அனு மேடம், அதியமானுக்குக் கிடைத்தது போல தங்களிடம் ஒரு நெல்லிக்கனி இருந்தால் யாரிடம் தருவீர்கள்?– என்.கோமதி, நெல்லைநேரா ஸ்ரீரங்கத்துக்கு பஸ் பிடிச்சுக்கிட்டுப் போய், உ.வே.ஸ்ரீ.வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்கிட்ட பணிவுடன் சமர்ப்பித்து விடுவேன்.பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீ வைஷ்ணவ சிறப்பையும் நிலைநாட்டி வரும் அவரது ஆன்மிகச் சொற்பொழிவுகளை வியந்தும் லயித்தும் கேட்கும் லட்சக்கணக்கானவர்களில் நான் கடைசி வரிசை ரசிகை!வெறும் உபதேசியாக மட்டும் இல்லாமல், பகவானுக்கும் பக்தர்களுக்கும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துவரும் அவரது அறக்கட்டளையின் பெயர், 'கிஞ்சித்காரம்' ('கிஞ்சித்' என்றால், சிறிது, 'காரம்' என்றால், செய்தல்; நம்மால் இயன்ற கைங்கரியங்களைச் செய்தல்)அத்தகைய உயர்ந்த நோக்கம் தொடர்ந்து செயல்பட அவர் நீடுழி வாழணும் இல்லையா?"சுவாமி… உங்களைப் போன்ற அறிவில் சிறந்த ஆச்சாரியர் வாழ்ந்தால் உலகம் மேன்மையுறும். இறைப்பணி உய்யும்!" என்று சொல்லி நான் நெல்லிக்கனியைத் தந்தாலும், அதை ஏதேனும் ஏற்கத்தக்க காரணம் சொல்லி, வாங்க மறுத்து விடுவார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால்,ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு கண்ணன் திருவடிகள் தவிர, வேறு எதுவும் பெரிதில்லை!.பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, கல்லூரிகளை அமைத்து, அதில் பெண்களை மட்டுமே ஆசிரியராக நியமித்தால் பாலியல் தொந்தரவு இருக்காது இல்லையா மேடம்?– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.ரொம்ப சரி; சூப்பர் ஐடியாவாதான் இருக்கு! அப்படியே அவங்க படிச்சு வெளியே வந்ததும், அலுவலகம், பஸ், ரயில், கடைத்தெரு, கோயில், மருத்துவமனை… இப்படி நிறைய இடங்களில் புழங்க வேண்டியிருக்குமே? அங்க எல்லாமே, ஆண் வாசனையே இல்லாம 'ஹிட்' அடிச்சு விரட்டிடலாமா கெஜலட்சுமி?பிரச்னை சேர்ந்து படிப்பதிலோ, சேர்ந்து வேலை செய்வதிலோ இல்லை; கண்ணோட்டம் + மன ஓட்டத்தில்தான் உள்ளது.'கல்வி' என்பது வெறும் டிகிரி வாங்கவோ, சம்பாதிக்கவோ மட்டுமல்ல; வாழ்வின் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்ளத்தான்! இதைப் பெண்களுக்குக் கற்பிக்கணும்.'பெண்' என்பவள் வெறும் போகப்பொருள் அல்ல; அவளை அத்துமீறிச் சீண்டினால் அழிந்து போவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று ஆண்களுக்கு எச்சரிக்கை செய்யணும். இதற்கு முதல்கட்டமாக சமூக அமைப்பும், சட்ட அமைப்பும் உதவிக்கரம் நீட்டணும். ஏன்னா, பெண்ணுக்கு உண்மையான சுதந்திரமும், கௌரவமும் வழங்காத நாடோ, வீடோ உருப்பட்டதாகச் சரித்திரமே கிடையாதேங்க!.நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு?– வாசுதேவன், பெங்களூரு.'