– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.கடைபிடிக்க…மழைக்காலத்தில் சமையலறையில் பின்பற்ற, வீட்டைப் பராமரிக்க, குழந்தைகளை கவனிக்க, வெளியில் புறப்படும்போது சமாளிக்கத் தேவையான குறிப்புகள் இதோ :.l மார்க்கெட்டில் இருந்து வாங்கிவரும் பழம் மற்றும் காய்கறிகளை பிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு சுத்தமாகக் கழுவுவது நல்லது. காய்கறி நறுக்கும் பலகையை ஒவ்வொரு முறை பயன்படுத்தியதும் கழுவி வைக்கவும். இதில் கிருமிகள் எளிதில் வளரும். ஆதலால், காய் நறுக்கும் கத்தி, பலகை, அரிவாள்மனை போன்றவற்றை கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்..l உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு புதினா, எலுமிச்சை, துளசி போன்றவற்றை உணவில் சேர்க்கவும். பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்ப்பது நல்லது. இதில் வைட்டமின்களும் மினரல்களும் அதிக அளவில் காணப்படும்..l கொதிக்க வைத்த சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை நாள்தோறும் சுத்தமாகக் கழுவ வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரில் துளசி இலைகளைப் போட்டு குடிப்பது, சளி வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கையாகும்..l மழைக்காலங்களில் பால், தண்ணீருடன் தேனைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது..l பச்சடி, ராய்த்தா, பன்னீர் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது..l வீட்டில் தயாரிக்கப்பட்ட காய்கறி சூப் அருந்துவது, தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் அருந்துவது, மாதுளம் பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது..l புதிதாக அறுவடை செய்த தானியங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், பழைய தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது..l மழைக்காலத்தில் பாகற்காய் வெந்தயம் சாப்பிட்டால் தொற்று வராமல் இருக்கும். ஆகவே, இவற்றை உணவில் அவ்வப்போது சேர்க்கவும்..l உணவில் சூப், பசும் பால் மற்றும் இளநீர் அதிகம் சேர்க்கவும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும். அதிக எண்ணெய், மசாலா வேண்டாம். தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்..தவிர்க்க….l அதிகம் பழுத்த, நிறம் மாறிய பழங்களைச் சாப்பிட வேண்டாம்..l மழைக்காலங்களில் வறுத்த, பொரித்த மசாலா உணவுகளைச் சாப்பிட வேண்டாம். மீதமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்..l நறுக்கிய, முளை கட்டிய, வேக வைத்த பொருட்களை கடைகளிலிருந்து வாங்காமல் இருப்பது நல்லது..l வாயு மற்றும் குடலில் வாயு உற்பத்தி செய்யும் பொருட்களான கோஸ் மற்றும் ராஜ்மா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் அளவுக்கதிகமான தானியங்களை வாங்கி வைக்காமல் இருப்பது நல்லது..l சிறிய இடைவேளைகளில் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்..l சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்..l சாலட் செய்வதற்கு முன்பு காய்கறிகளை நன்றாகக் கழுவவும். முடிந்த மட்டும் சாலட் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் பச்சை காய்கறி சாலட் மற்றும் அதிக பழங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில், இவற்றில் ஈரப்பதம் காரணமாக பல பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் குடிகொண்டிருக்கும்..l உணவில் உப்பு குறைவாக சேர்க்கவும். உப்பு அதிகமானால் சிலருக்கு வாய்வு உண்டாவதுடன் உடலில் நீர் சேரும்..l கடல் உணவுகளைத் தவிர்ப்பது நலம்..l புளிப்பான உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது..l சோளம், கம்பு, சிறுதானியங்கள் போன்றவற்றில் அதிக போஷாக்கு உள்ளது. அதனால் அதை அதிகம் உபயோகப்படுத்தலாம். தண்ணீர் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம்..l மழைக்காலத்தில் ஜீரண சக்தி குறைந்து விடும். அதனால் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாது. இரண்டாவது, இந்தக் காலத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் அதிக செயல்திறனுடன் காணப்படும். அதனால் உணவு விஷயத்தில் சுகாதாரமான சத்துள்ள உணவை சாப்பிடாவிட்டால் தொற்று வெகு எளிதில் தாக்க வாய்ப்புள்ளது..