தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.94 வயதில் தேர்தலில் போட்டி.ஓட்டுப் போடவே யாராவது தூக்கி வர வேண்டிய நிலையில் உள்ள முதியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 94 வயதைக் கடந்த காமாட்சி அம்மாள் என்ற பெண்மணி தேர்தலில் நிற்கிறார்..எங்கே தெரியுமா?.அடையாறு மண்டலத்தில் உள்ள 174வது வார்டில் இவர் நிற்கிறார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் போட்டியிட, பல அரசியல் கட்சியினரும் முனைந்து வருகின்றனர். இவர்களுக்கிடையே காமாட்சி அம்மாவும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்..இந்த வயதில் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் எப்படி வந்தது?.சென்னை பெசன்ட்நகரில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார் காமாட்சி அம்மா. இவரது கணவர் வெங்கட்ராம சாஸ்திரி, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இணைச் செயலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; இதனால் இவருக்கு சமூக விழிப்புணர்வு அதிகம். அதுமட்டுமல்லாது இயல்பிலேயே மிகவும் துணிச்சலான பெண்மணியும் கூட இவர். 1991 ஆம் ஆண்டு இவர் கணவர் இறந்து விட்ட நிலையிலும், காமாட்சி அம்மா தனது சமூகத்திற்காக அயராது பாடுபட்டார். மாநகராட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டினார் . அவர் ஒரு 'Civic Activist'. அடையாறு பகுதியில் அவரை அறியாதவர் கிடையாது..அடையார் பகுதி -13 இன் மாநகராட்சி என்ஜினீயர்ஸ் மற்றும் ஆபிசர்ஸ் அனைவருக்கும் இவர் மேல் அதிக மதிப்பு உண்டு. அடையாறு மற்றும் பெசன்ட் நகர் வாசிகள் இவரை செல்லமாக 'காமாட்சி பாட்டி' என்று அழைப்பது வழக்கம்.."ஓரிடத்தில் வசிப்பவர்கள் எனக்கு எதற்கு இந்த வீன் வேலை என்று நினைக்காமல், அவர்கள் தெருவிற்காக ஒரு அரை மணி நேரம் செலவிழித்தால் கூட அநேக மாற்றங்கள் கொண்டுவர முடியும்," என்பது அவரது நம்பிக்கை. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அனாலும் இவரது துணிவைப் பாராட்டியே ஆக வேண்டும்.80 வயதில் பூமிதானம்..தன் சேமிப்பு, தனது நிலம் எல்லாவற்றையும் கோயிலுக்கு வழங்கியிருக்கிறார் 80 வயதான புஷ்பம்மாள். நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் வசித்து வரும் இவருக்கு பக்தியும் இறை நம்பிக்கையும் அதிகம். இவர் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை அங்குள்ள வினாயகர் கோயிலுக்கு தானமாக வழங்கியிருக்கிறார்..அது மட்டுமின்றி, முதியோர் ஓய்வூதியத்தில் இருந்து சேமித்து வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாயையும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக அளித்திருக்கிறார்.."ஆதரவற்ற எனக்கு, எல்லா வகையிலும் துணை நிற்கும் இறைவன் விநாயகனுக்கு, என்னால் முடிந்த காணிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால், எல்லோருக்கும் நல்லதே நடக்கும்," என்கிறார் புஷ்பம்மாள்..19 வயதுக்குள் பதக்கங்கள்.துனீசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிர்க்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் இந்தியாவின் சுஹானா சைனி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்..ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், சுஹானா, ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணிகள் என்ற மூன்று பிரிவுகளிலும் விளையாடி தலா ஒவ்வொரு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.94 வயதில் தேர்தலில் போட்டி.ஓட்டுப் போடவே யாராவது தூக்கி வர வேண்டிய நிலையில் உள்ள முதியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 94 வயதைக் கடந்த காமாட்சி அம்மாள் என்ற பெண்மணி தேர்தலில் நிற்கிறார்..எங்கே தெரியுமா?.அடையாறு மண்டலத்தில் உள்ள 174வது வார்டில் இவர் நிற்கிறார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் போட்டியிட, பல அரசியல் கட்சியினரும் முனைந்து வருகின்றனர். இவர்களுக்கிடையே காமாட்சி அம்மாவும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்..இந்த வயதில் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் எப்படி வந்தது?.சென்னை பெசன்ட்நகரில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார் காமாட்சி அம்மா. இவரது கணவர் வெங்கட்ராம சாஸ்திரி, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இணைச் செயலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; இதனால் இவருக்கு சமூக விழிப்புணர்வு அதிகம். அதுமட்டுமல்லாது இயல்பிலேயே மிகவும் துணிச்சலான பெண்மணியும் கூட இவர். 1991 ஆம் ஆண்டு இவர் கணவர் இறந்து விட்ட நிலையிலும், காமாட்சி அம்மா தனது சமூகத்திற்காக அயராது பாடுபட்டார். மாநகராட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டினார் . அவர் ஒரு 'Civic Activist'. அடையாறு பகுதியில் அவரை அறியாதவர் கிடையாது..அடையார் பகுதி -13 இன் மாநகராட்சி என்ஜினீயர்ஸ் மற்றும் ஆபிசர்ஸ் அனைவருக்கும் இவர் மேல் அதிக மதிப்பு உண்டு. அடையாறு மற்றும் பெசன்ட் நகர் வாசிகள் இவரை செல்லமாக 'காமாட்சி பாட்டி' என்று அழைப்பது வழக்கம்.."ஓரிடத்தில் வசிப்பவர்கள் எனக்கு எதற்கு இந்த வீன் வேலை என்று நினைக்காமல், அவர்கள் தெருவிற்காக ஒரு அரை மணி நேரம் செலவிழித்தால் கூட அநேக மாற்றங்கள் கொண்டுவர முடியும்," என்பது அவரது நம்பிக்கை. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அனாலும் இவரது துணிவைப் பாராட்டியே ஆக வேண்டும்.80 வயதில் பூமிதானம்..தன் சேமிப்பு, தனது நிலம் எல்லாவற்றையும் கோயிலுக்கு வழங்கியிருக்கிறார் 80 வயதான புஷ்பம்மாள். நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் வசித்து வரும் இவருக்கு பக்தியும் இறை நம்பிக்கையும் அதிகம். இவர் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை அங்குள்ள வினாயகர் கோயிலுக்கு தானமாக வழங்கியிருக்கிறார்..அது மட்டுமின்றி, முதியோர் ஓய்வூதியத்தில் இருந்து சேமித்து வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாயையும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக அளித்திருக்கிறார்.."ஆதரவற்ற எனக்கு, எல்லா வகையிலும் துணை நிற்கும் இறைவன் விநாயகனுக்கு, என்னால் முடிந்த காணிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால், எல்லோருக்கும் நல்லதே நடக்கும்," என்கிறார் புஷ்பம்மாள்..19 வயதுக்குள் பதக்கங்கள்.துனீசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிர்க்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் இந்தியாவின் சுஹானா சைனி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்..ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், சுஹானா, ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணிகள் என்ற மூன்று பிரிவுகளிலும் விளையாடி தலா ஒவ்வொரு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.