-ஜெஸிகா .நூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், நடிகைகளுக்கு சினிமாவில் கிடைத்த இடம் குறித்தும் இந்த தருணத்திலாவது பேச வேண்டும்..1960, 1980, 2022 என மூன்று தலைமுறை கதாநாயகிகள் சினிமாவில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசுகிறார்கள்….கே.ஆர் விஜயா 1960களில் கதாநாயகி என்பதெல்லாம் பெரிய விஷயம். பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாத தருணம் அது. என்னுடைய அப்பாவுக்கு இருந்த நாடக ஆர்வம் காரணமாக நான் மேடை ஏறினேன். பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் என்னை மேடைகளில் ஆட வைப்பார்கள். ஒரு சாக்லேட் விளம்பர படத்தில் நடித்ததன் மூலம், கற்பகம் பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 16 வயதுதான்..சோ, நாகேஷ், செந்தாமரை, தேங்காய் ஸ்ரீனிவாசன் என எல்லோருடனும் நடித்திருக்கிறேன். இவர்களோடுதான் நடிப்பேன், அவர்களோடுதான் நடிப்பேன் என சொன்னது இல்லை. சாமி கேரக்டர், அம்மா, ஹீரோயின், அக்கா, அண்ணி , பாட்டி என எல்லா ரோலிலும் நடித்து விட்டேன். சாமி பக்தி அதிகம் என்பதால், சாமி படத்தில் நடிக்கும் போது உண்மையில் விரதம் இருந்து நடிப்பேன்..அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதே போல், சென்சார் கட்டுப்பாடு ரொம்ப அதிகமாக இருந்தது. சினிமாவில் நடிக்க போவது என்பது பள்ளிக்கூடம் போவது போல் தான் இருக்கும். காரணம்; பாடல், வசனம், ஒப்பனை என எல்லாவற்றையும் நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் தெரிந்தால் தான் நடிகை ஆக முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அப்படியெல்லாம் இல்லை..கருப்பு, வெள்ளை காலத்தில் நடித்தது எனக்கு இன்றும் பெருமையாக உள்ளது. கருப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது, அது ஒரு ஓவியம் போல் இருக்கும். அந்த ஓவியத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம். இன்றும் கூட தொலைக்காட்சியில் கருப்பு, வெள்ளை படங்களை பார்க்க தான் விரும்புகிறேன்..அப்பொழுதெல்லாம் சிகரெட், மது போன்ற காட்சிகளில் நடிக்க ஆண்களே தயங்கினார்கள். இன்று பெண்கள் கூட அந்த காட்சிகளில் நடிக்க தயங்குவதில்லை. சினிமாவை ரசிகர்கள் அவர்களது வாழ்க்கையுடன் இணைத்து கொள்கிறார்கள். அதனால் நல்ல விஷயங்களை சினிமாவாக எடுக்க வேண்டும். எல்லாத்துறைகளில் கிடைக்கும் பெயரை விட சினிமாத்துறையில் கிடைக்கும் பெயர், புகழே தனி தான். உங்களது வெற்றியை மக்கள் கொண்டாடுவார்கள். போகிற இடமெல்லாம் கூட்டம் தான். இவ்வளவு புகழ் இருந்தும் அன்றைய கதாநாயகிகள், இன்றும் தோழிகளாக வலம் வருகிறோம். இன்றைய சினிமாவில் இது உண்டா என எனக்கு தெரியவில்லை..அப்போது சினிமாவில் பெண்களின் நிலை உயர்ந்து தான் இருந்தது. குடும்பமாய் திரைப்படத்திற்கு வந்தார்கள். இன்று அந்த நிலை மெல்ல மாறி வருகிறது. பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படம் தமிழில் குறைவாக வெளிவருகிறது. இந்த நிலை மாற வேண்டும்..காஞ்சனா எங்கள் காலக்கட்டத்தில் கதாநாயகியாகிய நாங்கள் ஓகோவென இருந்தோம். திரையுலகில் எங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தது. சினிமாவில் பெண்கள் சாதித்ததை எல்லோரும் கொண்டாடினார்கள். இயக்குனர்கள், நடன கலைஞர்கள் எல்லாவற்றையும் எங்களுக்கு சொல்லி கொடுத்தார்கள். அதனால் சினிமா என்பது என்னை பொறுத்தவரை ஒரு குருகுலமாக தான் இருந்தது. ஆனால் அந்த நிலை இன்று இருப்பதாக தெரியவில்லை..