சிறுகதை – சாந்தி நாதன்.ஓவியம்: லலிதா.மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.."வாப்பா எப்ப சென்னை வந்தே? உன் மனைவி வரலையா?" என்றவர் "வேணி இவருக்கும் சேர்த்து டீ போடு " என்று குரல் கொடுத்தார். "ஐயா டீயா காப்பியா " என்றவாறு சமையலறையிலிருந்து வந்தவளிடம் "இப்போதைக்கு தண்ணீர் போதும். சிறிது நேரம் பொறுத்து டீயோ காப்பியோ இவருக்கு என்ன போடுவியோ அது " என்வாறே டேபிளின் மேலிருந்த ஜக்கிலிருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு சோபாவில் அமர்ந்தார். "எனக்கும் இப்ப அவசரமில்லை வேணி அப்புறமா டீ போதும். நீ மத்த வேலைகளைப் பார்" என்றபடி நண்பன் அருகில் வந்து அமர்ந்தார் ராமநாதன்.." நாளைக்கு கமலாவோட உறவுக்காரங்க வீட்டுத் திருமணம். நேற்று மாலை சதாப்தியில் வந்தோம். காலை பூஜை முடிந்து சாப்பிட்ட பிறகு இங்கு கிளம்பி வந்தேன். மாலை ரிசப்ஷன் நாளைக்கு முகூர்த்தம் முடிந்து மாலை சதாப்தியில் பெங்களூர் திரும்புகிறோம்." இங்கு பத்மாவும் ஊரில் இல்லை சிந்துவும் ஆபிஸ் போயிருப்பா. அதனால நீங்க மட்டும் போய் உங்க பிரண்டைப் பார்த்துட்டு வாங்கன்னு " கமலா என்னை அனுப்பி வைச்சா…. சரி நந்தினிக்ககு குழந்தை பிறந்து மூணு மாசம் ஆகியிருக்குமே பத்மா எப்ப வரா? அப்பாவும் மகளும் எப்படி சமாளிக்கிறீங்க? உனக்குத் தான் சமையலே தெரியாதுன்னு சொல்லுவியே".டிரேயில் இரு கோப்பை டீ, பிஸ்கட்டுடன் வந்த கிருஷ்ணவேணி " இவரு சக்கரை அதிகம் வேண்டாம்பாரு. உங்களுக்கு எப்படி சார் ?"என்று கேட்க," எனக்கும் அப்படித்தாம்மா" என்றவர் "பரவாயில்லையே இதெல்லாம் கூட பார்த்து செய்யறையே" …."அம்மா கிளம்பறதுக்கு முன்ன ஒவ்வொண்ணும் யோசிச்சு எனக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அவங்க கிளம்பற சமயம் என் மூத்தமகளுக்கும் பிரசவ நேரமாயிடிச்சு. கார்மெண்ட் கம்பனியில வேலைப் பார்த்துக் கொண்டிருந்த என் சின்னப்பெண் வேலை பிடிக்காம விட்டுட்டு வந்ததனால அவளும் அம்மா கிட்ட நல்ல வேலை கத்துக்கிட்டா….. ஐயா உங்க பிரண்டுக்கும் சேர்த்து ராத்திரி டிபன் சொல்லிடவா?" என்றாள்.."வேண்டாம்மா. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி கல்யாண மண்டபம் போகணும் சிந்து சீக்கிரம் வந்தா அவளைப் பார்த்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்." இருவரும் குடித்து முடித்த டீ கோப்பைகளுடன் வேணி நகர, "நல்ல விவரமான ஆளாகத்தான் இருக்கா," என்றார் சடகோபன்.." எல்லாம் பத்மா டிரெய்னிங். இவளை விட இவ பெண் செல்வி ரொம்ப ஸ்மார்ட். அவதான் ரெகுலாராக வருவா. சிந்து ஆபிஸ் கிளம்பும் சமயம் ஒவ்வொண்ணும் கரெக்டா பார்த்துப் பார்த்து ரெடியா வைச்சிடுவா," என்றார் ராமநாதன்.."ஐயா வேலை முடிஞ்சிடிச்சு. நான் கிளம்பவா? வீட்டில சின்னப் பாப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போவணும். சொல்ல மறந்து போயிட்டேனே… மதியம் நீங்க தூங்கிக்கிட்டு இருக்கும் போது சிந்து பாப்பா என் போனில் கூப்பிட்டாங்க. அவங்க வர கொஞ்சம் லேட்டாகும்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. " என்றாள் வேணி.."