சிரிகதை : தனுஜா ஜெயராமன்.ஓவியம்: தமிழ்.அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டான். அதை பார்த்த பஞ்சு மாமாவிற்கு, மனதின் மூலையில் கிடந்த ஸ்மியூல் ஆசை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது..தன் மனைவி இசைவாணியிடம் தனது ஸ்மியூல் ஆசையை வெளியிட்டார். பெயர் தான் இசைவாணியே தவிர மற்றபடி இசைக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. சிந்துபைரவி சுலக்ஷணாவை போல் எஸ். ஜானகியா பருப்புபொடி செய்து தருவா? என்று முகவாய் கட்டையில் முகத்தை இடித்து செல்லும் ரகம். க்கும்… இது வேறயா ஈஸ்வரா என கன்னத்தில் போட்டுக் கொண்டாள் பீதியுடன். ஏனெனில் பஞ்சுவின் இசைஞானத்தை பற்றி அவளறிவாள்..பஞ்சு மாமாவிற்கு இசை என்றால் உயிர். பஞ்சுவின் முழுப் பெயர் பஞ்சு பால சுப்ரமண்ய ஹரிஹரன். இது அவராகவே வைத்துக் கொண்டது தான் . எஸ்பிபி, ஹரிஹரன் போல பாடுவாரா? என்றால் இல்லை. அவர்களைப் போல பாட ஆசைப்பட்டார் அவ்வளவு தான். சிறுவயதில் பாட ஆசைப்பட்ட பஞ்சுவை அவரது அப்பா சுப்பு ஐயரிடம் அனுப்பி வைத்தார்..பஞ்சு சரிகமபதநீஈஈஈ என இழுக்கும் போதே தொண்டையில் சோடா குடிக்கும் போது உருளும் கோலி குண்டு மாமாவின் தொண்டையில் சிக்கிக் கொண்டதோ என்ற ஐயம் சுப்பு ஐயருக்கு தோன்றியது. சரளி வரிசை கற்றுக் கொடுப்பதற்குள் சுப்புவிற்கு சரளமாக பேசமுடியாமல் போய்விட்டது . ஒரு நாள் பஞ்சு பாடும்போது புதியதாக வந்த வாண்டு மைத்ரி பயத்தில் ஓவென அலறி அழுது , பாட்டும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு ஓட, சுப்பு ஐயரின் தொழிலுக்கே பங்கம் வருமென பயந்த சுப்பு, பஞ்சுவிற்கு தட்சணை கொடுத்து கெஞ்சிக் கூத்தாடி கைகழுவினார்..அன்றுதான் பஞ்சுவும் தனது இசை ஆர்வத்தை கைகழுவ வேண்டியதாக போய்விட்டது. இந்த உலகம் ஒரு வருங்கால எஸ்பிபியையோ ஹரிஹரனையோ யேசுதாஸையோ இழந்தது ஆகப்பெரும் சோகம் தான்..அப்போது கைவிடப்பட்ட பஞ்சுவின் இசையார்வம் தற்போது ரிடையர்மெண்டுக்குப் பிறகு சுந்தர ராமனால் சுருதி ஏற்றி விடப்பட்டது. மீண்டும் துளிர்விட்டிருக்கிற அவரின் ஆசை உலகிற்கு சத்திய சோதனை. ஒரு சுபயோக சுபதினத்தில் ஸ்மியூல் ஆப்பை ஓபன் செய்து தனது அகவுண்டை தொடங்கினார் பஞ்சு..பஞ்சு பாலசுப்பிரமணிய ஹரிஹரன் என்ற பெயருக்காகவே அவருக்கு பல்வேறு இன்வைட்டுகள் வரத்தொடங்கியது. முதலில் ஸோலோவாக பாடுவதாக முடிவெடுத்தார் பஞ்சு. அகலக் கால் வைத்து அல்லாட விரும்பவில்லை..