அன்று கதாநாயகிகளுக்கு இசையமைப்பு முதல் பாடல் பாடுவது வரை தெரிய வேண்டும். தமிழ் சினிமாவின் முதல் இசையமைப்பாளர் என்றால் அது பானுமதி தான். அஸ்டாவதானியாக திகழ்ந்தவர். இசை அமைப்பாளர், பாட்டு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல துறைகளில் ஜொலித்தார். அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் ஜொலிக்க திறமை ரொம்ப அவசியமாக இருந்தது. அழகெல்லாம் அதற்கு பிறகு தான். இன்று நிலைமையே தலைகீழ். கதாநாயகிகள் வந்து நின்றால் போதும். அவர்களுக்கு பதில் எல்லாவற்றையும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..அன்று விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் கதாநாயகிகள் இருந்தார்கள். அதனால்தான் எங்களால் பல வருட காலம் நிலைத்து நிற்க முடிந்தது. கதாநாயகிகளாகிய எங்களுக்குள் போட்டி இருக்காது. எல்லாரும் யூனிட்டில் சேர்ந்து சாப்பிடுவோம். வெளியில் சேர்ந்து போவோம். எல்லோர் வீட்டு விசேஷத்திற்கும் எல்லோரும் வருவார்கள். ஆனால் இதெல்லாம் இன்றும் இருக்கிறதா என தெரியவில்லை..ராதா 1980களில் நடிக்க வந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்களுக்கு முன்பு இருந்தவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு திரைக்கு வந்தோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். 1980 முதல் 11 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தேன். அக்கா அம்பிகாவும் இதே துறை என்பதால் சினிமாத்துறை பற்றி எங்களுக்குள்ளே அதிகம் பேசிக்கொள்வோம்..என்னதான் காதல் ரசம் சொட்ட நடித்தாலும், சிவாஜி கணேசனுடன் நடித்த முதல் மரியாதை படம் ரசிகர்களிடம் நீங்காத இடத்தை எனக்கு பெற்று தந்தது. நாங்கள் சினிமாவில் இருந்த சமயம், அதிகமாக மாடர்ன் டிரஸ்களை நடிகைகள் அணிந்து வந்தனர். எங்கள் காலத்தில் வந்த எல்லா பேஷன் பொருட்களுக்கும், புடவைகளுக்கும் மவுசு அதிகம். அந்தளவுக்கு மக்கள் சினிமாவை தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்த்தார்கள். சினிமாவில் எங்களுக்கான சுதந்திரம் இருந்தது. நடனத்தின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக நடிக்க வந்தேன். அந்த வேகமும் ஆர்வமும் இப்போதும் குறையவில்லை..இப்போதும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. என்னுடைய வாரிசுகள் வெள்ளித்திரையில் களமிறங்கியதால், நான் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கிறேன். இன்றைய சினிமா நிறைய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்திருக்கிறது. நிறைய பெண் கலைஞர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் காலகட்டத்தில் அதிகமாக ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது டிரஸ் டிசைனர் அளவுக்கு வளர்ச்சியடைந்து விட்டது..அம்பிகா தமிழ், மலையாளம் உட்பட 150 படங்களில் நடித்திருக்கிறேன். மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனேன். நான் தான் வீட்டில் மூத்த பெண். சிறு வயதிலே சினிமாவில் அதிக ஆர்வம் இருந்தது..அம்மாவிடம் சண்டை போட்டு படப்பிடிப்பிற்கு கூட்டிட்டு போய் காண்பிக்க சொல்வேன். அப்போது சோட்டாணிக்கரா என்ற மலையாள படப்பிடிப்பின் போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன்..1980களில் அம்பிகா சேலை, அம்பிகா ஹேர்ஸ்டைல், அம்பிகா ஒன் சைடு கிளிப் என என் பெயர்களில் பேன்சி பொருட்கள் வந்தது, என்னை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றது. சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் அவர்களுக்கான மொழியையும் உருவாக்க வேண்டும். அதற்கு அதிகளவில் பெண்கள் இத்துறைக்கு வர வேண்டும்..த்ரிஷா .தொடர்ந்து 20 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக நிலைத்து நின்றதே சாதனையாக நினைக்கிறேன். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வருவது சுலபமாக இருந்தது. அதுவும் குறிப்பாக மிஸ் சென்னை பட்டம் என்னை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. நடிப்பு என வந்த பிறகு இப்படி தான், அப்படி தான் என சொல்ல முடியாது. அதனால் எல்லா கேரக்டர்களிலும் நடிக்கிறேன். முந்தைய சினிமாவால் நிறைய பக்குவப்பட்டிருக்கிறோம்..