இருந்து, 5 ஆண்டுகள் வழக்கை நடத்தி, விடுதலையானவர் நான்தான்!
முகநூல் பக்கம்தமிழினியன்.1980ல் நடைபெற்ற ஒரு வேடிக்கையான வழக்கு! சென்னையில் ஒரு நாள் இரவு 12 மணியளவில் ஒரு தோழர் வீட்டில் காவல் துறையின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த 'ரகசியத் தகவலின் அடிப்படையில்' சோதனை இடுகின்றனர். கைகளில் கிடைக்கிற புத்தகங்கள், காகிதங்கள் என்று அனைத்தையும் அள்ளிக்கொள் கின்றனர்..பின்னர் அந்தத் தோழரை ஏதோ விசாரணைக்குக் கொஞ்ச நேரம் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி அழைத்துச் செல்கின்றனர். அங்குச் சென்றபிறகு அவரை லாக்அப்பில் அடைக்கின்றனர். எதற்கு என்று அவர் கேட்ட கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை. மாறாக, அவர் வீட்டில் அள்ளிய புத்தகங்கள், காகிதங்களைப் பட்டியல் இட்டு, இறுதிப் பக்கத்தில் கையெழுத்து வாங்குகின்றனர். அவரும் அவை எல்லாம் அவர் வீட்டில் எடுத்த புத்தகங்கள் தான் என்று உறுதி செய்துகொண்டு, கையெழுத்து இடுகிறார்!மறுநாள் அவரை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் நீதிபதி முன்னர் நிறுத்துகின்றனர். அப்போதும் அவருக்கு என்ன வழக்கு, எதற்காக இந்தக் கைது என்பதெல்லாம் தெரியாது. 15 நாள் சிறைக்காவல் என்று கூறப்படுகிறது.சிறைக்கு அழைத்துச் செல்வதற்காகக் காவல்துறை வண்டி ஒன்றில் ஏற்றப்படுகிறார்! அதில் இன்னொரு நபரும் இருக்கிறார். அவரிடம் அந்த நபர் தன் வழக்கு 'நக்சலைட் வழக்கு' என்று கூறுகிறார்.அந்த நபருக்கு இவர் ஆறுதல் கூறுகிறார். "கவலை வேண்டாம். எனக்காக நாளைக்கு வழக்கறிஞர் கள் வருவார்கள். அவர்களிடம் சொல்லி, தங்கள் ஜாமினுக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறுகிறார்.சென்னை சென்ட்ரல் சிறையில் இருவரும் அடைக்கப்படுகிறார்கள் தனித்தனியாக. மறுநாள் அங்குக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ் ஒன்றை இவர் படிக்கிறார். அதில் இவர் தேசவிரோதப் பிரசுரங்களைத் தயாரித்து, வேறு ஒருவர் மூலம் தெருக்களில் ஒட்டச் சொன்ன தற்காக 124-ஏ இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், பிரசுரங்களை ஒட்டிய நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர் வீட்டைச்சோதனைசெய்து அவற்றைக் கைப் பற்றியதாகவும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி.அந்த மற்றொரு நபர் – பிரசுரங்களை 'ஒட்டிய நபர்' வேறு யாரும் இல்லை. நேற்று அவருடன் காவல்துறை வண்டியில் வந்த அந்த நபர்தான் என்று செய்தி இருந்தது. இவருக்கோ வியப்பு! . 'அப்படி ஒரு பிரசுரத்தைத் தான் தயாரிக்க வில்லையே! மேலும் அந்த ஒட்டிய நபரை, தான் பார்த்ததே இல்லையே' என்று வியப்படைகிறார்!இரண்டொரு நாள்களில் 'அந்த நபர்' ஜாமினில் விடுதலை ஆகிறார். ஆனால் இவருக்கோ ஜாமின் மறுக்கப்பட்டது. இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்துக் கண்டித்து, சென்னையில் பல இடங் களில் எதிர்ப்புப் பிரசுரங்கள் வெளிவருகின்றன. 