பேட்டி : பத்மினி பட்டாபிராமன்.பித்தப்பை கற்கள் (Gall bladder stones) என்றால் என்ன? அதனை நீக்கும் சிகிச்சை முறை குறித்து நவம்பர் 1984ம் ஆண்டு மங்கையர் மலர் இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்..பித்தப்பை கற்களை நீக்க, அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் ஆறு நாட்கள் வரை தங்க வேண்டிய நிலை அன்று இருந்தது. சுமார் 37 ஆண்டுகள் கழித்து, இன்றைய நவீன மருத்துவத்தில், சிகிச்சைகள் எவ்வளவு எளிதாகவும் சிரமமில்லாமலும் செய்யப்படுகின்றன என்று அறிந்தகொள்ள, மருத்துவர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன் (Sr. Consultant and HOD, Dept. of Laparoscopic Surgery, MGM Health care) அவர்களிடம் பேசினோம். பித்தப்பை பற்றி அவர் முதலில் விளக்கம் தந்தார்.."நம் வயிற்றின் வலது மேல் பகுதியில் கல்லீரலுக்கு அடியில் இருக்கும் சிறு பை போன்ற உறுப்பு Gall bladder எனப்படும் பித்தப்பை. கல்லீரல் சுரக்கும் பித்த நீர் (Bile), இந்த பித்தப் பையில் சேமிக்கப்பட்டிருக்கும். இது ஜீரணத்துக்கு அவசியமான "ஜூஸ்." நாம் உணவு உண்ட பின், பித்தப் பை தனது, 'சென்சார்கள்' மூலம் அலர்ட் ஆகி, உடனே பித்த நீரை சிறிய குழாய்கள் (Bile duct) மூலம் நம் குடலுக்கு அனுப்புகிறது. கொழுப்பு மற்ற பொருட்களை ஜீரணிக்கவும், விட்டமின்களை சேர்க்கவும் இது உதவுகிறது. இதைத் தாக்கும் முக்கிய பிரச்னை 'கால்ஸ் டோன்ஸ்' எனப்படும் கற்கள்.".பித்தப்பை கற்கள் எவ்வாறு உருவாகின்றன டாக்டர்? அதன் Symptoms என்னென்ன?பைலில் இருக்கும் கொலஸ்ட்ரால், பிக்மென்ட், கால்சியம் இவை சேர்ந்து பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. இதில் இரண்டு வகை உண்டு. கொலஸ்ட்ரால் காரணமாக கற்கள் ஏற்பட்டால், அவை சற்றே பெரிதாக இருக்கும். பிக்மெண்ட் காரணமாக உருவாகும் கற்கள் அளவில் சிறியதாக இருக்கும்..மறைமுகமான அறிகுறிகள் (Indirect Symptoms) எனும்போது கற்களால் பித்தநீர் சரியாக செல்லாமல், அஜீரணம், வயிறு உப்பினாற்போன்ற உணர்வு, பசியின்மை போன்றவை இருக்கலாம்..நேரடியான அறிகுறிகள், (Direct Symptoms) என்றால் பாதிக்கப்பட்டவருக்கு உணவுக்குப் பின் வயிற்றின் மேற்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். தொடர்ந்து வாந்தி வரலாம்..சிலர் ஏதாவது வாயு கோளாறாக இருக்கும் என்று அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். வலி தொடர்ந்து இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்..இவை எதனால் உருவாகின்றன?உணவில் அதிக கொழுப்பு சத்து, அதிக எண்ணை சேர்ப்பவர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு, ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பித்தப்பை கற்கள் ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதே போல, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பித்தப்பை கற்கள் வர வாய்ப்பு உண்டு..முன்பெல்லாம் எக்ஸ்–ரே எடுத்து கண்டுபிடிப்பார்கள் அல்லவா?ஆமாம்… ஆனால், இப்போது எக்ஸ்–ரே எடுப்பதில்லை. அல்ட்ரா சவுண்ட் (Ultra sound scan) மூலம் கண்டறியலாம். சில கேஸ்களில், கால்ப்ளேடரில் இருந்து பித்தநீர்க் குழாய்க்குள் (Bile duct) கற்கள் வந்து விடும். இதனால் மஞ்சள் காமாலை போன்ற நோய் வரக்கூடும். இவற்றை துல்லியமாக MRCP (Magnetic Resonance Cholangiopancreatography) சோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். கணையம், பித்தநீர்க் குழாய், பித்தப்பை எங்கே கற்கள் இருந்தாலும் தெரிந்து விடும்..பித்தப்பை கற்கள் உயிருக்கு அபாயம் ஏற்படுத்தக் கூடியவையா?