வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.* நவராத்திரி கொலுவில் மாவிலை தோரணம் கட்டும்பொழுது பிளாஸ்டிக் மாவினால் சிறுசிறு பளபளக்கும் குந்தன் கற்களை ஒட்டிவிட்டால் பளபளக்கும்..* கொலு பொம்மைகள் பழையதாக இருந்தால், நெற்றியில் பளிச்சென ஸ்டிக்கர் பொட்டு, கண்ணுக்கு மை தீட்டி, கவரிங் நகைகளை மாட்டிவிட்டால் பளிச்சென இருக்கும்..* செட்டியார் பொம்மையின் முன்பு பல்லாங்குழியை வைத்து, அதில் பாரம்பரிய உணவான சாமை, தினை, வரகு, குதிரைவாலி என நிரப்பி அவர் வியாபாரம் செய்வது போல செய்து, அவர் சொல்வதுபோல அதன் பயன்களை எழுதி கையில் மாட்டி விடுங்கள்..* அஷ்ட லட்சுமிகளை வைக்கும்போது, ஒவ்வொரு லட்சுமிக்கு கீழேயும் ஒவ்வொரு தாமரை பூ, அதாவது ஒரு செந்தாமரை, ஒரு வெள்ளைத் தாமரையை வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்..* கொலு பார்க்க வருபவர்களுக்கு செடி கன்றுகள், காய்கறி விதைகள் என இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், வீட்டுத் தோட்டத்தை உண்டாக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அன்பளிப்புகள் கொடுக்கலாம்..* கொலுவில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை எழுதி ஒட்டிவிட்டால், பார்க்க வருபவர் படித்துப் பயன் பெறுவர். மாஸ்க், சோப்பு, சானிடைசர் போன்றவற்றை வைத்துக் கொடுங்கள். பயனாக இருக்கும்..* கொலுவில் பார்க், மலை போன்று அமைக்கும்போது சிறிய தகர டப்பாவை மணலில் புதைத்து, அதிலிருந்து சாம்பிராணி புகை வரும்படியாக அமைத்தால், மலையிலிருந்து பனிப்புகை வருவது போன்று இருக்கும்..* உறவினர், நண்பர்களோடு வீட்டில் வேலை செய்பவர்களையும் கொலு பார்க்க அழையுங்கள்..* திருநங்கை, விதவை, மணமாகாத பெண்கள் என வேறுபாடு பார்க்காமல் அவர்களும் பெண்கள்தான் என்ற விசாலமான மனத்தோடு அவர்களுக்கும் வெற்றிலை பாக்கு, பழம், சுண்டல், தேங்காய் கொடுங்கள்..* பித்தளை குங்குமச் சிமிழ், சிறிய தட்டு, ஊதுபத்தி ஸ்டாண்ட், சந்தன கும்பா என பித்தளை சாமான்களை வைத்துக் கொடுங்கள். புண்ணியம் கூடும்..* கொலு வைக்கும் இடத்தில் டி.வி.யை வைக்காதீர்கள்..* கொலுப் படிகளில் வரிசையாக மண் அகல் ஏற்றி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்..* கொலு வைக்கும் அறை சுவர்களில் அழகான ஓவியங்களை மாட்டினால் கூடுதல் அழகு தரும்..* குட்டி குட்டி பொம்மைகளை அழகான, அகலமான தாம்பாளத்தில் கலர் பேப்பரை ஒட்டி, அதில் வரிசையாகவோ ரவுண்டாகவோ வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். குட்டி பொம்மைகள் கீழேயும் விழாது.– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.* கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும் அன்பைப் பெருக்கவும், பாரம்பரிய கலாசாரத்தைக் கடைப்பிடிக்கவுமே. வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது. மனித நேயம் வளர உதவியாக அது இருக்க வேண்டும்..* நவராத்திரிக்கு பயன்படுத்தும் விளக்குகளை சாம்பலுடன் இரண்டு அல்லது மூன்று சொட்டு மண்ணெண்ணெய் விட்டுத் தேய்த்த பின், தனி சாம்பலால் ஒருமுறை நன்றாகத் தேய்த்து, சுத்தமான துணி கொண்டு துடைத்துவிட்டால் பளபளவென்று இருக்கும்..* எளிதில் உடையக்கூடிய, ஒட்டு வேலைப்பாடுகளுடைய பொம்மைகளை, காது குடைய கடைகளில் விற்கும் காட்டன் பட்ஸை வாங்கித் தூசி துடைத்தால் மிகச்சிறிய பள்ளங்கள், இடுக்குகளைக்கூட உடையாமல் துப்புரவாகத் துடைத்து, 'பளிச்'சென்று ஆக்கி விடலாம்..