பிச்சைக்கும், பிக்ஷைக்கும் வித்தியாசம்!."பிச்சை" என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும். ஆனால், "பிக்ஷை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும். விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது "பிச்சை"..சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது "பிக்ஷை"..பிச்சை இடுவது என்பது கருணை,.ஆனால் பிக்ஷை நமது கடமையாகும்..பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும், பாவம் ஒன்றும் இல்லை,.ஆனால் பிக்ஷை இடாது போனால், பாவம் பின்தொடரும்..ஏனென்றால், பிக்ஷை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை, கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள்.-சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்..——————————————–.இனிப்பு உருண்டைகள் இரண்டு!.எங்கள் நிலத்தில் நெல் விளைந்து அறுவடை முடிந்த பிறகு சிறு தானியங்களை பயிரிடுவார்கள். அதனால் எப்போதுமே எங்கள் வீட்டில் கம்பு இருக்கும். அம்மா அடிக்கடி செய்யும் கம்பு உருண்டை ரெசிபி இதோ….சுத்தமான நீரில் ஒரு கிலோ நாட்டு கம்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உரலில் இட்டு, சிறிதளவு சுக்கு ஏலக்காய் சேர்த்து இடிப்பார். கொஞ்சம் இடித்த பிறகு 100 கிராம் வேர்க்கடலை, 100 கிராம் பொட்டுக்கடலை ஆகியவற்றையும் சேர்த்து இடிப்பார். ஒரு கிலோ நாட்டு சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அதில் மாவுக் கலவையை மெதுவாக கொட்டிக் கிளறி… சில நிமிடங்கள் ஆற வைத்து மிதமான சூடு பதத்தில் உருண்டைகள் பிடித்து சாப்பிட தருவார்கள். சுவை அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த பலகாரமும் கூட!.அதேபோல பாசிப்பருப்பில் ஒரு இனிப்பு உருண்டை செய்வார்கள்..சிறு பருப்பு அரை கிலோ சிவக்க வறுத்து சற்று கொரகொரப்பாக இடித்துக்கொள்வார்கள். ஒரு தேங்காயை துருவி சிவக்க வறுத்து கொள்வார்கள். 50கிராம் எள்ளையும் வாணலியில் போட்டு படபடவென்று பொரித்து எடுத்துக் கொள்வார்கள். இவற்றை அகலமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு சிட்டிகை ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்வார்கள். ஒரு கிலோ வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி போட்டு பாகு பதம் காய்ச்சிக்கொள்வார்கள். ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவில் வெல்லப்பாகை ஒரு கரண்டியால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசறி சின்ன உருண்டைகளாக பிடித்து தட்டில் வைத்து ஒரு நாள் முழுக்க உருண்டைகளைஅப்படியே உலர செய்வார்கள். மறுநாள் 200 கிராம் பச்சரிசி மாவில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கெட்டியாக கரைத்து கொள்வார்கள் வாணலியில் அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பச்சை அரிசி.மாவு உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெயில் போடுவார்கள் உருண்டைகள் கொத்துக்கொத்தாக அழகாய் சேர்ந்து வரும். வெந்ததும் எடுத்து வடிதட்டில் போட்டு எண்ணெயை வடித்து விட்டு திங்க கொடுப்பார்கள். சுவையில் அசத்தும் இந்த உருண்டை. இவை இரண்டும் என் சிறுவயதில் அம்மா செய்து கொடுக்க நான் சாப்பிட்டது. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.-ஆதிரை வேணுகோபால், சென்னை.——————————————–.சப்பாத்தி சமாச்சாரம்.* கோதுமையைக் கழுவி மூன்று மணி நேரம் கழித்து, உலர்ந்ததும் மாவாக அரைத்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்..* கோதுமை மாவைப் பிசைந்து, ஈரத் துணியால் மூடி வைத்து அரை மணி நேரம் கழித்து சப்பாத்தி செய்தால் மென்மையாக இருக்கும்..* சப்பாத்தியைத் தவாவில் இருந்து எடுத்தவுடன் வடிகூடையில் போட்டு விட்டால், அடியிலுள்ள சப்பாத்திகள் சொத சொதவென்று ஆகாது..* மாவைப் பிசையும் போது மோரில் இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப அரைத்துக் கலந்து விட்டால் சப்பாத்தி சுவையாக இருக்கும். தொட்டுக் கொள்ள வேறு எதுவும் தேவையில்லை..* கோதுமை மாவில் தேங்காய்ப் பால் சேர்த்தால் சுவை கூடும், மிருதுவாகவும் இருக்கும்..* சப்பாத்தி மாவில் சிறிது சுக்குப் பொடியும் கலந்தால் எளிதில் ஜீரணம் ஆகும். சுவையும் மணமும் கூடும்..* சப்பாத்தி மாவு இறுக்கமாக இருந்தால், எலுமிச்சை சாறு கலந்து பிசைந்தால் பதமாகி விடும், சுவையும் கூடும்..* கோதுமை மாவுடன் பார்லி மாவு கலந்தும் சப்பாத்தி செய்யலாம்..* சப்பாத்தி செய்யவும், தோசை வார்க்கவும் தனித்தனி தவா வைத்துக் கொள்வது நல்லது. சப்பாத்தி செய்ததும், தோசை வார்த்தால் ஒட்டிக் கொண்டு எடுக்க வராது.-எஸ், ராஜம், திருச்சி
