படித்ததில் பிடித்தது!.-சுந்தரி காந்தி, சென்னை.காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அவர் வந்ததால் காஞ்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலைந்தனர்..அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், அந்த சமயம் மடத்தில் இல்லை. முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்க வேண்டும் அல்லவா, மடத்தில் உள்ளவர்கள் பதட்டமடைந்தனர் ..அவர்களது மருட்சியைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்டார், "ஏன் இந்தப் பரபரப்பு?"."மகா பெரியவர் மூன்று கிமீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்," என்று அவரிடம் தயங்கியபடியே விபரம் தெரிவித்தனர் மடத்தில் உள்ளவர்கள்.."இவ்வளவுதானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்," என்று பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளில் விடையளித்து அவரைக் காணச் செல்கிறார் மக்கள் திலகம்..முதல்வரை வரவேற்ற பெரியவர், "உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை," என்றார்.."அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள்தானே முதல்வர்!" என்றபடி, அவருக்கு எதிரே மண் தரையில் உட்கார்ந்தார் எம். ஜி. ஆர் ..இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜி.ஆரும் ஒருவர்!.ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!."நம்ம மனுஷா, முருகனோட அறுபடை வீடுகள் – பழனி, திருச்செந்தூர், திருத்தணி, என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம், கால விரயம், பணச் செலவுன்னு ஆறது. ஆறு படை வீடுகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும் படியா ஒரு இடம் கொடுத்தா ரொம்ப நன்னா இருக்கும். "."இவ்வளவுதானே, இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?" என்று விடையளித்தார் எம்.ஜி.ஆர்.."உன்னை நேரில் பார்க்கணும்னு ஆசை. நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா. அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வர செஞ்சேன்! அங்கப் பாரு அதுக்குள்ள உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு, " என்று பதில் தந்தார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்..*இப்படியாக உருவானதுதான் சென்னை, பெஸன்ட் நகரில் உள்ள அறுபடை வீடு முருகன் கோயில்!
படித்ததில் பிடித்தது!.-சுந்தரி காந்தி, சென்னை.காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அவர் வந்ததால் காஞ்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலைந்தனர்..அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், அந்த சமயம் மடத்தில் இல்லை. முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்க வேண்டும் அல்லவா, மடத்தில் உள்ளவர்கள் பதட்டமடைந்தனர் ..அவர்களது மருட்சியைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்டார், "ஏன் இந்தப் பரபரப்பு?"."மகா பெரியவர் மூன்று கிமீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்," என்று அவரிடம் தயங்கியபடியே விபரம் தெரிவித்தனர் மடத்தில் உள்ளவர்கள்.."இவ்வளவுதானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்," என்று பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளில் விடையளித்து அவரைக் காணச் செல்கிறார் மக்கள் திலகம்..முதல்வரை வரவேற்ற பெரியவர், "உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை," என்றார்.."அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள்தானே முதல்வர்!" என்றபடி, அவருக்கு எதிரே மண் தரையில் உட்கார்ந்தார் எம். ஜி. ஆர் ..இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜி.ஆரும் ஒருவர்!.ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!."நம்ம மனுஷா, முருகனோட அறுபடை வீடுகள் – பழனி, திருச்செந்தூர், திருத்தணி, என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம், கால விரயம், பணச் செலவுன்னு ஆறது. ஆறு படை வீடுகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும் படியா ஒரு இடம் கொடுத்தா ரொம்ப நன்னா இருக்கும். "."இவ்வளவுதானே, இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?" என்று விடையளித்தார் எம்.ஜி.ஆர்.."உன்னை நேரில் பார்க்கணும்னு ஆசை. நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா. அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வர செஞ்சேன்! அங்கப் பாரு அதுக்குள்ள உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு, " என்று பதில் தந்தார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்..*இப்படியாக உருவானதுதான் சென்னை, பெஸன்ட் நகரில் உள்ள அறுபடை வீடு முருகன் கோயில்!