வாசகர் ஜமாய்க்கிறாங்க!.உக்காரை.தேவையானவை : பாசிப் பருப்பு – 100 கிராம், கடலைப் பருப்பு – 200 கிராம், சர்க்கரை – 300 கிராம், நெய் – 200 கிராம், முந்திரிப் பருப்பு – 50 கிராம், தேங்காய் – 1 மூடி, ஏலக்காய் – 10, பச்சைக் கற்பூரம் – சிறிது, கேசரிப் பவுடர் – சிறிது, உப்பு – 1 சிட்டிகை.செய்முறை : பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஊற வைத்து பிறகு நீரை வடிய விட வேண்டும். பின்பு அதில் உப்பைப் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டுக் காய்ந்ததும் அதில் முந்திரிப் பருப்பை வறுத்து, பிறகு தேங்காய்த் துருவலையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு, மேலும் சிறிது நெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு உதிர் உதிராக வரும் வரை கிளறி இறக்க வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தை நீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதித்ததும் சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பிறகு உதிர்த்து வைத்துள்ள பருப்பை சர்க்கரை பாகில் போட்டுக் கிளறி வறுத்த தேங்காய், முந்திரிப் பருப்பையும் சேர்க்க வேண்டும். கேசரிப் பவுடரை நீரில் கரைத்து பாகில் விட்டு, தேவையான நெய்யை சேர்த்து அடுப்பிலிருந்து கீழே இறக்கி பின் பச்சைக் கற்பூரம் ஏலப்பொடி சேர்த்தால் சுவையான உக்காரை தயார்!.வேர்க்கடலை ரசகுல்லா.தேவையானவை : வறுத்த வேர்க்கடலை – 250 கிராம், மைதா மாவு – 100 கிராம், சர்க்கரை – 500 கிராம், சமையல் சோடா – 1 சிட்டிகை, கேசரிப் பவுடர் – 1 ஸ்பூன், எசன்ஸ் – சிறிது, எண்ணெய் – 100 கிராம்..செய்முறை : வேர்க்கடலையை ஊறவைத்து அரைக்க வேண்டும். வாணலியில் தேவையான அளவு நீர்விட்டு அதில் விழுதைப் போட்டுக் கிளற வேண்டும். அதில் மைதா மாவைப் போட்டுப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அதில் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையைப் பாகு வைத்து அதில் எசன்சை விட்டுக் கலந்து கொள்ளுங்கள். பொரித்த உருண்டைகளைப் பாகில் போட்டு எடுத்தால் மணமணக்கும் வேர்க்கடலை ரசகுல்லா ரெடி!.முந்திரிக் கொத்து.தேவையானவை : பாசிப் பருப்பு – 200 கிராம், வெல்லம் – 200 கிராம், தேங்காய் – 1 மூடி, முந்திரி – 5, வறுத்த எள் – 1 கரண்டி, மைதா மாவு – 200 கிராம், பச்சரிசி மாவு – 50 கிராம், உப்பு – 1 சிட்டிகை, சோடா மாவு – துளியளவு, நெய் – 3 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கு..செய்முறை : பாசிப் பருப்பை சிவக்க வறுத்து நைசாக அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தைப் போட்டு கம்பிப் பாகாகக் காய்ச்சி சூடாக இருக்கும்போதே மாவில் ஊற்றிக் கிளறுங்கள். தேங்காய்த் துருவலை வதக்கி மாவில் சேர்த்து சிறிது ஏலப்பொடி, வறுத்துப் பொடித்த முந்திரி, வறுத்த எள் இவற்றை மாவில் கலந்து நன்றாகப் பிசைந்து கோலி அளவு உருண்டைகளாக உருட்டுங்கள். மைதா மாவு, பச்சரிசி மாவு, துளி உப்பு, சோடா மாவு, நெய், சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பருப்பு உருண்டைகளை மூன்று மூன்றாக மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் தீபாவளி என்றால் உக்காரை போல, இது இல்லாத வீடும் கிடையாது..கதம்ப மிக்சர்.தேவையானவை : மொச்சைக் கொட்டை – 100 கிராம், கடலைப் பருப்பு – 200 கிராம், பாசிப் பயறு – 100 கிராம், வெள்ளை கொண்டைக்கடலை – 100 கிராம், வெள்ளை பட்டாணி – 100 கிராம், வெள்ளை காராமணி – 100 கிராம், மிளகாய்த்தூள் – 100 கிராம், முந்திரி – 100 கிராம், வேர்க்கடலை – 100 கிராம்..