ஒவ்வொரு ஆண்டும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம், இத்தினம் இந்த மாதம் செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று கொண்டாட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தியேட்டர் உரிமையாளர்களின் வேண்டுகோளின்படி செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேஷனால் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த தேசிய சினிமா தினத்தைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் டிக்கெட்டுகள் ரூ.75/- என்ற சிறப்புச் சலுகை விலையில் வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 4000த்திற்கும் மேலான திரையரங்குகளில் உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த தேசிய சினிமா தினத்தில் பங்கேற்கும் முன்னணித் திரையரங்குகளான பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ், கார்னிவல், மிராஜ், முக்தா சினிமாஸ், மூவிடைம், சினிபோலீஸ், வேவ் போன்ற நிறுவனங்கள் இந்த தேசிய திருவிழாவில் பிரபல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கடந்த இரு வருடங்களாக கொரோனா காலகட்டத்தில் திரையிரங்குகள் மிக மோசமான சரிவினைச் சந்தித்து வந்தது அனைவரும் அறிந்ததே. .முன்னணி கதாநாயகர்களின் திரைபடங்கள் கூட ஒடிடி தளங்களில் மட்டுமே வெளியாகி வந்தது. அதனால், திரையங்க உரிமையாளர்கள் பலரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவந்தனர். கோவிட் -19க்கு பிறகு தற்போதுதான் திரையரங்குகள் சரிவர இயங்கி வருகின்றன. பல முன்னணி கதாநாயகர்களின் பல திரைபடங்கள் மறுபடியும் தியேட்டரில் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்கள் மனதில் பாலை வார்த்தன. அவ்வகையில் சரிவினைச் சந்தித்து வந்த திரையரங்குத் தொழில்கள் புத்துயிர் பெற்று வருகிறது. இந்த தேசிய சினிமா திரைவிழா இதனை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.டூரிங் டாக்கீஸ் டூ மல்டிபிளக்ஸ்சினிமாவின் ஆரம்பக்காலங்களில் டூரிங் டாக்கீஸ் என்றழைக்கப்படும் டென்ட் கொட்டாய்கள் மிகப் பிரபலம். தரையில் அமர்ந்து பார்க்கும் வகையில் எளிமையானதாக அமைந்திருக்கும் இத்திரையரங்குகள். தியாகராஜ பாகவதர் காலம் முதல் சிவாஜி எம்ஜிஆர் காலக் கட்டங்கள் வரைகூட இந்த டென்ட் கொட்டாய்களில் வசனம் பேசி நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம். .இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிசந்திரா, ஆலம் ஹரா, காளிதாஸ் போன்ற திரைப்படங்களைத் திரையிடப்பட்டது இத்திரையரங்குகளிலேயே. 1959 ஆம் ஆண்டிலேயே பான்இந்தியா மூவி வகைகள் உண்டென்பதை நம்ம முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதன் பிறகு சாதாரண ஸ்கிரீன்களைக் கொண்ட ஒற்றை திரையரங்குகள் பிரபலமாகியது. நவீன டிஜிட்டல் வசதிகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளே தற்போதைய ரசிகர்களின் சாய்ஸ். தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே நவீனத் திரையரங்குகள் உருவாக்கப்பட்டு, படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நவீன யுகத்தில் 3டி, 4டி மற்றும் 5டி தொழில்நுட்பங்கள் கூட திரைபடங்களில் சர்வசாதாரணமாக புகுத்தப்படுகிறது. அதற்கு இத்தகைய நவீனத் திரையரங்கு வசதிகளே ஏற்றவை எனலாம். .தற்போது படுக்கை வசதி கொண்ட திரையரங்குகள், மொட்டை மாடியில் அமர்ந்து பார்க்கும் வசதி உடைய மாடி திரையரங்குகள், வட்டவடிவமான பாத்டப் போன்ற அமைப்பினைக் கொண்ட திரையரங்கள், காரிலிருந்தே படம் பார்க்கும் வசதி கொண்ட டிரைவ் - இன் திரையரங்குகள், பதினாறு பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கக்கூடிய மினி திரையரங்குகள், இசைக்கேற்ப அதிரும்படியான அசையும் நாற்காலி வசதி கொண்ட திரையரங்குகள் எனப் பல்வேறு தொழில்நுட்ப ஆச்சர்யங்களுடன் வித்தியாசமான நவீனரகத் திரையரங்குகள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்த்து வருகின்றன. வீட்டின் வரவேற்பறையிலேயே வந்து குவியும் ஒடிடி தளங்களில் சிரமமில்லாமல் திரைப்படங்களைக் கண்டுகளித்த இத்தலைமுறையினரைத் தியேட்டருக்கு வரவழைக்கும் பல்வேறு உத்திகளின் வெளிபாடுகளாகக்கூட இதைக் கருதலாம்.