-சுசீலாமாணிக்கம்ஓவியம்; பத்மவாசன் தொன்தமிழ் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் திரட்டில் இடம் பெற்றிருக்கும் நம் தமிழ் பண்பாட்டுக் கையேடாம் திருக்குறளின் பதினாறாம் அதிகாரம் "பொறையுடமை". நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடமை போற்றி யொழுகப் படும் பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும். ஒப்பில்லா உயர்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய பதிவுகளில் வரலாற்று புதினங்களுக்கெல்லாம் ஓர் முன்னோடியாக கருதப்படும் நம் பொன்னின் செல்வன் புதினத்தில் பொறுமையின் இலக்கணமாய் மட்டுமல்ல தான் விரும்பியவரின் உயிருக்கும் , நல்வாழ்வுக்கும், அவர்தம் தலைமுறையினருக்கும் காவல் தெய்வமாய் விளங்கி, வாய் பேச இயலாவிட்டாலும் அடர் காடுகளிலும், ஆழ்கடலிலும் ,படை வீடுகளைச் சுற்றியும், மிகச்சில சமயங்களில் நாடு நகரங்களிலும் கண்ணிமைக்கும் நேரங்களில் காட்சி தந்து அரிய செயல்கள் புரிந்து வரும் ஊமைராணி என்றழைக்கப்படும் ஈழத்து ராணியாகிய மந்தாகினி தேவி தான் நம் கண் முன் நிற்கிறார் எப்போதும் போல் அமைதியாக... (இலங்கை தீவில் ...அருள்மொழிவர்மர் ,வந்தியத் தேவன், ஆழ்வார்க்கடியான் மூவரும் ஓர் வீதியின் ஓரமாக பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.) "இளவரசர் அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். துஷ்டகமனுவின் மகன் ஸாலி அசோகமாலா என்னும் பெண்ணின் காதலுக்காக இந்த இலங்கை ராஜ்யத்தைத் துறந்தானென்று சொன்னேனே? அது உமது காதில் ஏறவில்லையா? என்றார். "எல்லாம் ஏறிற்று. அப்படித் தாங்கள் எந்தப் பெண்ணைக் காதலிக்கிறீர்கள்? அவ்விதம் தாங்கள் சிம்மாசனம் ஏறுவதற்கு குறுக்கே நிற்கும் பெண் யார்?” என்று வந்தியத்தேவன் கேட்டான். "ஒரு பெண் அல்ல; இரண்டு பெண்கள். சத்தியம், தர்மம் என்னும் இரு பெண்களை நான் காதலிக்கிறேன். அவர்களுக்காகவே இலங்கை மணி மகுடத்தை வேண்டாம் என்றேன். " "இளவரசே; தங்களைப் பார்த்தால் இளம் பிராயத்தினராக காணப்படுகிறது. பேச்சோ, வயதான கிழவரைப் போல் பேசுகிறீர்கள்.'' "நம்மில் யார் வயதானவர், யாருடைய பிராயம் முடியப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?" இப்படி அவர்கள் பேசியபோது வீதியின் ஓரமாக ஒரு பழைய மாளிகையின் சமீபம் போய்க் கொண்டிருந்தார்கள். வீதிக்கு எதிர்ப்புறத்தில் யாரோ கையைத் தட்டும் சப்தம்கேட்டது.சப்தம் கேட்ட இடத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. "இப்படி வாருங்கள்!" என்று கூறி, இளவரசர் அந்த உருவத்தை நோக்கி வீதியைக் கடந்து போனார். மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள். அவர்கள் பாதி வீதியைக் கடந்து கொண்டிருந்தபோது பின்னால் பெரிய தடபுடல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த் தார்கள். அவர்கள் எந்த வீட்டின் ஓரமாகப் போய்க் கொண்டிருந் தார்களோ அதன் மேல் மாடத்தின் முகப்பு இடிந்து விழுந்து கொண்டிருந்தது! அவர்கள் அங்கே வீதியைக் கடக்கத் திரும்பியிரா விட்டால் அவர்கள் தலைமேலே விழுந்து கொன்றிருக்கும்! ஒரு கண நேர வித்தியாசத்தில் மூன்று உயிர்கள் பிழைத்தன. அதுவும் எப்பேர்ப்பட்ட உயிர்கள்! "சற்று நடந்ததும், இளவரசே! தங்களைக் கையைத் தட்டி அழைத்து அந்த அம்மாள் என்ன சொன்னாள்?” என்று ஆழ்வார்க் கடியான் கேட்டான். “என்னைத் தேடிக்கொண்டு இரண்டு சத்துருக்கள் வந்திருக் கிறார்கள் என்று சொன்னாள். அவர்கள் என்னைக் கொல்வதற்குச் சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள். “அடி