செய்முறை : முதலில் இவற்றையெல்லாம் ஒரு நாள் முன்னதாகவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து, தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் போட்டுக் கலக்க வேண்டும்..———————–.டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்!.l தேங்காய் பர்பி செய்யும்போது சர்க்கரையைப் பொடித்துச் சேர்த்தால் பர்பி மிருதுவாக இருக்கும்..l ரவா லட்டு செய்யும்போது கையில் நெய் தடவிக்கொண்டு லட்டு பிடித்தால் லட்டு பிடிக்க சுலபமாக வரும். வாசனையும் கமகமக்கும்..l பட்சணம் செய்யும்போது தண்ணீரில் உப்புடன் ஒரு பிரண்டைத் துண்டையும் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து ஆறியதும் அந்த நீரைப் பயன்படுத்தினால் பட்சணம் வெடிக்காமலும், கரகரப்பாகவும் இருக்கும்..l அதிரசத்துக்கான வெல்லப் பாகுடன் மாவைப் பிசையும்போது சிறிது கெட்டித் தயிர் கலந்து பிசைந்தால் அதிரசம் பூப்போல வரும்..l பூந்தி செய்யும்போது மாவை ஜாரிணி (துளைக்கரண்டி)யில் ஊற்றி தேய்க்கும்போது, வாணலிக்கு அருகில் வைத்துத் தேய்த்தால் பூந்தி குண்டு குண்டாக விழும்..l திரட்டுப் பால் செய்யும்போது மெல்லிய எவர்சில்வர் தட்டை அதனுள் போட்டு வைத்தால் பால் பொங்காமல் அடி பிடிக்காமல் கிளற முடியும்..l ஏலக்காயை வாணலியில் போட்டு சூடாக்கி சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் சீக்கிரம் அரைபடும்..l தேங்காய் பர்பி பதம் தவறி முறுகி விட்டால், அதைப் பாலில் ஊற வைத்து மீண்டும் கிளறி இறக்கும்போது நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிது தூவி விட்டால் சரியாகி விடும்..l குலோப் ஜாமூன் உருண்டைகள் உருட்டும்போது கையில் நெய் தடவிக்கொண்டால் ஒட்டாது. மணமும் கூடும்..l எண்ணெய் காயும்போது இஞ்சியை சிறு துண்டாக்கி அதில் போட்டால் பொங்காது. எண்ணெயில் மணமும் கூடும். பட்சணமும் மணமாக இருக்கும்..l பட்சணங்கள் செய்யும்போது ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்து கொண்டால் பட்சணங்கள் எண்ணெய் குடிக்காது..l குலோப் ஜாமூன் மாவை உருட்டியதும் அதன் முனைகளில் துளை போட்டுப் பொரித்தால் நன்றாக வெந்துவிடும். சர்க்கரைப் பாகில் ஊறும்போது பாகையும் நன்றாக உறிஞ்சிவிடும்..l போளி செய்யும்போது, மேல் மாவுக்கு மைதா மாவு பிசையும்போது சிறிது பால் பவுடரும் சேர்த்துப் பிசைந்தால் போளி மிருதுவாக இருக்கும்..l சிறிது சர்க்கரையைத் தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாது..l சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது நான்கு சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் பாகு இளகியே இருக்கும்..l தேங்காய் பர்பி மிகவும் சுவையாக இருக்க தேங்காய் துருவல் மேல், தேங்காய் உள்ளேயிருந்து எடுத்த தண்ணியை தெளித்துவிட்ட பிறகு கிளற வேண்டும்..l கடலை மாவுடன் முந்திரியை வறுத்துப் பொடி செய்து கலந்தால் மைசூர் பாகு வித்தியாசமாய் சூப்பராய் வரும்..l ரவை கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துப் போட்டுக் கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும்..l பயத்தம் மாவில் லட்டு செய்யும்போது நூறு கிராம் குலோப்ஜாமூன் மிக்ஸ் சேர்த்துக் கொண்டால் லட்டின் ருசியும் மணமும் அபாரமாக இருக்கும்..l ஜாங்கிரி தயாரிக்கும்போது உளுத்தம் பருப்பை அரைத்து முடித்ததும் மூன்று கப் மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவு என்கிற விகிதத்தில் கலந்து ஜாங்கிரி