பஜ்ஜிசூடான பஜ்ஜிதான் பெஸ்ட்! அதுவும் மிளகாய் பஜ்ஜி என்றால் அதன் காரமும் சுவையும் அலாதிதான். பஜ்ஜி மாவு தயாரித்து, வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் என்று கட் பண்ணி, மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து.. சூடாகச் சாப்பிட்டால் ஆஹா...- ஜெயா சம்பத், கொரட்டூர் பகோடா என்றால் ஒரு சில VARIETY மட்டுமே செய்து சாப்பிடலாம். பஜ்ஜி என்றால், மிளகாய், பீர்க்கங்காய், வெங்காயம், வாழைக்காய், குடைமிளகாய், சௌசௌ, வெள்ளரிக்காய், ஓம இலை, தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, இவற்றை யெல்லாம் செய்து சுடச்சுட தலா ஒன்று சாப்பிட்டு (தேவைப்பட்டால் இஞ்சி சட்னி ஓகே) இரவில் டிபன் ஏதும் சாப்பிடாமல் கூட சுக்குக் காபி சூடாகக் குடித்துவிட்டு படுத்தால், போர்வைக்குள் ஒரு சொர்க்கம், இரவா பகலா என்று தெரியாத அனந்த தூக்கம். அடடா... அனுபவிக்க அதுக்கெல்லாம் ரசனை வேணும் மேடம்...- ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்மழைக்கு மட்டுமல்ல பெண்பார்க்கும் படலம், தலைதீபாவளி, மழைக்காலம் மற்றும் திடீா் ஸ்நாக்ஸ் செய்வதற்கு எளிமையானது பஜ்ஜி, பஜ்ஜி பஜ்ஜியே!சூடாய் என்ன சாப்பிடலாம் என நினைக்கும்போதே கட்டியம் கட்டி முதல் வரிசையில் நிற்பது பஜ்ஜிதான. நீளவாட்டமாய் நறுக்கியது, வட்ட வட்டமாய் நறுக்கியது. ‘ரிங்’காய் நறுக்கியது, இரண்டாகப் பிளந்து நறுக்கியது என்று வெரைட்டி எக்கச்சக்கம். எண்ணெயில் போட்டு எடுக்கும்போதே எவ்வளவு மிதமான வாசனை குஷிப்படுத்த, ஆஹா என்ன சுகம்? அளவான வாசனை, ஆக மழைக்கு மட்டுமல்ல பின் விளைவுகளை தராமல் எளிதில் ஜீரணமாகும் தரத்தில் தயாரித்தால் பஜ்ஜியே முன்னிலை வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா?- நா.புவனா நாகராஜன், செம்பனார்கோவில்மழையின் மண்வாசனை நாசியைத் தூண்ட, வாய் சூடான பஜ்ஜியைத் தேட, சுவையான பஜ்ஜி வாயில் தாண்டவமாட, பஜ்ஜியின் மென்மை தொண்டையில் வழுக்க, ருசியோ நாக்கை விட்டு பிரிய மனமின்றி, மனம் குதூகலிக்க மூளையோ மழைக்குச் சுவையானதுசூடான பஜ்ஜியே என்று ரீங்காரமிடுகிறது!- சு.சரஸ்வதி அரும்பாக்கம்பக்கோடா பண்ண கண்ணில் நீர் வர வெங்காயம் நறுக்கணும். பக்குவம் சிறிது தவறிவிட்டால் பகோடா சாப்பிடப் பிடிக்காமல் போய்விடும். பஜ்ஜி பண்ணுவது சுலபம். பஜ்ஜி மிக்ஸ் கரைத்து, அதே மாவில் வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, தூள் பஜ்ஜி என்று விதம் விதமாக செய்யும்போதே வாசனை மூக்கைத் துளைக்க, குடும்பம் கிச்சனுக்குள் கூடி விடும். பாத்திரத்தில் எடுத்துப் போடும்போதே காணாமல் போய்விடும்.- லலிதா சண்முகம், உறையூர்மழைக்குச் சுவையானது சுடச்சுட பஜ்ஜிதான். மிளகாய் பஜ்ஜியில் காம்பை பிடித்துக்கொண்டு, அதில் இருக்கும் மிளகாயின் ருசியைச் சுவைக்க, அந்த நேரத்தில் ஜில்லென்று மழைக் காற்று வீச, அந்த ஒரு ரம்யமான பொழுதில் சுடச் சுட பஜ்ஜியைத்தானே விரும்புகிறது மனம். பஜ்ஜியின் சூடு ஒருபக்கம் மிளகாயின் விறுவிறுப்பு ஒருபக்கம் என்று நம் நாக்கை ருசிக்க வைக்கும் அந்த பஜ்ஜிக்கு ஈடு இணையே இல்லை. அதுவும் மழை நேரத்தில் அந்தச் சூடான பஜ்ஜி நம் கையில் இருந்தால் சொர்க்கத்திற்கே சென்று விடலாம்.