அதற்காக காலை நான்குமணிக்கே எழுந்து சாதகம் செய்யத் தொடங்கினார். ஆனால் அது அபாட்மெண்டிற்கு வெகு பாதகமாக போனது தான் பெருந்துயரம். முதல்நாள் அலாரம் வைத்து எழுந்து பூபாள ராகம் பாட கீழ்வீட்டில் இழுத்து கொண்டிருந்த கிழவி ஒருவர் பொட்டென கடவுளடி சேர்ந்தார். அன்று முழுவதும் முகாரி பாடவேண்டியதாக போய்விட்டது..மறுநாள் கல்யாணியையும் காம்போதியையும் கலந்து கட்டி பாட எதிர்வீட்டு பெண்ணிற்கு ஆஸ்பத்திரிக்கு போகாமலே ப்ரசவமாகி விட பஞ்சுவின் புகழ் வீதியெங்கும் பரவ ஆரம்பித்தது. இசைவாணியால் வெளியே தலைகாட்ட இயலவில்லை.."ஏண்டீ இசை….நன்னா கொதிக்கவிட்ட சுடுதண்ணியில இஞ்சி மிளகு போட்டு வடிகட்டி குடிச்சா குரல் நன்னாயிருக்கும்னு நம்ம கோடி வீட்டு நரசிம்மன் சொன்னான் டீ…பண்ணி தர்றீயா?" என பரிதாபமாக கேட்டவரை அதைவிட பரிதாபத்தோடு நோக்கினார் இசைவாணி..பஞ்சுவின் இசையார்வம் நாளுக்கு நாள் அதிகரிக்க வெறித்தனமாக ப்ராக்டீஸ் செய்ததில் வீட்டிலிருந்த நாய் கம்பியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாள்கிழமை என சாப்பிடவரும் காக்கைகள் கூட இப்பொதெல்லாம் மாமாவின் வீட்டுப் பக்கம் தலைகாட்டுவதில்லை என அபார்ட்மெண்ட் வாசிகள் வேறு குற்றபத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினர்..பஞ்சுவின் பராக்கிரமங்களை பொறுக்க மாட்டாத இசைவாணி பஞ்சுகளை மூட்டை கணக்கில் வாங்கி காதுகளை அடைத்துக் கொண்டாள்..இதையெல்லாம் சட்டை செய்யாதவரான பஞ்சு தனது கடும் சாதகத்தை நிறைவு செய்து ஸ்மியூலில் சோலோ பாடல்களைப் பாடத் தயாராகிவிட்டார்..ஒரு சங்கடகர சதுர்த்தி நாளில் பிள்ளையாரை வணங்கி ஸ்மியூல் ஆப்பை ஓபன் செய்து பாடலை தேர்வு செய்தார். "நிலாவது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே" என்ற கருத்தாழமிக்க பாடலை பயபக்தியுடன் முணுமுணுத்துக் கொண்டார்..திரையில் வார்த்தைகள் ஒளிர பஞ்சுவின் தொண்டை திறப்பதற்குள் அடுத்த வார்த்தை வந்துவிட்டது. வீடியோவில் அழகாய் தெரிய கண்ணாடியை வேறு எங்கோ கழட்டி வைத்திருந்தது வம்பாய் போய்விட்டது. ஒருவாறு வார்த்தைகளை சமாளிக்க ஸ்ருதி எங்கேயோ ஓடிவிட்டாள். தாளம் குப்பென்று தப்பி ஓடி மறைந்தே போனது. ஸ்ருதியை கண்டால் தாளத்தை காணவில்லை. தாளத்தை கண்டால் ஸ்ருதியை காணவில்லை. இரண்டும் இருந்தால் வார்த்தை மறந்து போனது. தனது கோலிகுண்டை விழுங்கிய தொண்டையில் இளையராஜாவை படு கொடூரமாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் பஞ்சு. இதில் நடுவில் " ஒய்யா ஒய் ஒய்யா ஒய்" என கோரஸ் வேற சம்பந்தமேயில்லாமல் கத்தியது போலத் தோன்றியது. இருந்தாலும் ஒருவாறு சமாளித்துப் பாடி முடித்தார்.."ஏண்டீ…இசை இங்க வாயேன் இதைக் கேட்டுட்டு நல்லாயிருக்கான்னு சொல்லேன்…" என இழுத்தவரிடம்,."அச்சோ…எனக்கு ஒரு வாரமா சளி புடிச்சதால காது கேக்கலை என்றபடி அலறி ஓடினாள்… ".சற்றும் மனம் தளராத விக்ரமனாய் தனது சமூகவலைதள நட்புகளுக்கு வாட்சாப்பினார். முதல் ஆளாக மாட்டிய எதிர்த்த வீடு கந்தசாமி அலறியபடி வாட்சாப்பை அன்இன்ஸ்டால் செய்து விட்டு ஓடினான்..அந்த கோடி வீட்டு கோடீஸ்வரனோ " சாவுகிராக்கி" என தலையை சுற்றி போனை குப்பையில் வீசிட்டு போனவனை, "போங்கடா போங்க" என்று அலட்டாமல் "வாட்சாப்பில் அனுப்பினா தானே அவாய்ட் பண்றீங்க…" என பேஸ்புக்கில் பெருமையுடன் அப்லோடினார்..சரசரவென ஐயாயிரமாய் இருந்த நட்புவட்டம் ஐநூறாக குறைந்தது. அப்படியும் பஞ்சுவின் அடிப்பொடிகள் மற்றும் ஜால்ராகள் ம "ஆஹா அருமை ஆஸம்," என கமெண்ட் போட்டு வைக்க, பஞ்சுவிற்கு தலைகால் பிடிபடவில்லை..அந்த மாலா மகாதேவன் மாமி வேறு "நீங்க சித் ஶ்ரீராம் மாதிரி பாடுறேள்," என சிலாகித்ததில் பஞ்சுவின் நெஞ்சம் இலவம் பஞ்சாய் மிதந்தது.அதிலும் நேயர் விருப்பமாக அந்த "அந்தப்புர அழகி கோமளா" என்ற ஜடி பஞ்சுவின் பாடல்களால் பெரிதும் கவரபட்டு…."சங்கீத ஜாதி முல்லை பாடுங்க! உங்க குரலுக்கு சூப்பரா இருக்கும், " என ஏத்தி விட்டதில் பஞ்சு தனது இசை வெள்ளத்தில் அனைவரையும் நீந்தவைப்பேன் என தனது இறந்து போன மாமியாரின் தலையில் அடித்து சபதம் செய்தார்..பஞ்சு வெறித்தனமாக ராவும் பகலும் சாதகம் செய்ததில் அபார்ட்மெண்டில் பலரும் காலி செய்து ஓடிவிட்டனர். இசைவாணியின் காதுகளோ நைந்து போன பஞ்சாய் போனது தான் மிச்சம்..ஆனால் பஞ்சுவோ எதற்கும் அஞ்சுபவரில்லை. நேற்று திடீரென பஞ்சுவிற்கு " சிவரஞ்சனி " என்ற பெயரில் ஸ்மியூல் அழைப்பு. தற்போது ஜோடிகுரலில் பாட பஞ்சு தயாராகி விட்டதாக நம்பினார். பெயரே பஞ்சுவிற்கு மிகவும் பிடித்துப் போனது, ஆளையும் தான். "அடடா ராகத்தின் பெயர்…சிவரஞ்சனி," என உச்சரித்து உளமகிழ்ந்தவர், அழைப்பை உறுதி செய்தார்..பஞ்சுவும் சிவரஞ்சனியும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலை பாட தயாராகினர். தெறி பட சமந்தாவை போல சில பல ஏஷியன், அக்சார்சம், நிப்பான் வகையறாக்களை முகத்தில் பூசி தனது வயதை மறைத்திருந்தாள் சிவரஞ்சனி. பஞ்சு சிவரஞ்சனிக்கு உற்சாகமாக ஹலோ சொன்னவர் தலையை சாய்த்து கண்ணை மூடி …."சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என பாவத்துடன் பாடத்தொடங்கினார்…. அவர் எஸ்பிபி போல் பாடுவதாக கற்பனையில் திளைக்க குரலோ குமரிமுத்து குரலை போல ஒலித்துக் கொண்டிருந்தது. இப்போது சிவரஞ்சனியின் முறை. பஞ்சு கற்பனை செய்திருந்த அவளின் கந்தர்வ குரல் ஒலிக்கக் காத்திருக்க….."