பாவி! ஒரு வேளை எங்களைப் பற்றித்தான் சொன்னாளா என்ன?” என்று வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கேட்டான்.. பொன்னியின் செல்வர் சிரித்துவிட்டு, "இல்லை, நீங்கள்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி நீங்களாகவே இருந்தாலும் கவலையில்லை. என் உயிர் மிகக் கெட்டியானது என்று அந்தத் தேவி சொல்லியிருக்கிறாள்! முன்னம் பல தடவை என்னைக் காப்பாற்றியும் இருக்கிறாள்” என்றார். (அதன் பின் மூவரும் தங்கள் களைப்புத் தீர ஒரு புராதன மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்) "வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் ஆர்வத்துடன் எழுந்துபோய் இளவரசரின் கட்டிலுக்குப் பக்கத்தில் கீழே உட்கார்ந்தார்கள். இளவரசர் பின்வருமாறு சொல்லத்தொடங்கினார்: "நான் சிறு பையனாயிருந்தபோது ஒரு சமயம் காவேரி நதியில் என் பெற்றோர்களுடன் படகில் போய்க்கொண்டிருந்தேன். என் தமையனும் என் தமக்கையும்கூட அச்சமயம் படகில் இருந்தார்கள். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டும் காவேரி நதியின் நீர் சுழித்து ஓடுவதையும், அந்த சுழிகளில் சிலசமயம் கடம்ப மலர்கள் அகப்பட்டுக் கொண்டு சுழல்வதையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சின்னஞ் சிறிய பூக்கள் அப்படிச் சுழலில் அகப்பட்டுத் தவிப்பதைப் பார்த்து எனக்கு வேதனை உண்டாகும். சில சமயம் படகின் ஓரமாகக் குனிந்து தவிக்கும் கடம்ப மலர்களை நீர்ச் சுழல்களிலிருந்து எடுத்து விடுவேன். அப்படி எடுத்துவிட்ட ஒரு சமயத்தில் தவறித் தண்ணீரில் விழுந்து விட்டேன். தலை குப்புற விழுந்தபடியால் திணறித் திண்டாடிப் போனேன்!" காவேரியின் அடி மணலில் என் தலை இடித்த உணர்ச்சி இப்போதும் என் நினைவில் இருக்கிறது. பிறகு வேகமாக ஓடிய தண்ணீர் என்னை அடித்துத் தள்ளிக்கொண்டு போனதும் நினைவிருக்கிறது. எங்கேயோ வெகுதூரத்தில் பலருடைய கூக்குரல்களின் சத்தம் கேட்பது போலிருந்தது. மூச்சுத்திணறத் தொடங்கியது. சரி, காவேரி நதி நம்மைக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடப் போகிறது என்று நினைத்துக்கொண்டேன். பெற்றோர்களும், தமக்கையும், தமையனும் நம்மைக் காணாமல் எவ்வளவு துன்பப்படுவார்கள் என்ற நினைவு உண்டாயிற்று. அந்தச்சமயத்தில் யாரோ என்னை இரு கைகளாலும் வாரி அணைத்து எடுத்தது போலிருந்தது. அடுத்த கணத்தில் தண்ணீருக்கு மேலே வந்து விட்டேன். தலை, கண், மூக்கு, வாய் எல்லாவற்றிலிருந்தும் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆயினும் என்னை வாரி எடுத்து காப்பாற்றிய கைகள் என் கண்ணுக்குத் தெரிந்தன. பிறகு அந்தக் கரங்களுக்குரியவரின் முகத்தையும் பார்த்தேன். சில கணநேரந்தான் என்றாலும் அந்த முகம் மனத்தில் பதிந்துவிட்டது. இதற்கு முன் எப்போதோ முகமாகவும் தோன்றியது. ஆனால் இன்னார் என்பதாகத் தெரியவில்லை." (இப்படி இளவரசர் அருள்மொழிவர் தொடர்ந்து பல நிகழ்வுகளை கூறிக் கொண்டே செல்கிறார்) (பெரும் குழப்பத்திலும் வெறுப்பிலும் இருந்த சுந்தர சோழர் மந்தாகினி தேவியைப் பற்றி கோபத்துடன் பேசுகிறார். அந்த கொடுஞ்சொற்களைக் கேட்ட சக்கரவர்த்தினியும் முதன் மந்திரியாரும் திகைத்து நிற்கிறார்கள்...) "சுந்தரசோழரின் கொடிய வார்த்தைகள் அவர்களுக்கு ஏமாற்றமளித்ததோடு ஓரளவு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின. சக்கரவர்த்தி இத்தனை நேரம் பேசியதற்கெல்லாம சிகரம் வைத்தாற்போல், “சீச்சி, இந்த ஊமைப் பைத்தியக்காரி