என்ன வேணி நீ சிந்து போன் செஞ்சதை இவ்வளவு லேட்டா சொல்ற? சரி, செல்வி எப்படி இருக்கா? நாளையிலேந்து அவளையே வரச் சொல்லு. உனக்கு பாதி "வேலை மறந்து போயிடறது," என்றார் ராமநாதன்..செல்விக்கு ஒரு குழந்தைங்க பாத்துக்கற இடத்தில வேலை கிடைச்ச விஷயம் சிந்து பாப்பா சொல்லலியா? இரண்டு நாளா போயிட்டிருக்கா. அவ மனசுக்குப் பிடிச்ச வேலை அமைஞ்சதில ரொம்ப சந்தோஷமா இருக்கா. பாப்பா ஆபிஸ் வேலைக்கு இடையில உங்களுக்குச் சொல்ல மறந்திருக்கும் … இனிமே பழைய மாதிரி நான் தான் இங்க வேலைக்கு வருவேன்," என்று கூறி பதிலுக்குக் காத்திராமல் நகருபவளை ஏதோ கேட்க ராமநாதன் வாய் திறக்க, "இன்னைக்கு நல்ல முகூர்த்த நாள். சாயங்கால நேரம் வேற. வண்டி வர இன்னும் பத்து நிமிஷத்துக்கு மேல ஆகும் போலிருக்கு," என்று சொன்னபடியே சோபாவில் வந்து உட்கார்ந்தார் சடகோபன். "இரு குழந்தை போட்டோகாட்டறேன், " என ஐபேட் எடுத்து வந்து அருகி்ல் ராமநாதன் அமர்ந்து கொண்டார்.."நந்தினியின் முதல் திருமணநாள் சமயம் சிந்துவின் கடைசி வருட படிப்பும் முடிந்ததால் நாங்க மூணு பேருமா யூ.எஸ். போய் மூணு நாலு வாரம் இருந்தோமில்லையா? அந்த போட்டோக்கள் பார்" ஒவ்வொன்றாக காண்பித்துக் குழந்தையின் புகைப்படம் வரை காட்டி முடித்தார். "எல்லாம் சூப்பர். சிந்து இப்ப ரொம்ப நன்னாயிருக்கா. அவளுக்கு ஏதாவது பார்க்க ஆரம்பித்திருக்கியா ? தெரிஞ்ச இடத்தில் நல்ல பையன்கள் இருக்கிறார்கள். கமலாவும் கேட்கச் சொல்லியனுப்பினா." "சிந்து உடனடியா திருமணம் வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டா. அவ கொஞ்சநாள் வேலை பார்த்து ஒர்க் எக்ஸ்பிரியன்ஸுடன் மேலே படிக்கப் போறாளாம்." "சரிப்பா கார் வர மெசேஐ் வந்துடுத்து. நான் கிளம்பறேன். பத்மா வந்தபிறகு மூணு பேருமா பெங்களூர் வாங்க, " என்று நண்பர் விடைபெற, இரவு உணவுக்கான காரியருடன் வந்தவனிடம் மறுநாளைக்கான காரியரைக் கொடுத்து டிபனை உணவு மேஜையில் வைத்துவிட்டு உட்கார்ந்தார் ராமநாதன்.."இதென்ன சிந்துவிற்குப் புது பழக்கம்? நான் தூங்கிக் கொண்டிருந்தால் எனக்கே மெசேஜ் போடலாம் இல்லையென்றால் கொஞ்ச நேரம் கழித்து எனக்கே போன் செய்யலாமே….கடந்த ஒரு வாரமாகவே சிந்து ஏதோ மாதிரி இருக்கா. வழக்கமா காலையில கிளம்பற வரைக்கும் வேலைக்கு நடுவிலேயும் என் கூட பேசிண்டும் சாயங்காலம் வந்ததிலிருந்து சாப்பிட்டுப் படுக்கற வரைக்கும் அரட்டை அடிக்கறவ அதிகம் பேசாமல் கிளம்பிப் போறதும் வந்தவுடன் என்னை கவனிக்காத மாதிரி அறைக்குள் போய் கதவை சாத்திக்கறதும்….. என்னவாக இருக்கும்? என் அப்பா தான் என் பெஸ்ட் அண்ட் ப்ர்ஸ்ட் பிரெண்ட் என்று எப்பவும் சொல்வாளே ….. இன்னிக்கு நேரிடையா கேக்க வேண்டியதுதான் " மனதிற்குள் தீர்மானம் செய்தவராய் மகளின் வரவிற்குக் காத்திருந்தார் ராமநாதன்..ஏழரை மணி வாக்கில் உள்ளே நுழைந்த மகள் நேராகத்தன் அறையை நோக்கிச் செல்ல, "சிந்து இங்க வா. உன்னோடு கொஞ்சம் பேசணும்" என்றார் அதட்டலாக. "ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க வரேன்."…. சொன்னமாதிரியே சிறிது நேரத்தில் உடை மாற்றி, முகம் கழுவிக் கொண்டு வந்தவளைப் பார்த்து "ஏதாச்சும் குடிக்கத் தரவா?" "வேண்டாம் இப்ப சாப்பிடும் நேரமாயிடுத்து. நான் போய் தட்டு வைக்கிறேன்". "அதுக்கு முன்னாடி இங்க வந்து உட்காரு நான் உன்னோடு பேசணும்.".