பிழிந்தால் உடையாமல் வரும்..l பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்து சாக்லேட் பால் அல்வா தயாரிக்கலாம்..l அல்வா கலவையை மிகவும் கெட்டியாக வரும் வரை வைக்கக் கூடாது. அடை மாவு பதத்தில் எடுத்தால் ஆறும்பொழுது சரியாக இருக்கும்..l எந்த கார பட்சணம் செய்யும் முன் மொத்த அளவு அரை படி எனில், இரண்டு கரண்டி நெய் சூடாக்கி அதில் துளி சோடா உப்பு, பின் தேவையான உப்புப் போட்டு நன்றாகக் குழைந்து நுரை வரும் வரை தாம்பாளத்தில் தேய்க்கவும். பின் மாவு போட்டு பிசைந்து செய்ய அபார ருசியுடன் அமையும் பட்சணம்..l மிக்ஸர் சில சமயம் உப்பு வேறு, காரம் வேறு என்று ஒன்றுக்கொன்று ஒட்டாமல் தாமரை இலை நீர் என நிற்கும். உப்பு, காரம், வேர்க்கடலை, அவல், பொட்டுக் கடலையுடன் சேர்ந்தாற்போல் இருக்க, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசிறுங்கள். உப்பு, காரம் கலந்து நன்றாக இருக்கும் மிக்சர்..l பஜ்ஜி செய்யும்போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாக வரும். ஆமை வடைக்கு அரைக்கும்போது கடலைப் பருப்பு, துவரம் பருப்பு சம அளவில் கலந்து அரைத்த பின் சிறிதளவு ரவையையும் மாவுடன் பிசிறி வடை தட்டினால் அதிக மொறு மொறுப்புடன் சுவையாக இருக்கும்..l மைசூர் பாகை இரண்டு விதமாகச் செய்ய, நாம் நெய் விட்டு செய்தால் இளகின பதத்தில் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் வாயில் போட்டதும் கரையும். டால்டா அல்லது ரீஃபைன்டு ஆயிலில் செய்தால் முற்றிய பதம் வர வேண்டும். அப்போதுதான் கரகரப்பாக இருக்கும்..l காரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே கொஞ்சம் மில்க் மெய்ட் ஊற்றிக் கிளறினால் அல்வா நன்கு மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.உக்காரை.தேவையானவை : பாசிப் பருப்பு – 100 கிராம், கடலைப் பருப்பு – 200 கிராம், சர்க்கரை – 300 கிராம், நெய் – 200 கிராம், முந்திரிப் பருப்பு – 50 கிராம், தேங்காய் – 1 மூடி, ஏலக்காய் – 10, பச்சைக் கற்பூரம் – சிறிது, கேசரிப் பவுடர் – சிறிது, உப்பு – 1 சிட்டிகை.செய்முறை : பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஊற வைத்து பிறகு நீரை வடிய விட வேண்டும். பின்பு அதில் உப்பைப் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டுக் காய்ந்ததும் அதில் முந்திரிப் பருப்பை வறுத்து, பிறகு தேங்காய்த் துருவலையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு, மேலும் சிறிது நெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு உதிர் உதிராக வரும் வரை கிளறி இறக்க வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தை நீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதித்ததும் சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பிறகு உதிர்த்து வைத்துள்ள பருப்பை சர்க்கரை பாகில் போட்டுக் கிளறி வறுத்த தேங்காய், முந்திரிப் பருப்பையும் சேர்க்க வேண்டும். கேசரிப் பவுடரை நீரில் கரைத்து பாகில் விட்டு, தேவையான நெய்யை சேர்த்து அடுப்பிலிருந்து கீழே இறக்கி பின் பச்சைக் கற்பூரம் ஏலப்பொடி சேர்த்தால் சுவையான உக்காரை தயார்!.வேர்க்கடலை ரசகுல்லா.தேவையானவை : வறுத்த வேர்க்கடலை – 250 கிராம், மைதா மாவு – 100 கிராம், சர்க்கரை – 500 கிராம், சமையல் சோடா – 1 சிட்டிகை, கேசரிப் பவுடர் – 1 ஸ்பூன், எசன்ஸ் – சிறிது, எண்ணெய் – 100 கிராம்..