உலகில் உயிரோடு வாழ்ந்திராவிட்டால் என்ன நேர்ந்து விடும்? இவள் கடலில் விழுந்தபோது உண்மையாகவே நஷ்டம் செத்துத் தொலைந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! எந்தப் பரம முட்டாள் மெனக்கட்டு இவளை எடுத்துக் காப்பாற்றினான்? "என்றார். இதற்குப் பிறகு மலையமான் மகளால் பொறுக்க முடியாமற் போயிற்று. உருக்கம் ததும்பிய ஆவேசத்துடன் அவள், "சுவாமி! தங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள். மகாபாவம்! நன்றி மறத்தல் எவ்வளவு கொடிய பாதகம் என்று பெரியோர்கள் எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்களே? தங்கள் உயிரை இந்த மாதரசி காப்பாற்றியதை வேணுமானாலும் மறந்து விடுங்கள். ஆனால் நம் அருமைக் குமாரன் அருள்மொழி வர்மனை இவர் காப்பாற்றியதை மறக்கலாமா? தாங்கள் மறந்தாலும் நான் மறக்க முடியாது. பதினாலு ஜன்மத்துக்கும் இந்தத் தெய்வ மகளுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருப்பேன்!" என்று சொன்னாள். "தேவி அந்தக் கதையை மறுபடியுமா சொல்லுகிறாய் ...?என்று சுந்தரசோழர் மேலும் பேசுவதற்குள் மலையமான் மகள் குறுக்கிட்டுக் கூறினாள்:- "கதை அல்ல, சுவாமி! அருள்மொழியே என்னிடம் சொன்னான். காவேரி வெள்ளத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய தேவிதான் ஈழத் தீவிலும் பலமுறை தன்னைக் காப்பாற்றியதாகச் சொன்னான். நல்ல வேளையாக, அவன் நாகைப்பட்டினத்திற்கு வந்து சுகமாயிருக்கிறான். அவனை அழைத்துவரச் செய்யுங்கள். தாங்களே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!" நீங்களும் பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்கும் பொழுது இன்னும் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்
-சுசீலாமாணிக்கம்ஓவியம்; பத்மவாசன் தொன்தமிழ் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் திரட்டில் இடம் பெற்றிருக்கும் நம் தமிழ் பண்பாட்டுக் கையேடாம் திருக்குறளின் பதினாறாம் அதிகாரம் "பொறையுடமை". நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடமை போற்றி யொழுகப் படும் பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும். ஒப்பில்லா உயர்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய பதிவுகளில் வரலாற்று புதினங்களுக்கெல்லாம் ஓர் முன்னோடியாக கருதப்படும் நம் பொன்னின் செல்வன் புதினத்தில் பொறுமையின் இலக்கணமாய் மட்டுமல்ல தான் விரும்பியவரின் உயிருக்கும் , நல்வாழ்வுக்கும், அவர்தம் தலைமுறையினருக்கும் காவல் தெய்வமாய் விளங்கி, வாய் பேச இயலாவிட்டாலும் அடர் காடுகளிலும், ஆழ்கடலிலும் ,படை வீடுகளைச் சுற்றியும், மிகச்சில சமயங்களில் நாடு நகரங்களிலும் கண்ணிமைக்கும் நேரங்களில் காட்சி தந்து அரிய செயல்கள் புரிந்து வரும் ஊமைராணி என்றழைக்கப்படும் ஈழத்து ராணியாகிய மந்தாகினி தேவி தான் நம் கண் முன் நிற்கிறார் எப்போதும் போல் அமைதியாக... (இலங்கை தீவில் ...அருள்மொழிவர்மர் ,வந்தியத் தேவன், ஆழ்வார்க்கடியான் மூவரும் ஓர் வீதியின் ஓரமாக பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.) "இளவரசர் அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். துஷ்டகமனுவின் மகன் ஸாலி அசோகமாலா என்னும் பெண்ணின் காதலுக்காக இந்த இலங்கை ராஜ்யத்தைத் துறந்தானென்று சொன்னேனே? அது உமது காதில் ஏறவில்லையா? என்றார். "எல்லாம் ஏறிற்று. அப்படித் தாங்கள் எந்தப் பெண்ணைக் காதலிக்கிறீர்கள்? அவ்விதம் தாங்கள் சிம்மாசனம் ஏறுவதற்கு குறுக்கே