– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.பொதுவாக, நகரங்களில் அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கிறது. அனைவருக்கும் கேஸ் அடுப்பைப் பயன்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருக்கும்..சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும்போது, சமையல் கேஸ் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால், சிலிண்டர் விநியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும்போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்பந்தமான அடுப்புகளை வைத்துப் பயன்படுத்தக் கூடாது. சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். .சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க்குமிழ் உருவாகும். இதைக்கொண்டு எரிவாயு கசிவை பரிசோதிக்கலாம். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது..நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்..சிலிண்டர்களை நல்ல முறையில் உபயோகப்படுத்த சில குறிப்புகள் :.சமைக்கும்போது, அடுப்பில் பாத்திரங்களை வைத்துவிட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விட்டால் சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இதனால் கேஸ் கசிவு உண்டாகும். பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கேஸ் கசிவு இருக்கும்போது விபத்தை உண்டாக்கக் கூடும்..இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து, சரிசெய்து கொள்ள வேண்டும்..கேஸ் கசிவு ஏற்பட்டால் பதற்றம் அடையாமல் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது. வெளிப்புறம் இருக்கும் மின் இணைப்பில் மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்..காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும். எரியும் நெருப்பு, எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் விநியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டு, கேஸ் கசிவு ஏற்படுவதை சரிசெய்து கொள்ளுங்கள்.
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.பொதுவாக, நகரங்களில் அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கிறது. அனைவருக்கும் கேஸ் அடுப்பைப் பயன்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருக்கும்..சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும்போது, சமையல் கேஸ் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால், சிலிண்டர் விநியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும்போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்பந்தமான அடுப்புகளை வைத்துப் பயன்படுத்தக் கூடாது. சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். .சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க்குமிழ் உருவாகும். இதைக்கொண்டு எரிவாயு கசிவை பரிசோதிக்கலாம். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது..நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்..சிலிண்டர்களை நல்ல முறையில் உபயோகப்படுத்த சில குறிப்புகள் :.சமைக்கும்போது, அடுப்பில் பாத்திரங்களை வைத்துவிட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விட்டால் சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இதனால் கேஸ் கசிவு உண்டாகும். பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கேஸ் கசிவு இருக்கும்போது விபத்தை உண்டாக்கக் கூடும்..இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து, சரிசெய்து கொள்ள வேண்டும்..கேஸ் கசிவு ஏற்பட்டால் பதற்றம் அடையாமல் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது. வெளிப்புறம் இருக்கும் மின் இணைப்பில் மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்..காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும். எரியும் நெருப்பு, எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் விநியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டு, கேஸ் கசிவு ஏற்படுவதை சரிசெய்து கொள்ளுங்கள்.