* நவராத்திரிக்கு எப்போதும் தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என்றுதான் கூப்பிட்டு பூஜை செய்வோம். இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாக, பக்கத்தில் வசிக்கும் முதியோர்களை, முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்களைக் கூப்பிட்டு பூஜை செய்து பாருங்கள். அவர்களும், `தங்களை உறவினர்கள் போல் நேசிப்பவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்' என்று மனம் மகிழ்ந்து போவார்கள்..* கொலுவில் தெப்பக்குளம் அமைக்கும்போது தெப்பக்குளத் தண்ணீரில் துணிக்குப் போடும் உஜாலா லிக்விட் நீலத்தை சிறிது கலந்தால் தெப்பக்குளம் தத்ரூபமாக இருக்கும்..* கொலு படிக்கட்டுகளின் ஓரங்களில் சிறிய கலர் கலரான ப்ளாஸ்டிக் பந்துகள் வைத்து பெவிகால் தடவி ஒட்டிவிட்டால், படிகள் பார்க்க வித்தியாசமாக இருக்கும்..* கொலு பொம்மைகளில் வார்னிஷ் பூசிவிட்டால் பளிச்சென்று மின்னும். தூசி படர்ந்தால் துடைத்துவிடலாம். பெயிண்டும் உதிராது..* நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை தம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தது வைத்தபடி வாடாமல் இருக்கும்..* மாலையில் வாங்கும் மல்லிகைப் பூ, மறு தினத்திற்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதிதாக மணமுடன் இருக்கும்..* பக்கத்திலிருக்கும் ஏழைப் பெண்களை அழைத்து சாப்பாடு போட்டு, சேலை வைத்துக் கொடுங்கள். அடுத்து வரும் தீபாவளிக்கு உடுத்திக்கொள்ள அவர்களுக்குப் பயன்படும்..* கொலு முடிந்த பின் பொம்மைகளை மொத்தமாக பேக் செய்வதைத் தவிர்த்து, ஒவ்வொரு படி பொம்மையையும் தனித்தனியாக பெட்டிகளில் வைத்தால், அடுத்த வருடம் கொலு வைக்கும்போது அந்தப் படிக்குரிய பொம்மைகளை வரிசைப்படுத்த சுலபமாக இருக்கும்.– சீதாலக்ஷ்மி, கேரளா
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.* நவராத்திரி கொலுவில் மாவிலை தோரணம் கட்டும்பொழுது பிளாஸ்டிக் மாவினால் சிறுசிறு பளபளக்கும் குந்தன் கற்களை ஒட்டிவிட்டால் பளபளக்கும்..* கொலு பொம்மைகள் பழையதாக இருந்தால், நெற்றியில் பளிச்சென ஸ்டிக்கர் பொட்டு, கண்ணுக்கு மை தீட்டி, கவரிங் நகைகளை மாட்டிவிட்டால் பளிச்சென இருக்கும்..* செட்டியார் பொம்மையின் முன்பு பல்லாங்குழியை வைத்து, அதில் பாரம்பரிய உணவான சாமை, தினை, வரகு, குதிரைவாலி என நிரப்பி அவர் வியாபாரம் செய்வது போல செய்து, அவர் சொல்வதுபோல அதன் பயன்களை எழுதி கையில் மாட்டி விடுங்கள்..* அஷ்ட லட்சுமிகளை வைக்கும்போது, ஒவ்வொரு லட்சுமிக்கு கீழேயும் ஒவ்வொரு தாமரை பூ, அதாவது ஒரு செந்தாமரை, ஒரு வெள்ளைத் தாமரையை வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்..* கொலு பார்க்க வருபவர்களுக்கு செடி கன்றுகள், காய்கறி விதைகள் என இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், வீட்டுத் தோட்டத்தை உண்டாக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அன்பளிப்புகள் கொடுக்கலாம்..* கொலுவில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை எழுதி ஒட்டிவிட்டால், பார்க்க வருபவர் படித்துப் பயன் பெறுவர். மாஸ்க், சோப்பு, சானிடைசர் போன்றவற்றை வைத்துக் கொடுங்கள். பயனாக இருக்கும்..* கொலுவில் பார்க், மலை போன்று அமைக்கும்போது சிறிய தகர டப்பாவை மணலில் புதைத்து, அதிலிருந்து சாம்பிராணி புகை வரும்படியாக அமைத்தால், மலையிலிருந்து பனிப்புகை வருவது போன்று இருக்கும்..* உறவினர், நண்பர்களோடு வீட்டில் வேலை செய்பவர்களையும் கொலு பார்க்க அழையுங்கள்..