நிற்கும் பெண் யார்?” என்று வந்தியத்தேவன் கேட்டான். "ஒரு பெண் அல்ல; இரண்டு பெண்கள். சத்தியம், தர்மம் என்னும் இரு பெண்களை நான் காதலிக்கிறேன். அவர்களுக்காகவே இலங்கை மணி மகுடத்தை வேண்டாம் என்றேன். " "இளவரசே; தங்களைப் பார்த்தால் இளம் பிராயத்தினராக காணப்படுகிறது. பேச்சோ, வயதான கிழவரைப் போல் பேசுகிறீர்கள்.'' "நம்மில் யார் வயதானவர், யாருடைய பிராயம் முடியப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?" இப்படி அவர்கள் பேசியபோது வீதியின் ஓரமாக ஒரு பழைய மாளிகையின் சமீபம் போய்க் கொண்டிருந்தார்கள். வீதிக்கு எதிர்ப்புறத்தில் யாரோ கையைத் தட்டும் சப்தம்கேட்டது.சப்தம் கேட்ட இடத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. "இப்படி வாருங்கள்!" என்று கூறி, இளவரசர் அந்த உருவத்தை நோக்கி வீதியைக் கடந்து போனார். மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள். அவர்கள் பாதி வீதியைக் கடந்து கொண்டிருந்தபோது பின்னால் பெரிய தடபுடல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த் தார்கள். அவர்கள் எந்த வீட்டின் ஓரமாகப் போய்க் கொண்டிருந் தார்களோ அதன் மேல் மாடத்தின் முகப்பு இடிந்து விழுந்து கொண்டிருந்தது! அவர்கள் அங்கே வீதியைக் கடக்கத் திரும்பியிரா விட்டால் அவர்கள் தலைமேலே விழுந்து கொன்றிருக்கும்! ஒரு கண நேர வித்தியாசத்தில் மூன்று உயிர்கள் பிழைத்தன. அதுவும் எப்பேர்ப்பட்ட உயிர்கள்! "சற்று நடந்ததும், இளவரசே! தங்களைக் கையைத் தட்டி அழைத்து அந்த அம்மாள் என்ன சொன்னாள்?” என்று ஆழ்வார்க் கடியான் கேட்டான். “என்னைத் தேடிக்கொண்டு இரண்டு சத்துருக்கள் வந்திருக் கிறார்கள் என்று சொன்னாள். அவர்கள் என்னைக் கொல்வதற்குச் சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள். “அடி பாவி! ஒரு வேளை எங்களைப் பற்றித்தான் சொன்னாளா என்ன?” என்று வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கேட்டான்.. பொன்னியின் செல்வர் சிரித்துவிட்டு, "இல்லை, நீங்கள்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி நீங்களாகவே இருந்தாலும் கவலையில்லை. என் உயிர் மிகக் கெட்டியானது என்று அந்தத் தேவி சொல்லியிருக்கிறாள்! முன்னம் பல தடவை என்னைக் காப்பாற்றியும் இருக்கிறாள்” என்றார். (அதன் பின் மூவரும் தங்கள் களைப்புத் தீர ஒரு புராதன மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்) "வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் ஆர்வத்துடன் எழுந்துபோய் இளவரசரின் கட்டிலுக்குப் பக்கத்தில் கீழே உட்கார்ந்தார்கள். இளவரசர் பின்வருமாறு சொல்லத்தொடங்கினார்: "நான் சிறு பையனாயிருந்தபோது ஒரு சமயம் காவேரி நதியில் என் பெற்றோர்களுடன் படகில் போய்க்கொண்டிருந்தேன். என் தமையனும் என் தமக்கையும்கூட அச்சமயம் படகில் இருந்தார்கள். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டும் காவேரி நதியின் நீர் சுழித்து ஓடுவதையும், அந்த சுழிகளில் சிலசமயம் கடம்ப மலர்கள் அகப்பட்டுக் கொண்டு சுழல்வதையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சின்னஞ் சிறிய பூக்கள் அப்படிச் சுழலில் அகப்பட்டுத் தவிப்பதைப் பார்த்து எனக்கு வேதனை உண்டாகும். சில சமயம் படகின் ஓரமாகக் குனிந்து தவிக்கும் கடம்ப மலர்களை நீர்ச் சுழல்களிலிருந்து எடுத்து விடுவேன். அப்படி எடுத்துவிட்ட ஒரு சமயத்தில் தவறித் தண்ணீரில் விழுந்து விட்டேன். தலை குப்புற விழுந்தபடியால் திணறித் திண்டாடிப் போனேன்!" காவேரியின் அடி