நான் உனை நீங்க மாட்டேன்" என சிவரஞ்சனி உச்சஸ்தாயில் இழுக்க குரல் கதவிடுக்கில் மாட்டிய நசுங்கிய எலியை போல கீச் கீச்…என ஒலித்தது. அதிர்ந்தவர் "வாயில் வசம்பை வைச்சு தேய்க்க"…என மனதுக்குள் புலம்பினார்..பஞ்சு சற்று ஏமாற்றமடைந்தாலும் ஒருவாறாக சமாளித்து கொண்டு பாவனைகளோடு பாடி முடித்தார். ஏதோ ஒரு தைரியத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட….அட..இதோ பார்றா….என எவனோ ஒருவன் சிரித்து கிண்டலாக கலாய்த்து ஷேர் செய்ய….அதையே பலரும் ஷேர் செய்ய…..பஞ்சு மாமாவின் ஸ்மியூல் வீடியோ திடீரென பல மில்லியன் பார்வையாளர் களுடன் வைரலாகி விட்டது. இப்பொதெல்லாம் பல யூடுப் சேனல்கள் பஞ்சுவை பேட்டி எடுக்க காத்து கிடக்கின்றனர். பஞ்சு மற்றும் சிவரஞ்சனியைப் பலர் ட்ரோல் செய்ய பஞ்சு இப்போது சமூக வலை தளங்களில் ஏக பிரபலம்..தற்போது, பஞ்சு மாமா பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டினுள் செல்லப்போகிறார். அதனால் உலக நேயர்களுக்காக "உயிரே உயிரே என்னோடு கலந்துவிடு" என்ற ஹரிஹரனின் பாடலை அதிதீவிரமாக ப்ராக்டீஸ் செய்து வருகிறார். எவ்வளவு உயிர்கள் போகப்போகிறதோ? அந்த ஹரிஹரனுக்கே வெளிச்சம்.
சிரிகதை : தனுஜா ஜெயராமன்.ஓவியம்: தமிழ்.அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டான். அதை பார்த்த பஞ்சு மாமாவிற்கு, மனதின் மூலையில் கிடந்த ஸ்மியூல் ஆசை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது..தன் மனைவி இசைவாணியிடம் தனது ஸ்மியூல் ஆசையை வெளியிட்டார். பெயர் தான் இசைவாணியே தவிர மற்றபடி இசைக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. சிந்துபைரவி சுலக்ஷணாவை போல் எஸ். ஜானகியா பருப்புபொடி செய்து தருவா? என்று முகவாய் கட்டையில் முகத்தை இடித்து செல்லும் ரகம். க்கும்… இது வேறயா ஈஸ்வரா என கன்னத்தில் போட்டுக் கொண்டாள் பீதியுடன். ஏனெனில் பஞ்சுவின் இசைஞானத்தை பற்றி அவளறிவாள்..பஞ்சு மாமாவிற்கு இசை என்றால் உயிர். பஞ்சுவின் முழுப் பெயர் பஞ்சு பால சுப்ரமண்ய ஹரிஹரன். இது அவராகவே வைத்துக் கொண்டது தான் . எஸ்பிபி, ஹரிஹரன் போல பாடுவாரா? என்றால் இல்லை. அவர்களைப் போல பாட ஆசைப்பட்டார் அவ்வளவு தான். சிறுவயதில் பாட ஆசைப்பட்ட பஞ்சுவை அவரது அப்பா சுப்பு ஐயரிடம் அனுப்பி வைத்தார்..