மௌனமாக உட்கார்ந்தவளைப் பார்த்து, " ஏன் நீ டல்லாக இருக்க? நான் முதல்ல வேலை ஜாஸ்தியோன்னு நினைச்சேன்.அதுக்கு ஏத்த மாதிரி ரெண்டு மூணு நாளு சீக்கிரம் கிளம்பிப் போனே, லேட்டா வர, என்ன பிராபளம்? எதுவா இருந்தாலும் நீ எங்கிட்ட ப்ரீயா சொல்லுவியே இப்ப ஏன் ஒண்ணும் சொல்லாம உனக்குள்ளயே வச்சுக்கிட்டு வாய் திறக்காம இருக்க? உடம்பு ஏதும் சரியில்லையா? ஆபீசில் ஏதும் பிரச்சனையா? சொல்லும்மா" அதட்டல் தொனியில் துவங்கி கெஞ்சல் குரலில் முடித்தார் ராமநாதன்..தலை குனி்ந்து அமர்ந்திருந்த சிந்து சிறிய மௌனத்திற்குப் பின் "ஆமாம் ஆபிசில் ஒரு பிரச்னை…." "என்ன… சொல்லு" "எங்க எம்.டி. பிரபாகர் சாரைப் பத்திநான் உங்க கிட்ட உயர்வா நிறைய சொல்லியிருக் கேனில்லையா? தன் கீழே வேலை செய்பவர்களிடம துளிக் கூட பந்தாயி்ல்லாமல் நண்பர் போல பழகுவார். ஏதாவது தவறு செய்தாலும் நிதானமாகச் சுட்டிக்காட்டித் திருத்துவார். வேலையை சரியாகச் செய்தால் மனம் திறந்து பாராட்டி உற்சாகப் படுத்துவார்….." "இதெல்லாம் நீ ஏற்கனவே சொன்னதுதானே இப்ப என்ன விஷயம் சொல்லு அவருக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?"."உடம்பெல்லாம் நன்றாகத் தானிருக்கு புத்தி தான் பிசகியிருக்கு. சில நாட்களாக அவர் போக்கே சரியில்லை. கொஞ்ச நாளாகவே அநாவசியமா என்னை அவர் ரூமிற்குக் கூப்பிடுவதும், எதேச்சையாகக் கை பட்டதுபோல் என்னைத் தொடுவதும் பல்லைக் காட்டுவதும் சகிக்க முடியாமல் " என்ன சார் இதெல்லாம்னு" கேட்டா , "நான் ஒரு விடோயர்னு உனக்குத் தெரியுமில்லையா.ரொம்ப லோன்லியா பீ்ல்பண்றேன். எனக்குக் கம்பெனி கொடுக்கறையான்னு கேக்கறார். அந்த சமயம் அவருக்கு ஏதோ போன் வரவே நான் வெளியே வந்துட்டேன். நாளைக்கு ஆபிஸ் வேலையா மும்பை போறார். வர நாலுநாள் ஆகும்."."அடப் பாவி அவன் மக வயசு பெண்கிட்ட அவன் எப்படி இந்த மாதிரி வழிவான்? அவன் எப்ப ஊரிலிருந்து வரான்னு சொல்லு நான் ஆபிசுக்கே வந்து நாலு பேர் எதிரில் அவனை நாக்கைப் பிடிங்கற மாதிரி கேட்டுத் தலைகுனிய வைக்கறேன். தட்டிக்கேக்க ஆளு இல்லைங்கற நினைப்பா? அயோக்கிய ராஸ்கல்" முகம் சிவக்க குரலெழுப்பும் தந்தையை ஒரு நிமிடம் உறுத்துப் பார்த்தவள்," அப்ப செல்விக்கு ஆதரவா உங்களைத் தட்டிக் கேக்க யாருமில்லங்கற நினைப்பில தான் நீங்க அவகிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சீங்க இல்லையா?" என்ற சிந்துவின் நேரடி தாக்குதலில் நிலைகுலைந்து நின்றார் ராமநாதன்.." எங்க எம்.டி.யைப் பத்திக் கற்பனையா தரக்குறைவா பேசிய பேச்சுக்கு நான் முதல்ல மானசீகமா மனப்பூர்வமா அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன். நடுத்தர வயதில் மனைவியை இழந்தாலும் தன் இரு குழந்தைகளுக்காக மறுமணம் செய்யாம வாழ்கிறார். தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் எங்கள் நிறுவனத்தை நல்ல நிலைமைக்கு உயர்த்தி தன்னையும் உயர்த்திக் கொண்ட திறமைசாலி. என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவருடைய பெண் இந்துவின் ஞாபகம் வருவதாகச் சொல்லுவார். பெயரில் உனக்கும் அவளுக்கும் முதல் எழுத்துதான் வித்தியாசம். அதனால் நீயும் எனக்கு ஒரு மகள் மாதிரி தான் என்பார்..