- வெ. முத்துராமகிருஷ்ணன், மதுரை---------------------------------பக்கோடாமழைக்குச் சுவையானது சூடான பக்கோடாதான். வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா என்று இதில்தான் எத்தனை வெரைட்டி. சூடான இஞ்சி டீயுடன் இதைக் குடுத்தால் எல்லோரும் சொல்வது "பேஷ்,பேஷ் ரொம்ப நன்னா இருக்கு." இரவு சாம்பாருடன் தொட்டுக் கொள்ள சூப்பர் காம்பினேஷன்.- சுஜாதா சிவசங்கர், மஸ்கட்ஏற்கெனவே மழை நசநசன்னு பெய்துகொண்டு இருக்கும். கரகரப்பாக மொறுமொறுப்பாக சாப்பிட வெங்காய பக்கோடாவே சிறந்தது. மெல்லிசா வெங்காயத்தை நறுக்கி, கடலைமாவு, மிளகாய் தூளில் சேர்த்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க, மழையின் மண் வாசனையையும் மீறி சுவையில் மணத்தில் அள்ளுமே.- லலிதா முரளிதரன்வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வாயில் கடிபட, மொறுமொறுவென இருக்கும் பக்கோடாவே மழைக்கு சிறந்த தோழன். பல் இல்லாதவர்களுக்கு வேறு வழியே இல்லாமல் பஜ்ஜிதான்.- ஆர். சுபாஷினிமுந்திரி, வெஜிடபிள், முட்டைக்கோஸ், வெங்காய பக்கோடா என்று அட்டகாசமாய் அசத்தலாம். பக்கோடாவிலுள்ள முறுமுறுப்பு பஜ்ஜிக்கு வருமா? கடலை மாவுடன் மற்ற பொருட்களைக் கலந்து நிமிடத்தில் செய்துவிடலாம் பக்கோடா. வேர்க்கடலையும் கடலைமாவும் இருந்தால்கூட போதும். கரகர மொறுமொறு சூடான பக்கோடாவுக்குப் போட்டியே கிடையாது!- சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம் கரகரவென்று உதிரியாக இருக்கும் பக்கோடாவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் சூடான காப்பியையும் வைத்துக்கொண்டு இரண்டையும் மாறி மாறி சுவைக்கும்போது மழைக்கு ஏற்றவாறு மனம் மகிழ்ச்சியில் துள்ளும். வெங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி, முந்திரிப்பருப்பு என்று எல்லாம் கலந்த பக்கோடாவில் இருக்கும் சுவை வேறு எதிலும் வருமா?- உஷா முத்துராமன், திருநகர்மழையை ரசிச்சுக்கிட்டே, சூடா, க்றிஸ்பியா, காப்பர் கலரில் எண்ணெய் மினிமினுப்புடன் தகதகத்த ஆனியன் பக்கோடாக்களை சுவைத்துக்கொண்டிருந்தேன். உபயோகமா ஏதாவது செய்வோமே என்று யோசித்தபடி, ஃபோனில் முகநூல் பக்கத்தைத் திறந்தேன். முதலில் கண்ணில்பட்டது மங்கையர் மலரின் கருத்து யுத்ததித்திற்கான அழைப்பு!ஊகித்திருப்பீர்களே... நான் எந்தக் கட்சின்னு.- ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் ************************************************************மழை யுத்தம் - 2 மழையிலிருந்து தப்பிக்க குடையா? ரெயின்கோட்டா?.குடைதான்!அவசரத்தில் ரெயின்கோட் போடுவதும் எடுப்பதும் சிரமம். மேலும் கச-கசவென இருக்கும். பையிலிருந்து சட்டென கையிலெடுத்தோமா! டக்கென தலைக்கு மேல் விரித்து சென்றோமா! என ஏற்றது குடை குடைதான்.- ஆர் மீனலதா, மும்பைமழையிலிருந்து தப்பிக்க குடையே...குடையே...என்பது என் வாதம்...கைக்கு அடக்கமாக, நம்முடைய கைப்பையிலேயே வைத்துக்கொள்ளும் சவுகரியம் குடைக்கு உண்டு. சுயநலமாக இல்லாமல், அடுத்தவர்களையும் அரவணைத்துக் கொள்ள உதவும் இந்த (கொ)குடை வள்ளல். ஒரு துளி மழை, நம் மேலே பட்டதும் விசுக்கென நொடியில் விரித்துக்கொள்ளலாம். உடலில் அவ்வப்போது மழை சாரல் லேசாகப்பட்டு, நம்மை மகிழவைக்கும் உத்தி இந்த குடைக்கு மட்டுமே தெரியும்.