தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.மாடலான கிராம மங்கை!.2019-ம் ஆண்டில் தென்னிந்திய பெண் சாதனையாளர்களுக்கான சிறந்த கலைஞர் விருது, 2020-ம் ஆண்டில் தேசிய அளவில் சிறந்த கலைஞர் விருது, 2021-ம் ஆண்டில் மதிப்புறு டாக்டர் பட்டம், இத்தனையும் பெற்ற ஒரு அழகான மாடல் மங்கை நந்தினி..நாகரீகமான பெண்கள் நிறைந்த மாடலிங் துறையில், சாதாரண சூழலில் வளர்ந்த பெண்களும் சாதிக்க முடியும் என்று தன் ஆர்வத்தாலும், தன்னம்பிக்கையாலும் நிரூபித்து இருக்கிறார் இவர்..ஆங்கிலத்தில் இளங்கலை படித்திருக்கும் நந்தினி 26 வயதில் மாடலிங், விளம்பரங்களில் நடிப்பது, பங்குச் சந்தையில் ஈடுபடுவது என பலவற்றிலும் வெற்றி பெற்றுள்ளார்..முதலில், இவரது உயரத்தையும், கிராமப் பின்னணியையும் வைத்து பலர் நிராகரித்துள்ளனர். 2017-ம் ஆண்டில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து, ஒரு குழுவாக இணைந்து 'தனிப்பாடல்' ஒன்றை உருவாக்கியிருக்கிறார். .தொடர்ந்து முயற்சித்ததில், சிறு நிறுவனங்கள், பார்லர் விளம்பரங்கள் போன்றவற்றில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது..பிறகு ஒரு தனியார் நிறுவனத்தின் பிராண்ட் மாடலாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான விளம்பரங்களில் நடிப்பது, பிரமோஷன்களில் பங்கேற்பது, தியேட்டர் விளம்பரங்கள், துணிக்கடை விளம்பரங்களில் நடிப்பது என்று வாய்ப்புகள் குவியத் தொடங்கின. .மாடலாக வெற்றி பெற்ற பின்னர், பங்குச்சந்தைகளில் ஆர்வம் வந்து இன்று ஷேர்மார்க்கெட்டிலும் கைதேர்ந்திருக்கிறார்.."பள்ளி நாட்களில், கூரை வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், கஜா புயல் வந்து அந்த வீடும் இடிந்து போக, அக்கம் பக்கத்தவர் உதவியுடன் அதை ஓரளவு சரி செய்து அதில் வசித்து வந்தோம்," என்று கூறும் நந்தினி, பல சவால்களுக்கும் சோதனைகளுக்கும் பிறகு இன்று, விளம்பர உலகிலும் பங்குச்சந்தையிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்..…………………………………….பத்தாம் வகுப்பில் உலக சாதனை!.பத்தாம் வகுப்பு மாணவியான தருணிகாஸ்ரீ, தற்காப்புக் கலையான கராத்தேயில் சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். தனது 9 வது வயதிலிருந்தே கராத்தே கலையைப் பயின்று வருகிறார்..இந்த சிறு வயதிற்குள், சர்வதேச போட்டிகள், ஆசிய மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் உட்பட 28 போட்டிகளில் வென்றிருக்கிறார். தவிர, மாவட்ட லயன்ஸ் க்ளப் கராத்தே போட்டிகளிலும் வென்றிருக்கிறார்..இந்தோனேஷியாவில் நடந்த கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது சிறப்பான தருணம் என்று கூறும் தருணிகாஸ்ரீ, ஒவ்வொரு முறை பரிசு பெறும்போதும் 'மேலும் சாதிக்க வேண்டும்' என்ற உந்துதல் ஏற்படுவதாக கூறுகிறார்.."தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களின் பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் அதிகரிக்க முடியும். .விடாமுயற்சி, சுய கட்டுப்பாடு, மனஉறுதி, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள்ளலாம். உடல் வலிமையும் மேம்படும். சமூகத்தில் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளவும் முடியும்." என்று பெண்களுக்கு ஊக்கம் தருவதோடு, மாணவர்களுக்கு தற்காப்புக் கலையை இலவசமாகக் கற்று கொடுக்கும் உன்னத பணியையும் செய்து வருகிறார்..பயிற்சி மையம் தொடங்க வேண்டும், கராத்தே கலையை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கிறார். கராத்தே மட்டுமல்ல, விவசாயத்திலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. வேளாண் கல்வியைக் கற்று, பாரம்பரியமாக முன்னோர்கள் செய்த வேளாண்மையில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆசையும் இவருக்கு உண்டு.தவிர, குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொண்டு, மாவட்ட ஆட்சியாளர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தையும் வைத்திருக்கிறார். .ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்..மங்கையர் மலர் வாசகர்கள் சார்பில் அவருக்கு இதோ ஒரு பொக்கே தந்து வாழ்த்துவோம்..…………………………………….புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உணவு!.சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் கீதா ஸ்ரீதர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவளிக்கும் சேவையைத் முதலில் தொடங்கி இருக்கிறார். தற்போது பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஏழைகளுக்கும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கும் உணவளிக்கும் உதவி செய்து வருகிறார். .தற்சமயம் மும்பையில் இருக்கும் இவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் செப் 4 வது சீசனில் பங்கேற்று. 50 ஆயிரம் போட்டியாளர்களுக்கு நடுவே, ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குச் சென்றிருக்கிறார். அதுவே தனக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்கிறார்..பின்னர், தனக்குத் தெரிந்தவற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கலாம் என்ற எண்ணத்தில், தன் ஐம்பதாவது வயதுக்குப் பின்னர் 'இந்தியன் புட் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் இணைய பக்கத்தை தொடங்கியிருக்கிறார். .முதல் ஆறுமாதம் வரை பெரிய அளவில் வரவேற்பு இல்லை. .ஒருமுறை, ரோட்டுக்கடையில் உருளைக்கிழங்கு வடையை சாப்பிட்ட புகைப்படத்தை ரெசிபியுடன் சேர்த்து பதிவேற்றியிருக்கிறார். உணவு சாப்பிடும்போது, ஏற்படும் முகபாவனை காரணமாக அந்தப் பதிவு நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றியின் ரகசியம் புரிபட, .தொடர்ந்து ரெசிப்பி யோடு, உணவை சுவைக்கும் முகபாவனையையும் பதிவேற்றி வருவதால், தற்போது ஒரு மில்லியனுக்கும் மேலானோர் இவரது இணைய பக்கத்தை பின்பற்று கிறார்களாம்..இதன் மூலம் சில குறிப்பிட்ட தனித்துவமான உணவு வகைகளை விளம்பரப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு தினமும் உணவு சமைத்து கொடுத்து வருகிறார். பார்வை குறைபாடுள்ள 80 குழந்தைகளுக்கு கல்வி பயிலவும், தேர்வு எழுதவும் உதவி செய்து வருவதோடு, தன் குடும்பத்தினரையும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தி வருகிறார். .சிறப்பு குழந்தைகள் பயிலும் பள்ளியில் பெற்றோர்களுக்கான ஆலோசனையையும் வழங்குவதோடு, சென்னையிலும், மும்பையிலும் உள்ள பல தொழில்முனைவோர்களின் உதவியுடன், வேலையின்றி, தவிக்கும் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலை வாங்கித் தருவது, கல்வி பயில உதவுவது போன்ற சேவைகளையும் செய்து வரும் கீதா ஸ்ரீதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.மாடலான கிராம மங்கை!.2019-ம் ஆண்டில் தென்னிந்திய பெண் சாதனையாளர்களுக்கான சிறந்த கலைஞர் விருது, 2020-ம் ஆண்டில் தேசிய அளவில் சிறந்த கலைஞர் விருது, 2021-ம் ஆண்டில் மதிப்புறு டாக்டர் பட்டம், இத்தனையும் பெற்ற ஒரு அழகான மாடல் மங்கை நந்தினி..நாகரீகமான பெண்கள் நிறைந்த மாடலிங் துறையில், சாதாரண சூழலில் வளர்ந்த பெண்களும் சாதிக்க முடியும் என்று தன் ஆர்வத்தாலும், தன்னம்பிக்கையாலும் நிரூபித்து இருக்கிறார் இவர்..ஆங்கிலத்தில் இளங்கலை படித்திருக்கும் நந்தினி 26 வயதில் மாடலிங், விளம்பரங்களில் நடிப்பது, பங்குச் சந்தையில் ஈடுபடுவது என பலவற்றிலும் வெற்றி பெற்றுள்ளார்..முதலில், இவரது உயரத்தையும், கிராமப் பின்னணியையும் வைத்து பலர் நிராகரித்துள்ளனர். 2017-ம் ஆண்டில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து, ஒரு குழுவாக இணைந்து 'தனிப்பாடல்' ஒன்றை உருவாக்கியிருக்கிறார். .தொடர்ந்து முயற்சித்ததில், சிறு நிறுவனங்கள், பார்லர் விளம்பரங்கள் போன்றவற்றில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது..பிறகு ஒரு தனியார் நிறுவனத்தின் பிராண்ட் மாடலாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான விளம்பரங்களில் நடிப்பது, பிரமோஷன்களில் பங்கேற்பது, தியேட்டர் விளம்பரங்கள், துணிக்கடை விளம்பரங்களில் நடிப்பது என்று வாய்ப்புகள் குவியத் தொடங்கின. .மாடலாக வெற்றி பெற்ற பின்னர், பங்குச்சந்தைகளில் ஆர்வம் வந்து இன்று ஷேர்மார்க்கெட்டிலும் கைதேர்ந்திருக்கிறார்.."பள்ளி நாட்களில், கூரை வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், கஜா புயல் வந்து அந்த வீடும் இடிந்து போக, அக்கம் பக்கத்தவர் உதவியுடன் அதை ஓரளவு சரி செய்து அதில் வசித்து வந்தோம்," என்று கூறும் நந்தினி, பல சவால்களுக்கும் சோதனைகளுக்கும் பிறகு இன்று, விளம்பர உலகிலும் பங்குச்சந்தையிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்..…………………………………….பத்தாம் வகுப்பில் உலக சாதனை!.பத்தாம் வகுப்பு மாணவியான தருணிகாஸ்ரீ, தற்காப்புக் கலையான கராத்தேயில் சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். தனது 9 வது வயதிலிருந்தே கராத்தே கலையைப் பயின்று வருகிறார்..