B. அனுராதா .2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு 'சுக்ருதம் பவுண்டேஷன்'. பொருளாதார ரீதியில் கல்விக்கான நிதிஉதவி மற்றும் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு இசை பயில உதவி வழங்கும் நோக்கத்துடன், டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தர் டாக்டர் சௌம்யா அவர்களின் தலைமையில், ஆர்வமுள்ள பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து தொடங்கியதுதான் இந்த அமைப்பு. அதே ஆண்டு சென்னை பெரும் புயலால் தாக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களையும், நிதியையும் வழங்கிச் சமுதாய நலனிலும் தங்களுடைய அக்கறையைக் காட்டத் தொடங்கியது. சில பெரிய நிறுவனங்களின் உதவியும் அவர்களுக்குக் கிட்டியது..தொண்டு செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2019-ஆம் வருடம், இசை பயிலும் மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு ஒரு மேடையை அமைத்துக்கொடுத்து, இசைத் திருவிழாவை நடத்தத் தொடங்கியது..கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு இசைக் கல்லூரிகளைத் தொடர்பு கொள்ள, ஆர்வத்துடன் அனைவரும் கலந்துகொண்டனர். 2020ஆம் வருடம், அனைவரும் வீட்டிலேயே முடங்க, 'வர்ச்சுவல்' ஆக விழா நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது..இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகக் கொண்டாடப்படும் இந்த சங்கீதத் திருவிழாவை 2020 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது பெறும் நெய்வேலி ஆர். சந்தான கோபாலன் அவர்கள் தொடங்கி வைக்க, இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் நிறைவு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். ஏறக்குறைய நூறு விளையாட்டுகள் சங்கீதம் சார்ந்து, சங்கீதம் பயிலும் மாணவர்களால் நடத்தப்பட, ஒவ்வொருவரின் கற்பனைத் திறனும், தனித்தன்மையும் அபரிமிதமாக வெளிப்பட்டது. பொதுவாகக் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் கலை விழாக்களை நாம் கண்டிருப்போம். அங்கு நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுகள் இங்கும் நடத்தப்பட்டன. ஆனால், இங்கு ஒரு சின்ன மாற்றம் என்னவென்றால் அனைத்தும் இசை சார்ந்தே இருந்தது என்பதுதான். உதாரணமாக "Spin a Yarn", "Ads up", "Dumb Charades", "Shipwreck", "Skit" என்று அனைத்துமே இசையால் பின்னப்பட்டிருந்தன. இசை வரலாற்று நிபுணர் V. ஸ்ரீராம் அவர்கள் நடத்திய வினாடி வினா, இசைக் கலைஞர் டாக்டர் காயத்ரி கிரிஷ் அவர்கள் நடத்திய அந்தாக்ஷரி, தன்னார்வத்துடன் பங்குகொண்ட இசை மாணவர்களுக்கு என்றே பிரத்தியேகமாக டாக்டர். சௌம்யா அவர்கள் நடத்திய 'Jeopardy' ஆகிய நிகழ்ச்சிகள் பங்கு கொண்டவர்களிடையே மட்டுமின்றிப் பார்வையாளர்களிடமிருந்தும் பெருத்த வரவேற்பைப் பெற்றன..'மிஸ்டரி ரூம்' என்று ஒரு விளையாட்டு. அதில் நீங்கள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பீர்கள். அந்த அறையிலிருந்து வெளியே வர, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட இசை சம்பந்தமான தடயங்களைப் பயன்படுத்தித் தப்பிக்க வேண்டும். இந்த விளையாட்டிலும் மிகுந்த உற்சாகத்துடன் பலரும் பங்கு கொண்டனர்..