சவாலே சமாளி!.தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்.ஒரு முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் ஆசிய அளவில் கொள்முதல் இயக்குனர் என்ற உயர் பதவியை வகித்து வருபவர் சந்திரகலா. ஒரு காரை உருவாக்க ஆயிரக்கணக்கான மூலப்பொருட்கள் தேவை. அவற்றை பல இடங்களில் இருந்து வரவழைக்க வேண்டியிருக்கும். அதனால் பல நூறு தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால், ஒரு பொருள் வரவில்லை என்றாலும் பலபேருக்கு அன்று வருமானம் இல்லாமல் போய்விடும்..ஒரு கம்பெனியில் தீ விபத்து, மற்றொன்றில் தொழிலாளர் போராட்டம் என்று ஏதாவது நிகழ்ந்தால் அங்கிருந்து வர வேண்டிய உதிரி பாகங்கள் வராமல் நின்றுவிடும்..தொடர்ந்து வேலை முடங்கிவிடும். இப்படி எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்திருந்தாலும் லாக்டவுன் முடியும் சமயத்தில் மிகப் பெரிய சவால் ஒன்றை சந்திரகலா சந்திக்க நேர்ந்தது…."லாக்டவுன் முடிந்து 2021ல் கொஞ்சம் கொஞ்சமாக பிசினஸ் முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டம். எங்களை நம்பி இருந்த சிறு கம்பெனிகள், மிஷினரி போன்றவற்றில் அப்போதுதான் உற்பத்தி ஆரம்பமாகியிருந்தது..புனேயிலிருந்து எங்களுக்கு மெட்டீரியல் சப்ளை செய்யும் ஒரு ஐரோப்பிய நிறுவனம், 'நாங்கள் எங்கள் கம்பெனியை இன்றிலிருந்து மூடுகிறோம். எங்களுக்கு பெரும் நஷ்டமாகிவிட்டது' என்று திடீரென நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். எங்களிடம் ஆறு நாட்களுக்கான மூலப்பொருள் மட்டுமே இருந்தது. அதை சப்ளை செய்தால் கார் உற்பத்தியாளர்கள் எட்டு நாளைக்கு மட்டுமே வேலை செய்ய முடியும்..இது ஒரு சங்கிலித் தொடர் போல எங்களையும், எங்களை நம்பி இருக்கும் நிறுவனங்களையும் பாதிக்கும். டீலர்கள், கஸ்டமர்கள் அனைவருக்கும் பாதிப்புதான். ஆயிரம் பேருக்கு மேல் வேலை போகும் சூழல். இதற்கு ஆறு நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேனேஜ்மெண்ட்டில் ஒரு அவசரக் கமிட்டி அமைத்து அதன் தலைவராக என்னையும் நியமித்துவிட்டார்கள்..புனே நிறுவனத்திடமிருந்து வாங்கிக்கொண்டிருந்த உதிரிப் பொருட்களுக்கு மாற்றாக மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்குவது கார் உற்பத்தியில் அவ்வளவு எளிதல்ல. நிறைய பரிசோதனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இவற்றை எதிர்கொள்ள வெண்டும்..முதலில் அதற்கு ஈடான உதிரி பாகம் எங்கே கிடைக்குமென்று உலகத்தின்மூலை முடுக்கெல்லாம் தேடினோம். கடைசியில் கொரியாவிலும் சைனாவிலும் அதற்கு நிகரான மெட்டீரியல் இருப்பது தெரியவந்தது. அதுவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரான மெட்டீரியல்தான்..அவர்களிடம் இடைவிடாமல் பேசி ஒருவழியாக அவர்கள் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால், எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுடையது என்று சொல்லிவிட்டார்கள்..சரியான போக்குவரத்து ஆரம்பிக்காத சூழல் அப்போது. கொரியா விலிருந்தும், சைனாவிலிருந்தும் பொருட்களை இரண்டு கட்டமாக, கப்பலில் பாதியும் விமானத்தில் பாதியுமாக கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். அதற்கான விதிமுறைகள், ஃபார்மாலிடிகளில் ஈடுபட்டோம். கொடுக்க வேண்டிய விலையோ பத்து மடங்கு கூடுதல்..