பஞ்சு சரிகமபதநீஈஈஈ என இழுக்கும் போதே தொண்டையில் சோடா குடிக்கும் போது உருளும் கோலி குண்டு மாமாவின் தொண்டையில் சிக்கிக் கொண்டதோ என்ற ஐயம் சுப்பு ஐயருக்கு தோன்றியது. சரளி வரிசை கற்றுக் கொடுப்பதற்குள் சுப்புவிற்கு சரளமாக பேசமுடியாமல் போய்விட்டது . ஒரு நாள் பஞ்சு பாடும்போது புதியதாக வந்த வாண்டு மைத்ரி பயத்தில் ஓவென அலறி அழுது , பாட்டும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு ஓட, சுப்பு ஐயரின் தொழிலுக்கே பங்கம் வருமென பயந்த சுப்பு, பஞ்சுவிற்கு தட்சணை கொடுத்து கெஞ்சிக் கூத்தாடி கைகழுவினார்..அன்றுதான் பஞ்சுவும் தனது இசை ஆர்வத்தை கைகழுவ வேண்டியதாக போய்விட்டது. இந்த உலகம் ஒரு வருங்கால எஸ்பிபியையோ ஹரிஹரனையோ யேசுதாஸையோ இழந்தது ஆகப்பெரும் சோகம் தான்..அப்போது கைவிடப்பட்ட பஞ்சுவின் இசையார்வம் தற்போது ரிடையர்மெண்டுக்குப் பிறகு சுந்தர ராமனால் சுருதி ஏற்றி விடப்பட்டது. மீண்டும் துளிர்விட்டிருக்கிற அவரின் ஆசை உலகிற்கு சத்திய சோதனை. ஒரு சுபயோக சுபதினத்தில் ஸ்மியூல் ஆப்பை ஓபன் செய்து தனது அகவுண்டை தொடங்கினார் பஞ்சு..பஞ்சு பாலசுப்பிரமணிய ஹரிஹரன் என்ற பெயருக்காகவே அவருக்கு பல்வேறு இன்வைட்டுகள் வரத்தொடங்கியது. முதலில் ஸோலோவாக பாடுவதாக முடிவெடுத்தார் பஞ்சு. அகலக் கால் வைத்து அல்லாட விரும்பவில்லை..அதற்காக காலை நான்குமணிக்கே எழுந்து சாதகம் செய்யத் தொடங்கினார். ஆனால் அது அபாட்மெண்டிற்கு வெகு பாதகமாக போனது தான் பெருந்துயரம். முதல்நாள் அலாரம் வைத்து எழுந்து பூபாள ராகம் பாட கீழ்வீட்டில் இழுத்து கொண்டிருந்த கிழவி ஒருவர் பொட்டென கடவுளடி சேர்ந்தார். அன்று முழுவதும் முகாரி பாடவேண்டியதாக போய்விட்டது..மறுநாள் கல்யாணியையும் காம்போதியையும் கலந்து கட்டி பாட எதிர்வீட்டு பெண்ணிற்கு ஆஸ்பத்திரிக்கு போகாமலே ப்ரசவமாகி விட பஞ்சுவின் புகழ் வீதியெங்கும் பரவ ஆரம்பித்தது. இசைவாணியால் வெளியே தலைகாட்ட இயலவில்லை.."ஏண்டீ இசை….நன்னா கொதிக்கவிட்ட சுடுதண்ணியில இஞ்சி மிளகு போட்டு வடிகட்டி குடிச்சா குரல் நன்னாயிருக்கும்னு நம்ம கோடி வீட்டு நரசிம்மன் சொன்னான் டீ…பண்ணி தர்றீயா?" என பரிதாபமாக கேட்டவரை அதைவிட பரிதாபத்தோடு நோக்கினார் இசைவாணி..பஞ்சுவின் இசையார்வம் நாளுக்கு நாள் அதிகரிக்க வெறித்தனமாக ப்ராக்டீஸ் செய்ததில் வீட்டிலிருந்த நாய் கம்பியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாள்கிழமை என சாப்பிடவரும் காக்கைகள் கூட இப்பொதெல்லாம் மாமாவின் வீட்டுப் பக்கம் தலைகாட்டுவதில்லை என அபார்ட்மெண்ட் வாசிகள் வேறு குற்றபத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினர்..பஞ்சுவின் பராக்கிரமங்களை பொறுக்க மாட்டாத இசைவாணி பஞ்சுகளை மூட்டை கணக்கில் வாங்கி காதுகளை அடைத்துக் கொண்டாள்..