அங்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டால்களும் பள்ளி, கல்லூரி, தனியார் இசை நிறுவனங்களின் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சிறந்ததாகக் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு, இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் பரிசுகளை வழங்கினார். பம்பர் பரிசாக, எல்லா விளையாட்டுகளையும் விளையாடி அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்கு ரூபாய் 5000 பரிசுக்கூப்பன் வழங்கப்பட்டது. இசை சம்பந்தமான புத்தகங்கள், இசை ஒலிநாடாக்கள் மற்றும் கார்னிவல் சார்ந்த பிரத்தியேகமான விற்பனைப் பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன. மூத்த இசைக் கலைஞர்களின் வருகையும் இளம் மாணவர்களை உற்சாகப்படுத்தியது..டாக்டர் சௌமியா அவர்களின் தலைமையில் மூன்று தளங்களில் இயங்கும் இந்த அமைப்பு, பரத் சுந்தர், வித்யா கல்யாணராமன், அஸ்வத் நாராயணன், கே. காயத்ரி, எல். ராமகிருஷ்ணன், சந்திரசேகர சர்மா போன்ற திறமை மிக்க இசைக் கலைஞர்களையும் அதற்கு அடுத்த தளத்தில் இசை கற்கும் பல்வேறு மாணவர்களையும் உறுப்பினர்களாகக்கொண்டு மிகவும் உற்சாகத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே மூன்று ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் இந்த விழாவைப் பல ஊர்களுக்கும், பல மாநிலங்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தோடு மட்டுமின்றி, இசை பயிலாத மாணவர்களையும், ஆனால் அதே நேரத்தில், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கும் பொது மக்களையும் சென்றடையும் எதிர்காலத் திட்டங்களுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது இக்குழு..கர்நாடக சங்கீதம் என்றாலே ஏதோ மிகக்கடினமான, சாமானியர்கள் எட்ட முடியாத, சமாச்சாரம் என்று ஒதுங்கி நிற்கும் மக்களையும் சென்றடையப் புதுப்புது ஐடியாக்களுடன் வரும் வருடங்களில் புது அவதாரம் எடுக்கத் தயாராகிறது 'சுக்ருதம் பவுண்டேஷனின்' மியூசிக் கார்னிவல்.
B. அனுராதா .2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு 'சுக்ருதம் பவுண்டேஷன்'. பொருளாதார ரீதியில் கல்விக்கான நிதிஉதவி மற்றும் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு இசை பயில உதவி வழங்கும் நோக்கத்துடன், டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தர் டாக்டர் சௌம்யா அவர்களின் தலைமையில், ஆர்வமுள்ள பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து தொடங்கியதுதான் இந்த அமைப்பு. அதே ஆண்டு சென்னை பெரும் புயலால் தாக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களையும், நிதியையும் வழங்கிச் சமுதாய நலனிலும் தங்களுடைய அக்கறையைக் காட்டத் தொடங்கியது. சில பெரிய நிறுவனங்களின் உதவியும் அவர்களுக்குக் கிட்டியது..தொண்டு செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2019-ஆம் வருடம், இசை பயிலும் மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு ஒரு மேடையை அமைத்துக்கொடுத்து, இசைத் திருவிழாவை நடத்தத் தொடங்கியது..கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு இசைக் கல்லூரிகளைத் தொடர்பு கொள்ள, ஆர்வத்துடன் அனைவரும் கலந்துகொண்டனர். 2020ஆம் வருடம், அனைவரும் வீட்டிலேயே முடங்க, 'வர்ச்சுவல்' ஆக விழா நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது..இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகக் கொண்டாடப்படும் இந்த சங்கீதத் திருவிழாவை 2020 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது பெறும் நெய்வேலி ஆர். சந்தான கோபாலன் அவர்கள் தொடங்கி வைக்க, இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் நிறைவு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். ஏறக்குறைய நூறு விளையாட்டுகள் சங்கீதம் சார்ந்து, சங்கீதம் பயிலும் மாணவர்களால் நடத்தப்பட, ஒவ்வொருவரின் கற்பனைத் திறனும், தனித்தன்மையும் அபரிமிதமாக வெளிப்பட்டது. பொதுவாகக் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் கலை விழாக்களை நாம் கண்டிருப்போம். அங்கு நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுகள் இங்கும் நடத்தப்பட்டன. ஆனால், இங்கு ஒரு சின்ன மாற்றம் என்னவென்றால் அனைத்தும் இசை சார்ந்தே இருந்தது என்பதுதான். உதாரணமாக "Spin a Yarn", "Ads up", "Dumb Charades", "Shipwreck", "Skit" என்று அனைத்துமே இசையால் பின்னப்பட்டிருந்தன. இசை வரலாற்று நிபுணர் V. ஸ்ரீராம் அவர்கள் நடத்திய வினாடி வினா, இசைக் கலைஞர் டாக்டர் காயத்ரி கிரிஷ் அவர்கள் நடத்திய அந்தாக்ஷரி, தன்னார்வத்துடன் பங்குகொண்ட இசை மாணவர்களுக்கு என்றே பிரத்தியேகமாக டாக்டர். சௌம்யா அவர்கள் நடத்திய 'Jeopardy' ஆகிய நிகழ்ச்சிகள் பங்கு கொண்டவர்களிடையே மட்டுமின்றிப் பார்வையாளர்களிடமிருந்தும் பெருத்த வரவேற்பைப் பெற்றன..'மிஸ்டரி ரூம்' என்று ஒரு விளையாட்டு. அதில் நீங்கள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பீர்கள். அந்த அறையிலிருந்து வெளியே வர, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட இசை சம்பந்தமான தடயங்களைப் பயன்படுத்தித் தப்பிக்க வேண்டும். இந்த விளையாட்டிலும் மிகுந்த உற்சாகத்துடன் பலரும் பங்கு கொண்டனர்..அங்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டால்களும் பள்ளி, கல்லூரி, தனியார் இசை நிறுவனங்களின் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சிறந்ததாகக் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு, இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் பரிசுகளை வழங்கினார். பம்பர் பரிசாக, எல்லா விளையாட்டுகளையும் விளையாடி அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்கு ரூபாய் 5000 பரிசுக்கூப்பன் வழங்கப்பட்டது. இசை சம்பந்தமான புத்தகங்கள், இசை ஒலிநாடாக்கள் மற்றும் கார்னிவல் சார்ந்த பிரத்தியேகமான விற்பனைப் பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன. மூத்த இசைக் கலைஞர்களின் வருகையும் இளம் மாணவர்களை உற்சாகப்படுத்தியது..டாக்டர் சௌமியா அவர்களின் தலைமையில் மூன்று தளங்களில் இயங்கும் இந்த அமைப்பு, பரத் சுந்தர், வித்யா கல்யாணராமன், அஸ்வத் நாராயணன், கே. காயத்ரி, எல். ராமகிருஷ்ணன், சந்திரசேகர சர்மா போன்ற திறமை மிக்க இசைக் கலைஞர்களையும் அதற்கு அடுத்த தளத்தில் இசை கற்கும் பல்வேறு மாணவர்களையும் உறுப்பினர்களாகக்கொண்டு மிகவும் உற்சாகத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே மூன்று ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் இந்த விழாவைப் பல ஊர்களுக்கும், பல மாநிலங்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தோடு மட்டுமின்றி, இசை பயிலாத மாணவர்களையும், ஆனால் அதே நேரத்தில், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கும் பொது மக்களையும் சென்றடையும் எதிர்காலத் திட்டங்களுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது இக்குழு..கர்நாடக சங்கீதம் என்றாலே ஏதோ மிகக்கடினமான, சாமானியர்கள் எட்ட முடியாத, சமாச்சாரம் என்று ஒதுங்கி நிற்கும் மக்களையும் சென்றடையப் புதுப்புது ஐடியாக்களுடன் வரும் வருடங்களில் புது அவதாரம் எடுக்கத் தயாராகிறது 'சுக்ருதம் பவுண்டேஷனின்' மியூசிக் கார்னிவல்.