கவர் ஸ்டோரிஆதித்யா.தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன..தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், அக்டோபர் ஆறு, ஒன்பதாம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்கிற அறிவிப்பை அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று மாலையே, "கட்சியின் வளர்ச்சி கருதி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க தனித்துப் போட்டியிடப்போகிறோம்" என அறிவித்தது பா.ம.க. அதைத் தொடர்ந்து தே.மு.தி.க.வும் மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்துக் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துக் களமிறங்க முடிவு செய்து, வேட்பாளர் தேர்வு வரை வேலையை முடித்து விட்டது..ஏன் இந்த மாற்றம்?.இந்த மாற்றத்துக்கான காரணத்தைப் பார்க்கும்முன் நமது உள்ளாட்சித் தேர்தல் முறையை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்குத் தேர்தல் நடக்கும். அதில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தேர்வுக்கு மட்டுமே கட்சிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள், ஒன்றிய சேர்மன் மற்றும் மாவட்டச் சேர்மனைத் தேர்வு செய்வார்கள். அதேபோல, உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைப் போல, கூட்டணிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களைக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பேசி முடிவு செய்ய மாட்டார்கள். அந்தந்த மாவட்டப் பிரதிநிதி களுக்குள் பேசி முடிவெடுத்துக்கொள்ள கட்சித் தலைமை அறிவுறுத் திவிடும்..இதனால் இந்தத் தேர்தல்கள் முழுக்க முழுக்க உள்ளூர் பிரச்னை சார்ந்த தேர்தலாகி விடுகிறது. சாதி, பணம், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஆனால் உள்ளூரில் செல்வாக்குமிக்கவர்கள் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்காது. அதனால் கட்சிகள் தங்களது வாக்குச் சதவிகிதத்தை நிலைநிறுத்திக் கொள்ளத் தனியாகக் களம் காண நினைக்கிறார்கள். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி பலனளிக்கும் அளவில் உள்ளாட்சித் தேர்தலில் அளிக்காது. தேர்தல் வெற்றி என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கைப் பொறுத்து அமையும். கட்சிகளின் தனித்துப் போட்டி என்கிற அறிவிப்புக்கு இது காரணமாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் இதன் பின்னே உள்ள அரசியல் கணக்குகள்தான். அந்தக் கணக்குகள் அரசியல் நோக்கர்களுக்கு எளிதில் புரியக்கூடியவைதான்..பா.ம.க..உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி, கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், ஒன்பது மாவட்டங்களின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் இணையவழி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், ''கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது`' என அறிவித்திருக்கிறார்கள்.. ஆனால் அந்தக் கூட்டத்தில் மருத்துவர் ராம்தாஸ் மிகக் கடுமையாக அ.தி.மு.க.வை விமர்சித்திருக்கிறார்..''பாட்டாளி மக்கள் கட்சியால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன. அவர்களால் பா.ம.க.வுக்குப் பலன் இல்லை. சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவரோடு சேர்ந்து நம்மால் வெற்றி பெற முடியுமா? எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்க வேண்டும்'` எனக் கூறியதாக அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மூலம் அறிந்தோம்..கூட்டணியால் பா.ம.க.வுக்கு லாபம் இல்லை என்ற மருத்துவர் ராம தாஸின் கருத்து எந்த அளவுக்குச் சரியானது?."கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் எங்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தியது. நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தாலே திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சேர்மன் பதவிகளைப் பிடித்திருப்போம். நாங்கள் கேட்ட இடங்களையும் அவர்கள் கொடுக்க வில்லை, பல இடங்களில் வேட்பாளர்கள் வாபஸ் பெறவில்லை. கொடுக்கப்பட்ட இடத்திலும் போட்டிக்கு ஆட்களை நிறுத்தினர். இதுதான் எங்கள் முடிவின் முக்கிய காரணம்" என்கிரார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்..வன்னிய மக்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காகச் சொந்தக் கட்சியினரின் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால் அந்த அரசாணையை வெளியிடும் வாய்ப்பு தி.