முதல் நாள்... முதல் ஷோ அன்று திரையரங்குகளில் ஆதர்ஷ நடிகர்களின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம், ஆரத்தி எடுப்பதில் தனி மகிழ்ச்சி... விண்ணைப் பிளக்கும் விசில் சத்தத்துடன் விருப்ப நாயகனைக் கைதட்டி, ரசித்து, வரவேற்று மகிழ்வதில் அலாதி சுகம் இருக்கத்தானே செய்கிறது சினிமா பிரியர்களுக்கு. அவ்வகையில் இந்தத் தேசிய சினிமா கொண்டாட்டங்கள் பெருமளவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம், இத்தினம் இந்த மாதம் செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று கொண்டாட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தியேட்டர் உரிமையாளர்களின் வேண்டுகோளின்படி செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேஷனால் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த தேசிய சினிமா தினத்தைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் டிக்கெட்டுகள் ரூ.75/- என்ற சிறப்புச் சலுகை விலையில் வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 4000த்திற்கும் மேலான திரையரங்குகளில் உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த தேசிய சினிமா தினத்தில் பங்கேற்கும் முன்னணித் திரையரங்குகளான பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ், கார்னிவல், மிராஜ், முக்தா சினிமாஸ், மூவிடைம், சினிபோலீஸ், வேவ் போன்ற நிறுவனங்கள் இந்த தேசிய திருவிழாவில் பிரபல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கடந்த இரு வருடங்களாக கொரோனா காலகட்டத்தில் திரையிரங்குகள் மிக மோசமான சரிவினைச் சந்தித்து வந்தது அனைவரும் அறிந்ததே. .முன்னணி கதாநாயகர்களின் திரைபடங்கள் கூட ஒடிடி தளங்களில் மட்டுமே வெளியாகி வந்தது. அதனால், திரையங்க உரிமையாளர்கள் பலரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவந்தனர். கோவிட் -19க்கு பிறகு தற்போதுதான் திரையரங்குகள் சரிவர இயங்கி வருகின்றன. பல முன்னணி கதாநாயகர்களின் பல திரைபடங்கள் மறுபடியும் தியேட்டரில் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்கள் மனதில் பாலை வார்த்தன. அவ்வகையில் சரிவினைச் சந்தித்து வந்த திரையரங்குத் தொழில்கள் புத்துயிர் பெற்று வருகிறது. இந்த தேசிய சினிமா திரைவிழா இதனை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.டூரிங் டாக்கீஸ் டூ மல்டிபிளக்ஸ்சினிமாவின் ஆரம்பக்காலங்களில் டூரிங் டாக்கீஸ் என்றழைக்கப்படும் டென்ட் கொட்டாய்கள் மிகப் பிரபலம். தரையில் அமர்ந்து பார்க்கும் வகையில் எளிமையானதாக அமைந்திருக்கும் இத்திரையரங்குகள். தியாகராஜ பாகவதர் காலம் முதல் சிவாஜி எம்ஜிஆர் காலக் கட்டங்கள் வரைகூட இந்த டென்ட் கொட்டாய்களில் வசனம் பேசி நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம். .இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிசந்திரா, ஆலம் ஹரா, காளிதாஸ் போன்ற திரைப்படங்களைத் திரையிடப்பட்டது இத்திரையரங்குகளிலேயே. 1959 ஆம் ஆண்டிலேயே பான்இந்தியா மூவி வகைகள் உண்டென்பதை நம்ம முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதன் பிறகு சாதாரண ஸ்கிரீன்களைக் கொண்ட ஒற்றை திரையரங்குகள் பிரபலமாகியது. நவீன டிஜிட்டல் வசதிகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளே தற்போதைய ரசிகர்களின் சாய்ஸ். தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே நவீனத் திரையரங்குகள் உருவாக்கப்பட்டு, படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நவீன யுகத்தில் 3டி, 4டி மற்றும் 5டி தொழில்நுட்பங்கள் கூட திரைபடங்களில் சர்வசாதாரணமாக புகுத்தப்படுகிறது. அதற்கு இத்தகைய நவீனத் திரையரங்கு வசதிகளே ஏற்றவை எனலாம். .தற்போது படுக்கை வசதி கொண்ட திரையரங்குகள், மொட்டை மாடியில் அமர்ந்து பார்க்கும் வசதி உடைய மாடி திரையரங்குகள், வட்டவடிவமான பாத்டப் போன்ற அமைப்பினைக் கொண்ட திரையரங்கள், காரிலிருந்தே படம் பார்க்கும் வசதி கொண்ட டிரைவ் - இன் திரையரங்குகள், பதினாறு பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கக்கூடிய மினி திரையரங்குகள், இசைக்கேற்ப அதிரும்படியான அசையும் நாற்காலி வசதி கொண்ட திரையரங்குகள் எனப் பல்வேறு தொழில்நுட்ப ஆச்சர்யங்களுடன் வித்தியாசமான நவீனரகத் திரையரங்குகள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்த்து வருகின்றன. வீட்டின் வரவேற்பறையிலேயே வந்து குவியும் ஒடிடி தளங்களில் சிரமமில்லாமல் திரைப்படங்களைக் கண்டுகளித்த இத்தலைமுறையினரைத் தியேட்டருக்கு வரவழைக்கும் பல்வேறு உத்திகளின் வெளிபாடுகளாகக்கூட இதைக் கருதலாம்.முதல் நாள்... முதல் ஷோ அன்று திரையரங்குகளில் ஆதர்ஷ நடிகர்களின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம், ஆரத்தி எடுப்பதில் தனி மகிழ்ச்சி... விண்ணைப் பிளக்கும் விசில் சத்தத்துடன் விருப்ப நாயகனைக் கைதட்டி, ரசித்து, வரவேற்று மகிழ்வதில் அலாதி சுகம் இருக்கத்தானே செய்கிறது சினிமா பிரியர்களுக்கு. அவ்வகையில் இந்தத் தேசிய சினிமா கொண்டாட்டங்கள் பெருமளவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.