மகதீரா' படத்துல ராம்சரண், காஜல் அகர்வால் நடனத்தைப் பார்த்திருப்பீங்க… 'தீர… தீர… தீர… மனசாகலேதுரா' பாடல் காட்சியில் இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட கற்பனைக்கு அற்புதமா துணை போயிருப்பார். பாலுமகேந்திராவின் லோ பட்ஜெட் பாடல் காட்சியா? ஓ.கே! நோ ப்ராப்ளம் (ரோகிணி நடித்த, 'ஆசை அதிகம் வெச்சு') தனுஷை அடுத்தக்கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போன 'மன்மத ராசா… மன்மத ராசா' என்ன ஒரு ஃபாஸ்ட் பீட்! என்ன ஒரு ரிதம்! புதுமுகங்களுக்கும் வெளிச்சம் போட்ட மீடியம் பட்ஜெட் பாடல் காட்சி.இப்படி… அவர் ஒரு ஆல் பட்ஜெட் கொரியோகிராஃபர்! ஆல் டைரக்டர் ஃபேவரிட்! நிச்சயம் வருந்தத்தக்க இழப்பு!.சேலத்தில் ஒட்டகப் பாலில் டீ, காபி விற்பனையாமே?– வாணி வெங்கடேஷ், சென்னை.எப்படியோ வடிவேலு காமெடியை நிஜமாக்கிட்டாங்க! ஆனால், விலைதான் யானை விலை, குதிரை விலை! ஹோட்டலைப் பிரபலமாக்க இப்படியும் ஒரு யுக்தி போலிருக்கு. எங்க ஊர்ப் பக்கமெல்லாம், வீதியில கழுதைகளை ஓட்டி வந்து கழுதைப் பால் விற்பாங்க. 'குழந்தைக்கு நல்லது' என்று தாய்மார்களும் வாங்கிப் புகட்டுவாங்க!.சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலி, ஜீரணக் கோளாறு ஏதேனும் இருந்தால், குழந்தைகள் சிணுங்கிக்கொண்டே இருக்குமாம். அதற்குக் கழுதைப் பால்தான் பெஸ்ட் மெடிசினாம்! கிழவிகள் சொல்லிக் கேள்வி!.சரி, ஒட்டகப் பால் பற்றிய கேள்விக்கு, கழுதைப் பால் பற்றிய பதிலையும் சேர்த்துப் படிச்சதுக்கு, அமலாபால் ரசிகர்கள் சார்பாக தேங்க்ஸ்… நன்றி… நன்னி… தன்யவாத்!
அனு மேடம், அதியமானுக்குக் கிடைத்தது போல தங்களிடம் ஒரு நெல்லிக்கனி இருந்தால் யாரிடம் தருவீர்கள்?– என்.கோமதி, நெல்லைநேரா ஸ்ரீரங்கத்துக்கு பஸ் பிடிச்சுக்கிட்டுப் போய், உ.வே.ஸ்ரீ.வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்கிட்ட பணிவுடன் சமர்ப்பித்து விடுவேன்.பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீ வைஷ்ணவ சிறப்பையும் நிலைநாட்டி வரும் அவரது ஆன்மிகச் சொற்பொழிவுகளை வியந்தும் லயித்தும் கேட்கும் லட்சக்கணக்கானவர்களில் நான் கடைசி வரிசை ரசிகை!வெறும் உபதேசியாக மட்டும் இல்லாமல், பகவானுக்கும் பக்தர்களுக்கும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துவரும் அவரது அறக்கட்டளையின் பெயர், 'கிஞ்சித்காரம்' ('கிஞ்சித்' என்றால், சிறிது, 'காரம்' என்றால், செய்தல்; நம்மால் இயன்ற கைங்கரியங்களைச் செய்தல்)அத்தகைய உயர்ந்த நோக்கம் தொடர்ந்து செயல்பட அவர் நீடுழி வாழணும் இல்லையா?"சுவாமி… உங்களைப் போன்ற அறிவில் சிறந்த ஆச்சாரியர் வாழ்ந்தால் உலகம் மேன்மையுறும். இறைப்பணி உய்யும்!" என்று சொல்லி நான் நெல்லிக்கனியைத் தந்தாலும், அதை ஏதேனும் ஏற்கத்தக்க காரணம் சொல்லி, வாங்க மறுத்து விடுவார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால்,ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு கண்ணன் திருவடிகள் தவிர, வேறு எதுவும் பெரிதில்லை!.பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, கல்லூரிகளை அமைத்து, அதில் பெண்களை மட்டுமே ஆசிரியராக நியமித்தால் பாலியல் தொந்தரவு இருக்காது இல்லையா மேடம்?– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.ரொம்ப சரி; சூப்பர் ஐடியாவாதான் இருக்கு! அப்படியே அவங்க படிச்சு வெளியே வந்ததும், அலுவலகம், பஸ், ரயில், கடைத்தெரு, கோயில், மருத்துவமனை… இப்படி நிறைய இடங்களில் புழங்க வேண்டியிருக்குமே? அங்க எல்லாமே, ஆண் வாசனையே இல்லாம 'ஹிட்' அடிச்சு விரட்டிடலாமா கெஜலட்சுமி?பிரச்னை சேர்ந்து படிப்பதிலோ, சேர்ந்து வேலை செய்வதிலோ இல்லை; கண்ணோட்டம் + மன ஓட்டத்தில்தான் உள்ளது.'கல்வி' என்பது வெறும் டிகிரி வாங்கவோ, சம்பாதிக்கவோ மட்டுமல்ல; வாழ்வின் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்ளத்தான்! இதைப் பெண்களுக்குக் கற்பிக்கணும்.'பெண்' என்பவள் வெறும் போகப்பொருள் அல்ல; அவளை அத்துமீறிச் சீண்டினால் அழிந்து போவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று ஆண்களுக்கு எச்சரிக்கை செய்யணும். இதற்கு முதல்கட்டமாக சமூக அமைப்பும், சட்ட அமைப்பும் உதவிக்கரம் நீட்டணும். ஏன்னா, பெண்ணுக்கு உண்மையான சுதந்திரமும், கௌரவமும் வழங்காத நாடோ, வீடோ உருப்பட்டதாகச் சரித்திரமே கிடையாதேங்க!.நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு?– வாசுதேவன், பெங்களூரு.'மகதீரா' படத்துல ராம்சரண், காஜல் அகர்வால் நடனத்தைப் பார்த்திருப்பீங்க… 'தீர… தீர… தீர… மனசாகலேதுரா' பாடல் காட்சியில் இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட கற்பனைக்கு அற்புதமா துணை போயிருப்பார். பாலுமகேந்திராவின் லோ பட்ஜெட் பாடல் காட்சியா? ஓ.கே! நோ ப்ராப்ளம் (ரோகிணி நடித்த, 'ஆசை அதிகம் வெச்சு') தனுஷை அடுத்தக்கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போன 'மன்மத ராசா… மன்மத ராசா' என்ன ஒரு ஃபாஸ்ட் பீட்! என்ன ஒரு ரிதம்! புதுமுகங்களுக்கும் வெளிச்சம் போட்ட மீடியம் பட்ஜெட் பாடல் காட்சி.இப்படி… அவர் ஒரு ஆல் பட்ஜெட் கொரியோகிராஃபர்! ஆல் டைரக்டர் ஃபேவரிட்! நிச்சயம் வருந்தத்தக்க இழப்பு!.சேலத்தில் ஒட்டகப் பாலில் டீ, காபி விற்பனையாமே?– வாணி வெங்கடேஷ், சென்னை.எப்படியோ வடிவேலு காமெடியை நிஜமாக்கிட்டாங்க! ஆனால், விலைதான் யானை விலை, குதிரை விலை! ஹோட்டலைப் பிரபலமாக்க இப்படியும் ஒரு யுக்தி போலிருக்கு. எங்க ஊர்ப் பக்கமெல்லாம், வீதியில கழுதைகளை ஓட்டி வந்து கழுதைப் பால் விற்பாங்க. 'குழந்தைக்கு நல்லது' என்று தாய்மார்களும் வாங்கிப் புகட்டுவாங்க!.சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலி, ஜீரணக் கோளாறு ஏதேனும் இருந்தால், குழந்தைகள் சிணுங்கிக்கொண்டே இருக்குமாம். அதற்குக் கழுதைப் பால்தான் பெஸ்ட் மெடிசினாம்! கிழவிகள் சொல்லிக் கேள்வி!.சரி, ஒட்டகப் பால் பற்றிய கேள்விக்கு, கழுதைப் பால் பற்றிய பதிலையும் சேர்த்துப் படிச்சதுக்கு, அமலாபால் ரசிகர்கள் சார்பாக தேங்க்ஸ்… நன்றி… நன்னி… தன்யவாத்!