வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.திடீர் பாயசம் :வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வருவதால், விருந்தினர் வருகையும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு விருந்தோடு, எளிதாக ஒரு திடீர் பாயசமும் கொடுத்து அசத்த ஒரு எளிய டிப்ஸ்..ஜவ்வரிசி, பாசிப் பருப்பு, ரவை, (சேமியா வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்) இம் மூன்றையும் தலா ஒரு ஆழாக்கு எடுத்துக்கொள்ளவும். முதலில் ஜவ்வரிசியை ஐந்து நிமிடங்கள் வறுத்த பிறகு, பாசிப் பருப்பு, ரவையை தனியாக இரண்டு நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும். இவை அனைத்தையும் பொடி செய்து, ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளவும். பாயசம் செய்யும்போது தண்ணீரில் நான்கு ஸ்பூன் இந்த பாயசப் பொடி, அதற்குத் தேவையான வெல்லமோ, சர்க்கரையோ சேர்த்துக் கலக்கி அடுப்பில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவும். பிறகு பால், முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்தால் ருசியான திடீர் பாயசம் ரெடி.– வசந்தா மாரிமுத்து, சென்னை..ஓட்ஸ் ஊத்தப்பம் :ஓட்ஸ் பவுடர் தேவை : ஒரு கப் ரோல்டு ஓட்ஸ், ஒரு தேக்கரண்டி ரவை, ஒரு ஸ்பூன் நெய்..ஓட்ஸ் ஊத்தப்பம் செய்யத் தேவை : தயார் செய்த ஓட்ஸ் பவுடர், தண்ணீர், முக்கால் கப் தயிர், ஒரு டீஸ்பூன் ஆயில், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, உப்பு..ஊத்தப்பம் டாப்பிங் செய்யத் தேவை : அரை டீஸ்பூன் ரோல்ட் ஓட்ஸ், ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் (நறுக்கியது), ஒரு தக்காளி (நறுக்கியது), பச்சை மிளகாய் நறுக்கியது, சிறிது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, சிறிது கறிவேப்பிலை..ஓட்ஸ் பவுடர் தயாரிப்பு : வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஓட்ஸை, மீடியம் தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும். இதில் ரவை மற்றும் நெய் ஊற்றி வாசனை வரும் வரை வறுத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் பொடியாக அரைத்து மாவு போல் கரைக்கவும்..ஊத்தப்பம் டாப்பிங் செய்முறை : ஒரு பவுலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு மிக்ஸ் செய்து வைக்கவும்.ஓட்ஸ் ஊத்தப்பம் செய்முறை : ஒரு பவுலில் ஓட்ஸ் பவுடர், தண்ணீர், தயிர் கலந்து மிக்ஸ் செய்து, அதை பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும். ஓட்ஸ் கலவையில் ஆயில் மற்றும் பேக்கிங் சோடா போட்டு கலக்கவும். நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் மாவு ஊற்றி ஒரு பக்கம் வேகவிட்டு, அதன் மீது மிக்ஸ்சர் போட்டு மெல்லத் திருப்பிப் போடவும். இனி, நன்றாக வேகவிட்ட பிறகு சர்விங் பிளேட்டில் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.– ஆர்.சாந்தா, சென்னை.வாழை இலை துவையல் :தேவையானவை : வாழை இலை (பாதி) மீடியம் சைஸ், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7, பூண்டு – 10 பல் (தோல் உரிக்காமல்), சின்ன வெங்காயம் – 25 (உரித்தது), புளி – 1 கொட்டை அளவு, உப்பு – தேவையான அளவு..செய்முறை : ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பைப் போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், அதில் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து, வெங்காயம் நன்கு வேகும் வரை வதக்கவும். இஞ்சி சுவை பிடித்தால் ஒரு சின்ன துண்டு இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும், சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வாழை இலையைப் பொட்டு நன்கு சுருண்டு வதங்கும் வரை வதக்கவும். சிறிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, பின் சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்..இந்த சுவையான, ஆரோக்கியமான வாழை இலை துவையலை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்..குறிப்பு : வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு இந்த வாழை இலை துவையல் ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். அதேபோல், சிறுநீரகக் கல் உண்டாகாமல் தடுக்கவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் இது கைக்கண்ட நிவாரணி. மேலும், நோயெதிர்ப்புச் சக்தியையும் இது அதிகரிக்கச் செய்யும். சித்தர்கள் இந்த வாழை இலை துவையலைச் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.– அபர்ணா சுப்பிரமணியம், சென்னை