குவளையிலிருந்த நீரை மடமடவென்று அருந்தியவள்," நம்ம நந்தினியை விட சிறியவள் செல்வி. ஆனா இந்த சின்னவயசிலேயே அவ படாத கஷ்டமில்லை. தறுதலை புருஷனோட சித்ரவதை தாங்காம அவனை ஒரேடியா தலைமுழுகிட்டு வந்தவளுக்கு அவ அம்மாவும் அண்ணனும் வேற கல்யாணம் செய்ய முயற்சி எடுத்தபோது தீர்மானமா மறுத்துட்டு்த் தன் சொந்தக் கால்ல நின்னுத் தன்மானத்தோடு வாழ முடிவு எடுத்தா..கார்மெண்ட் பாக்டரியில் வேலையில் சேர்ந்தவள், அங்குள்ள விடலைப் பயல்களின் தொந்தரவு தாங்காமல் அந்த வேலையையும் விட்டு விட்டு இங்க வந்து பாதுகாப்பா இருக்கலாம்னு வேலை பார்க்கத் துவங்கினா. நம்ம ரெண்டு பேருக்கும் அம்மா கூட இல்லாததே தெரியாதபடி ஒண்ணொண்ணும் எவ்வளவு கச்சிதமா செஞ்சான்னு உங்களுக்கே தெரியும். அந்த நல்லமனசுக்காரி பத்துநாள் முன்பு நான் ஆபிஸ் விட்டு வரும் நேரம் எனக்காக் காத்திருந்து "உங்க அப்பாவை என் அப்பாவா நினைச்சு அப்பான்னுதான் கூப்பிடறேன். ஆனா கொஞ்ச நாளா அவர் வேற மாதிரி பேசறாரு பழகராறு. நான் வேலைசெய்யற இடத்துக்கு வந்து நின்னுகிட்டு என்னைத்தொட்டுத் தொட்டு பேசும்போது உடம்பு மனசு எல்லாம் எரியுது சிந்து. அதான் பொறுக்கமுடியாமல் இப்ப உங்கிட்ட சொல்றேன்னு," அவ அழுத அழுகையில நான் கூசி நின்னேன். அப்பவே அவளுக்கு லேசா ஜுரம் இருந்தது. மறுநாள் அவளை வேலைக்கு வரவேண்டாம்னு அவ அம்மாவை வரச்செய்தேன். ரெண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு அவளை எனக்குத் தெரிஞ்ச மகளி்ர் அமைப்புக்கு அழைச்சிட்டுப் போய் ஒரு நல்ல குழந்தைகள் டேகேர் செண்டரில் வேலையும் வாங்கிக் கொடுத்து விட்டேன். அவ அம்மாவிடமோ அண்ணனிடமோ நடந்த கேவல நிகழ்வுகளை சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு உங்க நடத்தைக்கு மன்னிப்பும் கேட்டுக் கிட்டேன்..அப்ப அவ "நீயும் அப்பாவை ஏதும் கேக்காத சிந்து. இதை இதோடுவிட்டுடுங்க," என்றாள். எப்படி உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் வந்தது? அவ நேரபோய் இதை வீட்டில சொல்லியிருந்தா நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும்? ஒவ்வொறு வாட்டி போன் செய்யும்போதும் அம்மா உங்களைப் பத்தி எப்படி விசாரிப்பாங்க தெரியுமா? அவங்களுக்கு இது தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடுபடும்னு நினைச்சுப் பாருங்க".மூச்சு விடாமல் பேசி நிறுத்திய மகள் அருகி்ல் நீ்ர் வழியும் கண்களோடு சென்றவர்,"சிந்து என்னை மன்னிச்சிடும்மா. நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்புதாம்மா. செல்விகிட்ட கால்ல விழுந்து நான் மன்னிப்பு் கேக்கணும். இதனால நீ இந்த அப்பாவை வெறுத்து ஒதுக்கிடாதே. என்னால அதைத் தாங்க முடியாது" உடல் குலுங்க அழும் தந்தையின் தோளை தடவிக் கொண்டே "என் செல்லக் குட்டி அப்பாவை என்னால எப்படி வெறுக்க முடியும் சொல்லுங்க. உங்க அழுகையிலேயே எல்லா தப்பும் கரைஞ்சுப் போயிடு்த்துன்னு இதோட இதை மறந்துவிடுவோம்.. எனக்கு ரொம்பப் பசிக்கிறது வாங்கப்பா சாப்பிடலாம்." அப்பாவின் கைபிடித்து நடந்தாள் சிந்து.