மேலும்….l வீட்டிற்கு அருகில் மழை தண்ணீர் தேங்க விடாமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கொசுவை விரட்ட மாலை நேரம் வீட்டில் காய்ந்த வேப்ப இலைகளை நெருப்பிலிட்டு புகை போடவும்..l கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்க சாக்கடைகள் குழிகள் மற்றும் அக்கம்பக்கம் தேங்கியிருக்கும் தண்ணீரில் மண்ணெண்ணெய் அல்லது பினாயில் தெளிக்கவும்..l குழந்தைகளை சேறு மற்றும் அசுத்தமான மழைத்தண்ணீரில் விளையாட விடாமல் பாதுகாப்பது அவசியம்..l குழந்தைகளுக்கு மழைக்காலத்திற்கு ஏற்ப உடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகளின் மார்புப் பகுதியில் குளிர்க்காற்று நேரிடையாகப் படாதவாறு ஆடைகளை அணிவிக்க வேண்டும். இதனால் சளி, ஜலதோஷம் ஏற்படாது..எச்சரிக்கை….l மழைக்காலத்தில் வெளியில் செல்ல நேர்ந்தால், முதலில் தன்னிடமுள்ள மொபைலை ஒரு பிளாஸ்டிக் பை அல்லது கவரில் போடவும்..l மின் கம்பம் மற்றும் கம்பிகளை விட்டு விலகி இருக்கவும்..l பேருந்து நிழற்குடையின் கீழ் நின்று மழை நிற்பதற்காக காத்திருக்கவும். மரத்தின் அடியில் நிற்க வேண்டாம்..l தெரியாதவர்களிடம் லிப்ட் கேட்க வேண்டாம்..l மழைக்காலத்தில் வெளியில் கிளம்பும் முன் வண்டியின் வைப்பர்ஸ், டயர்ஸ், பிரேக், பெட்ரோல் அளவு ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளவும்..l மழை வேகமாக வந்தாலும் மெதுவாக வந்தாலும் வண்டியை மெல்ல ஓட்டுவதால் விபத்துகளைத் தவிர்க்கலாம்..l மழையுடன் புயல் காற்று வீசினால் வண்டியை சாலையோரம் கூட்டம் நிறைந்த இடத்தில் நிறுத்தவும். அல்லது சாலையோரம் வண்டியை நிறுத்தி கார் கண்ணாடியை மூடவும். லைட்டை போட வேண்டாம். மழை குறைந்த பிறகு கார்ஓட்டவும். அவ்வப்போது மொபைலில் தங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் தாங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் கூறவும்..இவை அனைத்தையும் பின்பற்றினால் மழைக்காலம் சந்தோஷமாக நிறைவுறும்.
– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.கடைபிடிக்க…மழைக்காலத்தில் சமையலறையில் பின்பற்ற, வீட்டைப் பராமரிக்க, குழந்தைகளை கவனிக்க, வெளியில் புறப்படும்போது சமாளிக்கத் தேவையான குறிப்புகள் இதோ :.l மார்க்கெட்டில் இருந்து வாங்கிவரும் பழம் மற்றும் காய்கறிகளை பிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு சுத்தமாகக் கழுவுவது நல்லது. காய்கறி நறுக்கும் பலகையை ஒவ்வொரு முறை பயன்படுத்தியதும் கழுவி வைக்கவும். இதில் கிருமிகள் எளிதில் வளரும். ஆதலால், காய் நறுக்கும் கத்தி, பலகை, அரிவாள்மனை போன்றவற்றை கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்..l உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு புதினா, எலுமிச்சை, துளசி போன்றவற்றை உணவில் சேர்க்கவும். பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்ப்பது நல்லது. இதில் வைட்டமின்களும் மினரல்களும் அதிக அளவில் காணப்படும்..l கொதிக்க வைத்த சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை நாள்தோறும் சுத்தமாகக் கழுவ வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரில் துளசி இலைகளைப் போட்டு குடிப்பது, சளி வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கையாகும்..l மழைக்காலங்களில் பால், தண்ணீருடன் தேனைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது..l பச்சடி, ராய்த்தா, பன்னீர் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது..l வீட்டில் தயாரிக்கப்பட்ட காய்கறி சூப் அருந்துவது, தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் அருந்துவது, மாதுளம் பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது..l புதிதாக அறுவடை செய்த தானியங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், பழைய தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது..l மழைக்காலத்தில் பாகற்காய் வெந்தயம் சாப்பிட்டால் தொற்று வராமல் இருக்கும். ஆகவே, இவற்றை உணவில் அவ்வப்போது சேர்க்கவும்..l உணவில் சூப், பசும் பால் மற்றும் இளநீர் அதிகம் சேர்க்கவும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும். அதிக எண்ணெய், மசாலா வேண்டாம். தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்..