– வெங்கடராமன் ராமசுப்ரமணியன்.ஒரு கோடீஸ்வரர் எனப்படுபவர் எத்தகைய வாழ்க்கை வாழ்வார் என நம்முள் பலரும் அனுமானித்திருப்போம். அந்த அனுமானத்தைக் கொண்டு, நாம் கோடீஸ்வரன் ஆனால் எத்தகைய வாழ்க்கை வாழலாம் என்றும் ஒரு கற்பனை செய்து வைத்திருப்போம். இதையெல்லாம் விட, சாதாரணமான வாழ்க்கை வாழும் நாம், கோடீஸ்வர பிம்பம் ஏற்படுத்த, கோடீஸ்வரர் களைப் போல போலியான தோற்றத்தை உருவாக்க முயல்வோம். ஏனென்றால், கோடீஸ்வரர்களின் வாழ்க்கை முறைப் பற்றிய ஒரு மாயை நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாயபிம்பம் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சஞ்சிகைகளால் சிறிது சிறிதாக செதுக்கப்பட்டுள்ளது..கோடீஸ்வரர்கள் பற்றிய நமது பிம்பம்:.பரம்பரை பணக்காரர்கள். அதாவது ஆங்கிலத்தில், Born with a Silver spoon என்று சொல்வோம்.பணத்தை தண்ணீரைப் போல் கொட்டி செலவு செய்பவர்கள்.விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிபவர்கள்.விலையுயர்ந்த சிற்றுந்தில் பயணம் செய்பவர்கள்.உழைக்காமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு வாழ்பவர்கள்.வீட்டில் பல வேலைக்காரர்கள் வேலை செய்ய, சொகுசாக வாழ்பவர்.கோடீஸ்வர வீட்டுப்பிள்ளைகள் பணத்தின் அருமை தெரியாமல், தந்தையை நம்பி வாழ்வார்கள்.பணக்காரர்கள் குடியிருப்புகள் ஒரு சேர, ஒரே பகுதியில் குடியிருப்பார்கள்.ஊர் ஊராக சுற்றி, சுற்றுலாக்களில் நேரத்தை கழிப்பார்கள்.இப்படியாக இன்னும் பல….இந்த பிம்பம் உண்மையானதா?.அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் டங்கோ (William Danko) மற்றும் தாமஸ் ஸ்டான்லி (Thomas Stanley), அமெரிக்காவின் மில்லியனர்களைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியினை 20 வருடங்கள் செய்தனர். மில்லியனர் என்றால் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை சொத்தாக அமையப் பெற்ற பணக்காரர்கள். நம் நாட்டின் வட்டார வழக்கப்படி கோடீஸ்வரர்கள் என குறிப்பிடலாம். இதற்காக 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களிடம் களப்பணி செய்தனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் நம்முடைய பல்வேறு பிம்பங்கள் தவறானவை என நிரூபிக்கின்றன. ஆராய்ச்சியின் முடிவுகளை "The Millionaire Next Door", அதாவது பக்கத்து வீட்டு கோடீஸ்வரர் என்ற புத்தகமாக வெளியிட்டனர். அது லட்சக்கணக்கில் இன்னும் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு புத்தகமாக உள்ளது..அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவின்படி, மாதிரி கோடீஸ்வரரின் அடையாளங்கள் பின் வருமாறு;.அவருக்கு 57 வயது.சுயதொழில் செய்து வருகிறார்.மக்கள் எடுத்துச் செய்ய தயங்கும் சுவாரசியமில்லாத தொழில் என்று கருதப்படும் வேலைகளை செய்து வருகிறார். உதாரணமாக, வெல்டிங் வியாபாரம், சாலை செப்பனிடும் குத்தகைக்காரர்.ஆண்டிற்கு 247 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார். இந்திய மதிப்பின் படி, 1.8 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டிற்கு சம்பாதிக்கிறார்.அவரது சொத்து மதிப்பு 3.7 மில்லியன் டாலர் ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின்படி, 27 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்.சொந்த வீட்டுக்காரராக இருக்கிறார். அவருடைய வீட்டின் மதிப்பு 320 ஆயிரம் டாலராக இருக்கிறது. இந்திய மதிப்பின்படி, 2.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொந்த வீடு வைத்திருக்கிறார்.முதல் தலைமுறை பணக்காரராக இருக்கிறார்.சிக்கனமான வாழ்க்கை நடத்துகிறார். சாதாரண உடை அணிகிறார். உள்நாட்டில் தயாரான விலை குறைந்த சிற்றுந்தினைப் உபயோகிக்கிறார்.அடுத்த 10 வருடங்களுக்கு வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பணத்தை சேமித்து வைத்துள்ளார்.