சிறுகதை – சாந்தி நாதன்.ஓவியம்: லலிதா.மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.."வாப்பா எப்ப சென்னை வந்தே? உன் மனைவி வரலையா?" என்றவர் "வேணி இவருக்கும் சேர்த்து டீ போடு " என்று குரல் கொடுத்தார். "ஐயா டீயா காப்பியா " என்றவாறு சமையலறையிலிருந்து வந்தவளிடம் "இப்போதைக்கு தண்ணீர் போதும். சிறிது நேரம் பொறுத்து டீயோ காப்பியோ இவருக்கு என்ன போடுவியோ அது " என்வாறே டேபிளின் மேலிருந்த ஜக்கிலிருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு சோபாவில் அமர்ந்தார். "எனக்கும் இப்ப அவசரமில்லை வேணி அப்புறமா டீ போதும். நீ மத்த வேலைகளைப் பார்" என்றபடி நண்பன் அருகில் வந்து அமர்ந்தார் ராமநாதன்.." நாளைக்கு கமலாவோட உறவுக்காரங்க வீட்டுத் திருமணம். நேற்று மாலை சதாப்தியில் வந்தோம். காலை பூஜை முடிந்து சாப்பிட்ட பிறகு இங்கு கிளம்பி வந்தேன். மாலை ரிசப்ஷன் நாளைக்கு முகூர்த்தம் முடிந்து மாலை சதாப்தியில் பெங்களூர் திரும்புகிறோம்." இங்கு பத்மாவும் ஊரில் இல்லை சிந்துவும் ஆபிஸ் போயிருப்பா. அதனால நீங்க மட்டும் போய் உங்க பிரண்டைப் பார்த்துட்டு வாங்கன்னு " கமலா என்னை அனுப்பி வைச்சா…. சரி நந்தினிக்ககு குழந்தை பிறந்து மூணு மாசம் ஆகியிருக்குமே பத்மா எப்ப வரா? அப்பாவும் மகளும் எப்படி சமாளிக்கிறீங்க? உனக்குத் தான் சமையலே தெரியாதுன்னு சொல்லுவியே".டிரேயில் இரு கோப்பை டீ, பிஸ்கட்டுடன் வந்த கிருஷ்ணவேணி " இவரு சக்கரை அதிகம் வேண்டாம்பாரு. உங்களுக்கு எப்படி சார் ?"என்று கேட்க," எனக்கும் அப்படித்தாம்மா" என்றவர் "பரவாயில்லையே இதெல்லாம் கூட பார்த்து செய்யறையே" …."அம்மா கிளம்பறதுக்கு முன்ன ஒவ்வொண்ணும் யோசிச்சு எனக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அவங்க கிளம்பற சமயம் என் மூத்தமகளுக்கும் பிரசவ நேரமாயிடிச்சு. கார்மெண்ட் கம்பனியில வேலைப் பார்த்துக் கொண்டிருந்த என் சின்னப்பெண் வேலை பிடிக்காம விட்டுட்டு வந்ததனால அவளும் அம்மா கிட்ட நல்ல வேலை கத்துக்கிட்டா….. ஐயா உங்க பிரண்டுக்கும் சேர்த்து ராத்திரி டிபன் சொல்லிடவா?" என்றாள்.."வேண்டாம்மா. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி கல்யாண மண்டபம் போகணும் சிந்து சீக்கிரம் வந்தா அவளைப் பார்த்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்." இருவரும் குடித்து முடித்த டீ கோப்பைகளுடன் வேணி நகர, "நல்ல விவரமான ஆளாகத்தான் இருக்கா," என்றார் சடகோபன்.." எல்லாம் பத்மா டிரெய்னிங். இவளை விட இவ பெண் செல்வி ரொம்ப ஸ்மார்ட். அவதான் ரெகுலாராக வருவா. சிந்து ஆபிஸ் கிளம்பும் சமயம் ஒவ்வொண்ணும் கரெக்டா பார்த்துப் பார்த்து ரெடியா வைச்சிடுவா," என்றார் ராமநாதன்.."ஐயா வேலை முடிஞ்சிடிச்சு. நான் கிளம்பவா? வீட்டில சின்னப் பாப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போவணும். சொல்ல மறந்து போயிட்டேனே… மதியம் நீங்க தூங்கிக்கிட்டு இருக்கும் போது சிந்து பாப்பா என் போனில் கூப்பிட்டாங்க. அவங்க வர கொஞ்சம் லேட்டாகும்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. " என்றாள் வேணி.."