இதையெல்லாம் சட்டை செய்யாதவரான பஞ்சு தனது கடும் சாதகத்தை நிறைவு செய்து ஸ்மியூலில் சோலோ பாடல்களைப் பாடத் தயாராகிவிட்டார்..ஒரு சங்கடகர சதுர்த்தி நாளில் பிள்ளையாரை வணங்கி ஸ்மியூல் ஆப்பை ஓபன் செய்து பாடலை தேர்வு செய்தார். "நிலாவது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே" என்ற கருத்தாழமிக்க பாடலை பயபக்தியுடன் முணுமுணுத்துக் கொண்டார்..திரையில் வார்த்தைகள் ஒளிர பஞ்சுவின் தொண்டை திறப்பதற்குள் அடுத்த வார்த்தை வந்துவிட்டது. வீடியோவில் அழகாய் தெரிய கண்ணாடியை வேறு எங்கோ கழட்டி வைத்திருந்தது வம்பாய் போய்விட்டது. ஒருவாறு வார்த்தைகளை சமாளிக்க ஸ்ருதி எங்கேயோ ஓடிவிட்டாள். தாளம் குப்பென்று தப்பி ஓடி மறைந்தே போனது. ஸ்ருதியை கண்டால் தாளத்தை காணவில்லை. தாளத்தை கண்டால் ஸ்ருதியை காணவில்லை. இரண்டும் இருந்தால் வார்த்தை மறந்து போனது. தனது கோலிகுண்டை விழுங்கிய தொண்டையில் இளையராஜாவை படு கொடூரமாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் பஞ்சு. இதில் நடுவில் " ஒய்யா ஒய் ஒய்யா ஒய்" என கோரஸ் வேற சம்பந்தமேயில்லாமல் கத்தியது போலத் தோன்றியது. இருந்தாலும் ஒருவாறு சமாளித்துப் பாடி முடித்தார்.."ஏண்டீ…இசை இங்க வாயேன் இதைக் கேட்டுட்டு நல்லாயிருக்கான்னு சொல்லேன்…" என இழுத்தவரிடம்,."அச்சோ…எனக்கு ஒரு வாரமா சளி புடிச்சதால காது கேக்கலை என்றபடி அலறி ஓடினாள்… ".சற்றும் மனம் தளராத விக்ரமனாய் தனது சமூகவலைதள நட்புகளுக்கு வாட்சாப்பினார். முதல் ஆளாக மாட்டிய எதிர்த்த வீடு கந்தசாமி அலறியபடி வாட்சாப்பை அன்இன்ஸ்டால் செய்து விட்டு ஓடினான்..அந்த கோடி வீட்டு கோடீஸ்வரனோ " சாவுகிராக்கி" என தலையை சுற்றி போனை குப்பையில் வீசிட்டு போனவனை, "போங்கடா போங்க" என்று அலட்டாமல் "வாட்சாப்பில் அனுப்பினா தானே அவாய்ட் பண்றீங்க…" என பேஸ்புக்கில் பெருமையுடன் அப்லோடினார்..சரசரவென ஐயாயிரமாய் இருந்த நட்புவட்டம் ஐநூறாக குறைந்தது. அப்படியும் பஞ்சுவின் அடிப்பொடிகள் மற்றும் ஜால்ராகள் ம "ஆஹா அருமை ஆஸம்," என கமெண்ட் போட்டு வைக்க, பஞ்சுவிற்கு தலைகால் பிடிபடவில்லை..அந்த மாலா மகாதேவன் மாமி வேறு "நீங்க சித் ஶ்ரீராம் மாதிரி பாடுறேள்," என சிலாகித்ததில் பஞ்சுவின் நெஞ்சம் இலவம் பஞ்சாய் மிதந்தது.அதிலும் நேயர் விருப்பமாக அந்த "அந்தப்புர அழகி கோமளா" என்ற ஜடி பஞ்சுவின் பாடல்களால் பெரிதும் கவரபட்டு…."சங்கீத ஜாதி முல்லை பாடுங்க! உங்க குரலுக்கு சூப்பரா இருக்கும், " என ஏத்தி விட்டதில் பஞ்சு தனது இசை வெள்ளத்தில் அனைவரையும் நீந்தவைப்பேன் என தனது இறந்து போன மாமியாரின் தலையில் அடித்து சபதம் செய்தார்..