மு.க.விற்குதான் கிடைத்தது.. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வன்னிய மக்கள் அடர்த்தியாக உள்ளனர். தி.மு.க. அரசின் அரசாணையின் மூலம் அதற்கான பலன் களை அறுவடை செய்ய பா.ம.க. திட்டமிட்டிருக்கிறது. வரும் நாள் களில் தி.மு.க.வோடு இணக்கமாகச் செல்லவும் பா.ம.க. முடிவு செய்துள்ளது அதன் முதல் கட்டமாகத்தான் பா.ம.க. தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்திருக்கிறது. .மேலும் அண்மையில், தனியார் தொலைக்காட்சிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டி யில், மாற்றம், முன்னேற்றம் என்ற தங்கள் பழைய இலக்கைச் சுட்டிக்காட்டியிருந்தார்..தி.மு.க..பா.ம.க.வின் அறிவிப்பால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ம.க.வின் செயல்பாட்டில் வெளிப்படையாகச் சில மாறுதல்கள் தென்பட்டன. சட்டசபையில் கருணாநிதி படத் திறப்பு விழாவை அ.தி.மு.க. புறக்கணித்தாலும் பா.ம.க.வின் 5 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்..இது பா.ம.க.வின் நிலையில் மாற்றத்துக்கான அடையாளமாகப் பார்க்கப் பட்டது. மக்களின் மனநிலை முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு பரபரப்புச் செய்திகள் மூலம் அ.தி.மு.க.வின் முக்கி யத்தைக் குறைக்கத் திட்டமிடும் தி.மு.க. இதற்கு பா.ம.க.வையும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதற்கு விலையாக பா.ம.க. கணிசமான தொகுதிகளை வழங்க முன்வந்திருக்கிறது. இந்த முன்னெடுப்புக்கு அமைச்சர் துரைமுருகன்தான் காரணம்.., 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் மரணமடைந்தவர்களுக்கு மணிமண்ட பம், ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் திருவுருவச் சிலை என வன்னிய சமூக மக்களைக் கவருகிற வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால், பா.ம.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் மிகப் பெரிய அளவில் அந்தச் சமூக மக்களிடம் அதிருப்தி ஏற்படாது. அந்தக் கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் நீண்டா லும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..அ.தி.மு.க..கூட்டணியிலிருந்து பா.ம.க. பிரிந்ததை இழப்பாகக் கருதத் தேவையில்லை. பொதுவாக வடமாவட்டங்களிலுள்ள வன்னியர் அல்லாத பிற சமூக மக்கள், பட்டியல் சமூக மக்கள் அ.தி.மு.க.வுக்கு கணிசமாக வாக்களித்தார்கள். கடந்த தேர்தலில், பா.ம.க. எங்கள் கூட்டணியில் இருந்ததால், அந்த வாக்குகள் தி.மு.க.வுக்குச் சென்று விட்டன. இந்த முறை, நாங்கள் இழந்த அந்த வாக்குகள் மீண்டும் எங்களுக்கு வரும் என்று கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் உண்மையில் கட்சித் தலைமை அண்மையில் நடந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளினால் ஆடிப் போயிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கட்சியின் சார்பில் ஒன்பது மாவட்டத்துக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில், திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பாளர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பாய்ந்ததால், மாவட்டக் கழகமே முடங்கிப்போய் விட்டது. வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே தேர்வு செய்து வைக்குமாறு ஒன்பது மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பல மாவட்டங்களில் அந்தப் பணி தொடங்கப்படவே இல்லை..கொடநாடு வழக்கால் எடப்பாடி அதிர்ந்து போயிருக்கிறார். தன் மனைவியின் இறப்பால் ஓ.பன்னீர்செல்வமும் ஆர்வம் குன்றி இருக்கிறார். . பா.ஜ.க., த.மா.கா-வை மட்டும் நம்பிக் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எடப்பாடி, கிராமப்புறங்களில் பா.ஜ.க.விற்குக் கட்டமைப்பு இல்லாத நிலையில் தவிக்கிறார். கட்சிக்குள்ளும். தன் தலைமையை நிரூபிக்கவேண்டிய நெருக்கடியும் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறது..மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தே.தி.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை நிரூபித்துக்கொண்டு அதன்மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது கூட்டணியில் இடம்பெற இப்போது தனித்துப் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கின்றன..எப்படியிருந்தாலும் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தமிழக அரசியல் கட்சிகள் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளப் போவது நிச்சயம்.