என்ன வேணி நீ சிந்து போன் செஞ்சதை இவ்வளவு லேட்டா சொல்ற? சரி, செல்வி எப்படி இருக்கா? நாளையிலேந்து அவளையே வரச் சொல்லு. உனக்கு பாதி "வேலை மறந்து போயிடறது," என்றார் ராமநாதன்..செல்விக்கு ஒரு குழந்தைங்க பாத்துக்கற இடத்தில வேலை கிடைச்ச விஷயம் சிந்து பாப்பா சொல்லலியா? இரண்டு நாளா போயிட்டிருக்கா. அவ மனசுக்குப் பிடிச்ச வேலை அமைஞ்சதில ரொம்ப சந்தோஷமா இருக்கா. பாப்பா ஆபிஸ் வேலைக்கு இடையில உங்களுக்குச் சொல்ல மறந்திருக்கும் … இனிமே பழைய மாதிரி நான் தான் இங்க வேலைக்கு வருவேன்," என்று கூறி பதிலுக்குக் காத்திராமல் நகருபவளை ஏதோ கேட்க ராமநாதன் வாய் திறக்க, "இன்னைக்கு நல்ல முகூர்த்த நாள். சாயங்கால நேரம் வேற. வண்டி வர இன்னும் பத்து நிமிஷத்துக்கு மேல ஆகும் போலிருக்கு," என்று சொன்னபடியே சோபாவில் வந்து உட்கார்ந்தார் சடகோபன். "இரு குழந்தை போட்டோகாட்டறேன், " என ஐபேட் எடுத்து வந்து அருகி்ல் ராமநாதன் அமர்ந்து கொண்டார்.."நந்தினியின் முதல் திருமணநாள் சமயம் சிந்துவின் கடைசி வருட படிப்பும் முடிந்ததால் நாங்க மூணு பேருமா யூ.எஸ். போய் மூணு நாலு வாரம் இருந்தோமில்லையா? அந்த போட்டோக்கள் பார்" ஒவ்வொன்றாக காண்பித்துக் குழந்தையின் புகைப்படம் வரை காட்டி முடித்தார். "எல்லாம் சூப்பர். சிந்து இப்ப ரொம்ப நன்னாயிருக்கா. அவளுக்கு ஏதாவது பார்க்க ஆரம்பித்திருக்கியா ? தெரிஞ்ச இடத்தில் நல்ல பையன்கள் இருக்கிறார்கள். கமலாவும் கேட்கச் சொல்லியனுப்பினா." "சிந்து உடனடியா திருமணம் வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டா. அவ கொஞ்சநாள் வேலை பார்த்து ஒர்க் எக்ஸ்பிரியன்ஸுடன் மேலே படிக்கப் போறாளாம்." "சரிப்பா கார் வர மெசேஐ் வந்துடுத்து. நான் கிளம்பறேன். பத்மா வந்தபிறகு மூணு பேருமா பெங்களூர் வாங்க, " என்று நண்பர் விடைபெற, இரவு உணவுக்கான காரியருடன் வந்தவனிடம் மறுநாளைக்கான காரியரைக் கொடுத்து டிபனை உணவு மேஜையில் வைத்துவிட்டு உட்கார்ந்தார் ராமநாதன்.."இதென்ன சிந்துவிற்குப் புது பழக்கம்? நான் தூங்கிக் கொண்டிருந்தால் எனக்கே மெசேஜ் போடலாம் இல்லையென்றால் கொஞ்ச நேரம் கழித்து எனக்கே போன் செய்யலாமே….கடந்த ஒரு வாரமாகவே சிந்து ஏதோ மாதிரி இருக்கா. வழக்கமா காலையில கிளம்பற வரைக்கும் வேலைக்கு நடுவிலேயும் என் கூட பேசிண்டும் சாயங்காலம் வந்ததிலிருந்து சாப்பிட்டுப் படுக்கற வரைக்கும் அரட்டை அடிக்கறவ அதிகம் பேசாமல் கிளம்பிப் போறதும் வந்தவுடன் என்னை கவனிக்காத மாதிரி அறைக்குள் போய் கதவை சாத்திக்கறதும்….. என்னவாக இருக்கும்? என் அப்பா தான் என் பெஸ்ட் அண்ட் ப்ர்ஸ்ட் பிரெண்ட் என்று எப்பவும் சொல்வாளே ….. இன்னிக்கு நேரிடையா கேக்க வேண்டியதுதான் " மனதிற்குள் தீர்மானம் செய்தவராய் மகளின் வரவிற்குக் காத்திருந்தார் ராமநாதன்..ஏழரை மணி வாக்கில் உள்ளே நுழைந்த மகள் நேராகத்தன் அறையை நோக்கிச் செல்ல, "சிந்து இங்க வா. உன்னோடு கொஞ்சம் பேசணும்" என்றார் அதட்டலாக. "ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க வரேன்."…. சொன்னமாதிரியே சிறிது நேரத்தில் உடை மாற்றி, முகம் கழுவிக் கொண்டு வந்தவளைப் பார்த்து "ஏதாச்சும் குடிக்கத் தரவா?" "வேண்டாம் இப்ப சாப்பிடும் நேரமாயிடுத்து. நான் போய் தட்டு வைக்கிறேன்". "அதுக்கு முன்னாடி இங்க வந்து உட்காரு நான் உன்னோடு பேசணும்.".