1970ல் என் திருமணம் நடந்தது. அப்போது எக்ஸ்போ 70 கண்காட்சி சீசன் ஆதலால், 'எக்ஸ்போ 70' என்ற பெயரில் பட்டுப்புடைவை அறிமுகம் ஆனது. என் கணவர் ரஸ்க் கலரில் எக்ஸ்போ 70 பட்டுப்புடைவையை எனக்கு தலை தீபாவளிப் பரிசாக அளித்தார். பிறந்த வீட்டிலும் வயலட் நிற பட்டுப்புடைவையை வாங்கி இருந்தார்கள். இரு புடைவைகளையும் தலை தீபாவளி அன்று நான் உடுத்திக் கொண்டாடி மகிழ்தேன். 52 ஆண்டுகள் கடந்த பின்பும், தலை தீபாவளி நினைவுகள் இன்னும் பசுமையாக மனதில் நிலைத்திருக்கின்றன.- எஸ். ராஜம், திருச்சி****************************************************அம்மா, அண்ணன், தம்பி மற்றும் நாங்கள் என கூட்டுக் குடும்பமாய் இருந்தோம். எங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு 'ஆராயி' என்ற ஒரு பெண்ணை திருச்சியிலிருந்து, தெரிந்த ஒரு நண்பர் மூலம் சென்னை அழைத்து வந்து, வீட்டோடு வைத்திருந்தோம். கணவனால் கைவிடப்பட்டு, திருச்சியில் சித்தாள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள். பயங்கரமா சாப்பிடுவா. சென்னையில் அப்போ தண்ணீர் கஷ்டம். குழந்தையை பார்த்ததை விட, பக்கத்து பார்க்கிலிருந்து தண்ணீர் சுமந்து வந்ததே அதிகம்.அந்த தீபாவளிக்கு, பட்சணங்களை, எங்கள் குடும்பத்தின் அனைத்து விஷேசங்களுக்கும் சுவையாக சமைத்துத் தரும் சமையல்காரரான 'அச்சுதன்'என்பவர் வீட்டில் வந்து செய்துகொடுத்தார். அசிஸ்டன்ட் ஒருவரை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, மிக்ஸர் என பண்ணிக் குவித்துவிட்டார். சாப்பாட்டுக்கு தொட்டுக்கவென்று ஒரு தாம்பாளம் நிறைய பக்கோடா செய்து வைத்தார். போதாக்குறைக்கு, போளி வேறு செய்யலாமென்று இரண்டு கிலோ மைதா மாவை பிசைந்து கொண்டிருந்தார்..அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. நேரமும் அதிகமாகிவிட, வேறுவழியின்றி பிசைந்த மாவை மாட்டுக்கு கொடுத்துவிட்டு, வீடு சென்றார்.அன்று இரவு சாப்பிடும்போது பக்கோடா இருந்த தட்டைப் பார்த்தோம். அது சுத்தமாக் காலியாயிருந்தது. அனைத்தையும் ஆராயிதான் தின்றுவிட்டாள் என தெரியவந்தது. ஏதாவது கேட்டா, 'ஊருக்குப் போறேன்' னு சொல்லிட்டானா.... தண்ணிப் பிரச்னையை எப்படித் தீர்ப்பதென பயந்து மௌனமானோம்.அலுவலக நாட்களில், தீபாவளி முடிந்து நான்கைந்து நாட்களுக்கு எங்கள் பிரிவில் பட்சண விநியோகம் நடந்துகொண்டே இருக்கும். பெண் ஊழியர்கள் அதிகமுள்ள என் பிரிவில் அலப்பறை அதிகம். சூப்பர்வைசரான எனது மேஜையில், பெண்கள் அனைவரும் காலையிலேயே, அவரவர் வீட்டில் தயாரித்த இனிப்பு வகைகள் அடங்கிய பைகள், கார வகைகள் தனி பையில் என கலந்து கட்டி கொண்டு வந்து அடுக்கி வைத்துவிடுவர். நாள் முழுக்க யார் வேணும்னாலும் எது வேண்டும்னாலும் எடுத்து சாப்பிடுவோம். கோல்டன் மெமொரீஸ்!!!- ஜெயகாந்தி மகாதேவன், சென்னை****************************************************என் கணவரின் சகோதரர் மற்றும் எங்களுக்கும் 1971ல் தலை தீபாவளி . என் ஓா்ப்படியின் அப்பா தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை, மாட்டுப் பெண்ணை அனுப்பி வையுங்கள் என தபால் போட்டார். என் வீட்டிலிருந்து தபால் வரவில்லை. நான் வருத்தமாக இருந்ததைப் பார்த்த என் கணவா், என் அப்பா போட்டது போல, தானே ஒரு கடிதத்தை என் மாமனார் பெயருக்கு அனுப்பினார். என் மாமனார், மாமியார், சதோஷப்பட்டார்கள். நான் என் கணவரிடம் ஏன் இப்படி செய்தீா்கள்? எனக் கேட்டேன். உன் தாய் தகப்பனாரின், குடும்பச் சூழல், பணப்பிரச்னை காரணமாக நம்மை அழைக்காமல் இருந்திருக்கலாம் . அதே நேரம் அனுப்ப வேண்டாம் எனவும் தபால் போடமுடியாதல்லவா (அப்போது போன் வசதி குறைவு போஸ்ட் ஆபிசுக்கு புக் பண்ணி பேசவேண்டும்.).