-மஞ்சுளா சுவாமிநாதன்.." நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டீங்க?"." என் புருஷன் சொன்ன கட்சிக்கு."." அது என்ன கட்சின்னு தெரியுமா?"." பேரெல்லாம் தெரியாது, சின்னம் பார்த்து அழுத்திட்டேன்."." சரி, உங்க தொகுதி வேட்பாளர் பெயராவது தெரியுமா?"." இல்லக்கா, அவரு சொன்னாரு போட்டுட்டேன். எங்க ஏரியால ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தாங்க!".இது சென்ற ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எனக்கும் என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கும் நடந்த உரையாடல். இது என்னை சிந்திக்க வைத்தது..சரி, எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதே கேள்வியை கேட்டுப் பார்க்கலாம் என்று சிலரிடம் விசாரித்தேன். விடைகள் பெரும்பாலும் திருப்தி அளிக்கும் விதமாக இல்லை. சிலர் அதைப் பற்றி பேசவே மறுத்தனர். சிலர் அவர்கள் குடும்பம் காலம் காலமாக எந்தக் கட்சிக்கு வாக்கு அளித்தனரோ, அதே கட்சியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினர். எங்க அம்மா உட்பட ஒரு சிலர் இன்னும் மோசம், ஓட்டே போடவில்லை. காரணம், யார் வந்தாலும நம் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் வரப் போவதில்லை என்று அவர்களுக்கு எண்ணம்..'நமக்கு அரசியல் எல்லாம் ஒத்து வராதுப்பா,' 'அரசியல் ஒரு சாக்கடை,' 'அரசியல்வாதி என்றாலே லஞ்சம், ஊழல்தான்' என்று நானும் கூட வெகு காலம் அரசியலை வெறுத்து ஒதுக்கினேன். ஆனால், அரசியலை இப்படி நாம் ஒரேயடியாகத் தவிர்த்துவிட முடியுமா? பல பேர் அரசியல் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதற்கு எதிர்மறையாகவே இருக்கிறது. நாம் அரசியலை வெறுக்கலாம். ஆனால், புறந்தள்ளிவிட முடியாது. குழந்தைக்கு வாங்கும் பாலிலிருந்து, வயதான வர்கள் பயன்படுத்தும் மருந்துவரை அரசியல் எல்லாவற்றிலும் கலந்துள்ளது..மக்கள் நலத்திட்டங்கள் (Welfare Schemes) பற்றி அறிந்துகொள்ளுதல்:.இந்தியா போன்ற ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில், பல கோடி பேர் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்க அரசு பல நல்ல திட்டங்களைச் செயல் படுத்துகிறது. கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, கிராமப்புற மகளிர் திட்டங்கள், சமுதாய முன்னேற்றத் திட்டங்கள் இவற்றைப் பற்றி தெரிந்துகொண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற அடிப்படை அரசியல் புரிதல் அவசியமாகிறது..நமது மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன்….1) Pradhan Mantri Awas Yojana : இந்தத் திட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. (PMAY – U) நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டம். PMAY-G, PMAY-R – கிராமப்புற ஏழைகளுக்கு வீடுகளில் கழிப்பறை இருப்பதை உறுதி செய்யும் திட்டம்..2) நேரடி பலன் பரிமாற்றமம் (Direct Benefit Transfer) : இந்தத் திட்டம் மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக மானியங்களை கொண்டு சேர்க்கும் திட்டம். கசிவுகள், தாமதங்கள் போன்றவற்றைக் குறைக்கும்..3) சுகன்யா சம்ரித்தி கணக்கு : இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கு தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதியைச் சேமிக்க ஊக்குவிக்கிறது..4) தூய்மை இந்தியா மிஷன் : இந்திய அரசால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது..5) மேக் இன் இந்தியா : இந்தியாவில் தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், நிறுவனங்களை உருவாக்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் உதவுகிறது. அதுமட்டுமல்லாது, உற்பத்தியில் அர்ப்பணிபுள்ள முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் இந்திய அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் முயற்சிக்கிறது..