அரசு பள்ளியில் படித்துள்ளார். குழந்தைகளை சிறந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.ஒரு வாரத்திற்கு 45 முதல் 55 மணி வரை உழைக்கிறார்.சம்பாதித்த பணத்தில் 20% முதலீடு செய்து பெருக்குகிறார்.சாதாரண குடியிருப்பு பகுதியில் வசிக்கிறார். அந்த சாதாரண குடியிருப்பு வாசிகளைப் போல், 6.5 மடங்கு சொத்து வைத்துள்ளார்.நன்கு படித்தவராக இருக்கிறார்.ஒரே ஒரு முறை மட்டும் திருமணம் செய்து, அதே வாழ்க்கைத் துணையுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார்.அவரது மனைவி வேலைக்கு செல்லாமலோ அல்லது ஆசிரியராகவோ இருக்கிறார்.அவரை விட, அவரது மனைவி இன்னும் சிக்கன வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறார்.வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரே ஊரில் கழித்து வருகிறார்.சிக்கனமாகவும், சேமித்த பணத்தை முதலீடு செய்பவராகவும் இருக்கிறார்.பெற்றோரிடமிருந்து எந்த ஒரு சொத்தையும் பெறாதவராக இருக்கிறார்..இந்த மாதிரி கோடீஸ்வரரின் அடையாளம், நமது கோடீஸ்வரர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை தகர்க்கிறது..மேலும், தங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில், கோடீஸ்வரர்களின் 7 குணாதியசங்களை பட்டியலிடுகின்றனர். .சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்து வாழ்க்கை நடத்துபவர்கள்: சிக்கனமாக வாழ்க்கை நடத்துபவர்கள். பணத்திற்கு நிதி திட்டமிடல் செய்து, செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். பொருட்களை தரத்தின் அடிப்படையில் வாங்குகிறார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வாங்குவதில்லை.தங்களுடைய நேரம், உழைப்பு, பணத்தை திறமையாக கையாண்டு பணத்தை மேலும் பெருக்குகிறார்கள்: பணத்தை எப்படி முதலீடு செய்வது, எவ்வாறு பணத்தை பெருக்குவது என்பதற்காக நேரத்தை செலவிடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்கிறார்கள். எந்த விலையுயர்ந்த ஆடை வாங்குவது, எந்த விலையுயர்ந்த சிற்றுந்து வாங்குவது போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதில்லை. குறைந்தபட்சம் 20% பணத்தை முதலீடு செய்கிறார்கள்.பணத்திற்காக யாரையும் கையேந்தாமல், தன்னிறைவை அடைவதென்பதே முக்கியம். பகட்டாக வாழ்ந்து பணக்காரராக காட்டிக் கொள்வது முக்கியமல்ல: அதிக விலையில்லாத உள்நாட்டு தயாரிப்பு சிற்றுந்தை வாங்குகிறார்கள். பெரும்பாலும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சிற்றுந்துகளை வாங்குகிறார்கள். அவற்றை பல வருடங்களுக்கு வைத்திருக்கிறார்கள். வீடு வாங்கும்போதும், தங்களது வருடாந்திர வருமானம் போல், இரண்டு மடங்கு விலையுள்ள சாதாரண வீடு மட்டுமே வாங்குகின்றனர். பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டினை வாங்குவதில்லை.அவர்களுடைய பெற்றோர் பணத்தால் அவர்களுக்கு உதவி, அவர்களை பணக்காரர் ஆக்கவில்லை; தங்களது உழைப்பினால் பணக்காரர்கள் ஆனவர்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு சொத்து தரவில்லை. 80% கோடீஸ்வரர்கள் முதல் தலைமுறை பணக்காரர்கள்.அவர்களின் குழந்தைகளும் சொந்தக்காலில் நிற்கிறார்கள். பெற்றோர்களை சார்ந்து வாழவில்லை: குழந்தைகளை வளர்க்கும் போது, தங்களது சொத்தின் மதிப்பு, தாங்கள் பணக்காரர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் வளர்க்கிறார்கள். குழந்தைகள் பணத்தின் மதிப்பை அறிந்து, சிக்கனமாக வாழ்க்கை வாழ கற்றுக் கொடுக்கி றார்கள். சொந்தக் காலில் நிற்பதற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். பணத்தை விட, வாழ்வின் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுக் கொடுக்கிறார்கள்..