செய்முறை : வேர்க்கடலையை ஊறவைத்து அரைக்க வேண்டும். வாணலியில் தேவையான அளவு நீர்விட்டு அதில் விழுதைப் போட்டுக் கிளற வேண்டும். அதில் மைதா மாவைப் போட்டுப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அதில் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையைப் பாகு வைத்து அதில் எசன்சை விட்டுக் கலந்து கொள்ளுங்கள். பொரித்த உருண்டைகளைப் பாகில் போட்டு எடுத்தால் மணமணக்கும் வேர்க்கடலை ரசகுல்லா ரெடி!.முந்திரிக் கொத்து.தேவையானவை : பாசிப் பருப்பு – 200 கிராம், வெல்லம் – 200 கிராம், தேங்காய் – 1 மூடி, முந்திரி – 5, வறுத்த எள் – 1 கரண்டி, மைதா மாவு – 200 கிராம், பச்சரிசி மாவு – 50 கிராம், உப்பு – 1 சிட்டிகை, சோடா மாவு – துளியளவு, நெய் – 3 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கு..செய்முறை : பாசிப் பருப்பை சிவக்க வறுத்து நைசாக அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தைப் போட்டு கம்பிப் பாகாகக் காய்ச்சி சூடாக இருக்கும்போதே மாவில் ஊற்றிக் கிளறுங்கள். தேங்காய்த் துருவலை வதக்கி மாவில் சேர்த்து சிறிது ஏலப்பொடி, வறுத்துப் பொடித்த முந்திரி, வறுத்த எள் இவற்றை மாவில் கலந்து நன்றாகப் பிசைந்து கோலி அளவு உருண்டைகளாக உருட்டுங்கள். மைதா மாவு, பச்சரிசி மாவு, துளி உப்பு, சோடா மாவு, நெய், சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பருப்பு உருண்டைகளை மூன்று மூன்றாக மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் தீபாவளி என்றால் உக்காரை போல, இது இல்லாத வீடும் கிடையாது..கதம்ப மிக்சர்.தேவையானவை : மொச்சைக் கொட்டை – 100 கிராம், கடலைப் பருப்பு – 200 கிராம், பாசிப் பயறு – 100 கிராம், வெள்ளை கொண்டைக்கடலை – 100 கிராம், வெள்ளை பட்டாணி – 100 கிராம், வெள்ளை காராமணி – 100 கிராம், மிளகாய்த்தூள் – 100 கிராம், முந்திரி – 100 கிராம், வேர்க்கடலை – 100 கிராம்..செய்முறை : முதலில் இவற்றையெல்லாம் ஒரு நாள் முன்னதாகவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து, தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் போட்டுக் கலக்க வேண்டும்..———————–.டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்!.l தேங்காய் பர்பி செய்யும்போது சர்க்கரையைப் பொடித்துச் சேர்த்தால் பர்பி மிருதுவாக இருக்கும்..l ரவா லட்டு செய்யும்போது கையில் நெய் தடவிக்கொண்டு லட்டு பிடித்தால் லட்டு பிடிக்க சுலபமாக வரும். வாசனையும் கமகமக்கும்..l பட்சணம் செய்யும்போது தண்ணீரில் உப்புடன் ஒரு பிரண்டைத் துண்டையும் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து ஆறியதும் அந்த நீரைப் பயன்படுத்தினால் பட்சணம் வெடிக்காமலும், கரகரப்பாகவும் இருக்கும்..l அதிரசத்துக்கான வெல்லப் பாகுடன் மாவைப் பிசையும்போது சிறிது கெட்டித் தயிர் கலந்து பிசைந்தால் அதிரசம் பூப்போல வரும்..l பூந்தி செய்யும்போது மாவை ஜாரிணி (துளைக்கரண்டி)யில் ஊற்றி தேய்க்கும்போது, வாணலிக்கு அருகில் வைத்துத் தேய்த்தால் பூந்தி குண்டு குண்டாக விழும்..l திரட்டுப் பால் செய்யும்போது மெல்லிய எவர்சில்வர் தட்டை அதனுள் போட்டு வைத்தால் பால் பொங்காமல் அடி பிடிக்காமல் கிளற முடியும்..l ஏலக்காயை வாணலியில் போட்டு சூடாக்கி சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் சீக்கிரம் அரைபடும்..l தேங்காய் பர்பி பதம் தவறி முறுகி விட்டால், அதைப் பாலில் ஊற வைத்து மீண்டும் கிளறி இறக்கும்போது நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிது தூவி விட்டால் சரியாகி விடும்..l குலோப் ஜாமூன் உருண்டைகள் உருட்டும்போது கையில் நெய் தடவிக்கொண்டால் ஒட்டாது. மணமும் கூடும்..l