நாங்கள் இருவரும் தலை தீபாவளிக்குக் கிளம்பினோம். என் கணவா் எங்களுக்கு எடுத்த துணிவகைகளோடு மாமனார், மாமியார் ஆசியோடு திருச்சி புறப்பட்டோம். மயிலாடுதுறை சென்று என் கணவா் என்னை ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று என் தாயார், தகப்பனார், என் ஏழு வயது தம்பிக்கு ஜவுளி, வெடி வாங்கினார். அதோடு ஸ்வீட், காரம் வாங்கினார். மேலும் அரை பவுன் மோதிரம் வாங்கினார். இதெல்லாம் வேண்டாமே என்றேன். அதற்கு என் கணவா் அங்கு என்ன சூழலோ... நமக்கு அவா்கள் எடுத்துக் கொடுப்பதற்கு பதிலாக நாம் எடுத்துக் கொடுப்போமே எனச் சொன்னார். ஒரு வழியாக திருச்சி கீழகல்கண்டார்கோட்டைக்கு போய் சோ்ந்தோம். என் அப்பா, அம்மா அதிர்ச்சியானார்கள். என்னிடம் என் அம்மாவோ நாங்கள் தபாலே போடவில்லையே? எனக்கேட்க என் கணவரோ உங்கள் கெளரவம் பாதிக்கப் படக்கூடாது என்பதால்தான் வந்தோம் என்று சொல்லி, அவா்களுக்கு எடுத்த துணிமணிகள், ஸ்வீட், பழம் மற்றும் மோதிரத்தைக் கொடுத்தோம். ஊா் திரும்பி மோதிரத்தை என் மாமனாரிடம் காண்பித்தோம். மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் என் மனது மட்டும் உறுத்தலாகவே இருந்ததோடல்லாமல், என் கணவா் மீது நான் வைத்திருந்த பாசத்தை அதிகரிக்கச் செய்தது, அந்தத் தலை தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது.- நா. புவனாநாகராஜன், செம்பனார்கோவில்.
1970ல் என் திருமணம் நடந்தது. அப்போது எக்ஸ்போ 70 கண்காட்சி சீசன் ஆதலால், 'எக்ஸ்போ 70' என்ற பெயரில் பட்டுப்புடைவை அறிமுகம் ஆனது. என் கணவர் ரஸ்க் கலரில் எக்ஸ்போ 70 பட்டுப்புடைவையை எனக்கு தலை தீபாவளிப் பரிசாக அளித்தார். பிறந்த வீட்டிலும் வயலட் நிற பட்டுப்புடைவையை வாங்கி இருந்தார்கள். இரு புடைவைகளையும் தலை தீபாவளி அன்று நான் உடுத்திக் கொண்டாடி மகிழ்தேன். 52 ஆண்டுகள் கடந்த பின்பும், தலை தீபாவளி நினைவுகள் இன்னும் பசுமையாக மனதில் நிலைத்திருக்கின்றன.- எஸ். ராஜம், திருச்சி****************************************************அம்மா, அண்ணன், தம்பி மற்றும் நாங்கள் என கூட்டுக் குடும்பமாய் இருந்தோம். எங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு 'ஆராயி' என்ற ஒரு பெண்ணை திருச்சியிலிருந்து, தெரிந்த ஒரு நண்பர் மூலம் சென்னை அழைத்து வந்து, வீட்டோடு வைத்திருந்தோம். கணவனால் கைவிடப்பட்டு, திருச்சியில் சித்தாள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள். பயங்கரமா சாப்பிடுவா. சென்னையில் அப்போ தண்ணீர் கஷ்டம். குழந்தையை பார்த்ததை விட, பக்கத்து பார்க்கிலிருந்து தண்ணீர் சுமந்து வந்ததே அதிகம்.அந்த தீபாவளிக்கு, பட்சணங்களை, எங்கள் குடும்பத்தின் அனைத்து விஷேசங்களுக்கும் சுவையாக சமைத்துத் தரும் சமையல்காரரான 'அச்சுதன்'என்பவர் வீட்டில் வந்து செய்துகொடுத்தார். அசிஸ்டன்ட் ஒருவரை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, மிக்ஸர் என பண்ணிக் குவித்துவிட்டார். சாப்பாட்டுக்கு தொட்டுக்கவென்று ஒரு தாம்பாளம் நிறைய பக்கோடா செய்து வைத்தார். போதாக்குறைக்கு, போளி வேறு செய்யலாமென்று இரண்டு கிலோ மைதா மாவை பிசைந்து கொண்டிருந்தார்..அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. நேரமும் அதிகமாகிவிட, வேறுவழியின்றி பிசைந்த மாவை மாட்டுக்கு கொடுத்துவிட்டு, வீடு சென்றார்.அன்று இரவு சாப்பிடும்போது பக்கோடா இருந்த தட்டைப் பார்த்தோம். அது சுத்தமாக் காலியாயிருந்தது. அனைத்தையும் ஆராயிதான் தின்றுவிட்டாள் என தெரியவந்தது. ஏதாவது கேட்டா, 'ஊருக்குப் போறேன்' னு சொல்லிட்டானா.... தண்ணிப் பிரச்னையை எப்படித் தீர்ப்பதென பயந்து மௌனமானோம்.அலுவலக நாட்களில், தீபாவளி முடிந்து நான்கைந்து நாட்களுக்கு எங்கள் பிரிவில் பட்சண விநியோகம் நடந்துகொண்டே இருக்கும். பெண் ஊழியர்கள் அதிகமுள்ள என் பிரிவில் அலப்பறை அதிகம். சூப்பர்வைசரான எனது மேஜையில், பெண்கள் அனைவரும் காலையிலேயே, அவரவர் வீட்டில் தயாரித்த இனிப்பு வகைகள் அடங்கிய பைகள், கார வகைகள் தனி பையில் என கலந்து கட்டி கொண்டு வந்து அடுக்கி வைத்துவிடுவர். நாள் முழுக்க யார் வேணும்னாலும் எது வேண்டும்னாலும் எடுத்து சாப்பிடுவோம். கோல்டன் மெமொரீஸ்!!!- ஜெயகாந்தி மகாதேவன், சென்னை****************************************************என் கணவரின் சகோதரர் மற்றும் எங்களுக்கும் 1971ல் தலை தீபாவளி . என் ஓா்ப்படியின் அப்பா தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை, மாட்டுப் பெண்ணை அனுப்பி வையுங்கள் என தபால் போட்டார். என் வீட்டிலிருந்து தபால் வரவில்லை. நான் வருத்தமாக இருந்ததைப் பார்த்த என் கணவா், என் அப்பா போட்டது போல, தானே ஒரு கடிதத்தை என் மாமனார் பெயருக்கு அனுப்பினார். என் மாமனார், மாமியார், சதோஷப்பட்டார்கள். நான் என் கணவரிடம் ஏன் இப்படி செய்தீா்கள்? எனக் கேட்டேன். உன் தாய் தகப்பனாரின், குடும்பச் சூழல், பணப்பிரச்னை காரணமாக நம்மை அழைக்காமல் இருந்திருக்கலாம் . அதே நேரம் அனுப்ப வேண்டாம் எனவும் தபால் போடமுடியாதல்லவா (அப்போது போன் வசதி குறைவு போஸ்ட் ஆபிசுக்கு புக் பண்ணி பேசவேண்டும்.).நாங்கள் இருவரும் தலை தீபாவளிக்குக் கிளம்பினோம். என் கணவா் எங்களுக்கு எடுத்த துணிவகைகளோடு மாமனார், மாமியார் ஆசியோடு திருச்சி புறப்பட்டோம். மயிலாடுதுறை சென்று என் கணவா் என்னை ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று என் தாயார், தகப்பனார், என் ஏழு வயது தம்பிக்கு ஜவுளி, வெடி வாங்கினார். அதோடு ஸ்வீட், காரம் வாங்கினார். மேலும் அரை பவுன் மோதிரம் வாங்கினார். இதெல்லாம் வேண்டாமே என்றேன். அதற்கு என் கணவா் அங்கு என்ன சூழலோ... நமக்கு அவா்கள் எடுத்துக் கொடுப்பதற்கு பதிலாக நாம் எடுத்துக் கொடுப்போமே எனச் சொன்னார். ஒரு வழியாக திருச்சி கீழகல்கண்டார்கோட்டைக்கு போய் சோ்ந்தோம். என் அப்பா, அம்மா அதிர்ச்சியானார்கள். என்னிடம் என் அம்மாவோ நாங்கள் தபாலே போடவில்லையே? எனக்கேட்க என் கணவரோ உங்கள் கெளரவம் பாதிக்கப் படக்கூடாது என்பதால்தான் வந்தோம் என்று சொல்லி, அவா்களுக்கு எடுத்த துணிமணிகள், ஸ்வீட், பழம் மற்றும் மோதிரத்தைக் கொடுத்தோம். ஊா் திரும்பி மோதிரத்தை என் மாமனாரிடம் காண்பித்தோம். மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் என் மனது மட்டும் உறுத்தலாகவே இருந்ததோடல்லாமல், என் கணவா் மீது நான் வைத்திருந்த பாசத்தை அதிகரிக்கச் செய்தது, அந்தத் தலை தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது.- நா. புவனாநாகராஜன், செம்பனார்கோவில்.