படங்கள் : பிள்ளை."அம்மா பேய், தான் குடியிருந்த பாழடைந்த வீட்டை, மகள் பேய்க்கு எழுதிக் கொடுத்து விட்டதாம்!""அப்ப அது, 'பேய் வீட்டுச் சீதனம்'னு சொல்லு!"– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்…………………………………………………………………..."உங்க கண் நல்லாத்தான் இருக்கு! எந்தவித குறைபாடும் இல்லையே!""டாக்டர்! டி.வி.யில மெகா சீரியல் பார்க்கும்போது ஒரு சொட்டு கண்ணீர்கூட வர மாட்டேங்குதே!"– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி…………………………………………………………………..."தலைவர் வலியப்போய் சி.பி.ஐ. வலையில் சிக்கிவிட்டாரா?""ஆமா! பெருமைக்காக, 'ஊழல் செய்வது எப்படி?'ன்னு புத்தகம்போட்டு மாட்டிக் கொண்டார்!"– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி…………………………………………………………………..."பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டது தப்பாப் போச்சு!""ஏன்?""பக்கத்துக்குப் பக்கம் பில் போடுவேன்னு சொல்றாங்க!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."டிராபிக் போலீஸை கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு!""ஏண்டி?""எதைக் கொடுத்தாலும் மறைத்து கொடுக்கச் சொல்லுறார்…"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."மசாலா டீ கேட்டது தப்பாப் போச்சு!""ஏன்?""மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டுக் கொடுத்துட்டாங்க!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."சென்னை பக்கம் திருட போனது ரொம்ப தப்பாப் போச்சு!""ஏன்?""வெள்ளத்துக்குள்ளே ஓடி வர முடியல!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."டாக்டர் ரொம்ப தெளிவுதான்…""எப்படி?""பாக்கெட்டையும் சேர்த்து ஸ்கேன் பண்ண சொல்லுறாரு…பணம் எவ்வளவு இருக்குன்னு!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."தடுப்பூசி எப்போது கடுப்பூசியாக மாறுகிறது?""ஒரு நர்ஸ், அவளுக்குப் பிடிக்காத மாமியாருக்கு போடும்போது!"– கிரிஜா மணாளன், திருச்சி…………………………………………………………………..."கடவுளே எனக்கு ரொம்பப் பணக்கஷ்டம்…""பிறகு ஏன் ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் எடுத்து வந்தாய்?"– எஸ்.மோகன், கோவில்பட்டி
படங்கள் : பிள்ளை."அம்மா பேய், தான் குடியிருந்த பாழடைந்த வீட்டை, மகள் பேய்க்கு எழுதிக் கொடுத்து விட்டதாம்!""அப்ப அது, 'பேய் வீட்டுச் சீதனம்'னு சொல்லு!"– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்…………………………………………………………………..."உங்க கண் நல்லாத்தான் இருக்கு! எந்தவித குறைபாடும் இல்லையே!""டாக்டர்! டி.வி.யில மெகா சீரியல் பார்க்கும்போது ஒரு சொட்டு கண்ணீர்கூட வர மாட்டேங்குதே!"– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி…………………………………………………………………..."தலைவர் வலியப்போய் சி.பி.ஐ. வலையில் சிக்கிவிட்டாரா?""ஆமா! பெருமைக்காக, 'ஊழல் செய்வது எப்படி?'ன்னு புத்தகம்போட்டு மாட்டிக் கொண்டார்!"– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி…………………………………………………………………..."பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டது தப்பாப் போச்சு!""ஏன்?""பக்கத்துக்குப் பக்கம் பில் போடுவேன்னு சொல்றாங்க!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."டிராபிக் போலீஸை கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு!""ஏண்டி?""எதைக் கொடுத்தாலும் மறைத்து கொடுக்கச் சொல்லுறார்…"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."மசாலா டீ கேட்டது தப்பாப் போச்சு!""ஏன்?""மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டுக் கொடுத்துட்டாங்க!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."சென்னை பக்கம் திருட போனது ரொம்ப தப்பாப் போச்சு!""ஏன்?""வெள்ளத்துக்குள்ளே ஓடி வர முடியல!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."டாக்டர் ரொம்ப தெளிவுதான்…""எப்படி?""பாக்கெட்டையும் சேர்த்து ஸ்கேன் பண்ண சொல்லுறாரு…பணம் எவ்வளவு இருக்குன்னு!"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்…………………………………………………………………..."தடுப்பூசி எப்போது கடுப்பூசியாக மாறுகிறது?""ஒரு நர்ஸ், அவளுக்குப் பிடிக்காத மாமியாருக்கு போடும்போது!"– கிரிஜா மணாளன், திருச்சி…………………………………………………………………..."கடவுளே எனக்கு ரொம்பப் பணக்கஷ்டம்…""பிறகு ஏன் ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் எடுத்து வந்தாய்?"– எஸ்.மோகன், கோவில்பட்டி