எண்ணெய் காயும்போது இஞ்சியை சிறு துண்டாக்கி அதில் போட்டால் பொங்காது. எண்ணெயில் மணமும் கூடும். பட்சணமும் மணமாக இருக்கும்..l பட்சணங்கள் செய்யும்போது ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்து கொண்டால் பட்சணங்கள் எண்ணெய் குடிக்காது..l குலோப் ஜாமூன் மாவை உருட்டியதும் அதன் முனைகளில் துளை போட்டுப் பொரித்தால் நன்றாக வெந்துவிடும். சர்க்கரைப் பாகில் ஊறும்போது பாகையும் நன்றாக உறிஞ்சிவிடும்..l போளி செய்யும்போது, மேல் மாவுக்கு மைதா மாவு பிசையும்போது சிறிது பால் பவுடரும் சேர்த்துப் பிசைந்தால் போளி மிருதுவாக இருக்கும்..l சிறிது சர்க்கரையைத் தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாது..l சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது நான்கு சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் பாகு இளகியே இருக்கும்..l தேங்காய் பர்பி மிகவும் சுவையாக இருக்க தேங்காய் துருவல் மேல், தேங்காய் உள்ளேயிருந்து எடுத்த தண்ணியை தெளித்துவிட்ட பிறகு கிளற வேண்டும்..l கடலை மாவுடன் முந்திரியை வறுத்துப் பொடி செய்து கலந்தால் மைசூர் பாகு வித்தியாசமாய் சூப்பராய் வரும்..l ரவை கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துப் போட்டுக் கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும்..l பயத்தம் மாவில் லட்டு செய்யும்போது நூறு கிராம் குலோப்ஜாமூன் மிக்ஸ் சேர்த்துக் கொண்டால் லட்டின் ருசியும் மணமும் அபாரமாக இருக்கும்..l ஜாங்கிரி தயாரிக்கும்போது உளுத்தம் பருப்பை அரைத்து முடித்ததும் மூன்று கப் மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவு என்கிற விகிதத்தில் கலந்து ஜாங்கிரி பிழிந்தால் உடையாமல் வரும்..l பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்து சாக்லேட் பால் அல்வா தயாரிக்கலாம்..l அல்வா கலவையை மிகவும் கெட்டியாக வரும் வரை வைக்கக் கூடாது. அடை மாவு பதத்தில் எடுத்தால் ஆறும்பொழுது சரியாக இருக்கும்..l எந்த கார பட்சணம் செய்யும் முன் மொத்த அளவு அரை படி எனில், இரண்டு கரண்டி நெய் சூடாக்கி அதில் துளி சோடா உப்பு, பின் தேவையான உப்புப் போட்டு நன்றாகக் குழைந்து நுரை வரும் வரை தாம்பாளத்தில் தேய்க்கவும். பின் மாவு போட்டு பிசைந்து செய்ய அபார ருசியுடன் அமையும் பட்சணம்..l மிக்ஸர் சில சமயம் உப்பு வேறு, காரம் வேறு என்று ஒன்றுக்கொன்று ஒட்டாமல் தாமரை இலை நீர் என நிற்கும். உப்பு, காரம், வேர்க்கடலை, அவல், பொட்டுக் கடலையுடன் சேர்ந்தாற்போல் இருக்க, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசிறுங்கள். உப்பு, காரம் கலந்து நன்றாக இருக்கும் மிக்சர்..l பஜ்ஜி செய்யும்போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாக வரும். ஆமை வடைக்கு அரைக்கும்போது கடலைப் பருப்பு, துவரம் பருப்பு சம அளவில் கலந்து அரைத்த பின் சிறிதளவு ரவையையும் மாவுடன் பிசிறி வடை தட்டினால் அதிக மொறு மொறுப்புடன் சுவையாக இருக்கும்..l மைசூர் பாகை இரண்டு விதமாகச் செய்ய, நாம் நெய் விட்டு செய்தால் இளகின பதத்தில் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் வாயில் போட்டதும் கரையும். டால்டா அல்லது ரீஃபைன்டு ஆயிலில் செய்தால் முற்றிய பதம் வர வேண்டும். அப்போதுதான் கரகரப்பாக இருக்கும்..l காரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே கொஞ்சம் மில்க் மெய்ட் ஊற்றிக் கிளறினால் அல்வா நன்கு மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.