வாழ்வின் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்: வாழ்வில் கிடைக்கும் பணம் பெருக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பங்குகள், புதிய தொழில், தொழில் தொடங்கும் முயற்சி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்கின்றனர். பணக்காரர்களுக்கு சேவை செய்யும் தொழில் போன்றவற்றில் இறங்கி, பணத்தை மேலும் பெருக்குகிறார்கள். மக்களுக்கு தேவைப்படும் தொழில்கள் என்ன என்று கண்டு, அவற்றில் முதலீடு செய்கிறார்கள்.தங்களுக்கு ஏற்ற சரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்: அமெரிக்காவில் சுயதொழில் செய்பவர்கள் 20% இருந்தாலும், கோடீஸ்வர்களில் அவர்கள் 67% உள்ளனர். சாதாரணமாக, மற்றவர்கள் எடுத்து செய்ய தயங்கும் சுவாரசியமற்ற வேலை என்று கருதப்படும் வேலைகளை எடுத்து செய்து, பணத்தைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக, சாலை செப்பனிடுவது, உலோகங்களை பற்ற வைத்து இணைப்பது போன்ற மிகசாதாரணமாக தொழில்களில் ஈடுபடுகின்றனர்..இதன் மூலம், பணக்காரர்களைப் பற்றிய நமது பிம்பம் எவ்வளவு தூரம், பொய்யானது என்பது தெளிவாகிறது..எனவே, பணக்காரராக தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்போம். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைவிட, நாம் அடுத்தவர்களை கையேந்தாமல் வாழும் சுதந்திர வாழ்க்கையே முக்கியம்..எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை விட, எவ்வளவு பணத்தை சேமிக்கிறோம், முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். நாமும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து, பணத்தை வீண் செலவு செய்யாமல், சிறந்த முறையில் முதலீடு செய்வதன் மூலமே பணக்காரராக முடியும். ஆடம்பர, பகட்டான வாழ்க்கை வாழ்ந்தோமென்றால், கூடிய விரைவில், பணத்திற்காக பிறரை கையேந்த நேரிடும்..நீங்கள் கோடீஸ்வரராக வாழ்த்துகள்.
– வெங்கடராமன் ராமசுப்ரமணியன்.ஒரு கோடீஸ்வரர் எனப்படுபவர் எத்தகைய வாழ்க்கை வாழ்வார் என நம்முள் பலரும் அனுமானித்திருப்போம். அந்த அனுமானத்தைக் கொண்டு, நாம் கோடீஸ்வரன் ஆனால் எத்தகைய வாழ்க்கை வாழலாம் என்றும் ஒரு கற்பனை செய்து வைத்திருப்போம். இதையெல்லாம் விட, சாதாரணமான வாழ்க்கை வாழும் நாம், கோடீஸ்வர பிம்பம் ஏற்படுத்த, கோடீஸ்வரர் களைப் போல போலியான தோற்றத்தை உருவாக்க முயல்வோம். ஏனென்றால், கோடீஸ்வரர்களின் வாழ்க்கை முறைப் பற்றிய ஒரு மாயை நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாயபிம்பம் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சஞ்சிகைகளால் சிறிது சிறிதாக செதுக்கப்பட்டுள்ளது..கோடீஸ்வரர்கள் பற்றிய நமது பிம்பம்:.பரம்பரை பணக்காரர்கள். அதாவது ஆங்கிலத்தில், Born with a Silver spoon என்று சொல்வோம்.பணத்தை தண்ணீரைப் போல் கொட்டி செலவு செய்பவர்கள்.விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிபவர்கள்.விலையுயர்ந்த சிற்றுந்தில் பயணம் செய்பவர்கள்.உழைக்காமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு வாழ்பவர்கள்.வீட்டில் பல வேலைக்காரர்கள் வேலை செய்ய, சொகுசாக வாழ்பவர்.கோடீஸ்வர வீட்டுப்பிள்ளைகள் பணத்தின் அருமை தெரியாமல், தந்தையை நம்பி வாழ்வார்கள்.பணக்காரர்கள் குடியிருப்புகள் ஒரு சேர, ஒரே பகுதியில் குடியிருப்பார்கள்.ஊர் ஊராக சுற்றி, சுற்றுலாக்களில் நேரத்தை கழிப்பார்கள்.இப்படியாக இன்னும் பல….இந்த பிம்பம் உண்மையானதா?.அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் டங்கோ (William Danko) மற்றும் தாமஸ் ஸ்டான்லி (Thomas Stanley), அமெரிக்காவின் மில்லியனர்களைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியினை 20 வருடங்கள் செய்தனர். மில்லியனர் என்றால் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை சொத்தாக அமையப் பெற்ற பணக்காரர்கள். நம் நாட்டின் வட்டார வழக்கப்படி கோடீஸ்வரர்கள் என குறிப்பிடலாம். இதற்காக 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களிடம் களப்பணி செய்தனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் நம்முடைய பல்வேறு பிம்பங்கள் தவறானவை என நிரூபிக்கின்றன. ஆராய்ச்சியின் முடிவுகளை "The Millionaire Next Door", அதாவது பக்கத்து வீட்டு கோடீஸ்வரர் என்ற புத்தகமாக வெளியிட்டனர். அது லட்சக்கணக்கில் இன்னும் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு புத்தகமாக உள்ளது..அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவின்படி, மாதிரி கோடீஸ்வரரின் அடையாளங்கள் பின் வருமாறு;.அவருக்கு 57 வயது.சுயதொழில் செய்து வருகிறார்.மக்கள் எடுத்துச் செய்ய தயங்கும் சுவாரசியமில்லாத தொழில் என்று கருதப்படும் வேலைகளை செய்து வருகிறார். உதாரணமாக, வெல்டிங் வியாபாரம், சாலை செப்பனிடும் குத்தகைக்காரர்.ஆண்டிற்கு 247 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார். இந்திய மதிப்பின் படி, 1.8 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டிற்கு சம்பாதிக்கிறார்.அவரது சொத்து மதிப்பு 3.7 மில்லியன் டாலர் ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின்படி, 27 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்.சொந்த வீட்டுக்காரராக இருக்கிறார். அவருடைய வீட்டின் மதிப்பு 320 ஆயிரம் டாலராக இருக்கிறது. இந்திய மதிப்பின்படி, 2.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொந்த வீடு வைத்திருக்கிறார்.முதல் தலைமுறை பணக்காரராக இருக்கிறார்.சிக்கனமான வாழ்க்கை நடத்துகிறார். சாதாரண உடை அணிகிறார். உள்நாட்டில் தயாரான விலை குறைந்த சிற்றுந்தினைப் உபயோகிக்கிறார்.அடுத்த 10 வருடங்களுக்கு வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பணத்தை சேமித்து வைத்துள்ளார்.அரசு பள்ளியில் படித்துள்ளார். குழந்தைகளை சிறந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.ஒரு வாரத்திற்கு 45 முதல் 55 மணி வரை உழைக்கிறார்.சம்பாதித்த பணத்தில் 20% முதலீடு செய்து பெருக்குகிறார்.சாதாரண குடியிருப்பு பகுதியில் வசிக்கிறார். அந்த சாதாரண குடியிருப்பு வாசிகளைப் போல், 6.5 மடங்கு சொத்து வைத்துள்ளார்.நன்கு படித்தவராக இருக்கிறார்.ஒரே ஒரு முறை மட்டும் திருமணம் செய்து, அதே வாழ்க்கைத் துணையுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார்.அவரது மனைவி வேலைக்கு செல்லாமலோ அல்லது ஆசிரியராகவோ இருக்கிறார்.அவரை விட, அவரது மனைவி இன்னும் சிக்கன வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறார்.வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரே ஊரில் கழித்து வருகிறார்.சிக்கனமாகவும், சேமித்த பணத்தை முதலீடு செய்பவராகவும் இருக்கிறார்.பெற்றோரிடமிருந்து எந்த ஒரு சொத்தையும் பெறாதவராக இருக்கிறார்..இந்த மாதிரி கோடீஸ்வரரின் அடையாளம், நமது கோடீஸ்வரர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை தகர்க்கிறது..மேலும், தங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில், கோடீஸ்வரர்களின் 7 குணாதியசங்களை பட்டியலிடுகின்றனர். .சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்து வாழ்க்கை நடத்துபவர்கள்: சிக்கனமாக வாழ்க்கை நடத்துபவர்கள். பணத்திற்கு நிதி திட்டமிடல் செய்து, செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். பொருட்களை தரத்தின் அடிப்படையில் வாங்குகிறார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வாங்குவதில்லை.