- பானு பெரியதம்பி, சேலம்மழையிலிருந்து தப்பிக்க ரெயின்கோட்டைவிடக் குடைதான் சிறந்தது. எளிதில் பிடித்துச் செல்லலாம். மழை விட்டபின், குடையை விரித்து வைத்துவிட்டால், காய்ந்துவிடும். மேலும், மழைக்காலங்களில் ரெயின்கோட் போட்டு பிரயாணம் செய்யும்போது, தொப்பி வழியாக தெரிக்கும் தண்ணீா் முகத்தில் பட்டு கண்களை மறைக்கும். அப்படிப்பட்டச் சூழல் பிரயாணம் தடைபடும். மேலும், மழை நேரத்தில் அக்கம் பக்கம் கடைவீதிக்குச் செல்லும்போதெல்லாம், ரெயின்கோட் போட்டுக்கொண்டா போகமுடியும்? குடைதான் எளிமையானது. சட் என்று குடையை எடுத்துப் போகலாம். ஆனால், ரெயின்கோட் அப்படி இல்லையே? என்ன இருந்தாலும் எளிதில் மழையைச் சமாளிக்க, குடைதான் சிறந்தது.- ச. சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில் .-------------------------------- ரெயின்கோட்மழையில் நனைவது ஒரு சுகம். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் ரெயின்கோட் போட்டுக் கொண்டு கைகால்கள் நீரில் படும்படி போகலாம். குடை காற்றில் பறந்துவிடும். மழையை அனுபவித்தபடி போக ரெயின்கோட்டே நன்று.- ஆர். சுபாஷினிமழை பெய்யும்போது, குடையுடன் நடக்கையில், பள்ளம் தெரியாமல் கால் புதைந்துவிட்டால் பேலன்ஸ் தவறி, குடை நழுவி நனைய வைத்துவிடும். காற்று பலமாக வீசினால், குடை பறந்துடுங்க. விர்ரென்று விரையும் டூவீலர்கள், உரசாமல் குடையைக் காப்பத்துவது சிரமம். இப்போ சொல்லுங்க..ரெயின்கோட்தானே பெஸ்ட்.- என்.கோமதி, நெல்லைதூறல், சாரலுக்கு வேண்டுமானால் குடை பாதுகாப்பளிக்கும். நல்ல மழைக்கு ரெயின்கோட்தான் சிறந்த பாதுகாப்பு. இருசக்கர வண்டி ஓட்டுபவர்களின் மழை பாதுகாவலன். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் குடை பிடிப்பது மிகவும் கடினம்.- தி.வள்ளி, திருநெல்வேலி * குடை தலை நனையாமல் காக்கும். ரெயின்கோட் உடம்பு முழுவதையும் மூடிப் பாதுகாக்கும். * மடித்து பையிலும் வைத்துக்கொள்ளலாம். * எங்கும் மறந்து வைத்து விடவும் வாய்ப்பில்லை. - எஸ். ராஜம், திருச்சிவெளியில் செல்லும்போது, கைப்பையில் ரெயின் கோட்டைச் சிறிதாக மடக்கி, அதற்கான கவரில் போட்டு வைத்துகொண்டு மழைக்கு அறிகுறி வந்தாலே ஒரு ஓரமாகச் சென்று கோட்டை அணிந்துக்கொண்டால் தலையில் இருந்து ஆடைகூட சிறிதும் நனையாமல் இருக்கும். பஸ்ஸில் சென்றாலும் ஏறியபிறகு கோட்டை கழற்றி அதற்குரிய கவரில் போட்டுக்கொண்டு இறங்கும்போது மீண்டும் அணிந்துகொண்டால் நம்மையும், நம் பேக்கையும் நனையாமல் பார்த்துக்கொள்ளலாம். - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில்பெயரிலேயே ரெயின்கோட் என்று இருப்பதால் தலை முதல் கால் வரை உடம்பை மறைக்கும் கவசமாகத் திகழும் ரெயின்கோட்தான் மழையில் இருந்து தப்பிக்கச் சிறந்தது. ரெயின் குடை என்று சொல்வது இல்லையே! ரோட்டில் செல்லும் கார் சகதி நீரை அடித்தாலும், ஆடைகள் பாழாகாது. பேய்க் காற்றில் குடை பறக்கும். ஆனால், பறக்காமல் நம்மைக் காக்கும் ரெயின்கோட்டை கோட்டை விடக்கூடாது . - என்.உஷாதேவி, மதுரைமழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியாது. குடை பிடித்தபடி நடந்துச் சென்றாலும் கூட பாதி உடல் நனைந்து விடும். பஸ் ஏறி இறங்கும்போது குடையை விரித்து மடக்குவதற்குள் பாதி நனைந்துவிடுவோம். காற்று அடிக்கும்போது சில சமயம் மேல் நோக்கிக் கூட திரும்பிவிடும். அந்த அவஸ்தை யெல்லாம் ரெயின் கோட்டில் கிடையாது. கை வலிக்க குடையைப் பிடித்துச்செல்வதைவிட ரெயின் கோட்டே சிறந்தது.