காலத்திற்கேற்றாற் போல் சினிமாவில் பெண்களின் பங்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் வரத் தொடங்கிருக்கிறது. இங்கிலீஷ் – விங்கிலீஷ், 36 வயதினிலே போன்ற பெண்களை மையப்படுத்தும் படங்கள் அதிகம் வர வேண்டும்..காஜல் அகர்வால் நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் கற்றுக்கொள்ள சினிமாவில் நிறையவே இருக்கிறது. அதனால் தினம் தினம் புதிதாகவே தெரிகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறேன். ஆனால், எனக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்..சின்ன வயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. துப்பாக்கி படத்தில் பைக் ஓட்டும் காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காக, பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். பைப் ஓட்ட பழகும் போது, கை, கால்களில் எல்லாம் அடிபட்டது. அதே போல், மகதீரா படத்தில் நடிக்கும் போது, குதிரையேறும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள். குதிரைப்பயிற்சி எடுத்தப்போதும் அடிபட்டது. ரிஸ்க் எடுத்து நடித்த அந்த காட்சிகள் என்னால் மறக்க முடியாதது..சினிமாவில் எனக்கு யாரும் போட்டி இல்லை. எனக்கு நானே தான் போட்டி. ஒரு படத்தை பார்க்கும் போது இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என்று தோன்றும். என் பலமும், பலவீனமு் நானாக தான் இருப்பேன். அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க பெண்கள் தயங்கினார்கள். இன்று அந்த நிலை மாறி இருக்கிறது. பெண் டைரக்டர்கள், பெண் பாடலாசிரியர்கள், பெண் இசையமைப்பாளர்களும் வர தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
-ஜெஸிகா .நூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், நடிகைகளுக்கு சினிமாவில் கிடைத்த இடம் குறித்தும் இந்த தருணத்திலாவது பேச வேண்டும்..1960, 1980, 2022 என மூன்று தலைமுறை கதாநாயகிகள் சினிமாவில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசுகிறார்கள்….கே.ஆர் விஜயா 1960களில் கதாநாயகி என்பதெல்லாம் பெரிய விஷயம். பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாத தருணம் அது. என்னுடைய அப்பாவுக்கு இருந்த நாடக ஆர்வம் காரணமாக நான் மேடை ஏறினேன். பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் என்னை மேடைகளில் ஆட வைப்பார்கள். ஒரு சாக்லேட் விளம்பர படத்தில் நடித்ததன் மூலம், கற்பகம் பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 16 வயதுதான்..சோ, நாகேஷ், செந்தாமரை, தேங்காய் ஸ்ரீனிவாசன் என எல்லோருடனும் நடித்திருக்கிறேன். இவர்களோடுதான் நடிப்பேன், அவர்களோடுதான் நடிப்பேன் என சொன்னது இல்லை. சாமி கேரக்டர், அம்மா, ஹீரோயின், அக்கா, அண்ணி , பாட்டி என எல்லா ரோலிலும் நடித்து விட்டேன். சாமி பக்தி அதிகம் என்பதால், சாமி படத்தில் நடிக்கும் போது உண்மையில் விரதம் இருந்து நடிப்பேன்..அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதே போல், சென்சார் கட்டுப்பாடு ரொம்ப அதிகமாக இருந்தது. சினிமாவில் நடிக்க போவது என்பது பள்ளிக்கூடம் போவது போல் தான் இருக்கும். காரணம்; பாடல், வசனம், ஒப்பனை என எல்லாவற்றையும் நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் தெரிந்தால் தான் நடிகை ஆக முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அப்படியெல்லாம் இல்லை..கருப்பு, வெள்ளை காலத்தில் நடித்தது எனக்கு இன்றும் பெருமையாக உள்ளது. கருப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது, அது ஒரு ஓவியம் போல் இருக்கும். அந்த ஓவியத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம். இன்றும் கூட தொலைக்காட்சியில் கருப்பு, வெள்ளை படங்களை பார்க்க தான் விரும்புகிறேன்..