வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!. நாயக்கரின் ஆண்டாள் பக்தி.மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா?.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை முடிந்தபிறகுதான் அவர் மதிய உணவு உண்பார். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் மதுரை வரை சாலையோரம் ஆங்காங்கே சிறு மணிக்கூண்டுகளை ஏற்படுத்தி இருந்தார். ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை பூஜை மணி ஒலித்ததும் அங்கிருந்து மதுரை வரை ஒவ்வொரு மணிக்கூண்டுகளில் உள்ள மணிகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்கும். மதுரையில் தான் தங்கியிருந்த மாளிகை அருகே உள்ள மணி ஒலித்ததும் திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள திசையை நோக்கி ஆண்டாளை வணங்குவார். அதன்பின் மதிய உணவு உட்கொள்வார். இன்றும்கூட மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் திருமலை நாயக்கர் அமைத்த மணிக்கூண்டுகள் சிதைவுகள் உள்ளன.– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.————————–.குள்ளவ்வா திருவிழா.வடகர்னாடகாவில் ஆஷாட மாதத்தில், செவ்வாய் அல்லது வெள்ளியில் கொண்டாடப்படும் நூதன திருவிழா. விவசாயிகளுக்கு மழை முக்கியம். அதனால் மழையை வரவேற்று, அது சிறப்பாக பெய்யவும் அதனால் கிராமமே வலிமை பெறவும் கொண்டாடப்படும் திருவிழா..கும்பாரா என்ற பிரிவினர், ஆற்றில் வண்டல் கருமண்ணை எடுத்து வந்து மண்ணில் பொம்மை செய்து விற்பர். இந்த பொம்மை சிலையாக இல்லாமல், கோபுரம் போன்ற நூதன அமைப்புடனும், உச்சியில் மட்டும் மழை தெய்வம் குள்ளவ்வாவை பிடித்து வைத்திருப்பர்..இதனை கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி, அதில் தானியங்களை பொருத்தி, புடைவை, நகை அலங்காரம் செய்து வைத்திருப்பர். கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு குழு அமைத்து, அவர்கள் வீடு வீடாக சென்று குள்ளவ்வா சிலைக்குப் பாட்டுப் பாடி ஆரத்தி எடுப்பர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் பணம், தானியங்களைத் தருவர். இதேபோல் அனைத்த வீடுகளுக்கும் சென்று சேகரித்த தானியங்கள், பணத்தை வைத்து, ஜாதி, மதம் வித்தியாசம் பார்க்காமல், அடுத்தநாள் அனைவருக்கும் விருந்து படைப்பர்..இதனை ரோனா தாலுக்காவில் உள்ள ஜக்காலி கிராமத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடுவர். இதேபோல் பாகல் கோட் மாவட்டத்திலும் இது மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். சில இடங்களில் குள்ளவ்வாவுக்கு ஜோடியாக கோகப்பா என்ற ஆண் சிலையையும் செய்துவைப்பர்! குழந்தைகளையும் முக்கியப்படுத்தி இதனைக் கொண்டாடுவது உண்டு.-ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.————————–. பங்களாதேஷ் மாம்பழம்.பங்களாதேஷிலும் நம்மை மாதிரி ஏராளமாய் மாம்பழ உற்பத்தி உண்டு. ஜூன் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் ஆரம்பம் வரை காய்த்துக் குலுங்கும்..ஹர்பங்கா, ஹிம்சாகர், லாங்கராபஸ்லி மற்றும் அஸ்வினா ஆகியவை மிகவும் பிரபலம்..இதிலும் பங்களாதேஷ் மாம்பழம் என அழைக்கப்படுவது ஹர்பங்கா. இந்த மாம்பழத்தை (1600 கிலோ) நமது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மேற்கு வங்காள முதல்வருக்கு அனுப்பி வைப்பார் பங்களாதேஷ் பிரதமர்..நிறைய சதை பற்றுடன், கொஞ்சம் கனமாகவும் இந்த பழம் இருக்கும். சுவையோ சூப்பர்..காலாவதியான எலுமிச்சம் பழத்துக்கு டிமாண்ட்.குக்கருக்குள் வெட்டிய எலுமிச்சை பழத்தைப் போட்டால், உள்பகுதி பளிச்சென இருக்கும். இதற்காக காய்கறி கடைகளுக்கு சென்று விற்காத, வீணாய் போன எலுமிச்சம் பழங்களைக் கேட்டால், இலவசமாகவோ அல்லது சகாய விலையிலோ தருவர்! ஆனால், தற்போது அப்படித் தருவதில்லை. நெருங்கி விசாரித்தபோது, உண்மை தெரிந்தது..அந்த வீணாய்ப் போன பழங்களை, கடைகடையாகக் கேட்டு, ஒரு விலைக்கு வாங்கிச் சென்று விடுகிறார்களாம். எதற்கு? அதன் சாரை பிழிந்தால் பயோஎன்சைம்ஸ் கிடைக்கிறது..அதனை பழங்கள் – வெல்லம் – தண்ணீரைப் பயன்படுத்தி தயாரிக்கும் தரை சுத்தம் செய்யும் திரவங்களில், இந்தச் சாரையும் சேர்க்கும்போது, கூடுதல் மனம் கிடைக்கிறதாம். இதேபோல், கொசுவிரட்டிக்காக தயாரிக்கப்படும் திரவங்களிலும் இந்தச் சாரைச் சேர்ப்பதால், நல்ல எபெக்ட் உள்ளதாம்! ஆக இனி காலாவதியான எலுமிச்சம் பழம் கிடைப்பது கஷ்டம்!– ராஜி ராதா, பெங்களூரு.
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!. நாயக்கரின் ஆண்டாள் பக்தி.மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா?.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை முடிந்தபிறகுதான் அவர் மதிய உணவு உண்பார். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் மதுரை வரை சாலையோரம் ஆங்காங்கே சிறு மணிக்கூண்டுகளை ஏற்படுத்தி இருந்தார். ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை பூஜை மணி ஒலித்ததும் அங்கிருந்து மதுரை வரை ஒவ்வொரு மணிக்கூண்டுகளில் உள்ள மணிகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்கும். மதுரையில் தான் தங்கியிருந்த மாளிகை அருகே உள்ள மணி ஒலித்ததும் திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள திசையை நோக்கி ஆண்டாளை வணங்குவார். அதன்பின் மதிய உணவு உட்கொள்வார். இன்றும்கூட மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் திருமலை நாயக்கர் அமைத்த மணிக்கூண்டுகள் சிதைவுகள் உள்ளன.– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.————————–.குள்ளவ்வா திருவிழா.வடகர்னாடகாவில் ஆஷாட மாதத்தில், செவ்வாய் அல்லது வெள்ளியில் கொண்டாடப்படும் நூதன திருவிழா. விவசாயிகளுக்கு மழை முக்கியம். அதனால் மழையை வரவேற்று, அது சிறப்பாக பெய்யவும் அதனால் கிராமமே வலிமை பெறவும் கொண்டாடப்படும் திருவிழா..கும்பாரா என்ற பிரிவினர், ஆற்றில் வண்டல் கருமண்ணை எடுத்து வந்து மண்ணில் பொம்மை செய்து விற்பர். இந்த பொம்மை சிலையாக இல்லாமல், கோபுரம் போன்ற நூதன அமைப்புடனும், உச்சியில் மட்டும் மழை தெய்வம் குள்ளவ்வாவை பிடித்து வைத்திருப்பர்..இதனை கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி, அதில் தானியங்களை பொருத்தி, புடைவை, நகை அலங்காரம் செய்து வைத்திருப்பர். கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு குழு அமைத்து, அவர்கள் வீடு வீடாக சென்று குள்ளவ்வா சிலைக்குப் பாட்டுப் பாடி ஆரத்தி எடுப்பர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் பணம், தானியங்களைத் தருவர். இதேபோல் அனைத்த வீடுகளுக்கும் சென்று சேகரித்த தானியங்கள், பணத்தை வைத்து, ஜாதி, மதம் வித்தியாசம் பார்க்காமல், அடுத்தநாள் அனைவருக்கும் விருந்து படைப்பர்..இதனை ரோனா தாலுக்காவில் உள்ள ஜக்காலி கிராமத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடுவர். இதேபோல் பாகல் கோட் மாவட்டத்திலும் இது மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். சில இடங்களில் குள்ளவ்வாவுக்கு ஜோடியாக கோகப்பா என்ற ஆண் சிலையையும் செய்துவைப்பர்! குழந்தைகளையும் முக்கியப்படுத்தி இதனைக் கொண்டாடுவது உண்டு.-ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.————————–. பங்களாதேஷ் மாம்பழம்.பங்களாதேஷிலும் நம்மை மாதிரி ஏராளமாய் மாம்பழ உற்பத்தி உண்டு. ஜூன் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் ஆரம்பம் வரை காய்த்துக் குலுங்கும்..ஹர்பங்கா, ஹிம்சாகர், லாங்கராபஸ்லி மற்றும் அஸ்வினா ஆகியவை மிகவும் பிரபலம்..இதிலும் பங்களாதேஷ் மாம்பழம் என அழைக்கப்படுவது ஹர்பங்கா. இந்த மாம்பழத்தை (1600 கிலோ) நமது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மேற்கு வங்காள முதல்வருக்கு அனுப்பி வைப்பார் பங்களாதேஷ் பிரதமர்..நிறைய சதை பற்றுடன், கொஞ்சம் கனமாகவும் இந்த பழம் இருக்கும். சுவையோ சூப்பர்..காலாவதியான எலுமிச்சம் பழத்துக்கு டிமாண்ட்.குக்கருக்குள் வெட்டிய எலுமிச்சை பழத்தைப் போட்டால், உள்பகுதி பளிச்சென இருக்கும். இதற்காக காய்கறி கடைகளுக்கு சென்று விற்காத, வீணாய் போன எலுமிச்சம் பழங்களைக் கேட்டால், இலவசமாகவோ அல்லது சகாய விலையிலோ தருவர்! ஆனால், தற்போது அப்படித் தருவதில்லை. நெருங்கி விசாரித்தபோது, உண்மை தெரிந்தது..அந்த வீணாய்ப் போன பழங்களை, கடைகடையாகக் கேட்டு, ஒரு விலைக்கு வாங்கிச் சென்று விடுகிறார்களாம். எதற்கு? அதன் சாரை பிழிந்தால் பயோஎன்சைம்ஸ் கிடைக்கிறது..அதனை பழங்கள் – வெல்லம் – தண்ணீரைப் பயன்படுத்தி தயாரிக்கும் தரை சுத்தம் செய்யும் திரவங்களில், இந்தச் சாரையும் சேர்க்கும்போது, கூடுதல் மனம் கிடைக்கிறதாம். இதேபோல், கொசுவிரட்டிக்காக தயாரிக்கப்படும் திரவங்களிலும் இந்தச் சாரைச் சேர்ப்பதால், நல்ல எபெக்ட் உள்ளதாம்! ஆக இனி காலாவதியான எலுமிச்சம் பழம் கிடைப்பது கஷ்டம்!– ராஜி ராதா, பெங்களூரு.