- கே.எஸ்.கிருஷ்ணவேணி, சென்னை. ************************************************************மழை யுத்தம் - 3மழை பாடல்களை ரசிக்க ராஜாவா? ரஹ்மானா?.இளையராஜா பாடல்பள்ளியில் பாடல் போட்டியில் ஜெயிக்க - மேகம் கருக்குது மழை வரப்பாக்குது.இசை நிகழ்ச்சி தூள் பறக்க – மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும்.விரக தாபத்தில் பாடுவது – பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.தோழிகளுடன் மழையில் நனைந்து ஆட்டம் போட – ஓஹோ மேகம் வந்ததோ.தைரியமான பெண் தன்னந்தனியாக மழையில் நனைந்துகொண்டே தெருவில் ஆடிப்பாடுவது – வான் மேகம் பூப்பூவாய் தூவும்.எல்லோராலும் போற்றப்படும் நாயகன் மக்களுடன் சேர்ந்து பாடுவது - அந்தி மழை மேகம்.காதலனும் காதலியும் தம்மை மறந்து மழையில் நனைந்து பாடுவது - பொத்துக்கிட்டு ஊத்ததுதடி வானம்.மேலே சொன்னவை சில உதாரணங்களே. இன்னும் ஏகப்பட்ட மழைப் பாடல்கள் தந்தவர் இளையராஜா. அவரின் இசை மழையில் நனைந்து மழைப்பாடல்கள் கேட்கும்போது நாம் நிஜ மழையில் நனைவது போலத் தோன்றும்.எனவே மழையை எப்போதும் ராஜாவுடன் ரசிப்போம்.- ஹேமலதா சீனிவாசன், சென்னைமழை பாடல்கள் என்றால் அதற்கு மணி மகுடம் சூட்டுவது இளையராஜா பாடல்கள்தான். அவருடைய பாடல்களைக் கேட்கும்போது அந்தக் கதாநாயகி மழையில் நனைவது போல நாமும் நனையச் செய்கிறோமோ என்ற ஒரு கற்பனையே நமக்கு வந்துவிடும். அவ்வளவு அருமையான கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வைக்கும் பாடல்களில் ராஜாவுக்கு இணை ராஜாவேதான். அந்தப் பாடலைக் கேட்டவுடன் வானத்தைப் பார்க்க வேண்டும் எங்கே மழை வருகிறதோ நாமும் அங்கு சென்று வரலாம் என்று எண்ணவைக்கும் இளையராஜாவின் பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை. ரசித்து ரசித்து பலமுறை கேட்க வைக்கும் பாடல்கள் இளையராஜா என்றால் அதற்கு மறுப்பு ஏதும் உண்டோ?- பிரகதா நவநீதன் மதுரை மழைக்கால பாடல்கள் என்றால் நம் நெஞ்சம் நிறைந்த நினைவுகளாகத் தோன்றும் பாடல்கள் இளையராஜா பாடல்கள்தான். இனிமையான மழைச் சாரல் ஆகட்டும் அந்தி மழையாகட்டும், கொட்டித் தீர்க்கும் கன மழையாகட்டும், அற்புதமான இசையில் நம்மை நனைய வைத்து, நம் மனதை குளிர செய்தவர் இளையராஜா என்றால் அது மிகை அல்ல… ஓஹோ மேகம் வந்ததோ பாடலின் ரேவதியை மறக்க முடியுமா?- வாணி கணபதி, பள்ளிகரணைஎத்தனையோ மெட்டுக்களை அநாயசமாக கையாண்டு, அனைவரையும் இசை மழையில் நனையவிட்டதில் ராஜா ராஜாதான்! மழையில் நனைந்துகொண்டே குருவே சரணம் என்ற பாடலில் உள்ளம் கொள்ளை போகுமே! இளையராஜாவின், பார்வையில், ராஜபார்வையில் அந்தி மழை பொழிகிறது , நாயகனில் அந்தி மழை மேகம், இப்படி மழை மழையாய் ரசிகனை கட்டிப்போட்டதில் மந்திர கீதம் இசைத்தவா்தானே நம் இளையராஜா!- ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்மழை பெய்கின்ற பொழுதில் கண் மூடி இசை உள்இறங்க தனித்திருந்து அந்த இசை சஞ்சாரத்தில் நுழைந்திட்டால் அதன் மோனத்தில் மனம் நிறைந்து உலகை மறப்பது என்பது சொல்லில் உணர்த்த முடியாத ஜென் நிலை. அனுபவித்து ஆனந்திக்க மழையோடு ராஜாவின் பாடல்களே பேரானந்தம்.- மகாலட்சுமி சுப்பிரமணியன் , காரைக்கால்.
பஜ்ஜிசூடான பஜ்ஜிதான் பெஸ்ட்! அதுவும் மிளகாய் பஜ்ஜி என்றால் அதன் காரமும் சுவையும் அலாதிதான். பஜ்ஜி மாவு தயாரித்து, வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் என்று கட் பண்ணி, மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து.. சூடாகச் சாப்பிட்டால் ஆஹா...- ஜெயா சம்பத், கொரட்டூர் பகோடா என்றால் ஒரு சில VARIETY மட்டுமே செய்து சாப்பிடலாம். பஜ்ஜி என்றால், மிளகாய், பீர்க்கங்காய், வெங்காயம், வாழைக்காய், குடைமிளகாய், சௌசௌ, வெள்ளரிக்காய், ஓம இலை, தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, இவற்றை யெல்லாம் செய்து சுடச்சுட தலா ஒன்று சாப்பிட்டு (தேவைப்பட்டால் இஞ்சி சட்னி ஓகே) இரவில் டிபன் ஏதும் சாப்பிடாமல் கூட சுக்குக் காபி சூடாகக் குடித்துவிட்டு படுத்தால், போர்வைக்குள் ஒரு சொர்க்கம், இரவா பகலா என்று தெரியாத அனந்த தூக்கம். அடடா... அனுபவிக்க அதுக்கெல்லாம் ரசனை வேணும் மேடம்...- ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்மழைக்கு மட்டுமல்ல பெண்பார்க்கும் படலம், தலைதீபாவளி, மழைக்காலம் மற்றும் திடீா் ஸ்நாக்ஸ் செய்வதற்கு எளிமையானது பஜ்ஜி, பஜ்ஜி பஜ்ஜியே!சூடாய் என்ன சாப்பிடலாம் என நினைக்கும்போதே கட்டியம் கட்டி முதல் வரிசையில் நிற்பது பஜ்ஜிதான. நீளவாட்டமாய் நறுக்கியது, வட்ட வட்டமாய் நறுக்கியது. ‘ரிங்’காய் நறுக்கியது, இரண்டாகப் பிளந்து நறுக்கியது என்று வெரைட்டி எக்கச்சக்கம். எண்ணெயில் போட்டு எடுக்கும்போதே எவ்வளவு மிதமான வாசனை குஷிப்படுத்த, ஆஹா என்ன சுகம்? அளவான வாசனை, ஆக மழைக்கு மட்டுமல்ல பின் விளைவுகளை தராமல் எளிதில் ஜீரணமாகும் தரத்தில் தயாரித்தால் பஜ்ஜியே முன்னிலை வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா?- நா.புவனா நாகராஜன், செம்பனார்கோவில்மழையின் மண்வாசனை நாசியைத் தூண்ட, வாய் சூடான பஜ்ஜியைத் தேட, சுவையான பஜ்ஜி வாயில் தாண்டவமாட, பஜ்ஜியின் மென்மை தொண்டையில் வழுக்க, ருசியோ நாக்கை விட்டு பிரிய மனமின்றி, மனம் குதூகலிக்க மூளையோ மழைக்குச் சுவையானதுசூடான பஜ்ஜியே என்று ரீங்காரமிடுகிறது!- சு.சரஸ்வதி அரும்பாக்கம்பக்கோடா பண்ண கண்ணில் நீர் வர வெங்காயம் நறுக்கணும். பக்குவம் சிறிது தவறிவிட்டால் பகோடா சாப்பிடப் பிடிக்காமல் போய்விடும். பஜ்ஜி பண்ணுவது சுலபம். பஜ்ஜி மிக்ஸ் கரைத்து, அதே மாவில் வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, தூள் பஜ்ஜி என்று விதம் விதமாக செய்யும்போதே வாசனை மூக்கைத் துளைக்க, குடும்பம் கிச்சனுக்குள் கூடி விடும். பாத்திரத்தில் எடுத்துப் போடும்போதே காணாமல் போய்விடும்.- லலிதா சண்முகம், உறையூர்மழைக்குச் சுவையானது சுடச்சுட பஜ்ஜிதான். மிளகாய் பஜ்ஜியில் காம்பை பிடித்துக்கொண்டு, அதில் இருக்கும் மிளகாயின் ருசியைச் சுவைக்க, அந்த நேரத்தில் ஜில்லென்று மழைக் காற்று வீச, அந்த ஒரு ரம்யமான பொழுதில் சுடச் சுட பஜ்ஜியைத்தானே விரும்புகிறது மனம். பஜ்ஜியின் சூடு ஒருபக்கம் மிளகாயின் விறுவிறுப்பு ஒருபக்கம் என்று நம் நாக்கை ருசிக்க வைக்கும் அந்த பஜ்ஜிக்கு ஈடு இணையே இல்லை. அதுவும் மழை நேரத்தில் அந்தச் சூடான பஜ்ஜி நம் கையில் இருந்தால் சொர்க்கத்திற்கே சென்று விடலாம்.