வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.தேவையானவை : உருளைக்கிழங்கு – கால் கிலோ, பால்கோவா – 50 கிராம், மைதா மாவு – 100 கிராம், சர்க்கரை – 500 கிராம், நெய் – சிறிது, ஏலப்பொடி – அரை டீஸ்பூன், பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை, பூரா சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள்..செய்முறை : உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவு, பூரா சர்க்கரை, நெய், உருளைக்கிழங்கு, பால்கோவா எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை விரல் பருமனில் நீளமான ஜாமூன்களாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை தம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விடவும். நுரைத்து வரும் அழுக்கை நீக்கிவிட்டு, சிறு கம்பி பதம் வந்ததும் இறக்கி ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், எசன்ஸ் விட்டு இறக்கவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, நிதானமான தீயில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு ஜாமூன்களை ஜீராவில் போடவும். மிருதுவான உருளைக்கிழங்கு ஜாமூனை விசேஷ நாட்களில் ஸ்வீட்டாகச் செய்து அசத்துங்கள்..வள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி தேன்குழல்.தேவையானவை : ஜவ்வரிசி, அரிசி மாவு – தலா 50 கிராம், சின்ன சைஸ் வள்ளிக்கிழங்கு – 2, நெய் – 2 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை, எலுமிச்சை சாறு – தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு..செய்முறை : வள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, தேங்காய்த் துருவியில் துருவிக் கொள்ளவும். ஜவ்வரிசியை தனியாக வேகவைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் வேர்க்கடலையைப் போட்டுப் பொன்னிறமாய் வறுத்து, தோலை அகற்றி மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். வேக வைத்த ஜவ்வரிசி, வள்ளிக்கிழங்கு துறுவல், அரிசி மாவு, வேர்க்கடலைப் பொடி, உப்பு, நெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மாவை தேன்குழல் நாழியில் நிரப்பி, காயும் எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாய் வேக வைத்து எடுக்கவும்.– அபர்ணா சுப்ரமணியம், மைலாப்பூர்.அவல் வடை.தேவையானவை : அவல் – 1 கப், ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், தயிர் – 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது), கொங்குநாடு கோழிக் குழம்பு சீரகம் – 1 டீஸ்பூன், இஞ்சி – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.செய்முறை : முதலில் அவலை நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும். பின் அதில் அரிசி மாவு, தயிர், வெங்காயம், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். ஒருவேளை கலவை மிகவும் ட்ரையாக இருந்தால், அதில் சிறிது நீர் தெளித்து உருண்டைகளாக வரும் பதத்தில் பிரட்டிக்கொள்ள வேண்டும்.பின்பு, அதை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வடை போன்று தட்டையாகத் தட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், சுவையான அவல் வடை தயார்.குறிப்பு : வடைகளை எண்ணெயில் பொரிக்கும்போது, மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கருகிவிடும். வடைக்கான மாவை தயாரிக்கும்போது அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் வடை செய்ய முடியாது. அதேபோல், உருண்டை பிடித்துத் தட்டும்போது மிகவும் இறுக்கமாகப் பிடிக்காமல், லேசாகப் பிடியுங்கள். இல்லாவிட்டால் பொரிக்கும் போது உதிர்ந்துவிடும். தடிமனான அவல் பயன்படுத்துவதாக இருந்தால், அதை நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் பயன்படுத்துங்கள்.– கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.மின்னெலை ரசம்.தேவையானவை : மின்னெலை இலைகள் – 20, புளிக்கரைசல் – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், தக்காளி – 1 (நறுக்கியது), சீரகப் பொடி – அரை டீஸ்பூன், மிளகுப் பொடி – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது), கறிவேப்பிலை – 1 கொத்து, வெங்காயம் – பாதி, பூண்டுப்பல் – 6, மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன், சோம்புப் பொடி – அரை டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1..செய்முறை : முதலில் வெங்காயம், பூண்டை தோலுரித்து ஒன்றாகச் சேர்த்து நசுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். வெந்த பின்பு புளிக்கரைசலில் பருப்பு நீரை சேர்க்கவும். அதனுடன் மிளகாய்ப் பொடியைத் தவிர்த்து, அனைத்து மசாலாப் பொடிகளையும் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய வெங்காயம், பூண்டில் பாதியைச் சேர்க்கவும். நன்கு கழுவிய மின்னெலையை புளிக்கரைசலில் சேர்த்து கைகளால் நன்கு நொறுங்கப் பிசையவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் அனைத்தும் சேர்த்து முக்கால் லிட்டர் இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து, ஒரு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். .