சிறுநீரகக் கற்களைப் போல அல்லாமல், பித்தப்பையில் மிகச்சிறிய கற்கள், இருந்தால் எளிதில் தொற்று ஏற்பட்டு மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரக்கூடும். எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல இந்த அபாயம். தவிர, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் multi complications சிக்கல்கள் உண்டாகலாம்..பெரிய துளையிட்டு வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்கை இப்போது செய்வதில்லை என்கிறீர்கள். தற்சமயம் செய்யும் முறை என்ன?இந்த அறுவை சிகிச்சையை Cholecystectomy என்கிறோம். 5 மில்லி மீட்டர் அளவுக்கு நான்கு சிறிய துளைகள் போட்டு அதன் வழியே பாதிக்கப்பட்ட பித்தப்பையும், அதன் கற்களும் நீக்கப்படுகின்றன. மூன்று துளைகளில் லேபரோஸ்கோபி கருவிகளும் ஒன்றில் சிறிய கேமராவும் செலுத்தப்படுகின்றன. கேமரா வழியே அருகில் மானிட்டரில் பார்த்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பித்தப்பை வீங்கி பெரிதாக, திக்காக இருந்தால், அதை Decompress செய்து கருவியுடன் இணைந்த பைக்குள் போட்டு வெளியே எடுத்து விடுவோம். மிக கவனமாக செய்ய வேண்டிய செயல்முறை என்பதால் சவாலாக இருந்தாலும் வெற்றிகரமாகவே செய்து வருகிறோம்..எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்?காலையில் வந்து லேபரோஸ்கோபி செய்த பின்னர், மாலையில் வீடு திரும்பி விடலாம். நவீன மருத்துவம் இந்த சிகிச்சையை எளிதாக்கி விட்டது. எனவே, பயப்படாமல் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ளுங்கள்..பித்தப்பையை நீக்கி விட்டால் உடலுக்கு தீங்கு ஒன்றும் வராதே டாக்டர்?எதுவும் ஏற்படாது. ஆனால், பைல் சேமிக்கும் உறுப்பு நீக்கப்பட்டதால் உணவை ஜீரணிக்கும் பைல் அளவு குறையும். கொழுப்பு, எண்ணெய் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. அது எப்போதுமே, யாருக்குமே நல்லதுதானே!
பேட்டி : பத்மினி பட்டாபிராமன்.பித்தப்பை கற்கள் (Gall bladder stones) என்றால் என்ன? அதனை நீக்கும் சிகிச்சை முறை குறித்து நவம்பர் 1984ம் ஆண்டு மங்கையர் மலர் இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்..பித்தப்பை கற்களை நீக்க, அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் ஆறு நாட்கள் வரை தங்க வேண்டிய நிலை அன்று இருந்தது. சுமார் 37 ஆண்டுகள் கழித்து, இன்றைய நவீன மருத்துவத்தில், சிகிச்சைகள் எவ்வளவு எளிதாகவும் சிரமமில்லாமலும் செய்யப்படுகின்றன என்று அறிந்தகொள்ள, மருத்துவர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன் (Sr. Consultant and HOD, Dept. of Laparoscopic Surgery, MGM Health care) அவர்களிடம் பேசினோம். பித்தப்பை பற்றி அவர் முதலில் விளக்கம் தந்தார்.."நம் வயிற்றின் வலது மேல் பகுதியில் கல்லீரலுக்கு அடியில் இருக்கும் சிறு பை போன்ற உறுப்பு Gall bladder எனப்படும் பித்தப்பை. கல்லீரல் சுரக்கும் பித்த நீர் (Bile), இந்த பித்தப் பையில் சேமிக்கப்பட்டிருக்கும். இது ஜீரணத்துக்கு அவசியமான "ஜூஸ்." நாம் உணவு உண்ட பின், பித்தப் பை தனது, 'சென்சார்கள்' மூலம் அலர்ட் ஆகி, உடனே பித்த நீரை சிறிய குழாய்கள் (Bile duct) மூலம் நம் குடலுக்கு அனுப்புகிறது. கொழுப்பு மற்ற பொருட்களை ஜீரணிக்கவும், விட்டமின்களை சேர்க்கவும் இது உதவுகிறது. இதைத் தாக்கும் முக்கிய பிரச்னை 'கால்ஸ் டோன்ஸ்' எனப்படும் கற்கள்.".பித்தப்பை கற்கள் எவ்வாறு உருவாகின்றன டாக்டர்? அதன் Symptoms என்னென்ன?பைலில் இருக்கும் கொலஸ்ட்ரால், பிக்மென்ட், கால்சியம் இவை சேர்ந்து பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. இதில் இரண்டு வகை உண்டு. கொலஸ்ட்ரால் காரணமாக கற்கள் ஏற்பட்டால், அவை சற்றே பெரிதாக இருக்கும். பிக்மெண்ட் காரணமாக உருவாகும் கற்கள் அளவில் சிறியதாக இருக்கும்..