பஞ்சு வெறித்தனமாக ராவும் பகலும் சாதகம் செய்ததில் அபார்ட்மெண்டில் பலரும் காலி செய்து ஓடிவிட்டனர். இசைவாணியின் காதுகளோ நைந்து போன பஞ்சாய் போனது தான் மிச்சம்..ஆனால் பஞ்சுவோ எதற்கும் அஞ்சுபவரில்லை. நேற்று திடீரென பஞ்சுவிற்கு " சிவரஞ்சனி " என்ற பெயரில் ஸ்மியூல் அழைப்பு. தற்போது ஜோடிகுரலில் பாட பஞ்சு தயாராகி விட்டதாக நம்பினார். பெயரே பஞ்சுவிற்கு மிகவும் பிடித்துப் போனது, ஆளையும் தான். "அடடா ராகத்தின் பெயர்…சிவரஞ்சனி," என உச்சரித்து உளமகிழ்ந்தவர், அழைப்பை உறுதி செய்தார்..பஞ்சுவும் சிவரஞ்சனியும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலை பாட தயாராகினர். தெறி பட சமந்தாவை போல சில பல ஏஷியன், அக்சார்சம், நிப்பான் வகையறாக்களை முகத்தில் பூசி தனது வயதை மறைத்திருந்தாள் சிவரஞ்சனி. பஞ்சு சிவரஞ்சனிக்கு உற்சாகமாக ஹலோ சொன்னவர் தலையை சாய்த்து கண்ணை மூடி …."சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என பாவத்துடன் பாடத்தொடங்கினார்…. அவர் எஸ்பிபி போல் பாடுவதாக கற்பனையில் திளைக்க குரலோ குமரிமுத்து குரலை போல ஒலித்துக் கொண்டிருந்தது. இப்போது சிவரஞ்சனியின் முறை. பஞ்சு கற்பனை செய்திருந்த அவளின் கந்தர்வ குரல் ஒலிக்கக் காத்திருக்க….."நான் உனை நீங்க மாட்டேன்" என சிவரஞ்சனி உச்சஸ்தாயில் இழுக்க குரல் கதவிடுக்கில் மாட்டிய நசுங்கிய எலியை போல கீச் கீச்…என ஒலித்தது. அதிர்ந்தவர் "வாயில் வசம்பை வைச்சு தேய்க்க"…என மனதுக்குள் புலம்பினார்..பஞ்சு சற்று ஏமாற்றமடைந்தாலும் ஒருவாறாக சமாளித்து கொண்டு பாவனைகளோடு பாடி முடித்தார். ஏதோ ஒரு தைரியத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட….அட..இதோ பார்றா….என எவனோ ஒருவன் சிரித்து கிண்டலாக கலாய்த்து ஷேர் செய்ய….அதையே பலரும் ஷேர் செய்ய…..பஞ்சு மாமாவின் ஸ்மியூல் வீடியோ திடீரென பல மில்லியன் பார்வையாளர் களுடன் வைரலாகி விட்டது. இப்பொதெல்லாம் பல யூடுப் சேனல்கள் பஞ்சுவை பேட்டி எடுக்க காத்து கிடக்கின்றனர். பஞ்சு மற்றும் சிவரஞ்சனியைப் பலர் ட்ரோல் செய்ய பஞ்சு இப்போது சமூக வலை தளங்களில் ஏக பிரபலம்..தற்போது, பஞ்சு மாமா பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டினுள் செல்லப்போகிறார். அதனால் உலக நேயர்களுக்காக "உயிரே உயிரே என்னோடு கலந்துவிடு" என்ற ஹரிஹரனின் பாடலை அதிதீவிரமாக ப்ராக்டீஸ் செய்து வருகிறார். எவ்வளவு உயிர்கள் போகப்போகிறதோ? அந்த ஹரிஹரனுக்கே வெளிச்சம்.