- வெ. முத்துராமகிருஷ்ணன், மதுரை---------------------------------பக்கோடாமழைக்குச் சுவையானது சூடான பக்கோடாதான். வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா என்று இதில்தான் எத்தனை வெரைட்டி. சூடான இஞ்சி டீயுடன் இதைக் குடுத்தால் எல்லோரும் சொல்வது "பேஷ்,பேஷ் ரொம்ப நன்னா இருக்கு." இரவு சாம்பாருடன் தொட்டுக் கொள்ள சூப்பர் காம்பினேஷன்.- சுஜாதா சிவசங்கர், மஸ்கட்ஏற்கெனவே மழை நசநசன்னு பெய்துகொண்டு இருக்கும். கரகரப்பாக மொறுமொறுப்பாக சாப்பிட வெங்காய பக்கோடாவே சிறந்தது. மெல்லிசா வெங்காயத்தை நறுக்கி, கடலைமாவு, மிளகாய் தூளில் சேர்த்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க, மழையின் மண் வாசனையையும் மீறி சுவையில் மணத்தில் அள்ளுமே.- லலிதா முரளிதரன்வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வாயில் கடிபட, மொறுமொறுவென இருக்கும் பக்கோடாவே மழைக்கு சிறந்த தோழன். பல் இல்லாதவர்களுக்கு வேறு வழியே இல்லாமல் பஜ்ஜிதான்.- ஆர். சுபாஷினிமுந்திரி, வெஜிடபிள், முட்டைக்கோஸ், வெங்காய பக்கோடா என்று அட்டகாசமாய் அசத்தலாம். பக்கோடாவிலுள்ள முறுமுறுப்பு பஜ்ஜிக்கு வருமா? கடலை மாவுடன் மற்ற பொருட்களைக் கலந்து நிமிடத்தில் செய்துவிடலாம் பக்கோடா. வேர்க்கடலையும் கடலைமாவும் இருந்தால்கூட போதும். கரகர மொறுமொறு சூடான பக்கோடாவுக்குப் போட்டியே கிடையாது!- சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம் கரகரவென்று உதிரியாக இருக்கும் பக்கோடாவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் சூடான காப்பியையும் வைத்துக்கொண்டு இரண்டையும் மாறி மாறி சுவைக்கும்போது மழைக்கு ஏற்றவாறு மனம் மகிழ்ச்சியில் துள்ளும். வெங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி, முந்திரிப்பருப்பு என்று எல்லாம் கலந்த பக்கோடாவில் இருக்கும் சுவை வேறு எதிலும் வருமா?- உஷா முத்துராமன், திருநகர்மழையை ரசிச்சுக்கிட்டே, சூடா, க்றிஸ்பியா, காப்பர் கலரில் எண்ணெய் மினிமினுப்புடன் தகதகத்த ஆனியன் பக்கோடாக்களை சுவைத்துக்கொண்டிருந்தேன். உபயோகமா ஏதாவது செய்வோமே என்று யோசித்தபடி, ஃபோனில் முகநூல் பக்கத்தைத் திறந்தேன். முதலில் கண்ணில்பட்டது மங்கையர் மலரின் கருத்து யுத்ததித்திற்கான அழைப்பு!ஊகித்திருப்பீர்களே... நான் எந்தக் கட்சின்னு.- ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் ************************************************************மழை யுத்தம் - 2 மழையிலிருந்து தப்பிக்க குடையா? ரெயின்கோட்டா?.குடைதான்!அவசரத்தில் ரெயின்கோட் போடுவதும் எடுப்பதும் சிரமம். மேலும் கச-கசவென இருக்கும். பையிலிருந்து சட்டென கையிலெடுத்தோமா! டக்கென தலைக்கு மேல் விரித்து சென்றோமா! என ஏற்றது குடை குடைதான்.- ஆர் மீனலதா, மும்பைமழையிலிருந்து தப்பிக்க குடையே...குடையே...என்பது என் வாதம்...கைக்கு அடக்கமாக, நம்முடைய கைப்பையிலேயே வைத்துக்கொள்ளும் சவுகரியம் குடைக்கு உண்டு. சுயநலமாக இல்லாமல், அடுத்தவர்களையும் அரவணைத்துக் கொள்ள உதவும் இந்த (கொ)குடை வள்ளல். ஒரு துளி மழை, நம் மேலே பட்டதும் விசுக்கென நொடியில் விரித்துக்கொள்ளலாம். உடலில் அவ்வப்போது மழை சாரல் லேசாகப்பட்டு, நம்மை மகிழவைக்கும் உத்தி இந்த குடைக்கு மட்டுமே தெரியும்.