கவர் ஸ்டோரிஆதித்யா.தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன..தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், அக்டோபர் ஆறு, ஒன்பதாம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்கிற அறிவிப்பை அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று மாலையே, "கட்சியின் வளர்ச்சி கருதி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க தனித்துப் போட்டியிடப்போகிறோம்" என அறிவித்தது பா.ம.க. அதைத் தொடர்ந்து தே.மு.தி.க.வும் மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்துக் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துக் களமிறங்க முடிவு செய்து, வேட்பாளர் தேர்வு வரை வேலையை முடித்து விட்டது..ஏன் இந்த மாற்றம்?.இந்த மாற்றத்துக்கான காரணத்தைப் பார்க்கும்முன் நமது உள்ளாட்சித் தேர்தல் முறையை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்குத் தேர்தல் நடக்கும். அதில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தேர்வுக்கு மட்டுமே கட்சிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள், ஒன்றிய சேர்மன் மற்றும் மாவட்டச் சேர்மனைத் தேர்வு செய்வார்கள். அதேபோல, உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைப் போல, கூட்டணிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களைக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பேசி முடிவு செய்ய மாட்டார்கள். அந்தந்த மாவட்டப் பிரதிநிதி களுக்குள் பேசி முடிவெடுத்துக்கொள்ள கட்சித் தலைமை அறிவுறுத் திவிடும்..இதனால் இந்தத் தேர்தல்கள் முழுக்க முழுக்க உள்ளூர் பிரச்னை சார்ந்த தேர்தலாகி விடுகிறது. சாதி, பணம், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஆனால் உள்ளூரில் செல்வாக்குமிக்கவர்கள் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்காது. அதனால் கட்சிகள் தங்களது வாக்குச் சதவிகிதத்தை நிலைநிறுத்திக் கொள்ளத் தனியாகக் களம் காண நினைக்கிறார்கள். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி பலனளிக்கும் அளவில் உள்ளாட்சித் தேர்தலில் அளிக்காது. தேர்தல் வெற்றி என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கைப் பொறுத்து அமையும். கட்சிகளின் தனித்துப் போட்டி என்கிற அறிவிப்புக்கு இது காரணமாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் இதன் பின்னே உள்ள அரசியல் கணக்குகள்தான். அந்தக் கணக்குகள் அரசியல் நோக்கர்களுக்கு எளிதில் புரியக்கூடியவைதான்..பா.ம.க..உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி, கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், ஒன்பது மாவட்டங்களின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் இணையவழி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், ''கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது`' என அறிவித்திருக்கிறார்கள்.. ஆனால் அந்தக் கூட்டத்தில் மருத்துவர் ராம்தாஸ் மிகக் கடுமையாக அ.தி.மு.க.வை விமர்சித்திருக்கிறார்..''பாட்டாளி மக்கள் கட்சியால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன. அவர்களால் பா.ம.க.வுக்குப் பலன் இல்லை. சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவரோடு சேர்ந்து நம்மால் வெற்றி பெற முடியுமா? எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்க வேண்டும்'` எனக் கூறியதாக அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மூலம் அறிந்தோம்..கூட்டணியால் பா.ம.க.வுக்கு லாபம் இல்லை என்ற மருத்துவர் ராம தாஸின் கருத்து எந்த அளவுக்குச் சரியானது?."கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் எங்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தியது. நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தாலே திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சேர்மன் பதவிகளைப் பிடித்திருப்போம். நாங்கள் கேட்ட இடங்களையும் அவர்கள் கொடுக்க வில்லை, பல இடங்களில் வேட்பாளர்கள் வாபஸ் பெறவில்லை. கொடுக்கப்பட்ட இடத்திலும் போட்டிக்கு ஆட்களை நிறுத்தினர். இதுதான் எங்கள் முடிவின் முக்கிய காரணம்" என்கிரார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்..வன்னிய மக்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காகச் சொந்தக் கட்சியினரின் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால் அந்த அரசாணையை வெளியிடும் வாய்ப்பு தி.