-சேலம் சுபா .எங்க பார்த்தாலும் பொன்னியின் செல்வனின் பராக் பராக் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பண்டிகைகளுக்கும் பராக் சொல்லி வரவேற்கும் சங்கத்தின் செகரெட்டரி பேசறேன். வணக்கமுங்க..காலம் காலமாக நம்ம முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்து விட்டுப்போன(?) பண்டிகைகள் இப்ப எந்த நிலைமையில் உள்ளது என்பதை என்னோட அனுபவத்துல சொல்றேங்க. ஒரு அஞ்சு நிமிஷம் காது கொடுத்துக் கேளுங்க… ப்ளீஸ்… கெஞ்ச வெக்காதீங்க… மாவு இடிக்க அரிசி ஊற வெக்கிற கேப்புல பேசறேன். அதனால கண்டிப்பா நீங்க கேட்டுத்தான் ஆகணும்னு அன்பா கண்டிசன் போடறேன் ஆமா..அதென்னவோ தெரியல இந்த ஆடி மாசம் பொறந்தா மட்டும் என் மண்டையில 'ஜில்'லுனு ஏறுது. ஒரு வேளை நானும் ஆடியில பொறந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறதால இருக்குமோ? "ச்சே… ச்சே… இந்த தற்பெருமைக்கு ஒண்ணும் குறைச்சலில்லை… நேரா விசயத்துக்கு வாம்மா மின்னலு…" என்று உங்க மைன்ட் வாய்ஸ் கேட்பதால் விடு ஜூட்..ஆடி ஒண்ணு அன்னிக்கு தேங்காய் சுடும்போதே ரவுசு ஆரம்பமாகிடும். அன்னிக்கு மட்டும் தேங்காயும் அழிஞ்சில் குச்சியும் அவங்க சொல்ற விலைதான். முதல்ல எல்லாம் பசங்க இருக்கற வீடுகளில் மட்டும்தான் தேங்காய் உரைக்கலாம்னு ரீலு வுட்டாங்க… ஆனா, இப்ப வீட்டுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்கறதால யார் வேணா தேங்காய் சுடலாம். இந்தத் தேங்காயைக் கொஞ்சம் கோலப்பொடி போட்ட தரையில உரைச்சு மேல இருக்கிற நாரெல்லாம் போக சும்மா மொழு மொழுன்னு நயன்தாரா கன்னம் மாதிரி ஆனப்புறம் மூன்று கண்ணில ஒரு கண்ணுல ஓட்டைப்போட்டு அதுக்குள்ள இருக்கிற தண்ணியெல்லாம் எடுத்துட்டு வெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை, பாசிப்பருப்பு போட்டு, அதுல எடுத்து வெச்ச தேங்காய்த் தண்ணிய ஊத்தி குச்சியை சொருகி அடுப்புல வெச்சு, அது படபடன்னு வெந்து வெடிக்கிற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு அப்பால எடுத்து சாமிகிட்ட கண்ணுல காமிச்சுட்டு நாமளே சாப்பிட வேண்டியதுதான்… வியர்வை வழிய செய்த வேலையோட களைப்பு அந்தத் தேங்காயை சாப்பிடறப்ப போயிந்தி. ஹப்பா ஒரே மூச்சில முடிச்சிட்டாலும் பெரிய டாஸ்க்தான் இது. ஒரு வழியா தேங்காய் சுட்டு முடிச்சா அடுத்து வந்துவிடும் பண்டிகை கலாட்டாக்கள்….