வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– இந்திரா, ஸ்ரீரங்கம்.காரட் கேக்:தேவையானவை : கோதுமை மாவு – 1 கப் (250 ml), பேகிங் பௌடர் – அரை டீஸ்பூன், பட்டை பொடி – கால் டீஸ்பூன், துருவிய காரட் – அரை கப், பனை வெல்லம் (தூள்) – அரை கப், தயிர் – முக்கால் கப், எண்ணெய் (கடலை) – கால் கப், பால் – மூன்று டேபிள் ஸ்பூன், வெண்ணிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன். டூட்டி ஃப்ருட்டி மற்றும் நட்ஸ் நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம்..செய்முறை : கோதுமை மாவோடு பேகிங் பௌடர் மற்றும் பட்டை பொடி சேர்த்து நன்றாக சலித்துக்கொள்ளவும். பனை வெல்லப் பொடி மற்றும் எண்ணெயை நன்றாகக் கலந்து வைக்கவும். இரண்டும் ஒன்றாகச் சேரும்படி கலக்கவும். தயிரில் ஒரு சிட்டிகை பேகிங் சோடா சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொப்பளமாக வரும். பிறகு எண்ணெய், பனை வெல்லக் கலவையை தயிருடன் சேர்த்து நன்றாகப் பனை வெல்லப் பொடி கரையும் வரை கலக்கவும். பிறகு வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். தற்போது பனை வெல்லப் பொடி, எண்ணெய், தயிர் சேர்ந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்து, பிறகு துருவிய காரட்டை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். ஒரு எண்ணெய் தடவிய தட்டு அல்லது டிரேவில் சேர்த்து குக்கரில் வைக்க வேண்டும். அதில் ஒரு சிறிய வளையம் வைத்து (குக்கரின் அடியில்) கல் உப்பு சுமார் ஒரு கப் சேர்த்து, வளையத்தை அதன் மீது வைத்த பிறகு எல்லா கலவையும் சேர்ந்த குக்கர் பாத்திரம் அல்லது டிரேயில் வைத்து சுமார் 35 நிமிடங்கள் டேக் செய்ய வேண்டும். குக்கரின் காஸ்செட் மற்றும் விசில் போடாமல் இதைச் செய்யவும். இப்போது சுவையான கேக் ரெடி..சாக்லேட்:தேவையானவை : மில்க் மெயிட் – 1 டப்பா (400 கிராம்), சர்க்கரை – 400 கிராம், வெண்ணெய் – 400 கிராம், கோகோ பௌடர் – 5 டேபிள் ஸ்பூன்..செய்முறை : மேலே கூறிய மில்க் மெய்டு, சர்க்கரை, வெண்ணெய் மற்றும் கோகோ பௌடரை எல்லாம் ஒன்றாக ஒரு வாணலியில் சேர்த்துக் கைவிடாமல் கிளறிய பிறகு ஓரத்தில் ஒட்டாமல் வரும் பதம் வரும்போது வெண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி சிறிது ஆறிய பிறகு துண்டு போடவும். வாயில் போட்டால் கரையும் இந்த சாக்லேட்டை, உங்கள் குழந்தைகள் சாப்பிட்டால், 'கடை சாக்லேட் வேண்டாம், நீயே பண்ணித் தா' என்று கேட்பார்கள்..கோதுமை பர்ஃபி:தேவையானவை : கோதுமை மாவு – 1 கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய் – முக்கால் கப்..செய்முறை : கோதுமை மாவை நெய்யில் நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். ஒட்டாமல் பதம் வரும்போது இறக்கி, வெண்ணெய் தடவிய (நெய்யும் பரவாயில்லை) தாம்பாளத்தில் கொட்டி சிறிது ஆறியதும் துண்டு போடலாம். மிகச் சுவையாக இருக்கும்..பண்டிகைக் காலங்கள் தொடர்ந்து வருவதால் இவற்றை எல்லாம் செய்து, குடும்பத்தினரை மகிழ்விக்கலாம்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– இந்திரா, ஸ்ரீரங்கம்.