அப்பொழுதெல்லாம் சிகரெட், மது போன்ற காட்சிகளில் நடிக்க ஆண்களே தயங்கினார்கள். இன்று பெண்கள் கூட அந்த காட்சிகளில் நடிக்க தயங்குவதில்லை. சினிமாவை ரசிகர்கள் அவர்களது வாழ்க்கையுடன் இணைத்து கொள்கிறார்கள். அதனால் நல்ல விஷயங்களை சினிமாவாக எடுக்க வேண்டும். எல்லாத்துறைகளில் கிடைக்கும் பெயரை விட சினிமாத்துறையில் கிடைக்கும் பெயர், புகழே தனி தான். உங்களது வெற்றியை மக்கள் கொண்டாடுவார்கள். போகிற இடமெல்லாம் கூட்டம் தான். இவ்வளவு புகழ் இருந்தும் அன்றைய கதாநாயகிகள், இன்றும் தோழிகளாக வலம் வருகிறோம். இன்றைய சினிமாவில் இது உண்டா என எனக்கு தெரியவில்லை..அப்போது சினிமாவில் பெண்களின் நிலை உயர்ந்து தான் இருந்தது. குடும்பமாய் திரைப்படத்திற்கு வந்தார்கள். இன்று அந்த நிலை மெல்ல மாறி வருகிறது. பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படம் தமிழில் குறைவாக வெளிவருகிறது. இந்த நிலை மாற வேண்டும்..காஞ்சனா எங்கள் காலக்கட்டத்தில் கதாநாயகியாகிய நாங்கள் ஓகோவென இருந்தோம். திரையுலகில் எங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தது. சினிமாவில் பெண்கள் சாதித்ததை எல்லோரும் கொண்டாடினார்கள். இயக்குனர்கள், நடன கலைஞர்கள் எல்லாவற்றையும் எங்களுக்கு சொல்லி கொடுத்தார்கள். அதனால் சினிமா என்பது என்னை பொறுத்தவரை ஒரு குருகுலமாக தான் இருந்தது. ஆனால் அந்த நிலை இன்று இருப்பதாக தெரியவில்லை..அன்று கதாநாயகிகளுக்கு இசையமைப்பு முதல் பாடல் பாடுவது வரை தெரிய வேண்டும். தமிழ் சினிமாவின் முதல் இசையமைப்பாளர் என்றால் அது பானுமதி தான். அஸ்டாவதானியாக திகழ்ந்தவர். இசை அமைப்பாளர், பாட்டு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல துறைகளில் ஜொலித்தார். அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் ஜொலிக்க திறமை ரொம்ப அவசியமாக இருந்தது. அழகெல்லாம் அதற்கு பிறகு தான். இன்று நிலைமையே தலைகீழ். கதாநாயகிகள் வந்து நின்றால் போதும். அவர்களுக்கு பதில் எல்லாவற்றையும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..அன்று விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் கதாநாயகிகள் இருந்தார்கள். அதனால்தான் எங்களால் பல வருட காலம் நிலைத்து நிற்க முடிந்தது. கதாநாயகிகளாகிய எங்களுக்குள் போட்டி இருக்காது. எல்லாரும் யூனிட்டில் சேர்ந்து சாப்பிடுவோம். வெளியில் சேர்ந்து போவோம். எல்லோர் வீட்டு விசேஷத்திற்கும் எல்லோரும் வருவார்கள். ஆனால் இதெல்லாம் இன்றும் இருக்கிறதா என தெரியவில்லை..ராதா 1980களில் நடிக்க வந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்களுக்கு முன்பு இருந்தவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு திரைக்கு வந்தோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். 1980 முதல் 11 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தேன். அக்கா அம்பிகாவும் இதே துறை என்பதால் சினிமாத்துறை பற்றி எங்களுக்குள்ளே அதிகம் பேசிக்கொள்வோம்..என்னதான் காதல் ரசம் சொட்ட நடித்தாலும், சிவாஜி கணேசனுடன் நடித்த முதல் மரியாதை படம் ரசிகர்களிடம் நீங்காத இடத்தை எனக்கு பெற்று தந்தது. நாங்கள் சினிமாவில் இருந்த சமயம், அதிகமாக மாடர்ன் டிரஸ்களை நடிகைகள் அணிந்து வந்தனர். எங்கள் காலத்தில் வந்த எல்லா பேஷன் பொருட்களுக்கும், புடவைகளுக்கும் மவுசு அதிகம். அந்தளவுக்கு மக்கள் சினிமாவை தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்த்தார்கள். சினிமாவில் எங்களுக்கான சுதந்திரம் இருந்தது. நடனத்தின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக நடிக்க வந்தேன். அந்த வேகமும் ஆர்வமும் இப்போதும் குறையவில்லை..