மு.க.விற்குதான் கிடைத்தது.. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வன்னிய மக்கள் அடர்த்தியாக உள்ளனர். தி.மு.க. அரசின் அரசாணையின் மூலம் அதற்கான பலன் களை அறுவடை செய்ய பா.ம.க. திட்டமிட்டிருக்கிறது. வரும் நாள் களில் தி.மு.க.வோடு இணக்கமாகச் செல்லவும் பா.ம.க. முடிவு செய்துள்ளது அதன் முதல் கட்டமாகத்தான் பா.ம.க. தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்திருக்கிறது. .மேலும் அண்மையில், தனியார் தொலைக்காட்சிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டி யில், மாற்றம், முன்னேற்றம் என்ற தங்கள் பழைய இலக்கைச் சுட்டிக்காட்டியிருந்தார்..தி.மு.க..பா.ம.க.வின் அறிவிப்பால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ம.க.வின் செயல்பாட்டில் வெளிப்படையாகச் சில மாறுதல்கள் தென்பட்டன. சட்டசபையில் கருணாநிதி படத் திறப்பு விழாவை அ.தி.மு.க. புறக்கணித்தாலும் பா.ம.க.வின் 5 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்..இது பா.ம.க.வின் நிலையில் மாற்றத்துக்கான அடையாளமாகப் பார்க்கப் பட்டது. மக்களின் மனநிலை முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு பரபரப்புச் செய்திகள் மூலம் அ.தி.மு.க.வின் முக்கி யத்தைக் குறைக்கத் திட்டமிடும் தி.மு.க. இதற்கு பா.ம.க.வையும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதற்கு விலையாக பா.ம.க. கணிசமான தொகுதிகளை வழங்க முன்வந்திருக்கிறது. இந்த முன்னெடுப்புக்கு அமைச்சர் துரைமுருகன்தான் காரணம்.., 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் மரணமடைந்தவர்களுக்கு மணிமண்ட பம், ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் திருவுருவச் சிலை என வன்னிய சமூக மக்களைக் கவருகிற வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால், பா.ம.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் மிகப் பெரிய அளவில் அந்தச் சமூக மக்களிடம் அதிருப்தி ஏற்படாது. அந்தக் கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் நீண்டா லும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..அ.தி.மு.க..கூட்டணியிலிருந்து பா.ம.க. பிரிந்ததை இழப்பாகக் கருதத் தேவையில்லை. பொதுவாக வடமாவட்டங்களிலுள்ள வன்னியர் அல்லாத பிற சமூக மக்கள், பட்டியல் சமூக மக்கள் அ.தி.மு.க.வுக்கு கணிசமாக வாக்களித்தார்கள். கடந்த தேர்தலில், பா.ம.க. எங்கள் கூட்டணியில் இருந்ததால், அந்த வாக்குகள் தி.மு.க.வுக்குச் சென்று விட்டன. இந்த முறை, நாங்கள் இழந்த அந்த வாக்குகள் மீண்டும் எங்களுக்கு வரும் என்று கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் உண்மையில் கட்சித் தலைமை அண்மையில் நடந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளினால் ஆடிப் போயிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கட்சியின் சார்பில் ஒன்பது மாவட்டத்துக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில், திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பாளர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பாய்ந்ததால், மாவட்டக் கழகமே முடங்கிப்போய் விட்டது. வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே தேர்வு செய்து வைக்குமாறு ஒன்பது மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பல மாவட்டங்களில் அந்தப் பணி தொடங்கப்படவே இல்லை..கொடநாடு வழக்கால் எடப்பாடி அதிர்ந்து போயிருக்கிறார். தன் மனைவியின் இறப்பால் ஓ.பன்னீர்செல்வமும் ஆர்வம் குன்றி இருக்கிறார். . பா.ஜ.க., த.மா.கா-வை மட்டும் நம்பிக் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எடப்பாடி, கிராமப்புறங்களில் பா.ஜ.க.விற்குக் கட்டமைப்பு இல்லாத நிலையில் தவிக்கிறார். கட்சிக்குள்ளும். தன் தலைமையை நிரூபிக்கவேண்டிய நெருக்கடியும் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறது..மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தே.தி.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை நிரூபித்துக்கொண்டு அதன்மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது கூட்டணியில் இடம்பெற இப்போது தனித்துப் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கின்றன..எப்படியிருந்தாலும் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தமிழக அரசியல் கட்சிகள் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளப் போவது நிச்சயம்.