காரட் கேக்:தேவையானவை : கோதுமை மாவு – 1 கப் (250 ml), பேகிங் பௌடர் – அரை டீஸ்பூன், பட்டை பொடி – கால் டீஸ்பூன், துருவிய காரட் – அரை கப், பனை வெல்லம் (தூள்) – அரை கப், தயிர் – முக்கால் கப், எண்ணெய் (கடலை) – கால் கப், பால் – மூன்று டேபிள் ஸ்பூன், வெண்ணிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன். டூட்டி ஃப்ருட்டி மற்றும் நட்ஸ் நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம்..செய்முறை : கோதுமை மாவோடு பேகிங் பௌடர் மற்றும் பட்டை பொடி சேர்த்து நன்றாக சலித்துக்கொள்ளவும். பனை வெல்லப் பொடி மற்றும் எண்ணெயை நன்றாகக் கலந்து வைக்கவும். இரண்டும் ஒன்றாகச் சேரும்படி கலக்கவும். தயிரில் ஒரு சிட்டிகை பேகிங் சோடா சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொப்பளமாக வரும். பிறகு எண்ணெய், பனை வெல்லக் கலவையை தயிருடன் சேர்த்து நன்றாகப் பனை வெல்லப் பொடி கரையும் வரை கலக்கவும். பிறகு வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். தற்போது பனை வெல்லப் பொடி, எண்ணெய், தயிர் சேர்ந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்து, பிறகு துருவிய காரட்டை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். ஒரு எண்ணெய் தடவிய தட்டு அல்லது டிரேவில் சேர்த்து குக்கரில் வைக்க வேண்டும். அதில் ஒரு சிறிய வளையம் வைத்து (குக்கரின் அடியில்) கல் உப்பு சுமார் ஒரு கப் சேர்த்து, வளையத்தை அதன் மீது வைத்த பிறகு எல்லா கலவையும் சேர்ந்த குக்கர் பாத்திரம் அல்லது டிரேயில் வைத்து சுமார் 35 நிமிடங்கள் டேக் செய்ய வேண்டும். குக்கரின் காஸ்செட் மற்றும் விசில் போடாமல் இதைச் செய்யவும். இப்போது சுவையான கேக் ரெடி..சாக்லேட்:தேவையானவை : மில்க் மெயிட் – 1 டப்பா (400 கிராம்), சர்க்கரை – 400 கிராம், வெண்ணெய் – 400 கிராம், கோகோ பௌடர் – 5 டேபிள் ஸ்பூன்..செய்முறை : மேலே கூறிய மில்க் மெய்டு, சர்க்கரை, வெண்ணெய் மற்றும் கோகோ பௌடரை எல்லாம் ஒன்றாக ஒரு வாணலியில் சேர்த்துக் கைவிடாமல் கிளறிய பிறகு ஓரத்தில் ஒட்டாமல் வரும் பதம் வரும்போது வெண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி சிறிது ஆறிய பிறகு துண்டு போடவும். வாயில் போட்டால் கரையும் இந்த சாக்லேட்டை, உங்கள் குழந்தைகள் சாப்பிட்டால், 'கடை சாக்லேட் வேண்டாம், நீயே பண்ணித் தா' என்று கேட்பார்கள்..கோதுமை பர்ஃபி:தேவையானவை : கோதுமை மாவு – 1 கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய் – முக்கால் கப்..செய்முறை : கோதுமை மாவை நெய்யில் நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். ஒட்டாமல் பதம் வரும்போது இறக்கி, வெண்ணெய் தடவிய (நெய்யும் பரவாயில்லை) தாம்பாளத்தில் கொட்டி சிறிது ஆறியதும் துண்டு போடலாம். மிகச் சுவையாக இருக்கும்..பண்டிகைக் காலங்கள் தொடர்ந்து வருவதால் இவற்றை எல்லாம் செய்து, குடும்பத்தினரை மகிழ்விக்கலாம்.