- பானு பெரியதம்பி, சேலம்மழையிலிருந்து தப்பிக்க ரெயின்கோட்டைவிடக் குடைதான் சிறந்தது. எளிதில் பிடித்துச் செல்லலாம். மழை விட்டபின், குடையை விரித்து வைத்துவிட்டால், காய்ந்துவிடும். மேலும், மழைக்காலங்களில் ரெயின்கோட் போட்டு பிரயாணம் செய்யும்போது, தொப்பி வழியாக தெரிக்கும் தண்ணீா் முகத்தில் பட்டு கண்களை மறைக்கும். அப்படிப்பட்டச் சூழல் பிரயாணம் தடைபடும். மேலும், மழை நேரத்தில் அக்கம் பக்கம் கடைவீதிக்குச் செல்லும்போதெல்லாம், ரெயின்கோட் போட்டுக்கொண்டா போகமுடியும்? குடைதான் எளிமையானது. சட் என்று குடையை எடுத்துப் போகலாம். ஆனால், ரெயின்கோட் அப்படி இல்லையே? என்ன இருந்தாலும் எளிதில் மழையைச் சமாளிக்க, குடைதான் சிறந்தது.- ச. சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில் .-------------------------------- ரெயின்கோட்மழையில் நனைவது ஒரு சுகம். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் ரெயின்கோட் போட்டுக் கொண்டு கைகால்கள் நீரில் படும்படி போகலாம். குடை காற்றில் பறந்துவிடும். மழையை அனுபவித்தபடி போக ரெயின்கோட்டே நன்று.- ஆர். சுபாஷினிமழை பெய்யும்போது, குடையுடன் நடக்கையில், பள்ளம் தெரியாமல் கால் புதைந்துவிட்டால் பேலன்ஸ் தவறி, குடை நழுவி நனைய வைத்துவிடும். காற்று பலமாக வீசினால், குடை பறந்துடுங்க. விர்ரென்று விரையும் டூவீலர்கள், உரசாமல் குடையைக் காப்பத்துவது சிரமம். இப்போ சொல்லுங்க..ரெயின்கோட்தானே பெஸ்ட்.- என்.கோமதி, நெல்லைதூறல், சாரலுக்கு வேண்டுமானால் குடை பாதுகாப்பளிக்கும். நல்ல மழைக்கு ரெயின்கோட்தான் சிறந்த பாதுகாப்பு. இருசக்கர வண்டி ஓட்டுபவர்களின் மழை பாதுகாவலன். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் குடை பிடிப்பது மிகவும் கடினம்.- தி.வள்ளி, திருநெல்வேலி * குடை தலை நனையாமல் காக்கும். ரெயின்கோட் உடம்பு முழுவதையும் மூடிப் பாதுகாக்கும். * மடித்து பையிலும் வைத்துக்கொள்ளலாம். * எங்கும் மறந்து வைத்து விடவும் வாய்ப்பில்லை. - எஸ். ராஜம், திருச்சிவெளியில் செல்லும்போது, கைப்பையில் ரெயின் கோட்டைச் சிறிதாக மடக்கி, அதற்கான கவரில் போட்டு வைத்துகொண்டு மழைக்கு அறிகுறி வந்தாலே ஒரு ஓரமாகச் சென்று கோட்டை அணிந்துக்கொண்டால் தலையில் இருந்து ஆடைகூட சிறிதும் நனையாமல் இருக்கும். பஸ்ஸில் சென்றாலும் ஏறியபிறகு கோட்டை கழற்றி அதற்குரிய கவரில் போட்டுக்கொண்டு இறங்கும்போது மீண்டும் அணிந்துகொண்டால் நம்மையும், நம் பேக்கையும் நனையாமல் பார்த்துக்கொள்ளலாம். - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில்பெயரிலேயே ரெயின்கோட் என்று இருப்பதால் தலை முதல் கால் வரை உடம்பை மறைக்கும் கவசமாகத் திகழும் ரெயின்கோட்தான் மழையில் இருந்து தப்பிக்கச் சிறந்தது. ரெயின் குடை என்று சொல்வது இல்லையே! ரோட்டில் செல்லும் கார் சகதி நீரை அடித்தாலும், ஆடைகள் பாழாகாது. பேய்க் காற்றில் குடை பறக்கும். ஆனால், பறக்காமல் நம்மைக் காக்கும் ரெயின்கோட்டை கோட்டை விடக்கூடாது . - என்.உஷாதேவி, மதுரைமழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியாது. குடை பிடித்தபடி நடந்துச் சென்றாலும் கூட பாதி உடல் நனைந்து விடும். பஸ் ஏறி இறங்கும்போது குடையை விரித்து மடக்குவதற்குள் பாதி நனைந்துவிடுவோம். காற்று அடிக்கும்போது சில சமயம் மேல் நோக்கிக் கூட திரும்பிவிடும். அந்த அவஸ்தை யெல்லாம் ரெயின் கோட்டில் கிடையாது. கை வலிக்க குடையைப் பிடித்துச்செல்வதைவிட ரெயின் கோட்டே சிறந்தது.