இத்தனையும், நம்புங்கள், 48 மணி நேரத்துக்குள் நடந்த நிகழ்வுகள். இரவு பகல் தூங்காமல் வேலை செய்தோம். விமான சரக்குகள் வந்து கொண்டிருந்தபோதே, கப்பலில் வந்த சரக்குகளை, சைனாவிலிருந்து வருவதால், கோவிட் காரணமாக சிங்கப்பூரில் நிறுத்திவிட்டார்கள். அவர்களுடன் தொடர்ந்து பேசி எங்கள் நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தோம்..இதற்குள் புனே நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்குத் தேவையான மெட்டீரியல் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அங்கே திடீரென மூடிவிட்டதால் தொழிலாளர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பொருளும் வெளியே போகக்கூடாது என்று போராடிக்கொண்டிருந்தார்கள். பின்னே அதையும் சமாளித்து விடியற்காலை மூன்று மணிக்கு வேன்கள் மூலம் அவற்றையும் எடுத்துவந்தோம்..கொரியா, சைனா பொருட்களும் வந்துசேர்ந்தன. அந்த ஒரு வாரம் மிகவும் நெருக்கடியையும் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இதில் எங்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டதால், சட்டரீதியாக நஷ்ட ஈடு கேட்கச் சொன்னார்கள். புனே ஐரோப்பிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பரிடம் பேசி, சட்டரீதியாகச் செல்லாமல் ஐம்பது சதவீதம் பணம் திரும்பக் கிடைக்க வழி செய்தேன். இதனால் அதிக நஷ்டமின்றி, வேலையும் முடங்காமல் தொடர்ந்து இயங்க முடிந்தது.
சவாலே சமாளி!.தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்.ஒரு முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் ஆசிய அளவில் கொள்முதல் இயக்குனர் என்ற உயர் பதவியை வகித்து வருபவர் சந்திரகலா. ஒரு காரை உருவாக்க ஆயிரக்கணக்கான மூலப்பொருட்கள் தேவை. அவற்றை பல இடங்களில் இருந்து வரவழைக்க வேண்டியிருக்கும். அதனால் பல நூறு தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால், ஒரு பொருள் வரவில்லை என்றாலும் பலபேருக்கு அன்று வருமானம் இல்லாமல் போய்விடும்..ஒரு கம்பெனியில் தீ விபத்து, மற்றொன்றில் தொழிலாளர் போராட்டம் என்று ஏதாவது நிகழ்ந்தால் அங்கிருந்து வர வேண்டிய உதிரி பாகங்கள் வராமல் நின்றுவிடும்..தொடர்ந்து வேலை முடங்கிவிடும். இப்படி எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்திருந்தாலும் லாக்டவுன் முடியும் சமயத்தில் மிகப் பெரிய சவால் ஒன்றை சந்திரகலா சந்திக்க நேர்ந்தது…."லாக்டவுன் முடிந்து 2021ல் கொஞ்சம் கொஞ்சமாக பிசினஸ் முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டம். எங்களை நம்பி இருந்த சிறு கம்பெனிகள், மிஷினரி போன்றவற்றில் அப்போதுதான் உற்பத்தி ஆரம்பமாகியிருந்தது..புனேயிலிருந்து எங்களுக்கு மெட்டீரியல் சப்ளை செய்யும் ஒரு ஐரோப்பிய நிறுவனம், 'நாங்கள் எங்கள் கம்பெனியை இன்றிலிருந்து மூடுகிறோம். எங்களுக்கு பெரும் நஷ்டமாகிவிட்டது' என்று திடீரென நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். எங்களிடம் ஆறு நாட்களுக்கான மூலப்பொருள் மட்டுமே இருந்தது. அதை சப்ளை செய்தால் கார் உற்பத்தியாளர்கள் எட்டு நாளைக்கு மட்டுமே வேலை செய்ய முடியும்..