இந்த சிறு வயதிற்குள், சர்வதேச போட்டிகள், ஆசிய மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் உட்பட 28 போட்டிகளில் வென்றிருக்கிறார். தவிர, மாவட்ட லயன்ஸ் க்ளப் கராத்தே போட்டிகளிலும் வென்றிருக்கிறார்..இந்தோனேஷியாவில் நடந்த கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது சிறப்பான தருணம் என்று கூறும் தருணிகாஸ்ரீ, ஒவ்வொரு முறை பரிசு பெறும்போதும் 'மேலும் சாதிக்க வேண்டும்' என்ற உந்துதல் ஏற்படுவதாக கூறுகிறார்.."தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களின் பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் அதிகரிக்க முடியும். .விடாமுயற்சி, சுய கட்டுப்பாடு, மனஉறுதி, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள்ளலாம். உடல் வலிமையும் மேம்படும். சமூகத்தில் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளவும் முடியும்." என்று பெண்களுக்கு ஊக்கம் தருவதோடு, மாணவர்களுக்கு தற்காப்புக் கலையை இலவசமாகக் கற்று கொடுக்கும் உன்னத பணியையும் செய்து வருகிறார்..பயிற்சி மையம் தொடங்க வேண்டும், கராத்தே கலையை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கிறார். கராத்தே மட்டுமல்ல, விவசாயத்திலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. வேளாண் கல்வியைக் கற்று, பாரம்பரியமாக முன்னோர்கள் செய்த வேளாண்மையில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆசையும் இவருக்கு உண்டு.தவிர, குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொண்டு, மாவட்ட ஆட்சியாளர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தையும் வைத்திருக்கிறார். .ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்..மங்கையர் மலர் வாசகர்கள் சார்பில் அவருக்கு இதோ ஒரு பொக்கே தந்து வாழ்த்துவோம்..…………………………………….புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உணவு!.சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் கீதா ஸ்ரீதர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவளிக்கும் சேவையைத் முதலில் தொடங்கி இருக்கிறார். தற்போது பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஏழைகளுக்கும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கும் உணவளிக்கும் உதவி செய்து வருகிறார். .தற்சமயம் மும்பையில் இருக்கும் இவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் செப் 4 வது சீசனில் பங்கேற்று. 50 ஆயிரம் போட்டியாளர்களுக்கு நடுவே, ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குச் சென்றிருக்கிறார். அதுவே தனக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்கிறார்..பின்னர், தனக்குத் தெரிந்தவற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கலாம் என்ற எண்ணத்தில், தன் ஐம்பதாவது வயதுக்குப் பின்னர் 'இந்தியன் புட் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் இணைய பக்கத்தை தொடங்கியிருக்கிறார். .முதல் ஆறுமாதம் வரை பெரிய அளவில் வரவேற்பு இல்லை. .ஒருமுறை, ரோட்டுக்கடையில் உருளைக்கிழங்கு வடையை சாப்பிட்ட புகைப்படத்தை ரெசிபியுடன் சேர்த்து பதிவேற்றியிருக்கிறார். உணவு சாப்பிடும்போது, ஏற்படும் முகபாவனை காரணமாக அந்தப் பதிவு நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றியின் ரகசியம் புரிபட, .தொடர்ந்து ரெசிப்பி யோடு, உணவை சுவைக்கும் முகபாவனையையும் பதிவேற்றி வருவதால், தற்போது ஒரு மில்லியனுக்கும் மேலானோர் இவரது இணைய பக்கத்தை பின்பற்று கிறார்களாம்..இதன் மூலம் சில குறிப்பிட்ட தனித்துவமான உணவு வகைகளை விளம்பரப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு தினமும் உணவு சமைத்து கொடுத்து வருகிறார். பார்வை குறைபாடுள்ள 80 குழந்தைகளுக்கு கல்வி பயிலவும், தேர்வு எழுதவும் உதவி செய்து வருவதோடு, தன் குடும்பத்தினரையும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தி வருகிறார். .சிறப்பு குழந்தைகள் பயிலும் பள்ளியில் பெற்றோர்களுக்கான ஆலோசனையையும் வழங்குவதோடு, சென்னையிலும், மும்பையிலும் உள்ள பல தொழில்முனைவோர்களின் உதவியுடன், வேலையின்றி, தவிக்கும் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலை வாங்கித் தருவது, கல்வி பயில உதவுவது போன்ற சேவைகளையும் செய்து வரும் கீதா ஸ்ரீதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.