மௌனமாக உட்கார்ந்தவளைப் பார்த்து, " ஏன் நீ டல்லாக இருக்க? நான் முதல்ல வேலை ஜாஸ்தியோன்னு நினைச்சேன்.அதுக்கு ஏத்த மாதிரி ரெண்டு மூணு நாளு சீக்கிரம் கிளம்பிப் போனே, லேட்டா வர, என்ன பிராபளம்? எதுவா இருந்தாலும் நீ எங்கிட்ட ப்ரீயா சொல்லுவியே இப்ப ஏன் ஒண்ணும் சொல்லாம உனக்குள்ளயே வச்சுக்கிட்டு வாய் திறக்காம இருக்க? உடம்பு ஏதும் சரியில்லையா? ஆபீசில் ஏதும் பிரச்சனையா? சொல்லும்மா" அதட்டல் தொனியில் துவங்கி கெஞ்சல் குரலில் முடித்தார் ராமநாதன்..தலை குனி்ந்து அமர்ந்திருந்த சிந்து சிறிய மௌனத்திற்குப் பின் "ஆமாம் ஆபிசில் ஒரு பிரச்னை…." "என்ன… சொல்லு" "எங்க எம்.டி. பிரபாகர் சாரைப் பத்திநான் உங்க கிட்ட உயர்வா நிறைய சொல்லியிருக் கேனில்லையா? தன் கீழே வேலை செய்பவர்களிடம துளிக் கூட பந்தாயி்ல்லாமல் நண்பர் போல பழகுவார். ஏதாவது தவறு செய்தாலும் நிதானமாகச் சுட்டிக்காட்டித் திருத்துவார். வேலையை சரியாகச் செய்தால் மனம் திறந்து பாராட்டி உற்சாகப் படுத்துவார்….." "இதெல்லாம் நீ ஏற்கனவே சொன்னதுதானே இப்ப என்ன விஷயம் சொல்லு அவருக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?"."உடம்பெல்லாம் நன்றாகத் தானிருக்கு புத்தி தான் பிசகியிருக்கு. சில நாட்களாக அவர் போக்கே சரியில்லை. கொஞ்ச நாளாகவே அநாவசியமா என்னை அவர் ரூமிற்குக் கூப்பிடுவதும், எதேச்சையாகக் கை பட்டதுபோல் என்னைத் தொடுவதும் பல்லைக் காட்டுவதும் சகிக்க முடியாமல் " என்ன சார் இதெல்லாம்னு" கேட்டா , "நான் ஒரு விடோயர்னு உனக்குத் தெரியுமில்லையா.ரொம்ப லோன்லியா பீ்ல்பண்றேன். எனக்குக் கம்பெனி கொடுக்கறையான்னு கேக்கறார். அந்த சமயம் அவருக்கு ஏதோ போன் வரவே நான் வெளியே வந்துட்டேன். நாளைக்கு ஆபிஸ் வேலையா மும்பை போறார். வர நாலுநாள் ஆகும்."."அடப் பாவி அவன் மக வயசு பெண்கிட்ட அவன் எப்படி இந்த மாதிரி வழிவான்? அவன் எப்ப ஊரிலிருந்து வரான்னு சொல்லு நான் ஆபிசுக்கே வந்து நாலு பேர் எதிரில் அவனை நாக்கைப் பிடிங்கற மாதிரி கேட்டுத் தலைகுனிய வைக்கறேன். தட்டிக்கேக்க ஆளு இல்லைங்கற நினைப்பா? அயோக்கிய ராஸ்கல்" முகம் சிவக்க குரலெழுப்பும் தந்தையை ஒரு நிமிடம் உறுத்துப் பார்த்தவள்," அப்ப செல்விக்கு ஆதரவா உங்களைத் தட்டிக் கேக்க யாருமில்லங்கற நினைப்பில தான் நீங்க அவகிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சீங்க இல்லையா?" என்ற சிந்துவின் நேரடி தாக்குதலில் நிலைகுலைந்து நின்றார் ராமநாதன்.." எங்க எம்.டி.யைப் பத்திக் கற்பனையா தரக்குறைவா பேசிய பேச்சுக்கு நான் முதல்ல மானசீகமா மனப்பூர்வமா அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன். நடுத்தர வயதில் மனைவியை இழந்தாலும் தன் இரு குழந்தைகளுக்காக மறுமணம் செய்யாம வாழ்கிறார். தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் எங்கள் நிறுவனத்தை நல்ல நிலைமைக்கு உயர்த்தி தன்னையும் உயர்த்திக் கொண்ட திறமைசாலி. என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவருடைய பெண் இந்துவின் ஞாபகம் வருவதாகச் சொல்லுவார். பெயரில் உனக்கும் அவளுக்கும் முதல் எழுத்துதான் வித்தியாசம். அதனால் நீயும் எனக்கு ஒரு மகள் மாதிரி தான் என்பார்..