மறைமுகமான அறிகுறிகள் (Indirect Symptoms) எனும்போது கற்களால் பித்தநீர் சரியாக செல்லாமல், அஜீரணம், வயிறு உப்பினாற்போன்ற உணர்வு, பசியின்மை போன்றவை இருக்கலாம்..நேரடியான அறிகுறிகள், (Direct Symptoms) என்றால் பாதிக்கப்பட்டவருக்கு உணவுக்குப் பின் வயிற்றின் மேற்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். தொடர்ந்து வாந்தி வரலாம்..சிலர் ஏதாவது வாயு கோளாறாக இருக்கும் என்று அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். வலி தொடர்ந்து இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்..இவை எதனால் உருவாகின்றன?உணவில் அதிக கொழுப்பு சத்து, அதிக எண்ணை சேர்ப்பவர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு, ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பித்தப்பை கற்கள் ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதே போல, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பித்தப்பை கற்கள் வர வாய்ப்பு உண்டு..முன்பெல்லாம் எக்ஸ்–ரே எடுத்து கண்டுபிடிப்பார்கள் அல்லவா?ஆமாம்… ஆனால், இப்போது எக்ஸ்–ரே எடுப்பதில்லை. அல்ட்ரா சவுண்ட் (Ultra sound scan) மூலம் கண்டறியலாம். சில கேஸ்களில், கால்ப்ளேடரில் இருந்து பித்தநீர்க் குழாய்க்குள் (Bile duct) கற்கள் வந்து விடும். இதனால் மஞ்சள் காமாலை போன்ற நோய் வரக்கூடும். இவற்றை துல்லியமாக MRCP (Magnetic Resonance Cholangiopancreatography) சோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். கணையம், பித்தநீர்க் குழாய், பித்தப்பை எங்கே கற்கள் இருந்தாலும் தெரிந்து விடும்..பித்தப்பை கற்கள் உயிருக்கு அபாயம் ஏற்படுத்தக் கூடியவையா?சிறுநீரகக் கற்களைப் போல அல்லாமல், பித்தப்பையில் மிகச்சிறிய கற்கள், இருந்தால் எளிதில் தொற்று ஏற்பட்டு மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரக்கூடும். எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல இந்த அபாயம். தவிர, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் multi complications சிக்கல்கள் உண்டாகலாம்..பெரிய துளையிட்டு வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்கை இப்போது செய்வதில்லை என்கிறீர்கள். தற்சமயம் செய்யும் முறை என்ன?இந்த அறுவை சிகிச்சையை Cholecystectomy என்கிறோம். 5 மில்லி மீட்டர் அளவுக்கு நான்கு சிறிய துளைகள் போட்டு அதன் வழியே பாதிக்கப்பட்ட பித்தப்பையும், அதன் கற்களும் நீக்கப்படுகின்றன. மூன்று துளைகளில் லேபரோஸ்கோபி கருவிகளும் ஒன்றில் சிறிய கேமராவும் செலுத்தப்படுகின்றன. கேமரா வழியே அருகில் மானிட்டரில் பார்த்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பித்தப்பை வீங்கி பெரிதாக, திக்காக இருந்தால், அதை Decompress செய்து கருவியுடன் இணைந்த பைக்குள் போட்டு வெளியே எடுத்து விடுவோம். மிக கவனமாக செய்ய வேண்டிய செயல்முறை என்பதால் சவாலாக இருந்தாலும் வெற்றிகரமாகவே செய்து வருகிறோம்..எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்?காலையில் வந்து லேபரோஸ்கோபி செய்த பின்னர், மாலையில் வீடு திரும்பி விடலாம். நவீன மருத்துவம் இந்த சிகிச்சையை எளிதாக்கி விட்டது. எனவே, பயப்படாமல் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ளுங்கள்..பித்தப்பையை நீக்கி விட்டால் உடலுக்கு தீங்கு ஒன்றும் வராதே டாக்டர்?எதுவும் ஏற்படாது. ஆனால், பைல் சேமிக்கும் உறுப்பு நீக்கப்பட்டதால் உணவை ஜீரணிக்கும் பைல் அளவு குறையும். கொழுப்பு, எண்ணெய் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. அது எப்போதுமே, யாருக்குமே நல்லதுதானே!