'ஓவியக்காதலன்' என்ற தலைப்பில் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு எழுதிய கட்டுரையையும், படங்களையும் பார்த்து ரசித்தேன், வியந்தேன். காவல்கிணறு கிராம சில்வெஸ்டர் பீட்டர் தீட்டிய ஒவ்வொரு ஓவியமும் தத்ரூபமாகவும், அழகாகவும், மனதைக் கவரும் விதத்திலும் அமைந்திருந்தது. அவர் பேசாததை அவரது ஓவியங்கள் பேசி, எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தன. பாராட்ட வார்த்தையில்லை, மனமார வாழ்த்துகிறேன்.– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.ஆட்டு மந்தை போல் வாழ்க்கையை நடத்தாமல் ஒவ்வொரு மனிதனும் சுயமாகச் சிந்தித்து வாழ வேண்டும்; புதுமையைச் செய்யாமல் யாரும் எதையும் சாதிக்க முடியாது; தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வாழ்வதுதான் வாழ்க்கை என்ற கருத்தை அற்புதமாக எடுத்துரைத்த, 'ஒரு வார்த்தை' என்றும் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும்!– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை.பனிக்கால பராமரிப்பு குறிப்புகள், குளிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப அத்தியாவசியமான, மிகவும் பயனுள்ள, வருமுன் காத்துக்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை தகவல்கள்.– ர.மஹாலட்சுமி, திருவான்மியூர்.அன்பு வட்டத்தில், 'பாச உணர்ச்சி பெண்களுக்குத்தான் அதிகம்' என்று சொன்ன பதிலில், பாசங்களில் எத்தனை விதம் என்பதையும் காட்டிவிட்டார் அனுஷா.– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.புதிதாக, தனியாக, சொந்தமாக எதையாவது யோசித்துச் செய்வதால் வரும் பிரச்னையை விட, அடுத்தவர்களைப் பார்த்து யோசிக்காமல் தேவையின்றி எதையாவது செய்வதனால் தான் பெரிதாக மாட்டிகொள்வோம். எனவே, மந்தை மனநிலையினால் எப்போதும் மகிழ்ச்சியும், நிறைவும் கிடைக்காது என்பதை, 'ஒரு வார்த்தை'யில் ஏகப்பட்ட கருத்துக்களுடன் ஒப்பிட்டு மிக சுவாரசியமாகக் கூறியிருக்கிறார் அனுஷா மேடம்.– வி.கலைமதி சிவகுரு, கோணம்.சில்வெஸ்டர் பீட்டர் அவர்களின் கைவண்ணத்தில் ஓவியங்கள் தத்ரூபமாக, பார்க்கும் கண்களுக்குப் பேரின்பத்தைத் தந்தது. தலைவர்களை உயிரோவியமாக வரைந்திருப்பது அவரது திறமைக்கு சான்று. அவர் மூலம் பலரும் ஓவியம் பயில பயிற்சி பெற்றது பாராட்டத் தக்கது. அவரது ஓவியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்..l நித்யா அவர்களின் சிறுகதை சிறப்பாக இருந்தது. உறவுகளின் உணர்வுகளை எளிமையான நடையில் அழகாகச் சொன்னது அருமை. வாழ்த்துக்கள்..l அந்தக் கால சுவாரஸ்யங்களையும், அலுவல்களையும் இந்தத் தலைமுறையினர் விரும்புவதில்லை. வாழ்வியலில் ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்ல இவை எல்லாம் நேர விரயமாகக் கருதப்படுகிறது. நாம் வாழ்ந்த வாழ்க்கை மனத்தால். இப்போது பணத்தால் எல்லாம் அளவிடப்படுகிறது. எனவே, கட்டுரையைப் படைத்த தனுஜாவுக்கு வாழ்த்துக்கள்.– மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.'அன்பெனும் பேராயுதம்' சிறுகதை அருமை. மிக யதார்த்தமான நடை. இயல்பான கதையோட்டம். சகோதரி நித்யாவுக்குப் பாராட்டுக்கள்.– தி.வள்ளி.பி.சுசீலா பற்றிய அனுஷாவின் கணிப்பு அபாரம். சும்மா, 'நச்'சுன்னு இருந்தது.– நளினி ராமச்சந்திரன்புதிய பிரதமரின் கடும் முயற்சியால் துனிசியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையலாம். ஜி.எஸ்.எஸ்.ஸின் இக்கட்டுரை வளர்ச்சியை நினைக்கும் நாடுகளுக்கு ஓர் வரப்பிரசாதம். உலகில் எங்கோ உள்ள நாட்டை (துனிசியா) படத்துடன் விவரித்து எங்களின் அறிவுப்பசிக்கு தீனி வழங்கும் மங்கையர் மலர், பத்திரிகை உலகில் மணிமகுடம்.l மனம் என்னும் கூண்டுக்குள் அடைபட்டு, சஞ்சலத்தை கிலோ கணக்கில் கவலையாக உறுமாற்றம் செய்வதை நீக்க, மீனலதாவின் கட்டுரை மூலம் தீர்வு பெறலாம்.l தனுஜா ஜெயராமனின் வாழ்க்கையோடு கலந்த, 'வென்னீரும் வாழ்வியலும்'கட்டுரையல்ல; சிறுகதை போல் அருமையாக மனதைக் கவர்ந்தது. வாழ்த்துகள்!– து.சேரன், ஆலங்குளம்.'வென்னீரும் வாழ்வியலும்' கட்டுரை, எங்கள் வீட்டு அடுக்களைக்கு அழைத்துச் சென்று விட்டது. நினைவுகள் ஐஸாய் உருகின. கட்டுரை குளித்து முடித்து சாப்பிட்டது போல் இருந்தது.– ஜானகி
'ஓவியக்காதலன்' என்ற தலைப்பில் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு எழுதிய கட்டுரையையும், படங்களையும் பார்த்து ரசித்தேன், வியந்தேன். காவல்கிணறு கிராம சில்வெஸ்டர் பீட்டர் தீட்டிய ஒவ்வொரு ஓவியமும் தத்ரூபமாகவும், அழகாகவும், மனதைக் கவரும் விதத்திலும் அமைந்திருந்தது. அவர் பேசாததை அவரது ஓவியங்கள் பேசி, எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தன. பாராட்ட வார்த்தையில்லை, மனமார வாழ்த்துகிறேன்.– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.ஆட்டு மந்தை போல் வாழ்க்கையை நடத்தாமல் ஒவ்வொரு மனிதனும் சுயமாகச் சிந்தித்து வாழ வேண்டும்; புதுமையைச் செய்யாமல் யாரும் எதையும் சாதிக்க முடியாது; தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வாழ்வதுதான் வாழ்க்கை என்ற கருத்தை அற்புதமாக எடுத்துரைத்த, 'ஒரு வார்த்தை' என்றும் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும்!– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை.பனிக்கால பராமரிப்பு குறிப்புகள், குளிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப அத்தியாவசியமான, மிகவும் பயனுள்ள, வருமுன் காத்துக்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை தகவல்கள்.– ர.மஹாலட்சுமி, திருவான்மியூர்.அன்பு வட்டத்தில், 'பாச உணர்ச்சி பெண்களுக்குத்தான் அதிகம்' என்று சொன்ன பதிலில், பாசங்களில் எத்தனை விதம் என்பதையும் காட்டிவிட்டார் அனுஷா.– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.புதிதாக, தனியாக, சொந்தமாக எதையாவது யோசித்துச் செய்வதால் வரும் பிரச்னையை விட, அடுத்தவர்களைப் பார்த்து யோசிக்காமல் தேவையின்றி எதையாவது செய்வதனால் தான் பெரிதாக மாட்டிகொள்வோம். எனவே, மந்தை மனநிலையினால் எப்போதும் மகிழ்ச்சியும், நிறைவும் கிடைக்காது என்பதை, 'ஒரு வார்த்தை'யில் ஏகப்பட்ட கருத்துக்களுடன் ஒப்பிட்டு மிக சுவாரசியமாகக் கூறியிருக்கிறார் அனுஷா மேடம்.– வி.கலைமதி சிவகுரு, கோணம்.சில்வெஸ்டர் பீட்டர் அவர்களின் கைவண்ணத்தில் ஓவியங்கள் தத்ரூபமாக, பார்க்கும் கண்களுக்குப் பேரின்பத்தைத் தந்தது. தலைவர்களை உயிரோவியமாக வரைந்திருப்பது அவரது திறமைக்கு சான்று. அவர் மூலம் பலரும் ஓவியம் பயில பயிற்சி பெற்றது பாராட்டத் தக்கது. அவரது ஓவியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்..l நித்யா அவர்களின் சிறுகதை சிறப்பாக இருந்தது. உறவுகளின் உணர்வுகளை எளிமையான நடையில் அழகாகச் சொன்னது அருமை. வாழ்த்துக்கள்..l அந்தக் கால சுவாரஸ்யங்களையும், அலுவல்களையும் இந்தத் தலைமுறையினர் விரும்புவதில்லை. வாழ்வியலில் ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்ல இவை எல்லாம் நேர விரயமாகக் கருதப்படுகிறது. நாம் வாழ்ந்த வாழ்க்கை மனத்தால். இப்போது பணத்தால் எல்லாம் அளவிடப்படுகிறது. எனவே, கட்டுரையைப் படைத்த தனுஜாவுக்கு வாழ்த்துக்கள்.– மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.'அன்பெனும் பேராயுதம்' சிறுகதை அருமை. மிக யதார்த்தமான நடை. இயல்பான கதையோட்டம். சகோதரி நித்யாவுக்குப் பாராட்டுக்கள்.– தி.வள்ளி.பி.சுசீலா பற்றிய அனுஷாவின் கணிப்பு அபாரம். சும்மா, 'நச்'சுன்னு இருந்தது.– நளினி ராமச்சந்திரன்புதிய பிரதமரின் கடும் முயற்சியால் துனிசியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையலாம். ஜி.எஸ்.எஸ்.ஸின் இக்கட்டுரை வளர்ச்சியை நினைக்கும் நாடுகளுக்கு ஓர் வரப்பிரசாதம். உலகில் எங்கோ உள்ள நாட்டை (துனிசியா) படத்துடன் விவரித்து எங்களின் அறிவுப்பசிக்கு தீனி வழங்கும் மங்கையர் மலர், பத்திரிகை உலகில் மணிமகுடம்.l மனம் என்னும் கூண்டுக்குள் அடைபட்டு, சஞ்சலத்தை கிலோ கணக்கில் கவலையாக உறுமாற்றம் செய்வதை நீக்க, மீனலதாவின் கட்டுரை மூலம் தீர்வு பெறலாம்.l தனுஜா ஜெயராமனின் வாழ்க்கையோடு கலந்த, 'வென்னீரும் வாழ்வியலும்'கட்டுரையல்ல; சிறுகதை போல் அருமையாக மனதைக் கவர்ந்தது. வாழ்த்துகள்!– து.சேரன், ஆலங்குளம்.'வென்னீரும் வாழ்வியலும்' கட்டுரை, எங்கள் வீட்டு அடுக்களைக்கு அழைத்துச் சென்று விட்டது. நினைவுகள் ஐஸாய் உருகின. கட்டுரை குளித்து முடித்து சாப்பிட்டது போல் இருந்தது.– ஜானகி