'இதற்குக் காரணம் சென்னைச் சிறையில் இவர் இருப்பதுதான். இது சட்டம், ஒழுங்குப் பிரச்னையை உருவாக்கும்' என்று கூறி, அவரை வேலூர் சிறைக்கு மாற்றுகின்றனர், இரவோடு இரவாக, சட்டவிரோதமாக!சில மாதங்கள் கழித்து, அவருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் வேறு ஊரில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமின் அளிக்கிறது. சில மாதங்கள் கழித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது! அதில் இணைக்கப்பட்ட ஆவணம் ஒன்றானது அவர் வீட்டில் கைப்பற்றப்பட்டவை பற்றியதாகும்.அதைப் பார்த்தவுடன் இவருக்கு வியப்பு! அவர் கையெழுத்துப் போட்ட புத்தகப் பட்டியலுடன், முதல் பக்கத்தில் புதிதாக ஒரு பட்டியல்! அதில்தான் காவல்துறை கூறுகிற 'சட்டவிரோதப் பிரசுரம்' இருந்தது. இவர் கையெழுத்து இட்ட புத்தகப் பட்டியலை 11, 12, 13 என்று பக்கம் இட்டுவிட்டு, காவல்துறை சேர்த்த புதிய பக்கத்தில் 1, 2,3 என்று எண் இட்டிருந்தனர். மிக அருமையான வழக்கு ஜோடிப்பு. நான்கு வருடங்கள் நீதிமன்ற விசாரணை!இவ்வளவு 'விவரமாக இருந்த' காவல் துறை ஒரு தவறைச் செய்திருந்தனர். குற்றப் பத்திரிகைப் படி 'சட்டவிரோதப் பிரசுரங்களை ஒட்டிய நபரை ரகசியத் தகவல் மூலம் ஒட்டிய இடத்திலேயே பிடித்த காவல் துறையினர்' அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரை விசாரித்து, அதன் அடிப்படையில் அவர் சொன்ன தகவல்படி இவரது வீட்டைச் சோதனை செய்தார்களாம். இவரும் அதை ஒத்துக்கொண்டு, 'தன்னிடம் மீதி இருந்த பிரசுரங்களை' காவல்துறையினரிடம் கொடுத்துவிட்டாராம். அதன்பின்னர் இவர் கைது செய்யப்படுகிறார். எனவே இருவரை யும் இரண்டு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் கைது செய்துள்ளனர் காவல்துறை யினர். இதுதான் வழக்கு.இவ்வளவு 'புத்திசாலித்தனமாக' வழக்கை ஜோடித்த காவல்துறை ஆய்வாளர் ஒரு தவறைச் செய்திருந்தார் தெரியாத்தனமாக. இருவரையும் கைது செய்ததற்கான 'கைது ஆவணத்தில்' இருவரையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கைது செய்ததாகக் கூறியிருந்தார்.அதாவது குற்றப்பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலுக்கும் 'கைது ஆவணத்தில்' கொடுக்கப்பட்டுள்ள தகவலுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய முரண் பாடு! இதை இவருடைய வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டி, இது பொய் வழக்கு என்று இவருக்காகக் குறுக்கு விசாரணை செய்த ஒரு பெரிய வழக் கறிஞரும் இறுதியாக வாதாடிய மற்றொரு பெரிய வழக்கறிஞரும் நீதிபதி முன் எடுத்துரைத்தனர். அதனடிப்படையில் ஐந்து ஆண்டுகள் வழக்கு முடிவடைந்து இவர் வழக்கிலிருந்து விடுதலை ஆனார்.இந்த வழக்கில் 'அப்ரூவர்' மேற்குறிப்பிட்ட அந்த 'அடையாளம் தெரியாத இரண்டாவது நபர்'! அவர் வேறு யாரும் இல்லை. காவல் துறை அதிகாரியின் வீட்டின் சமையல்காரர்!இந்தப் பொய் வழக்கில் சில மாதங்கள் சிறையில் இருந்து, 5 ஆண்டுகள் வழக்கை நடத்தி, விடுதலையானவர் நான்தான்!