* திருநங்கை, விதவை, மணமாகாத பெண்கள் என வேறுபாடு பார்க்காமல் அவர்களும் பெண்கள்தான் என்ற விசாலமான மனத்தோடு அவர்களுக்கும் வெற்றிலை பாக்கு, பழம், சுண்டல், தேங்காய் கொடுங்கள்..* பித்தளை குங்குமச் சிமிழ், சிறிய தட்டு, ஊதுபத்தி ஸ்டாண்ட், சந்தன கும்பா என பித்தளை சாமான்களை வைத்துக் கொடுங்கள். புண்ணியம் கூடும்..* கொலு வைக்கும் இடத்தில் டி.வி.யை வைக்காதீர்கள்..* கொலுப் படிகளில் வரிசையாக மண் அகல் ஏற்றி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்..* கொலு வைக்கும் அறை சுவர்களில் அழகான ஓவியங்களை மாட்டினால் கூடுதல் அழகு தரும்..* குட்டி குட்டி பொம்மைகளை அழகான, அகலமான தாம்பாளத்தில் கலர் பேப்பரை ஒட்டி, அதில் வரிசையாகவோ ரவுண்டாகவோ வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். குட்டி பொம்மைகள் கீழேயும் விழாது.– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.* கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும் அன்பைப் பெருக்கவும், பாரம்பரிய கலாசாரத்தைக் கடைப்பிடிக்கவுமே. வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது. மனித நேயம் வளர உதவியாக அது இருக்க வேண்டும்..* நவராத்திரிக்கு பயன்படுத்தும் விளக்குகளை சாம்பலுடன் இரண்டு அல்லது மூன்று சொட்டு மண்ணெண்ணெய் விட்டுத் தேய்த்த பின், தனி சாம்பலால் ஒருமுறை நன்றாகத் தேய்த்து, சுத்தமான துணி கொண்டு துடைத்துவிட்டால் பளபளவென்று இருக்கும்..* எளிதில் உடையக்கூடிய, ஒட்டு வேலைப்பாடுகளுடைய பொம்மைகளை, காது குடைய கடைகளில் விற்கும் காட்டன் பட்ஸை வாங்கித் தூசி துடைத்தால் மிகச்சிறிய பள்ளங்கள், இடுக்குகளைக்கூட உடையாமல் துப்புரவாகத் துடைத்து, 'பளிச்'சென்று ஆக்கி விடலாம்..* நவராத்திரிக்கு எப்போதும் தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என்றுதான் கூப்பிட்டு பூஜை செய்வோம். இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாக, பக்கத்தில் வசிக்கும் முதியோர்களை, முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்களைக் கூப்பிட்டு பூஜை செய்து பாருங்கள். அவர்களும், `தங்களை உறவினர்கள் போல் நேசிப்பவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்' என்று மனம் மகிழ்ந்து போவார்கள்..* கொலுவில் தெப்பக்குளம் அமைக்கும்போது தெப்பக்குளத் தண்ணீரில் துணிக்குப் போடும் உஜாலா லிக்விட் நீலத்தை சிறிது கலந்தால் தெப்பக்குளம் தத்ரூபமாக இருக்கும்..* கொலு படிக்கட்டுகளின் ஓரங்களில் சிறிய கலர் கலரான ப்ளாஸ்டிக் பந்துகள் வைத்து பெவிகால் தடவி ஒட்டிவிட்டால், படிகள் பார்க்க வித்தியாசமாக இருக்கும்..* கொலு பொம்மைகளில் வார்னிஷ் பூசிவிட்டால் பளிச்சென்று மின்னும். தூசி படர்ந்தால் துடைத்துவிடலாம். பெயிண்டும் உதிராது..* நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை தம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தது வைத்தபடி வாடாமல் இருக்கும்..* மாலையில் வாங்கும் மல்லிகைப் பூ, மறு தினத்திற்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதிதாக மணமுடன் இருக்கும்..* பக்கத்திலிருக்கும் ஏழைப் பெண்களை அழைத்து சாப்பாடு போட்டு, சேலை வைத்துக் கொடுங்கள். அடுத்து வரும் தீபாவளிக்கு உடுத்திக்கொள்ள அவர்களுக்குப் பயன்படும்..* கொலு முடிந்த பின் பொம்மைகளை மொத்தமாக பேக் செய்வதைத் தவிர்த்து, ஒவ்வொரு படி பொம்மையையும் தனித்தனியாக பெட்டிகளில் வைத்தால், அடுத்த வருடம் கொலு வைக்கும்போது அந்தப் படிக்குரிய பொம்மைகளை வரிசைப்படுத்த சுலபமாக இருக்கும்.– சீதாலக்ஷ்மி, கேரளா