சின்னப் புள்ளையா இருந்தப்ப பாட்டிவீட்டுல ஒரே கும்மாளம்தான். விடிகாலைல நல்லாத் தூக்கம் வரப்ப எழுந்திருன்னு எழுப்பி குளிர்ல நடுங்கியபடி தேர்ல சத்தாபரணம் வரும் மாரியம்மனைக் காண்பிப்பாங்க. பளீர்னு லைட்ஸ் கலர் கலரா பூக்கள் ஜொலிக்கும் கல்லு நகைகளோட அவ்வளவு அழகா இருப்பா எங்க ஊரு அம்மன். நம்மள அறியாமலேயே கையெடுத்துக் கும்பிட்டுக் கூடவே எங்களையெல்லாம் தூங்க விடும்மா தாயேன்னு மனசுக்குள்ள கதறியிருக்கேன்..அதுலயும் இந்த மாவு மாற்றும் அனுபவம் இருக்கே… பாட்டி வீட்டுல நாலு பொண்ணுகளுக்கு நாலு படி மாவு கணக்குப் போட்டு எட்டு உருண்டைகள் வரும்படி மாவு இடிப்பார்கள். பச்சரிசியை தண்ணீர்ல நல்லா ஊறவெச்சு அதை வடிச்சு ஆறவைத்து உரல்ல போட்டு உலக்கையால நங்கு நங்குன்னு பொம்பளைங்க ஆளாளுக்கு மாத்தி மாத்தி இடிச்சு சிறு கண்ணு இருக்கற சல்லடையில அதை சலிச்சு வெல்லப்பாகு காய்ச்சி பெரிய அகலத் தாம்பாளத்தில் மாவோட பதமாக் கலந்து மூடி வெச்சுருவாங்க பாட்டி..காலையில அதை உருட்டி உருட்டி நாலு பக்கமும் தட்டித் தட்டி மாவு உருண்டை தயாரிக்கும் அழகு இருக்கே… பாட்டி பரலோகம் போய் நாப்பது வருசமானாலும் நச்சுன்னு நினைவிலேயே இருக்கு. இப்படித்தான் நானும் கல்யாணம் ஆன புதுசுல மாமியார் வீட்டுல நானெல்லாம் எங்க பாட்டியோட வாரிசு. மாவு உருண்டை பண்றது ஜுஜுபின்னு மாமியார்கிட்ட சவால் விட்டுட்டு மாவை மிக்சியில போட்டு சலிச்சு வெச்சா கொட்டாவி கொட்டாவியா வந்துச்சு. சரி என்னதான் ஆகிடும், காலையில எழுந்து வெல்லம் காய்ச்சி தயார் செய்துக்கலாம்னு போய்ப் படுத்துட்டுக் காலையில் பார்த்தா… ஐயகோ என் மானமே போச்சு. கண்ணுல இருந்து கண்ணீர் காவிரியாப் பாயுது. மாமியார் பார்த்திட்டு டோஸ் விடறதுக்குள் நாமளே சோக போஸ்க்கு மாறிட்டா? பச்சை மாவை துணி போட்டுக் காத்து இல்லாம மூடினதுல எல்லாம் பூஞ்சை பிடித்து கறுப்பா இருந்தா?.அதுக்கப்புறம் பெருமையாவது ஒண்ணாவது. மாமியாரிடம் சரணாகதிதான். திரும்பவும் மாவு இடிச்சு மாரியம்மனுக்கு மாற்றுவதற்குள் மனசுக்குள் படபடதான். ஒழுங்கா வரலைன்னா தெய்வக் குத்தம் ஆகிடுமே? மாரியம்மனுக்குப் பதிலா மாமியார் குத்தம்தான் பெரிசா இருக்கும். ஆச்சா… ஒரு வழியா மாவு பதமா வந்தா தப்பிச்சோம். தண்ணிப் பதம் வந்தா… அம்புட்டுதேன். ஆனா அதுக்கெல்லாம் அசரவங்களா நாம? அதுக்குன்னு கப்புகளை எடுத்து அதுக்குள்ள மாவைத் திணிச்சு விளக்கப் போட்ருவோம்ல..சரி, மீண்டும் ஒரு ஆட்டோகிராப்… மாவு விளக்கு மாற்ற பாட்டி வீட்டுல இருந்து அந்தக் காலத்துல குதிரை வண்டியிலதான் போவோம் . இதுல ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைச்சுது. முன்னோர் செய்த புண்ணியம் எப்படி நம்மைக் காப்பாத்துச்சு பாருங்க… எங்க பாட்டியே இறந்து எனக்கு கல்யாணமும் ஆகிவிட்ட ஒரு மழை நாளில் வண்டி எதுவும் கிடைக்காமல் தனியா நின்றபோது ஒரு ஆட்டோக்காரர் என்னை அழைத்து வீட்டில் பத்திரமாக விட்டுவிட்டு, காசுகூட வாங்காமல் சொன்ன வார்த்தைகள் இது… "இந்தக் கையால உங்க பாட்டிகிட்ட மாவு வாங்கி சாப்பிடுருக்கேன் தாயி… நீங்களாம் சின்னப் பிள்ளைகளா இருந்தப்ப என் குதிரை வண்டியிலதான் வருவீங்க," ஆஹா… தர்மம் காக்கும்னு இததான் சொல்வாங்களோ ?.விளக்கு மாத்திட்டு வீட்டுக்கு வர உறவினர்களுக்கு மட்டனோ, சிக்கனோ, பலகார சாப்பாடோ ரெடி பண்ணிப் போடணும். இதுல என்ன ஒரு கொடுமைனா… கடைசிவரைக்கும் நீ சாப்பிட்டியான்னு நம்மைக் கேட்க ஒருத்தரும் இருக்கமாட்டாங்க… கடைசியில மீதமாகிறது அத்தனையும் திங்கப் போறாங்கற நினைப்போ என்னவோ….அடுத்த கதைக்குப் போவோம். இந்தப் பண்டிகையின்போது ஒவ்வொரு நாளும் எல்லாக் கோயில்களிலும் கச்சேரி, பாட்டு, பட்டி மன்றம்னு களைகட்டும். ஊட்டு ஆம்பிளைங்ககிட்ட இருந்து பொம்மனாட்டிகளுக்கு விடுதலை தரும் நேரம் அது. கரகாட்டம் பாக்கப் போயிட்டு, நடு இரவுல வந்து கதவைத் தட்டின ஆம்பிளைகளுக்கு அர்ச்சனைதான். அதையெல்லாம் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு, அடுத்த நாளுக்கு ரெடியாவாங்க சேலத்து சிங்கங்கள். எம்.ஜி.ஆரும், கலைஞரும், சிவாஜியும் வந்து வளர்ந்த கலை நகரம் என்பதை நினைவுபடுத்தும் பண்டிகை கால கலை நிகழ்சிகள்..முக்கியமா வீட்டு பீரோவுல அடுக்கி வெச்சுயிருக்கிற புடைவைக்கும் சேர்த்து வெச்சுருக்கிற காசுக்கும் இந்தப் பண்டிகை காலத்துல நல்ல காலம் பொறக்கும். தினம் ஒரு சேலை கட்டி அசத்துவாங்க சேலத்து மாங்கனிகள். சே…மகளிர்கள்… சும்மா பட்டும் மேக்கப்புமா எங்கெங்கு காணினும் சக்திகளாக பெண்டிர் வலம் வர கலர்களை பார்க்க என்றே ஆங்காங்கு காளையார்களும் திரிவதைப் பார்க்கலாம்..அதுலயும் வண்டி வேடிக்கை நாளன்று கூடும் மக்கள் முகங்களில் எல்லாம் உற்சாகம் செமையா இருக்கும். ஒவ்வொரு தீம்களை எடுத்து மாறுவேடம் தாங்கி அதைச் சித்தரித்து வரும் வண்டி வேடிக்கைகள் காண பெரும் கூட்டம் காத்துக்கிடக்கும். அலகு குத்தி வரும் பக்தர்களைக் காணவும் மக்கள் திரளாகக் காத்திருப்பார்கள்..ரொம்ப முக்கியமான விஷயம்… பண்டிகைக் காலங்களில் கண்டிப்பாகஎல்.ஆர். ஈஸ்வரி அம்மாவை நாங்கள் யாரும் மறக்கவும் முடியாது. தவிர்க்கவும் முடியாது. காலையில் இருந்து இரவு வரை 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா'வைக் காதுகளில் நிரப்பி மாரியம்மனை மனதில் இறுக்கிப்பிடித்து நிறுத்துவதில் அந்த அம்மாவுக்குப் பங்கு அதிகம். பண்டிகையே முடிந்துவிட்டாலும் நான்கைந்து நாட்கள் அவங்க குரல் மண்டைக்குள் ஒலிப்பதை நிறுத்த முடியவில்லை என்பதுதான் மேட்டரு..இந்தக் காலங்களில் அவ வீட்டுல இப்படி இவ வீட்டுல இப்படின்னு பொரணி பேசி மகிழும் பெண்களும் உண்டு. உருப்படியா நாலு பேருக்கு உதவி செய்த பெண்களும் உண்டு என்னைப் போல… இதோ சக்தி அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. மாவுக்கு இடிக்கணும். நானும் கிளம்ப வேண்டும். இதோட முடிச்சுக்கிறேன்… உங்க எல்லோர்க்காகவும் வேண்டிக்கிறேன்..ஒண்ணே ஒண்ணுங்க… நம்ம சந்ததிங்ககிட்ட இந்த மாதிரி பண்டிகைகளையும் விழாக்களையும் சொல்லிப் புரிய வைத்து வளர்த்தால் ஆன்மிகத்துடன் நமது பாரம்பரியமும் புரிந்து கொள்வார்கள். இதோ என் பேத்தி அழகா பாவாடை சட்டை போட்டு ரெடியாகிட்டா. அவளைக் கூட்டிக்கிட்டு கோயில் கிளம்பறேன். பை பை…
-சேலம் சுபா .எங்க பார்த்தாலும் பொன்னியின் செல்வனின் பராக் பராக் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பண்டிகைகளுக்கும் பராக் சொல்லி வரவேற்கும் சங்கத்தின் செகரெட்டரி பேசறேன். வணக்கமுங்க..காலம் காலமாக நம்ம முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்து விட்டுப்போன(?) பண்டிகைகள் இப்ப எந்த நிலைமையில் உள்ளது என்பதை என்னோட அனுபவத்துல சொல்றேங்க. ஒரு அஞ்சு நிமிஷம் காது கொடுத்துக் கேளுங்க… ப்ளீஸ்… கெஞ்ச வெக்காதீங்க… மாவு இடிக்க அரிசி ஊற வெக்கிற கேப்புல பேசறேன். அதனால கண்டிப்பா நீங்க கேட்டுத்தான் ஆகணும்னு அன்பா கண்டிசன் போடறேன் ஆமா..அதென்னவோ தெரியல இந்த ஆடி மாசம் பொறந்தா மட்டும் என் மண்டையில 'ஜில்'லுனு ஏறுது. ஒரு வேளை நானும் ஆடியில பொறந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறதால இருக்குமோ? "ச்சே… ச்சே… இந்த தற்பெருமைக்கு ஒண்ணும் குறைச்சலில்லை… நேரா விசயத்துக்கு வாம்மா மின்னலு…" என்று உங்க மைன்ட் வாய்ஸ் கேட்பதால் விடு ஜூட்..ஆடி ஒண்ணு அன்னிக்கு தேங்காய் சுடும்போதே ரவுசு ஆரம்பமாகிடும். அன்னிக்கு மட்டும் தேங்காயும் அழிஞ்சில் குச்சியும் அவங்க சொல்ற விலைதான். முதல்ல எல்லாம் பசங்க இருக்கற வீடுகளில் மட்டும்தான் தேங்காய் உரைக்கலாம்னு ரீலு வுட்டாங்க… ஆனா, இப்ப வீட்டுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்கறதால யார் வேணா தேங்காய் சுடலாம். இந்தத் தேங்காயைக் கொஞ்சம் கோலப்பொடி போட்ட தரையில உரைச்சு மேல இருக்கிற நாரெல்லாம் போக சும்மா மொழு மொழுன்னு நயன்தாரா கன்னம் மாதிரி ஆனப்புறம் மூன்று கண்ணில ஒரு கண்ணுல ஓட்டைப்போட்டு அதுக்குள்ள இருக்கிற தண்ணியெல்லாம் எடுத்துட்டு வெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை, பாசிப்பருப்பு போட்டு, அதுல எடுத்து வெச்ச தேங்காய்த் தண்ணிய ஊத்தி குச்சியை சொருகி அடுப்புல வெச்சு, அது படபடன்னு வெந்து வெடிக்கிற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு அப்பால எடுத்து சாமிகிட்ட கண்ணுல காமிச்சுட்டு நாமளே சாப்பிட வேண்டியதுதான்… வியர்வை வழிய செய்த வேலையோட களைப்பு அந்தத் தேங்காயை சாப்பிடறப்ப போயிந்தி. ஹப்பா ஒரே மூச்சில முடிச்சிட்டாலும் பெரிய டாஸ்க்தான் இது. ஒரு வழியா தேங்காய் சுட்டு முடிச்சா அடுத்து வந்துவிடும் பண்டிகை கலாட்டாக்கள்….சின்னப் புள்ளையா இருந்தப்ப பாட்டிவீட்டுல ஒரே கும்மாளம்தான். விடிகாலைல நல்லாத் தூக்கம் வரப்ப எழுந்திருன்னு எழுப்பி குளிர்ல நடுங்கியபடி தேர்ல சத்தாபரணம் வரும் மாரியம்மனைக் காண்பிப்பாங்க. பளீர்னு லைட்ஸ் கலர் கலரா பூக்கள் ஜொலிக்கும் கல்லு நகைகளோட அவ்வளவு அழகா இருப்பா எங்க ஊரு அம்மன். நம்மள அறியாமலேயே கையெடுத்துக் கும்பிட்டுக் கூடவே எங்களையெல்லாம் தூங்க விடும்மா தாயேன்னு மனசுக்குள்ள கதறியிருக்கேன்..அதுலயும் இந்த மாவு மாற்றும் அனுபவம் இருக்கே… பாட்டி வீட்டுல நாலு பொண்ணுகளுக்கு நாலு படி மாவு கணக்குப் போட்டு எட்டு உருண்டைகள் வரும்படி மாவு இடிப்பார்கள். பச்சரிசியை தண்ணீர்ல நல்லா ஊறவெச்சு அதை வடிச்சு ஆறவைத்து உரல்ல போட்டு உலக்கையால நங்கு நங்குன்னு பொம்பளைங்க ஆளாளுக்கு மாத்தி மாத்தி இடிச்சு சிறு கண்ணு இருக்கற சல்லடையில அதை சலிச்சு வெல்லப்பாகு காய்ச்சி பெரிய அகலத் தாம்பாளத்தில் மாவோட பதமாக் கலந்து மூடி வெச்சுருவாங்க பாட்டி..காலையில அதை உருட்டி உருட்டி நாலு பக்கமும் தட்டித் தட்டி மாவு உருண்டை தயாரிக்கும் அழகு இருக்கே… பாட்டி பரலோகம் போய் நாப்பது வருசமானாலும் நச்சுன்னு நினைவிலேயே இருக்கு. இப்படித்தான் நானும் கல்யாணம் ஆன புதுசுல மாமியார் வீட்டுல நானெல்லாம் எங்க பாட்டியோட வாரிசு. மாவு உருண்டை பண்றது ஜுஜுபின்னு மாமியார்கிட்ட சவால் விட்டுட்டு மாவை மிக்சியில போட்டு சலிச்சு வெச்சா கொட்டாவி கொட்டாவியா வந்துச்சு. சரி என்னதான் ஆகிடும், காலையில எழுந்து வெல்லம் காய்ச்சி தயார் செய்துக்கலாம்னு போய்ப் படுத்துட்டுக் காலையில் பார்த்தா… ஐயகோ என் மானமே போச்சு. கண்ணுல இருந்து கண்ணீர் காவிரியாப் பாயுது. மாமியார் பார்த்திட்டு டோஸ் விடறதுக்குள் நாமளே சோக போஸ்க்கு மாறிட்டா? பச்சை மாவை துணி போட்டுக் காத்து இல்லாம மூடினதுல எல்லாம் பூஞ்சை பிடித்து கறுப்பா இருந்தா?.அதுக்கப்புறம் பெருமையாவது ஒண்ணாவது. மாமியாரிடம் சரணாகதிதான். திரும்பவும் மாவு இடிச்சு மாரியம்மனுக்கு மாற்றுவதற்குள் மனசுக்குள் படபடதான். ஒழுங்கா வரலைன்னா தெய்வக் குத்தம் ஆகிடுமே? மாரியம்மனுக்குப் பதிலா மாமியார் குத்தம்தான் பெரிசா இருக்கும். ஆச்சா… ஒரு வழியா மாவு பதமா வந்தா தப்பிச்சோம். தண்ணிப் பதம் வந்தா… அம்புட்டுதேன். ஆனா அதுக்கெல்லாம் அசரவங்களா நாம? அதுக்குன்னு கப்புகளை எடுத்து அதுக்குள்ள மாவைத் திணிச்சு விளக்கப் போட்ருவோம்ல..சரி, மீண்டும் ஒரு ஆட்டோகிராப்… மாவு விளக்கு மாற்ற பாட்டி வீட்டுல இருந்து அந்தக் காலத்துல குதிரை வண்டியிலதான் போவோம் . இதுல ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைச்சுது. முன்னோர் செய்த புண்ணியம் எப்படி நம்மைக் காப்பாத்துச்சு பாருங்க… எங்க பாட்டியே இறந்து எனக்கு கல்யாணமும் ஆகிவிட்ட ஒரு மழை நாளில் வண்டி எதுவும் கிடைக்காமல் தனியா நின்றபோது ஒரு ஆட்டோக்காரர் என்னை அழைத்து வீட்டில் பத்திரமாக விட்டுவிட்டு, காசுகூட வாங்காமல் சொன்ன வார்த்தைகள் இது… "இந்தக் கையால உங்க பாட்டிகிட்ட மாவு வாங்கி சாப்பிடுருக்கேன் தாயி… நீங்களாம் சின்னப் பிள்ளைகளா இருந்தப்ப என் குதிரை வண்டியிலதான் வருவீங்க," ஆஹா… தர்மம் காக்கும்னு இததான் சொல்வாங்களோ ?.விளக்கு மாத்திட்டு வீட்டுக்கு வர உறவினர்களுக்கு மட்டனோ, சிக்கனோ, பலகார சாப்பாடோ ரெடி பண்ணிப் போடணும். இதுல என்ன ஒரு கொடுமைனா… கடைசிவரைக்கும் நீ சாப்பிட்டியான்னு நம்மைக் கேட்க ஒருத்தரும் இருக்கமாட்டாங்க… கடைசியில மீதமாகிறது அத்தனையும் திங்கப் போறாங்கற நினைப்போ என்னவோ….அடுத்த கதைக்குப் போவோம். இந்தப் பண்டிகையின்போது ஒவ்வொரு நாளும் எல்லாக் கோயில்களிலும் கச்சேரி, பாட்டு, பட்டி மன்றம்னு களைகட்டும். ஊட்டு ஆம்பிளைங்ககிட்ட இருந்து பொம்மனாட்டிகளுக்கு விடுதலை தரும் நேரம் அது. கரகாட்டம் பாக்கப் போயிட்டு, நடு இரவுல வந்து கதவைத் தட்டின ஆம்பிளைகளுக்கு அர்ச்சனைதான். அதையெல்லாம் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு, அடுத்த நாளுக்கு ரெடியாவாங்க சேலத்து சிங்கங்கள். எம்.ஜி.ஆரும், கலைஞரும், சிவாஜியும் வந்து வளர்ந்த கலை நகரம் என்பதை நினைவுபடுத்தும் பண்டிகை கால கலை நிகழ்சிகள்..முக்கியமா வீட்டு பீரோவுல அடுக்கி வெச்சுயிருக்கிற புடைவைக்கும் சேர்த்து வெச்சுருக்கிற காசுக்கும் இந்தப் பண்டிகை காலத்துல நல்ல காலம் பொறக்கும். தினம் ஒரு சேலை கட்டி அசத்துவாங்க சேலத்து மாங்கனிகள். சே…மகளிர்கள்… சும்மா பட்டும் மேக்கப்புமா எங்கெங்கு காணினும் சக்திகளாக பெண்டிர் வலம் வர கலர்களை பார்க்க என்றே ஆங்காங்கு காளையார்களும் திரிவதைப் பார்க்கலாம்..அதுலயும் வண்டி வேடிக்கை நாளன்று கூடும் மக்கள் முகங்களில் எல்லாம் உற்சாகம் செமையா இருக்கும். ஒவ்வொரு தீம்களை எடுத்து மாறுவேடம் தாங்கி அதைச் சித்தரித்து வரும் வண்டி வேடிக்கைகள் காண பெரும் கூட்டம் காத்துக்கிடக்கும். அலகு குத்தி வரும் பக்தர்களைக் காணவும் மக்கள் திரளாகக் காத்திருப்பார்கள்..ரொம்ப முக்கியமான விஷயம்… பண்டிகைக் காலங்களில் கண்டிப்பாகஎல்.ஆர். ஈஸ்வரி அம்மாவை நாங்கள் யாரும் மறக்கவும் முடியாது. தவிர்க்கவும் முடியாது. காலையில் இருந்து இரவு வரை 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா'வைக் காதுகளில் நிரப்பி மாரியம்மனை மனதில் இறுக்கிப்பிடித்து நிறுத்துவதில் அந்த அம்மாவுக்குப் பங்கு அதிகம். பண்டிகையே முடிந்துவிட்டாலும் நான்கைந்து நாட்கள் அவங்க குரல் மண்டைக்குள் ஒலிப்பதை நிறுத்த முடியவில்லை என்பதுதான் மேட்டரு..இந்தக் காலங்களில் அவ வீட்டுல இப்படி இவ வீட்டுல இப்படின்னு பொரணி பேசி மகிழும் பெண்களும் உண்டு. உருப்படியா நாலு பேருக்கு உதவி செய்த பெண்களும் உண்டு என்னைப் போல… இதோ சக்தி அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. மாவுக்கு இடிக்கணும். நானும் கிளம்ப வேண்டும். இதோட முடிச்சுக்கிறேன்… உங்க எல்லோர்க்காகவும் வேண்டிக்கிறேன்..ஒண்ணே ஒண்ணுங்க… நம்ம சந்ததிங்ககிட்ட இந்த மாதிரி பண்டிகைகளையும் விழாக்களையும் சொல்லிப் புரிய வைத்து வளர்த்தால் ஆன்மிகத்துடன் நமது பாரம்பரியமும் புரிந்து கொள்வார்கள். இதோ என் பேத்தி அழகா பாவாடை சட்டை போட்டு ரெடியாகிட்டா. அவளைக் கூட்டிக்கிட்டு கோயில் கிளம்பறேன். பை பை…