- கே.எஸ்.கிருஷ்ணவேணி, சென்னை. ************************************************************மழை யுத்தம் - 3மழை பாடல்களை ரசிக்க ராஜாவா? ரஹ்மானா?.இளையராஜா பாடல்பள்ளியில் பாடல் போட்டியில் ஜெயிக்க - மேகம் கருக்குது மழை வரப்பாக்குது.இசை நிகழ்ச்சி தூள் பறக்க – மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும்.விரக தாபத்தில் பாடுவது – பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.தோழிகளுடன் மழையில் நனைந்து ஆட்டம் போட – ஓஹோ மேகம் வந்ததோ.தைரியமான பெண் தன்னந்தனியாக மழையில் நனைந்துகொண்டே தெருவில் ஆடிப்பாடுவது – வான் மேகம் பூப்பூவாய் தூவும்.எல்லோராலும் போற்றப்படும் நாயகன் மக்களுடன் சேர்ந்து பாடுவது - அந்தி மழை மேகம்.காதலனும் காதலியும் தம்மை மறந்து மழையில் நனைந்து பாடுவது - பொத்துக்கிட்டு ஊத்ததுதடி வானம்.மேலே சொன்னவை சில உதாரணங்களே. இன்னும் ஏகப்பட்ட மழைப் பாடல்கள் தந்தவர் இளையராஜா. அவரின் இசை மழையில் நனைந்து மழைப்பாடல்கள் கேட்கும்போது நாம் நிஜ மழையில் நனைவது போலத் தோன்றும்.எனவே மழையை எப்போதும் ராஜாவுடன் ரசிப்போம்.- ஹேமலதா சீனிவாசன், சென்னைமழை பாடல்கள் என்றால் அதற்கு மணி மகுடம் சூட்டுவது இளையராஜா பாடல்கள்தான். அவருடைய பாடல்களைக் கேட்கும்போது அந்தக் கதாநாயகி மழையில் நனைவது போல நாமும் நனையச் செய்கிறோமோ என்ற ஒரு கற்பனையே நமக்கு வந்துவிடும். அவ்வளவு அருமையான கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வைக்கும் பாடல்களில் ராஜாவுக்கு இணை ராஜாவேதான். அந்தப் பாடலைக் கேட்டவுடன் வானத்தைப் பார்க்க வேண்டும் எங்கே மழை வருகிறதோ நாமும் அங்கு சென்று வரலாம் என்று எண்ணவைக்கும் இளையராஜாவின் பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை. ரசித்து ரசித்து பலமுறை கேட்க வைக்கும் பாடல்கள் இளையராஜா என்றால் அதற்கு மறுப்பு ஏதும் உண்டோ?- பிரகதா நவநீதன் மதுரை மழைக்கால பாடல்கள் என்றால் நம் நெஞ்சம் நிறைந்த நினைவுகளாகத் தோன்றும் பாடல்கள் இளையராஜா பாடல்கள்தான். இனிமையான மழைச் சாரல் ஆகட்டும் அந்தி மழையாகட்டும், கொட்டித் தீர்க்கும் கன மழையாகட்டும், அற்புதமான இசையில் நம்மை நனைய வைத்து, நம் மனதை குளிர செய்தவர் இளையராஜா என்றால் அது மிகை அல்ல… ஓஹோ மேகம் வந்ததோ பாடலின் ரேவதியை மறக்க முடியுமா?- வாணி கணபதி, பள்ளிகரணைஎத்தனையோ மெட்டுக்களை அநாயசமாக கையாண்டு, அனைவரையும் இசை மழையில் நனையவிட்டதில் ராஜா ராஜாதான்! மழையில் நனைந்துகொண்டே குருவே சரணம் என்ற பாடலில் உள்ளம் கொள்ளை போகுமே! இளையராஜாவின், பார்வையில், ராஜபார்வையில் அந்தி மழை பொழிகிறது , நாயகனில் அந்தி மழை மேகம், இப்படி மழை மழையாய் ரசிகனை கட்டிப்போட்டதில் மந்திர கீதம் இசைத்தவா்தானே நம் இளையராஜா!- ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்மழை பெய்கின்ற பொழுதில் கண் மூடி இசை உள்இறங்க தனித்திருந்து அந்த இசை சஞ்சாரத்தில் நுழைந்திட்டால் அதன் மோனத்தில் மனம் நிறைந்து உலகை மறப்பது என்பது சொல்லில் உணர்த்த முடியாத ஜென் நிலை. அனுபவித்து ஆனந்திக்க மழையோடு ராஜாவின் பாடல்களே பேரானந்தம்.- மகாலட்சுமி சுப்பிரமணியன் , காரைக்கால்.