மேலும், அதனுடன் மீதம் வைத்துள்ள வெங்காயம், பூண்டு (நசுக்கியது), கறிவேப்பிலை சேர்த்து வதங்கிய பின்னர் மிளகாய்ப் பொடியைச் சேர்க்கவும். அதைச் சிறிது நேரம் கிளறி விடவும். கிளறிய பின் அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றவும். கலவையை மிதமான தீயில் வைக்கவும். ரசம் நன்றாக நுரை விட்டுக் கொதித்து வரும்போது இறக்கி வைக்கவும். இதுவே மின்னெலை ரசம். இது மிகவும் சுவையாக இருக்கும். இதை டீக்கு பதில் மாலை நேரத்தில் பருகலாம்.குறிப்பு : மின்னெலை கடைகளில் கிடைக்கும்.(மார்கழி, பொங்கல்)புளுங்கறி.தேவை: பூசணிக்காய் – கால் கிலோ, பரங்கிக்காய் – கால்கிநோ, வாழைக்காய் – 3, சேனைக்கிழங்கு – கால் கிலோ, புளி – 3 எலுமிச்சை அளவு, தேங்காய் – 2(சிறியது), தனியா – 1 ஸ்பூன், கடலைப் பருப்பு – 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பச்சை மிளகாய் – 2, வெல்லம் சிறிதளவு, பச்சரிசி – 1 சிறிய கப், வெந்தயம் – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது..செய்முறை: காய்கிகளை தோல் சீவி பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடித்துக் கொள்ளவும். பின் பாத்திரத்தல் உள்ள புளிக்கரைசலில் மஞ்சள் பொடி, வெல்லம், தேவையான உளவு உப்புச் சேர்த்து நறுக்கிய காய்கறித் துண்ஐகளைப் போட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். ஒரு தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தனியா, கடலைப்பருப்பு, 4 வற்றல் மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்துத் தேங்காத் துருவலோடு சேர்த்து வெண்ணையாக அரைத்துக் கொள்ளவும். மீதி இருக்கும் மற்றொரு தேங்காயைத் துரவிப் பச்சை மிளகாயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சரிசியை அடுப்பில் வாணலி வைத்து வெறும் வாணலியின் வறுக்கவும். அரிசி சிவந்து வாசனை வரும்போது மீதமுள்ளவற்றால் மிளகாய் 2, வெந்தயம் சேர்த்து அவற்றையும் வறுத்துப் பொடி செய்துக் கொள்ளவும். வேக வைத்த காய்கறியில், முதலில் அரைத்து வைத்து இருக்கும் விழுதைச் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இரண்டாவதாக அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். மறுபடியும் கொதி வந்தவுடன் பொடித்து வைத்திருக்கும் பொடியை சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டு அதையும் சேர்க்கவும். நன்றாக கொதி வந்தவுடன் எண்ணெய் விட்டு (வாணலியில்) கடுகு, கறிவேப்பிலையால் தாளித்து இறக்கி விடவும். இதுவே புளுங்கறி ஆகும். இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம். சுவைமிக்க இந்த புளுங்கறியை அனைவரும் விரும்பி உண்பர்.– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.தேவையானவை : உருளைக்கிழங்கு – கால் கிலோ, பால்கோவா – 50 கிராம், மைதா மாவு – 100 கிராம், சர்க்கரை – 500 கிராம், நெய் – சிறிது, ஏலப்பொடி – அரை டீஸ்பூன், பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை, பூரா சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள்..செய்முறை : உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவு, பூரா சர்க்கரை, நெய், உருளைக்கிழங்கு, பால்கோவா எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை விரல் பருமனில் நீளமான ஜாமூன்களாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை தம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விடவும். நுரைத்து வரும் அழுக்கை நீக்கிவிட்டு, சிறு கம்பி பதம் வந்ததும் இறக்கி ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், எசன்ஸ் விட்டு இறக்கவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, நிதானமான தீயில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு ஜாமூன்களை ஜீராவில் போடவும். மிருதுவான உருளைக்கிழங்கு ஜாமூனை விசேஷ நாட்களில் ஸ்வீட்டாகச் செய்து அசத்துங்கள்..வள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி தேன்குழல்.தேவையானவை : ஜவ்வரிசி, அரிசி மாவு – தலா 50 கிராம், சின்ன சைஸ் வள்ளிக்கிழங்கு – 2, நெய் – 2 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை, எலுமிச்சை சாறு – தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு..செய்முறை : வள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, தேங்காய்த் துருவியில் துருவிக் கொள்ளவும். ஜவ்வரிசியை தனியாக வேகவைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் வேர்க்கடலையைப் போட்டுப் பொன்னிறமாய் வறுத்து, தோலை அகற்றி மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். வேக வைத்த ஜவ்வரிசி, வள்ளிக்கிழங்கு துறுவல், அரிசி மாவு, வேர்க்கடலைப் பொடி, உப்பு, நெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மாவை தேன்குழல் நாழியில் நிரப்பி, காயும் எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாய் வேக வைத்து எடுக்கவும்.– அபர்ணா சுப்ரமணியம், மைலாப்பூர்.அவல் வடை.தேவையானவை : அவல் – 1 கப், ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், தயிர் – 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது), கொங்குநாடு கோழிக் குழம்பு சீரகம் – 1 டீஸ்பூன், இஞ்சி – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.