இதைத் தவிர, மாநிலங்களில் தனி நலத்திட்டங்களும், ஆண்டு பட்ஜட்களும் தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதாரத்தில் குன்றிய பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், சுய உதவிக் குழுக்களும், தொழில் சார்ந்த பயிற்சிகளும் கூட அரசு அளிக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ளவாவது நமக்கு அரசியல் அறிவு தேவைப்படுகிறது..ஜனநாயகத்தைப் பாதுகாக்க….'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை' என்று ஒரு சினிமாப் பாடல் உண்டு. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் வாழ்க்கை மாறாது என்ற எதிர்மறை எண்ணத்தை விடுத்து, இது என் தாய்நாடு, நான் சரியான ஒரு அரசியலுக்கே ஆதரவளிப்பேன் என்ற மனநிலை உருவாக வேண்டும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு (மக்கள் தொகையில்) என்ற பெருமை மட்டும் போதாது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, வேறுபாடுகளை பின்னுக்குத் தள்ளி, நம் நாட்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கும் கட்சிக்கும், தலைவர்களுக்கும் ஓட்டுப் போட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழியாகும்..அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட….அரசியல் புரிதல் என்பது நம்மோடு நின்றுவிடக் கூடாது. நம் அடுத்த தலைமுறைக்கும் அதன் முக்கியத்துவத்தை சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும், அரசியலின் பங்கு இருக்கிறது என்பதை இளைஞர்கள் உணர்ந்தால், அவர்கள் அதனைப் புரிந்துகொள்வதோடு, எப்படிப் பாதுகாத்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது என்பதையும் தெரிந்து கொள்வர்..வரலாறு முக்கியம் அமைச்சரே!.நம் நாட்டில் பிரிவினை வாத சக்திகள், பொய்யான பரப்புரை (false narratives) மூலமாக மக்களைத் திசை திருப்புகிறார்கள். இந்த சக்திகள் மக்களைப் பிரித்து அதன் மூலம் நமது ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் குலைக்க முயற்சிக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்துக் கொள்ள, நமது மாநிலத்தின் அரசியல் வரலாறு, நாட்டின் அரசியல் வரலாறு அறிவது மிகவும் அவசியமாகிறது..சமூக ஊடகங்களிடம் எச்சரிக்கை! .ஒரு முறை நான் முகநூலில் ஒரு அமைப்பைச் சார்ந்த கட்டுரை படித்தேன். அதன் விளைவாக, அதே அரசியல் சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளை எனக்கு முகநூல் காட்டத் துவங்கியது. You tube இலும் இது அதிகம் நடக்கக் கூடும். இதன் விளைவாக எனக்கு மிகவும் பாரபட்சமான கருத்துகள் உருவானது. என் கருத்துகளோடு ஒத்துப்போகாத அமைப்புகள் மேல் வெறுப்பு ஏற்பட்டது. இதனை ஆங்கிலத்தில் Polarization என்று கூறுவர். இதன் விளைவால், நமது பேச்சுரிமையும், கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப் படுகிறது. வன்முறைக்கும் வழிவகுக்கிறது..ஒரு இருபது ஆண்டுகள் முன்னால் இவ்வளவு ஊடகங்கள இல்லை, இவ்வளவு தகவல்களும் இல்லை. ஆனால், இப்போது இருக்கும் நவீன தகவல் யுகத்தில், அரசியல் புரிதல் இல்லையெனில் நாம் சமுதாய, கலாசார சீரழிவோடு நின்றுவிடாமல், மதக் கலவரங்கள் நிறைந்த ஒரு எதிர்காலத்தை நோக்கியே பயணிப்போம்..இதிலிருந்து மீள ஒரே வழி, அன்னப்பறவையைப் போல நாம் அரசியல் புரிதலோடு, மண்டிக்கிடக்கும் தகவல்களில் பகுத்தாராய்ந்து செயல்படுவதே!
-மஞ்சுளா சுவாமிநாதன்.." நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டீங்க?"." என் புருஷன் சொன்ன கட்சிக்கு."." அது என்ன கட்சின்னு தெரியுமா?"." பேரெல்லாம் தெரியாது, சின்னம் பார்த்து அழுத்திட்டேன்."." சரி, உங்க தொகுதி வேட்பாளர் பெயராவது தெரியுமா?"." இல்லக்கா, அவரு சொன்னாரு போட்டுட்டேன். எங்க ஏரியால ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தாங்க!".இது சென்ற ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எனக்கும் என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கும் நடந்த உரையாடல். இது என்னை சிந்திக்க வைத்தது..சரி, எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதே கேள்வியை கேட்டுப் பார்க்கலாம் என்று சிலரிடம் விசாரித்தேன். விடைகள் பெரும்பாலும் திருப்தி அளிக்கும் விதமாக இல்லை. சிலர் அதைப் பற்றி பேசவே மறுத்தனர். சிலர் அவர்கள் குடும்பம் காலம் காலமாக எந்தக் கட்சிக்கு வாக்கு அளித்தனரோ, அதே கட்சியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினர். எங்க அம்மா உட்பட ஒரு சிலர் இன்னும் மோசம், ஓட்டே போடவில்லை. காரணம், யார் வந்தாலும நம் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் வரப் போவதில்லை என்று அவர்களுக்கு எண்ணம்..'நமக்கு அரசியல் எல்லாம் ஒத்து வராதுப்பா,' 'அரசியல் ஒரு சாக்கடை,' 'அரசியல்வாதி என்றாலே லஞ்சம், ஊழல்தான்' என்று நானும் கூட வெகு காலம் அரசியலை வெறுத்து ஒதுக்கினேன். ஆனால், அரசியலை இப்படி நாம் ஒரேயடியாகத் தவிர்த்துவிட முடியுமா? பல பேர் அரசியல் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதற்கு எதிர்மறையாகவே இருக்கிறது. நாம் அரசியலை வெறுக்கலாம். ஆனால், புறந்தள்ளிவிட முடியாது. குழந்தைக்கு வாங்கும் பாலிலிருந்து, வயதான வர்கள் பயன்படுத்தும் மருந்துவரை அரசியல் எல்லாவற்றிலும் கலந்துள்ளது..மக்கள் நலத்திட்டங்கள் (Welfare Schemes) பற்றி அறிந்துகொள்ளுதல்:.இந்தியா போன்ற ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில், பல கோடி பேர் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்க அரசு பல நல்ல திட்டங்களைச் செயல் படுத்துகிறது. கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, கிராமப்புற மகளிர் திட்டங்கள், சமுதாய முன்னேற்றத் திட்டங்கள் இவற்றைப் பற்றி தெரிந்துகொண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற அடிப்படை அரசியல் புரிதல் அவசியமாகிறது..நமது மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன்….1) Pradhan Mantri Awas Yojana : இந்தத் திட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. (PMAY – U) நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டம். PMAY-G, PMAY-R – கிராமப்புற ஏழைகளுக்கு வீடுகளில் கழிப்பறை இருப்பதை உறுதி செய்யும் திட்டம்..2) நேரடி பலன் பரிமாற்றமம் (Direct Benefit Transfer) : இந்தத் திட்டம் மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக மானியங்களை கொண்டு சேர்க்கும் திட்டம். கசிவுகள், தாமதங்கள் போன்றவற்றைக் குறைக்கும்..3) சுகன்யா சம்ரித்தி கணக்கு : இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கு தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதியைச் சேமிக்க ஊக்குவிக்கிறது..4) தூய்மை இந்தியா மிஷன் : இந்திய அரசால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது..5) மேக் இன் இந்தியா : இந்தியாவில் தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், நிறுவனங்களை உருவாக்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் உதவுகிறது. அதுமட்டுமல்லாது, உற்பத்தியில் அர்ப்பணிபுள்ள முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் இந்திய அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் முயற்சிக்கிறது..