பிச்சைக்கும், பிக்ஷைக்கும் வித்தியாசம்!."பிச்சை" என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும். ஆனால், "பிக்ஷை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும். விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது "பிச்சை"..சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது "பிக்ஷை"..பிச்சை இடுவது என்பது கருணை,.ஆனால் பிக்ஷை நமது கடமையாகும்..பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும், பாவம் ஒன்றும் இல்லை,.ஆனால் பிக்ஷை இடாது போனால், பாவம் பின்தொடரும்..ஏனென்றால், பிக்ஷை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை, கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள்.-சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்..——————————————–.இனிப்பு உருண்டைகள் இரண்டு!.எங்கள் நிலத்தில் நெல் விளைந்து அறுவடை முடிந்த பிறகு சிறு தானியங்களை பயிரிடுவார்கள். அதனால் எப்போதுமே எங்கள் வீட்டில் கம்பு இருக்கும். அம்மா அடிக்கடி செய்யும் கம்பு உருண்டை ரெசிபி இதோ….சுத்தமான நீரில் ஒரு கிலோ நாட்டு கம்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உரலில் இட்டு, சிறிதளவு சுக்கு ஏலக்காய் சேர்த்து இடிப்பார். கொஞ்சம் இடித்த பிறகு 100 கிராம் வேர்க்கடலை, 100 கிராம் பொட்டுக்கடலை ஆகியவற்றையும் சேர்த்து இடிப்பார். ஒரு கிலோ நாட்டு சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அதில் மாவுக் கலவையை மெதுவாக கொட்டிக் கிளறி… சில நிமிடங்கள் ஆற வைத்து மிதமான சூடு பதத்தில் உருண்டைகள் பிடித்து சாப்பிட தருவார்கள். சுவை அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த பலகாரமும் கூட!.அதேபோல பாசிப்பருப்பில் ஒரு இனிப்பு உருண்டை செய்வார்கள்..சிறு பருப்பு அரை கிலோ சிவக்க வறுத்து சற்று கொரகொரப்பாக இடித்துக்கொள்வார்கள். ஒரு தேங்காயை துருவி சிவக்க வறுத்து கொள்வார்கள். 50கிராம் எள்ளையும் வாணலியில் போட்டு படபடவென்று பொரித்து எடுத்துக் கொள்வார்கள். இவற்றை அகலமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு சிட்டிகை ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்வார்கள். ஒரு கிலோ வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி போட்டு பாகு பதம் காய்ச்சிக்கொள்வார்கள். ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவில் வெல்லப்பாகை ஒரு கரண்டியால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசறி சின்ன உருண்டைகளாக பிடித்து தட்டில் வைத்து ஒரு நாள் முழுக்க உருண்டைகளைஅப்படியே உலர செய்வார்கள். மறுநாள் 200 கிராம் பச்சரிசி மாவில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கெட்டியாக கரைத்து கொள்வார்கள் வாணலியில் அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பச்சை அரிசி.மாவு உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெயில் போடுவார்கள் உருண்டைகள் கொத்துக்கொத்தாக அழகாய் சேர்ந்து வரும். வெந்ததும் எடுத்து வடிதட்டில் போட்டு எண்ணெயை வடித்து விட்டு திங்க கொடுப்பார்கள். சுவையில் அசத்தும் இந்த உருண்டை. இவை இரண்டும் என் சிறுவயதில் அம்மா செய்து கொடுக்க நான் சாப்பிட்டது. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.-ஆதிரை வேணுகோபால், சென்னை.——————————————–.சப்பாத்தி சமாச்சாரம்.* கோதுமையைக் கழுவி மூன்று மணி நேரம் கழித்து, உலர்ந்ததும் மாவாக அரைத்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்..* கோதுமை மாவைப் பிசைந்து, ஈரத் துணியால் மூடி வைத்து அரை மணி நேரம் கழித்து சப்பாத்தி செய்தால் மென்மையாக இருக்கும்..* சப்பாத்தியைத் தவாவில் இருந்து எடுத்தவுடன் வடிகூடையில் போட்டு விட்டால், அடியிலுள்ள சப்பாத்திகள் சொத சொதவென்று ஆகாது..* மாவைப் பிசையும் போது மோரில் இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப அரைத்துக் கலந்து விட்டால் சப்பாத்தி சுவையாக இருக்கும். தொட்டுக் கொள்ள வேறு எதுவும் தேவையில்லை..* கோதுமை மாவில் தேங்காய்ப் பால் சேர்த்தால் சுவை கூடும், மிருதுவாகவும் இருக்கும்..* சப்பாத்தி மாவில் சிறிது சுக்குப் பொடியும் கலந்தால் எளிதில் ஜீரணம் ஆகும். சுவையும் மணமும் கூடும்..* சப்பாத்தி மாவு இறுக்கமாக இருந்தால், எலுமிச்சை சாறு கலந்து பிசைந்தால் பதமாகி விடும், சுவையும் கூடும்..* கோதுமை மாவுடன் பார்லி மாவு கலந்தும் சப்பாத்தி செய்யலாம்..* சப்பாத்தி செய்யவும், தோசை வார்க்கவும் தனித்தனி தவா வைத்துக் கொள்வது நல்லது. சப்பாத்தி செய்ததும், தோசை வார்த்தால் ஒட்டிக் கொண்டு எடுக்க வராது.-எஸ், ராஜம், திருச்சி