மணலில் என் தலை இடித்த உணர்ச்சி இப்போதும் என் நினைவில் இருக்கிறது. பிறகு வேகமாக ஓடிய தண்ணீர் என்னை அடித்துத் தள்ளிக்கொண்டு போனதும் நினைவிருக்கிறது. எங்கேயோ வெகுதூரத்தில் பலருடைய கூக்குரல்களின் சத்தம் கேட்பது போலிருந்தது. மூச்சுத்திணறத் தொடங்கியது. சரி, காவேரி நதி நம்மைக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடப் போகிறது என்று நினைத்துக்கொண்டேன். பெற்றோர்களும், தமக்கையும், தமையனும் நம்மைக் காணாமல் எவ்வளவு துன்பப்படுவார்கள் என்ற நினைவு உண்டாயிற்று. அந்தச்சமயத்தில் யாரோ என்னை இரு கைகளாலும் வாரி அணைத்து எடுத்தது போலிருந்தது. அடுத்த கணத்தில் தண்ணீருக்கு மேலே வந்து விட்டேன். தலை, கண், மூக்கு, வாய் எல்லாவற்றிலிருந்தும் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆயினும் என்னை வாரி எடுத்து காப்பாற்றிய கைகள் என் கண்ணுக்குத் தெரிந்தன. பிறகு அந்தக் கரங்களுக்குரியவரின் முகத்தையும் பார்த்தேன். சில கணநேரந்தான் என்றாலும் அந்த முகம் மனத்தில் பதிந்துவிட்டது. இதற்கு முன் எப்போதோ முகமாகவும் தோன்றியது. ஆனால் இன்னார் என்பதாகத் தெரியவில்லை." (இப்படி இளவரசர் அருள்மொழிவர் தொடர்ந்து பல நிகழ்வுகளை கூறிக் கொண்டே செல்கிறார்) (பெரும் குழப்பத்திலும் வெறுப்பிலும் இருந்த சுந்தர சோழர் மந்தாகினி தேவியைப் பற்றி கோபத்துடன் பேசுகிறார். அந்த கொடுஞ்சொற்களைக் கேட்ட சக்கரவர்த்தினியும் முதன் மந்திரியாரும் திகைத்து நிற்கிறார்கள்...) "சுந்தரசோழரின் கொடிய வார்த்தைகள் அவர்களுக்கு ஏமாற்றமளித்ததோடு ஓரளவு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின. சக்கரவர்த்தி இத்தனை நேரம் பேசியதற்கெல்லாம சிகரம் வைத்தாற்போல், “சீச்சி, இந்த ஊமைப் பைத்தியக்காரி உலகில் உயிரோடு வாழ்ந்திராவிட்டால் என்ன நேர்ந்து விடும்? இவள் கடலில் விழுந்தபோது உண்மையாகவே நஷ்டம் செத்துத் தொலைந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! எந்தப் பரம முட்டாள் மெனக்கட்டு இவளை எடுத்துக் காப்பாற்றினான்? "என்றார். இதற்குப் பிறகு மலையமான் மகளால் பொறுக்க முடியாமற் போயிற்று. உருக்கம் ததும்பிய ஆவேசத்துடன் அவள், "சுவாமி! தங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள். மகாபாவம்! நன்றி மறத்தல் எவ்வளவு கொடிய பாதகம் என்று பெரியோர்கள் எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்களே? தங்கள் உயிரை இந்த மாதரசி காப்பாற்றியதை வேணுமானாலும் மறந்து விடுங்கள். ஆனால் நம் அருமைக் குமாரன் அருள்மொழி வர்மனை இவர் காப்பாற்றியதை மறக்கலாமா? தாங்கள் மறந்தாலும் நான் மறக்க முடியாது. பதினாலு ஜன்மத்துக்கும் இந்தத் தெய்வ மகளுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருப்பேன்!" என்று சொன்னாள். "தேவி அந்தக் கதையை மறுபடியுமா சொல்லுகிறாய் ...?என்று சுந்தரசோழர் மேலும் பேசுவதற்குள் மலையமான் மகள் குறுக்கிட்டுக் கூறினாள்:- "கதை அல்ல, சுவாமி! அருள்மொழியே என்னிடம் சொன்னான். காவேரி வெள்ளத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய தேவிதான் ஈழத் தீவிலும் பலமுறை தன்னைக் காப்பாற்றியதாகச் சொன்னான். நல்ல வேளையாக, அவன் நாகைப்பட்டினத்திற்கு வந்து சுகமாயிருக்கிறான். அவனை அழைத்துவரச் செய்யுங்கள். தாங்களே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!" நீங்களும் பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்கும் பொழுது இன்னும் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்