இது ஒரு சங்கிலித் தொடர் போல எங்களையும், எங்களை நம்பி இருக்கும் நிறுவனங்களையும் பாதிக்கும். டீலர்கள், கஸ்டமர்கள் அனைவருக்கும் பாதிப்புதான். ஆயிரம் பேருக்கு மேல் வேலை போகும் சூழல். இதற்கு ஆறு நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேனேஜ்மெண்ட்டில் ஒரு அவசரக் கமிட்டி அமைத்து அதன் தலைவராக என்னையும் நியமித்துவிட்டார்கள்..புனே நிறுவனத்திடமிருந்து வாங்கிக்கொண்டிருந்த உதிரிப் பொருட்களுக்கு மாற்றாக மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்குவது கார் உற்பத்தியில் அவ்வளவு எளிதல்ல. நிறைய பரிசோதனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இவற்றை எதிர்கொள்ள வெண்டும்..முதலில் அதற்கு ஈடான உதிரி பாகம் எங்கே கிடைக்குமென்று உலகத்தின்மூலை முடுக்கெல்லாம் தேடினோம். கடைசியில் கொரியாவிலும் சைனாவிலும் அதற்கு நிகரான மெட்டீரியல் இருப்பது தெரியவந்தது. அதுவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரான மெட்டீரியல்தான்..அவர்களிடம் இடைவிடாமல் பேசி ஒருவழியாக அவர்கள் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால், எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுடையது என்று சொல்லிவிட்டார்கள்..சரியான போக்குவரத்து ஆரம்பிக்காத சூழல் அப்போது. கொரியா விலிருந்தும், சைனாவிலிருந்தும் பொருட்களை இரண்டு கட்டமாக, கப்பலில் பாதியும் விமானத்தில் பாதியுமாக கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். அதற்கான விதிமுறைகள், ஃபார்மாலிடிகளில் ஈடுபட்டோம். கொடுக்க வேண்டிய விலையோ பத்து மடங்கு கூடுதல்..இத்தனையும், நம்புங்கள், 48 மணி நேரத்துக்குள் நடந்த நிகழ்வுகள். இரவு பகல் தூங்காமல் வேலை செய்தோம். விமான சரக்குகள் வந்து கொண்டிருந்தபோதே, கப்பலில் வந்த சரக்குகளை, சைனாவிலிருந்து வருவதால், கோவிட் காரணமாக சிங்கப்பூரில் நிறுத்திவிட்டார்கள். அவர்களுடன் தொடர்ந்து பேசி எங்கள் நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தோம்..இதற்குள் புனே நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்குத் தேவையான மெட்டீரியல் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அங்கே திடீரென மூடிவிட்டதால் தொழிலாளர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பொருளும் வெளியே போகக்கூடாது என்று போராடிக்கொண்டிருந்தார்கள். பின்னே அதையும் சமாளித்து விடியற்காலை மூன்று மணிக்கு வேன்கள் மூலம் அவற்றையும் எடுத்துவந்தோம்..கொரியா, சைனா பொருட்களும் வந்துசேர்ந்தன. அந்த ஒரு வாரம் மிகவும் நெருக்கடியையும் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இதில் எங்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டதால், சட்டரீதியாக நஷ்ட ஈடு கேட்கச் சொன்னார்கள். புனே ஐரோப்பிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பரிடம் பேசி, சட்டரீதியாகச் செல்லாமல் ஐம்பது சதவீதம் பணம் திரும்பக் கிடைக்க வழி செய்தேன். இதனால் அதிக நஷ்டமின்றி, வேலையும் முடங்காமல் தொடர்ந்து இயங்க முடிந்தது.