தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்!.சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா?.அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும் இருக்கும் திரைக் கலைஞர்களுக்கு உயரிய அங்கீகாரம் ஆஸ்கார் விருது இதில் முக்கியமானவை, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளாகும்..ஆஸ்கார் வாங்கிய முதல் பெண் இயக்குனரான கேத்ரின் பிகிலோவுக்கு 'தி ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) என்ற திரைப்படத்திற்காக 2010ல் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது..இவருக்கு வயது 68!.அதிரடி காட்சிகளை தத்ரூபமாகவும், உண்மையாகவும் எடுப்பதிலும், 'கிளைமேக்ஸ்' காட்சிகளை இயக்குவதிலும் மிகவும் பிரபலமானவர் கேத்ரின்..'பாயிண்ட் பிரேக்', திரைப்படத்தில் ஸ்கை டைவிங் காட்சியை படமாக்கும் போது, கேத்ரின் பாராசூட் அணிந்து விமானத்தில் இருந்தபடியே, கதாநாயகன் அங்கிருந்து கீழே விழுவதை படமாக்கினார். (ஆஸ்கார் விருது பெற்ற இரண்டாவது பெண் இயக்குனர், சீனா நாட்டைச் சேர்ந்த "சோலே ஸாவோ". (Chloé Zhao) Nomadland என்ற படத்திற்காக சென்ற ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்..இந்த விருதினை பெறும் மூன்றாவது பெண் இயக்குனர் ஜேன் கேம்பியன் (Jane Campion) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். "The Power of the Dog" என்ற திரைப் படத்திற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.).***********************.விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி இளம் பெண்!."கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று பி.சுசீலாவின் இனிய குரலில் ஒரு பழைய பாட்டு உண்டு. இங்கே ஒரு வெண்மதி கால்களில்லாமல் பல விளையாட்டுக்களிலும் சாதனை புரிந்து வருகிறது..இந்த சாதனைப் பெண்ணின் பெயர் சுபஜா..நாகர் கோயிலில் ஆறு பேர் உடன் பிறந்த கடைக்குட்டி. இவருக்கு ஒரு வயதாகும் போதே தந்தை இறந்து விட, அம்மாவும் பக்கவாதம் வந்து படுத்து விட்டாராம்..பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது சென்னைக்கு சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக நாகர் கோயில் ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறும் போது கீழே விழுந்து ரயில் சக்கரங்களில் மாட்டிக் கொண்டு ஒரு கால் சிதைந்து விட்டது. மற்றோர் கால் துண்டிக்கப்பட்டு விட்டது. ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்த பிறகு வீடு திரும்பி, நண்பர்கள் உதவியோடு, தேர்வு எழுதி, பன்னிரண்டாம் வகுப்பில் 880 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். காலில் அடிக்கடி ரத்தம் வரவே, ஒரு ஜெர்மானிய பெண் இவரை மருத்துவரிடம் காட்டியபோது..'சிதைந்த நிலையில் இருந்த காலை எடுப்பதே நலம்' என்று மருத்துவர் மற்றொரு காலையும் நீக்கினார்..பின்னர் நல்ல உள்ளம் கொண்ட அந்த ஜெர்மானிய பெண், தன் சொந்தச் செலவில் இவருக்கு செயற்கை மரக்கால்களைப் பொருத்திவிட்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படிப்பிலும் சேர்த்துவிட்டார்..படிப்பு முடிந்ததும், கடந்த 2016-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதும் வேலையில் சேர்ந்திருக்கிறார்..விளையாட்டுக்களில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரவே, முயற்சியாலும், பயிற்சியாலும் நீச்சல், வட்டு எறிதல், ஜாவலின் த்ரோ, கூடைப் பந்து, ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களில் கடும் பயிற்சி எடுத்து, போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை வென்றிருக்கிறார்..பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று உலகம் போற்றும் ஒரு பிளேட் ரன்னர் (Blade Runner) ஆக வேண்டும் என்பதே இவரது லட்சியம். இவரது வெற்றிகள் தொடரட்டும் என்று மங்கயர் மலர் வாழ்த்துகிறது..***********************.ஓவியத்தில் விருது பெற்ற பல்கலை வித்தகர் மாணவி!.12 வயதே ஆன மாணவி சூடாமணி, கதை, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், என பன்முகத் திறமையோடு விளங்குகிறார். 'உலக சாதனை விருது' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்..தனது சிறுகதைகளை, 'அம்மாவைத் தேடி' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்..(சூடாமணி என்ற பிரபல எழுத்தாளரின் பெயர் கொண்டிருப்பதாலோ) ஓவியம் வரைவதிலும் வல்லவர். கம்ப ராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் உரையாற்றுகிறார்..தன் யூடியூப் சேனலில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் மொழி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, பலரது பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் சூடாமணி..எட்டு வயதில், ஓவியத்துக்காக பாரத ஸ்டேட் வங்கியியின் விருதைப் பெற்ற பிறகு அதில் மேலும் திறன் வளர்ப்பதற்காக கலைக்கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்..'வஜூரா உலக சாதனை' 'பொதிகை தமிழ்ச் சுடர்', அப்துல்கலாம் உலக சாதனை சான்றிதழ், பாரதி பைந்தமிழ் விருது, இத்தனையும் வாங்கியிருப்பவர் இவர். தூய்மை இந்தியா குறித்த ஓவியத்துக்காக 'ஸ்வச் பாரத் அபியான் பதக்கம்', இளம் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்!.சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா?.அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும் இருக்கும் திரைக் கலைஞர்களுக்கு உயரிய அங்கீகாரம் ஆஸ்கார் விருது இதில் முக்கியமானவை, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளாகும்..ஆஸ்கார் வாங்கிய முதல் பெண் இயக்குனரான கேத்ரின் பிகிலோவுக்கு 'தி ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) என்ற திரைப்படத்திற்காக 2010ல் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது..இவருக்கு வயது 68!.அதிரடி காட்சிகளை தத்ரூபமாகவும், உண்மையாகவும் எடுப்பதிலும், 'கிளைமேக்ஸ்' காட்சிகளை இயக்குவதிலும் மிகவும் பிரபலமானவர் கேத்ரின்..'பாயிண்ட் பிரேக்', திரைப்படத்தில் ஸ்கை டைவிங் காட்சியை படமாக்கும் போது, கேத்ரின் பாராசூட் அணிந்து விமானத்தில் இருந்தபடியே, கதாநாயகன் அங்கிருந்து கீழே விழுவதை படமாக்கினார். (ஆஸ்கார் விருது பெற்ற இரண்டாவது பெண் இயக்குனர், சீனா நாட்டைச் சேர்ந்த "சோலே ஸாவோ". (Chloé Zhao) Nomadland என்ற படத்திற்காக சென்ற ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்..இந்த விருதினை பெறும் மூன்றாவது பெண் இயக்குனர் ஜேன் கேம்பியன் (Jane Campion) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். "The Power of the Dog" என்ற திரைப் படத்திற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.).***********************.விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி இளம் பெண்!."கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று பி.சுசீலாவின் இனிய குரலில் ஒரு பழைய பாட்டு உண்டு. இங்கே ஒரு வெண்மதி கால்களில்லாமல் பல விளையாட்டுக்களிலும் சாதனை புரிந்து வருகிறது..இந்த சாதனைப் பெண்ணின் பெயர் சுபஜா..நாகர் கோயிலில் ஆறு பேர் உடன் பிறந்த கடைக்குட்டி. இவருக்கு ஒரு வயதாகும் போதே தந்தை இறந்து விட, அம்மாவும் பக்கவாதம் வந்து படுத்து விட்டாராம்..பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது சென்னைக்கு சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக நாகர் கோயில் ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறும் போது கீழே விழுந்து ரயில் சக்கரங்களில் மாட்டிக் கொண்டு ஒரு கால் சிதைந்து விட்டது. மற்றோர் கால் துண்டிக்கப்பட்டு விட்டது. ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்த பிறகு வீடு திரும்பி, நண்பர்கள் உதவியோடு, தேர்வு எழுதி, பன்னிரண்டாம் வகுப்பில் 880 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். காலில் அடிக்கடி ரத்தம் வரவே, ஒரு ஜெர்மானிய பெண் இவரை மருத்துவரிடம் காட்டியபோது..'சிதைந்த நிலையில் இருந்த காலை எடுப்பதே நலம்' என்று மருத்துவர் மற்றொரு காலையும் நீக்கினார்..பின்னர் நல்ல உள்ளம் கொண்ட அந்த ஜெர்மானிய பெண், தன் சொந்தச் செலவில் இவருக்கு செயற்கை மரக்கால்களைப் பொருத்திவிட்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படிப்பிலும் சேர்த்துவிட்டார்..படிப்பு முடிந்ததும், கடந்த 2016-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதும் வேலையில் சேர்ந்திருக்கிறார்..விளையாட்டுக்களில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரவே, முயற்சியாலும், பயிற்சியாலும் நீச்சல், வட்டு எறிதல், ஜாவலின் த்ரோ, கூடைப் பந்து, ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களில் கடும் பயிற்சி எடுத்து, போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை வென்றிருக்கிறார்..பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று உலகம் போற்றும் ஒரு பிளேட் ரன்னர் (Blade Runner) ஆக வேண்டும் என்பதே இவரது லட்சியம். இவரது வெற்றிகள் தொடரட்டும் என்று மங்கயர் மலர் வாழ்த்துகிறது..***********************.ஓவியத்தில் விருது பெற்ற பல்கலை வித்தகர் மாணவி!.12 வயதே ஆன மாணவி சூடாமணி, கதை, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், என பன்முகத் திறமையோடு விளங்குகிறார். 'உலக சாதனை விருது' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்..தனது சிறுகதைகளை, 'அம்மாவைத் தேடி' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்..(சூடாமணி என்ற பிரபல எழுத்தாளரின் பெயர் கொண்டிருப்பதாலோ) ஓவியம் வரைவதிலும் வல்லவர். கம்ப ராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் உரையாற்றுகிறார்..தன் யூடியூப் சேனலில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் மொழி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, பலரது பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் சூடாமணி..எட்டு வயதில், ஓவியத்துக்காக பாரத ஸ்டேட் வங்கியியின் விருதைப் பெற்ற பிறகு அதில் மேலும் திறன் வளர்ப்பதற்காக கலைக்கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்..'வஜூரா உலக சாதனை' 'பொதிகை தமிழ்ச் சுடர்', அப்துல்கலாம் உலக சாதனை சான்றிதழ், பாரதி பைந்தமிழ் விருது, இத்தனையும் வாங்கியிருப்பவர் இவர். தூய்மை இந்தியா குறித்த ஓவியத்துக்காக 'ஸ்வச் பாரத் அபியான் பதக்கம்', இளம் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.