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.திடீர் பாயசம் :வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வருவதால், விருந்தினர் வருகையும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு விருந்தோடு, எளிதாக ஒரு திடீர் பாயசமும் கொடுத்து அசத்த ஒரு எளிய டிப்ஸ்..ஜவ்வரிசி, பாசிப் பருப்பு, ரவை, (சேமியா வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்) இம் மூன்றையும் தலா ஒரு ஆழாக்கு எடுத்துக்கொள்ளவும். முதலில் ஜவ்வரிசியை ஐந்து நிமிடங்கள் வறுத்த பிறகு, பாசிப் பருப்பு, ரவையை தனியாக இரண்டு நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும். இவை அனைத்தையும் பொடி செய்து, ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளவும். பாயசம் செய்யும்போது தண்ணீரில் நான்கு ஸ்பூன் இந்த பாயசப் பொடி, அதற்குத் தேவையான வெல்லமோ, சர்க்கரையோ சேர்த்துக் கலக்கி அடுப்பில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவும். பிறகு பால், முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்தால் ருசியான திடீர் பாயசம் ரெடி.– வசந்தா மாரிமுத்து, சென்னை..ஓட்ஸ் ஊத்தப்பம் :ஓட்ஸ் பவுடர் தேவை : ஒரு கப் ரோல்டு ஓட்ஸ், ஒரு தேக்கரண்டி ரவை, ஒரு ஸ்பூன் நெய்..ஓட்ஸ் ஊத்தப்பம் செய்யத் தேவை : தயார் செய்த ஓட்ஸ் பவுடர், தண்ணீர், முக்கால் கப் தயிர், ஒரு டீஸ்பூன் ஆயில், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, உப்பு..ஊத்தப்பம் டாப்பிங் செய்யத் தேவை : அரை டீஸ்பூன் ரோல்ட் ஓட்ஸ், ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் (நறுக்கியது), ஒரு தக்காளி (நறுக்கியது), பச்சை மிளகாய் நறுக்கியது, சிறிது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, சிறிது கறிவேப்பிலை..ஓட்ஸ் பவுடர் தயாரிப்பு : வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஓட்ஸை, மீடியம் தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும். இதில் ரவை மற்றும் நெய் ஊற்றி வாசனை வரும் வரை வறுத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் பொடியாக அரைத்து மாவு போல் கரைக்கவும்..ஊத்தப்பம் டாப்பிங் செய்முறை : ஒரு பவுலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு மிக்ஸ் செய்து வைக்கவும்.ஓட்ஸ் ஊத்தப்பம் செய்முறை : ஒரு பவுலில் ஓட்ஸ் பவுடர், தண்ணீர், தயிர் கலந்து மிக்ஸ் செய்து, அதை பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும். ஓட்ஸ் கலவையில் ஆயில் மற்றும் பேக்கிங் சோடா போட்டு கலக்கவும். நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் மாவு ஊற்றி ஒரு பக்கம் வேகவிட்டு, அதன் மீது மிக்ஸ்சர் போட்டு மெல்லத் திருப்பிப் போடவும். இனி, நன்றாக வேகவிட்ட பிறகு சர்விங் பிளேட்டில் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.– ஆர்.சாந்தா, சென்னை.வாழை இலை துவையல் :தேவையானவை : வாழை இலை (பாதி) மீடியம் சைஸ், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7, பூண்டு – 10 பல் (தோல் உரிக்காமல்), சின்ன வெங்காயம் – 25 (உரித்தது), புளி – 1 கொட்டை அளவு, உப்பு – தேவையான அளவு..செய்முறை : ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பைப் போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், அதில் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து, வெங்காயம் நன்கு வேகும் வரை வதக்கவும். இஞ்சி சுவை பிடித்தால் ஒரு சின்ன துண்டு இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும், சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வாழை இலையைப் பொட்டு நன்கு சுருண்டு வதங்கும் வரை வதக்கவும். சிறிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, பின் சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்..இந்த சுவையான, ஆரோக்கியமான வாழை இலை துவையலை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்..குறிப்பு : வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு இந்த வாழை இலை துவையல் ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். அதேபோல், சிறுநீரகக் கல் உண்டாகாமல் தடுக்கவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் இது கைக்கண்ட நிவாரணி. மேலும், நோயெதிர்ப்புச் சக்தியையும் இது அதிகரிக்கச் செய்யும். சித்தர்கள் இந்த வாழை இலை துவையலைச் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.– அபர்ணா சுப்பிரமணியம், சென்னை