செய்முறை : முதலில் அவலை நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும். பின் அதில் அரிசி மாவு, தயிர், வெங்காயம், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். ஒருவேளை கலவை மிகவும் ட்ரையாக இருந்தால், அதில் சிறிது நீர் தெளித்து உருண்டைகளாக வரும் பதத்தில் பிரட்டிக்கொள்ள வேண்டும்.பின்பு, அதை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வடை போன்று தட்டையாகத் தட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், சுவையான அவல் வடை தயார்.குறிப்பு : வடைகளை எண்ணெயில் பொரிக்கும்போது, மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கருகிவிடும். வடைக்கான மாவை தயாரிக்கும்போது அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் வடை செய்ய முடியாது. அதேபோல், உருண்டை பிடித்துத் தட்டும்போது மிகவும் இறுக்கமாகப் பிடிக்காமல், லேசாகப் பிடியுங்கள். இல்லாவிட்டால் பொரிக்கும் போது உதிர்ந்துவிடும். தடிமனான அவல் பயன்படுத்துவதாக இருந்தால், அதை நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் பயன்படுத்துங்கள்.– கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.மின்னெலை ரசம்.தேவையானவை : மின்னெலை இலைகள் – 20, புளிக்கரைசல் – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், தக்காளி – 1 (நறுக்கியது), சீரகப் பொடி – அரை டீஸ்பூன், மிளகுப் பொடி – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது), கறிவேப்பிலை – 1 கொத்து, வெங்காயம் – பாதி, பூண்டுப்பல் – 6, மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன், சோம்புப் பொடி – அரை டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1..செய்முறை : முதலில் வெங்காயம், பூண்டை தோலுரித்து ஒன்றாகச் சேர்த்து நசுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். வெந்த பின்பு புளிக்கரைசலில் பருப்பு நீரை சேர்க்கவும். அதனுடன் மிளகாய்ப் பொடியைத் தவிர்த்து, அனைத்து மசாலாப் பொடிகளையும் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய வெங்காயம், பூண்டில் பாதியைச் சேர்க்கவும். நன்கு கழுவிய மின்னெலையை புளிக்கரைசலில் சேர்த்து கைகளால் நன்கு நொறுங்கப் பிசையவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் அனைத்தும் சேர்த்து முக்கால் லிட்டர் இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து, ஒரு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். .மேலும், அதனுடன் மீதம் வைத்துள்ள வெங்காயம், பூண்டு (நசுக்கியது), கறிவேப்பிலை சேர்த்து வதங்கிய பின்னர் மிளகாய்ப் பொடியைச் சேர்க்கவும். அதைச் சிறிது நேரம் கிளறி விடவும். கிளறிய பின் அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றவும். கலவையை மிதமான தீயில் வைக்கவும். ரசம் நன்றாக நுரை விட்டுக் கொதித்து வரும்போது இறக்கி வைக்கவும். இதுவே மின்னெலை ரசம். இது மிகவும் சுவையாக இருக்கும். இதை டீக்கு பதில் மாலை நேரத்தில் பருகலாம்.குறிப்பு : மின்னெலை கடைகளில் கிடைக்கும்.(மார்கழி, பொங்கல்)புளுங்கறி.தேவை: பூசணிக்காய் – கால் கிலோ, பரங்கிக்காய் – கால்கிநோ, வாழைக்காய் – 3, சேனைக்கிழங்கு – கால் கிலோ, புளி – 3 எலுமிச்சை அளவு, தேங்காய் – 2(சிறியது), தனியா – 1 ஸ்பூன், கடலைப் பருப்பு – 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பச்சை மிளகாய் – 2, வெல்லம் சிறிதளவு, பச்சரிசி – 1 சிறிய கப், வெந்தயம் – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது..செய்முறை: காய்கிகளை தோல் சீவி பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடித்துக் கொள்ளவும். பின் பாத்திரத்தல் உள்ள புளிக்கரைசலில் மஞ்சள் பொடி, வெல்லம், தேவையான உளவு உப்புச் சேர்த்து நறுக்கிய காய்கறித் துண்ஐகளைப் போட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். ஒரு தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தனியா, கடலைப்பருப்பு, 4 வற்றல் மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்துத் தேங்காத் துருவலோடு சேர்த்து வெண்ணையாக அரைத்துக் கொள்ளவும். மீதி இருக்கும் மற்றொரு தேங்காயைத் துரவிப் பச்சை மிளகாயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சரிசியை அடுப்பில் வாணலி வைத்து வெறும் வாணலியின் வறுக்கவும். அரிசி சிவந்து வாசனை வரும்போது மீதமுள்ளவற்றால் மிளகாய் 2, வெந்தயம் சேர்த்து அவற்றையும் வறுத்துப் பொடி செய்துக் கொள்ளவும். வேக வைத்த காய்கறியில், முதலில் அரைத்து வைத்து இருக்கும் விழுதைச் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இரண்டாவதாக அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். மறுபடியும் கொதி வந்தவுடன் பொடித்து வைத்திருக்கும் பொடியை சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டு அதையும் சேர்க்கவும். நன்றாக கொதி வந்தவுடன் எண்ணெய் விட்டு (வாணலியில்) கடுகு, கறிவேப்பிலையால் தாளித்து இறக்கி விடவும். இதுவே புளுங்கறி ஆகும். இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம். சுவைமிக்க இந்த புளுங்கறியை அனைவரும் விரும்பி உண்பர்.– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி