கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!

Published on
– நிலா, திருச்சி
பொட்டு

ரவென்னும்
கறுப்பழகி
வான நெற்றியில்
வைத்துள்ளாள்
நிலவென்னும் பொட்டு!
…………………………………..

அனாதை

தாத்தாவின்
மரணம்;
அனாதையானது
கைத்தடி!
…………………………………..

ஞாபகம்

ப்பா இறந்த பின்
தனியாளாய் நின்று
குடும்பத்தை
நடத்திய அம்மாவை
நினைவூட்டுகிறது;
அந்த தூரத்து
ஒற்றைப் பனை!
…………………………………..

இன்னொரு கண்

யிரம்
கண்ணுடையாள்
அம்மன் கோயிலில்
ஆயிரத்தி ஒன்றாம்
கண்ணாய்
பொருத்தப்பட்டது
சி.சி.டி.வி. கேமரா!
…………………………………..

பூக்கள்

ழை
பெய்ததும்
தார் சாலையில்
பூக்கத் துவங்கின
குடைப் பூக்கள்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com