இதைத் தவிர, மாநிலங்களில் தனி நலத்திட்டங்களும், ஆண்டு பட்ஜட்களும் தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதாரத்தில் குன்றிய பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், சுய உதவிக் குழுக்களும், தொழில் சார்ந்த பயிற்சிகளும் கூட அரசு அளிக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ளவாவது நமக்கு அரசியல் அறிவு தேவைப்படுகிறது..ஜனநாயகத்தைப் பாதுகாக்க….'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை' என்று ஒரு சினிமாப் பாடல் உண்டு. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் வாழ்க்கை மாறாது என்ற எதிர்மறை எண்ணத்தை விடுத்து, இது என் தாய்நாடு, நான் சரியான ஒரு அரசியலுக்கே ஆதரவளிப்பேன் என்ற மனநிலை உருவாக வேண்டும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு (மக்கள் தொகையில்) என்ற பெருமை மட்டும் போதாது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, வேறுபாடுகளை பின்னுக்குத் தள்ளி, நம் நாட்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கும் கட்சிக்கும், தலைவர்களுக்கும் ஓட்டுப் போட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழியாகும்..அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட….அரசியல் புரிதல் என்பது நம்மோடு நின்றுவிடக் கூடாது. நம் அடுத்த தலைமுறைக்கும் அதன் முக்கியத்துவத்தை சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும், அரசியலின் பங்கு இருக்கிறது என்பதை இளைஞர்கள் உணர்ந்தால், அவர்கள் அதனைப் புரிந்துகொள்வதோடு, எப்படிப் பாதுகாத்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது என்பதையும் தெரிந்து கொள்வர்..வரலாறு முக்கியம் அமைச்சரே!.நம் நாட்டில் பிரிவினை வாத சக்திகள், பொய்யான பரப்புரை (false narratives) மூலமாக மக்களைத் திசை திருப்புகிறார்கள். இந்த சக்திகள் மக்களைப் பிரித்து அதன் மூலம் நமது ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் குலைக்க முயற்சிக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்துக் கொள்ள, நமது மாநிலத்தின் அரசியல் வரலாறு, நாட்டின் அரசியல் வரலாறு அறிவது மிகவும் அவசியமாகிறது..சமூக ஊடகங்களிடம் எச்சரிக்கை! .ஒரு முறை நான் முகநூலில் ஒரு அமைப்பைச் சார்ந்த கட்டுரை படித்தேன். அதன் விளைவாக, அதே அரசியல் சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளை எனக்கு முகநூல் காட்டத் துவங்கியது. You tube இலும் இது அதிகம் நடக்கக் கூடும். இதன் விளைவாக எனக்கு மிகவும் பாரபட்சமான கருத்துகள் உருவானது. என் கருத்துகளோடு ஒத்துப்போகாத அமைப்புகள் மேல் வெறுப்பு ஏற்பட்டது. இதனை ஆங்கிலத்தில் Polarization என்று கூறுவர். இதன் விளைவால், நமது பேச்சுரிமையும், கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப் படுகிறது. வன்முறைக்கும் வழிவகுக்கிறது..ஒரு இருபது ஆண்டுகள் முன்னால் இவ்வளவு ஊடகங்கள இல்லை, இவ்வளவு தகவல்களும் இல்லை. ஆனால், இப்போது இருக்கும் நவீன தகவல் யுகத்தில், அரசியல் புரிதல் இல்லையெனில் நாம் சமுதாய, கலாசார சீரழிவோடு நின்றுவிடாமல், மதக் கலவரங்கள் நிறைந்த ஒரு எதிர்காலத்தை நோக்கியே பயணிப்போம்..இதிலிருந்து மீள ஒரே வழி, அன்னப்பறவையைப் போல நாம் அரசியல் புரிதலோடு, மண்டிக்கிடக்கும் தகவல்களில் பகுத்தாராய்ந்து செயல்படுவதே!