தங்களுடைய நேரம், உழைப்பு, பணத்தை திறமையாக கையாண்டு பணத்தை மேலும் பெருக்குகிறார்கள்: பணத்தை எப்படி முதலீடு செய்வது, எவ்வாறு பணத்தை பெருக்குவது என்பதற்காக நேரத்தை செலவிடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்கிறார்கள். எந்த விலையுயர்ந்த ஆடை வாங்குவது, எந்த விலையுயர்ந்த சிற்றுந்து வாங்குவது போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதில்லை. குறைந்தபட்சம் 20% பணத்தை முதலீடு செய்கிறார்கள்.பணத்திற்காக யாரையும் கையேந்தாமல், தன்னிறைவை அடைவதென்பதே முக்கியம். பகட்டாக வாழ்ந்து பணக்காரராக காட்டிக் கொள்வது முக்கியமல்ல: அதிக விலையில்லாத உள்நாட்டு தயாரிப்பு சிற்றுந்தை வாங்குகிறார்கள். பெரும்பாலும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சிற்றுந்துகளை வாங்குகிறார்கள். அவற்றை பல வருடங்களுக்கு வைத்திருக்கிறார்கள். வீடு வாங்கும்போதும், தங்களது வருடாந்திர வருமானம் போல், இரண்டு மடங்கு விலையுள்ள சாதாரண வீடு மட்டுமே வாங்குகின்றனர். பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டினை வாங்குவதில்லை.அவர்களுடைய பெற்றோர் பணத்தால் அவர்களுக்கு உதவி, அவர்களை பணக்காரர் ஆக்கவில்லை; தங்களது உழைப்பினால் பணக்காரர்கள் ஆனவர்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு சொத்து தரவில்லை. 80% கோடீஸ்வரர்கள் முதல் தலைமுறை பணக்காரர்கள்.அவர்களின் குழந்தைகளும் சொந்தக்காலில் நிற்கிறார்கள். பெற்றோர்களை சார்ந்து வாழவில்லை: குழந்தைகளை வளர்க்கும் போது, தங்களது சொத்தின் மதிப்பு, தாங்கள் பணக்காரர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் வளர்க்கிறார்கள். குழந்தைகள் பணத்தின் மதிப்பை அறிந்து, சிக்கனமாக வாழ்க்கை வாழ கற்றுக் கொடுக்கி றார்கள். சொந்தக் காலில் நிற்பதற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். பணத்தை விட, வாழ்வின் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுக் கொடுக்கிறார்கள்..வாழ்வின் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்: வாழ்வில் கிடைக்கும் பணம் பெருக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பங்குகள், புதிய தொழில், தொழில் தொடங்கும் முயற்சி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்கின்றனர். பணக்காரர்களுக்கு சேவை செய்யும் தொழில் போன்றவற்றில் இறங்கி, பணத்தை மேலும் பெருக்குகிறார்கள். மக்களுக்கு தேவைப்படும் தொழில்கள் என்ன என்று கண்டு, அவற்றில் முதலீடு செய்கிறார்கள்.தங்களுக்கு ஏற்ற சரியான தொழிலை தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்: அமெரிக்காவில் சுயதொழில் செய்பவர்கள் 20% இருந்தாலும், கோடீஸ்வர்களில் அவர்கள் 67% உள்ளனர். சாதாரணமாக, மற்றவர்கள் எடுத்து செய்ய தயங்கும் சுவாரசியமற்ற வேலை என்று கருதப்படும் வேலைகளை எடுத்து செய்து, பணத்தைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக, சாலை செப்பனிடுவது, உலோகங்களை பற்ற வைத்து இணைப்பது போன்ற மிகசாதாரணமாக தொழில்களில் ஈடுபடுகின்றனர்..இதன் மூலம், பணக்காரர்களைப் பற்றிய நமது பிம்பம் எவ்வளவு தூரம், பொய்யானது என்பது தெளிவாகிறது..எனவே, பணக்காரராக தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்போம். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைவிட, நாம் அடுத்தவர்களை கையேந்தாமல் வாழும் சுதந்திர வாழ்க்கையே முக்கியம்..எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை விட, எவ்வளவு பணத்தை சேமிக்கிறோம், முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். நாமும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து, பணத்தை வீண் செலவு செய்யாமல், சிறந்த முறையில் முதலீடு செய்வதன் மூலமே பணக்காரராக முடியும். ஆடம்பர, பகட்டான வாழ்க்கை வாழ்ந்தோமென்றால், கூடிய விரைவில், பணத்திற்காக பிறரை கையேந்த நேரிடும்..நீங்கள் கோடீஸ்வரராக வாழ்த்துகள்.