குவளையிலிருந்த நீரை மடமடவென்று அருந்தியவள்," நம்ம நந்தினியை விட சிறியவள் செல்வி. ஆனா இந்த சின்னவயசிலேயே அவ படாத கஷ்டமில்லை. தறுதலை புருஷனோட சித்ரவதை தாங்காம அவனை ஒரேடியா தலைமுழுகிட்டு வந்தவளுக்கு அவ அம்மாவும் அண்ணனும் வேற கல்யாணம் செய்ய முயற்சி எடுத்தபோது தீர்மானமா மறுத்துட்டு்த் தன் சொந்தக் கால்ல நின்னுத் தன்மானத்தோடு வாழ முடிவு எடுத்தா..கார்மெண்ட் பாக்டரியில் வேலையில் சேர்ந்தவள், அங்குள்ள விடலைப் பயல்களின் தொந்தரவு தாங்காமல் அந்த வேலையையும் விட்டு விட்டு இங்க வந்து பாதுகாப்பா இருக்கலாம்னு வேலை பார்க்கத் துவங்கினா. நம்ம ரெண்டு பேருக்கும் அம்மா கூட இல்லாததே தெரியாதபடி ஒண்ணொண்ணும் எவ்வளவு கச்சிதமா செஞ்சான்னு உங்களுக்கே தெரியும். அந்த நல்லமனசுக்காரி பத்துநாள் முன்பு நான் ஆபிஸ் விட்டு வரும் நேரம் எனக்காக் காத்திருந்து "உங்க அப்பாவை என் அப்பாவா நினைச்சு அப்பான்னுதான் கூப்பிடறேன். ஆனா கொஞ்ச நாளா அவர் வேற மாதிரி பேசறாரு பழகராறு. நான் வேலைசெய்யற இடத்துக்கு வந்து நின்னுகிட்டு என்னைத்தொட்டுத் தொட்டு பேசும்போது உடம்பு மனசு எல்லாம் எரியுது சிந்து. அதான் பொறுக்கமுடியாமல் இப்ப உங்கிட்ட சொல்றேன்னு," அவ அழுத அழுகையில நான் கூசி நின்னேன். அப்பவே அவளுக்கு லேசா ஜுரம் இருந்தது. மறுநாள் அவளை வேலைக்கு வரவேண்டாம்னு அவ அம்மாவை வரச்செய்தேன். ரெண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு அவளை எனக்குத் தெரிஞ்ச மகளி்ர் அமைப்புக்கு அழைச்சிட்டுப் போய் ஒரு நல்ல குழந்தைகள் டேகேர் செண்டரில் வேலையும் வாங்கிக் கொடுத்து விட்டேன். அவ அம்மாவிடமோ அண்ணனிடமோ நடந்த கேவல நிகழ்வுகளை சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு உங்க நடத்தைக்கு மன்னிப்பும் கேட்டுக் கிட்டேன்..அப்ப அவ "நீயும் அப்பாவை ஏதும் கேக்காத சிந்து. இதை இதோடுவிட்டுடுங்க," என்றாள். எப்படி உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் வந்தது? அவ நேரபோய் இதை வீட்டில சொல்லியிருந்தா நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும்? ஒவ்வொறு வாட்டி போன் செய்யும்போதும் அம்மா உங்களைப் பத்தி எப்படி விசாரிப்பாங்க தெரியுமா? அவங்களுக்கு இது தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடுபடும்னு நினைச்சுப் பாருங்க".மூச்சு விடாமல் பேசி நிறுத்திய மகள் அருகி்ல் நீ்ர் வழியும் கண்களோடு சென்றவர்,"சிந்து என்னை மன்னிச்சிடும்மா. நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்புதாம்மா. செல்விகிட்ட கால்ல விழுந்து நான் மன்னிப்பு் கேக்கணும். இதனால நீ இந்த அப்பாவை வெறுத்து ஒதுக்கிடாதே. என்னால அதைத் தாங்க முடியாது" உடல் குலுங்க அழும் தந்தையின் தோளை தடவிக் கொண்டே "என் செல்லக் குட்டி அப்பாவை என்னால எப்படி வெறுக்க முடியும் சொல்லுங்க. உங்க அழுகையிலேயே எல்லா தப்பும் கரைஞ்சுப் போயிடு்த்துன்னு இதோட இதை மறந்துவிடுவோம்.. எனக்கு ரொம்பப் பசிக்கிறது வாங்கப்பா சாப்பிடலாம்." அப்பாவின் கைபிடித்து நடந்தாள் சிந்து.