இப்போதும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. என்னுடைய வாரிசுகள் வெள்ளித்திரையில் களமிறங்கியதால், நான் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கிறேன். இன்றைய சினிமா நிறைய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்திருக்கிறது. நிறைய பெண் கலைஞர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் காலகட்டத்தில் அதிகமாக ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது டிரஸ் டிசைனர் அளவுக்கு வளர்ச்சியடைந்து விட்டது..அம்பிகா தமிழ், மலையாளம் உட்பட 150 படங்களில் நடித்திருக்கிறேன். மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனேன். நான் தான் வீட்டில் மூத்த பெண். சிறு வயதிலே சினிமாவில் அதிக ஆர்வம் இருந்தது..அம்மாவிடம் சண்டை போட்டு படப்பிடிப்பிற்கு கூட்டிட்டு போய் காண்பிக்க சொல்வேன். அப்போது சோட்டாணிக்கரா என்ற மலையாள படப்பிடிப்பின் போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன்..1980களில் அம்பிகா சேலை, அம்பிகா ஹேர்ஸ்டைல், அம்பிகா ஒன் சைடு கிளிப் என என் பெயர்களில் பேன்சி பொருட்கள் வந்தது, என்னை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றது. சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் அவர்களுக்கான மொழியையும் உருவாக்க வேண்டும். அதற்கு அதிகளவில் பெண்கள் இத்துறைக்கு வர வேண்டும்..த்ரிஷா .தொடர்ந்து 20 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக நிலைத்து நின்றதே சாதனையாக நினைக்கிறேன். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வருவது சுலபமாக இருந்தது. அதுவும் குறிப்பாக மிஸ் சென்னை பட்டம் என்னை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. நடிப்பு என வந்த பிறகு இப்படி தான், அப்படி தான் என சொல்ல முடியாது. அதனால் எல்லா கேரக்டர்களிலும் நடிக்கிறேன். முந்தைய சினிமாவால் நிறைய பக்குவப்பட்டிருக்கிறோம்..காலத்திற்கேற்றாற் போல் சினிமாவில் பெண்களின் பங்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் வரத் தொடங்கிருக்கிறது. இங்கிலீஷ் – விங்கிலீஷ், 36 வயதினிலே போன்ற பெண்களை மையப்படுத்தும் படங்கள் அதிகம் வர வேண்டும்..காஜல் அகர்வால் நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் கற்றுக்கொள்ள சினிமாவில் நிறையவே இருக்கிறது. அதனால் தினம் தினம் புதிதாகவே தெரிகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறேன். ஆனால், எனக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்..சின்ன வயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. துப்பாக்கி படத்தில் பைக் ஓட்டும் காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காக, பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். பைப் ஓட்ட பழகும் போது, கை, கால்களில் எல்லாம் அடிபட்டது. அதே போல், மகதீரா படத்தில் நடிக்கும் போது, குதிரையேறும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள். குதிரைப்பயிற்சி எடுத்தப்போதும் அடிபட்டது. ரிஸ்க் எடுத்து நடித்த அந்த காட்சிகள் என்னால் மறக்க முடியாதது..சினிமாவில் எனக்கு யாரும் போட்டி இல்லை. எனக்கு நானே தான் போட்டி. ஒரு படத்தை பார்க்கும் போது இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என்று தோன்றும். என் பலமும், பலவீனமு் நானாக தான் இருப்பேன். அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க பெண்கள் தயங்கினார்கள். இன்று அந்த நிலை மாறி இருக்கிறது. பெண் டைரக்டர்கள், பெண் பாடலாசிரியர்கள், பெண் இசையமைப்பாளர்களும் வர தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.