தவிர்க்க….l அதிகம் பழுத்த, நிறம் மாறிய பழங்களைச் சாப்பிட வேண்டாம்..l மழைக்காலங்களில் வறுத்த, பொரித்த மசாலா உணவுகளைச் சாப்பிட வேண்டாம். மீதமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்..l நறுக்கிய, முளை கட்டிய, வேக வைத்த பொருட்களை கடைகளிலிருந்து வாங்காமல் இருப்பது நல்லது..l வாயு மற்றும் குடலில் வாயு உற்பத்தி செய்யும் பொருட்களான கோஸ் மற்றும் ராஜ்மா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் அளவுக்கதிகமான தானியங்களை வாங்கி வைக்காமல் இருப்பது நல்லது..l சிறிய இடைவேளைகளில் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்..l சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்..l சாலட் செய்வதற்கு முன்பு காய்கறிகளை நன்றாகக் கழுவவும். முடிந்த மட்டும் சாலட் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் பச்சை காய்கறி சாலட் மற்றும் அதிக பழங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில், இவற்றில் ஈரப்பதம் காரணமாக பல பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் குடிகொண்டிருக்கும்..l உணவில் உப்பு குறைவாக சேர்க்கவும். உப்பு அதிகமானால் சிலருக்கு வாய்வு உண்டாவதுடன் உடலில் நீர் சேரும்..l கடல் உணவுகளைத் தவிர்ப்பது நலம்..l புளிப்பான உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது..l சோளம், கம்பு, சிறுதானியங்கள் போன்றவற்றில் அதிக போஷாக்கு உள்ளது. அதனால் அதை அதிகம் உபயோகப்படுத்தலாம். தண்ணீர் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம்..l மழைக்காலத்தில் ஜீரண சக்தி குறைந்து விடும். அதனால் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாது. இரண்டாவது, இந்தக் காலத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் அதிக செயல்திறனுடன் காணப்படும். அதனால் உணவு விஷயத்தில் சுகாதாரமான சத்துள்ள உணவை சாப்பிடாவிட்டால் தொற்று வெகு எளிதில் தாக்க வாய்ப்புள்ளது..மேலும்….l வீட்டிற்கு அருகில் மழை தண்ணீர் தேங்க விடாமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கொசுவை விரட்ட மாலை நேரம் வீட்டில் காய்ந்த வேப்ப இலைகளை நெருப்பிலிட்டு புகை போடவும்..l கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்க சாக்கடைகள் குழிகள் மற்றும் அக்கம்பக்கம் தேங்கியிருக்கும் தண்ணீரில் மண்ணெண்ணெய் அல்லது பினாயில் தெளிக்கவும்..l குழந்தைகளை சேறு மற்றும் அசுத்தமான மழைத்தண்ணீரில் விளையாட விடாமல் பாதுகாப்பது அவசியம்..l குழந்தைகளுக்கு மழைக்காலத்திற்கு ஏற்ப உடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகளின் மார்புப் பகுதியில் குளிர்க்காற்று நேரிடையாகப் படாதவாறு ஆடைகளை அணிவிக்க வேண்டும். இதனால் சளி, ஜலதோஷம் ஏற்படாது..எச்சரிக்கை….l மழைக்காலத்தில் வெளியில் செல்ல நேர்ந்தால், முதலில் தன்னிடமுள்ள மொபைலை ஒரு பிளாஸ்டிக் பை அல்லது கவரில் போடவும்..l மின் கம்பம் மற்றும் கம்பிகளை விட்டு விலகி இருக்கவும்..l பேருந்து நிழற்குடையின் கீழ் நின்று மழை நிற்பதற்காக காத்திருக்கவும். மரத்தின் அடியில் நிற்க வேண்டாம்..l தெரியாதவர்களிடம் லிப்ட் கேட்க வேண்டாம்..l மழைக்காலத்தில் வெளியில் கிளம்பும் முன் வண்டியின் வைப்பர்ஸ், டயர்ஸ், பிரேக், பெட்ரோல் அளவு ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளவும்..l மழை வேகமாக வந்தாலும் மெதுவாக வந்தாலும் வண்டியை மெல்ல ஓட்டுவதால் விபத்துகளைத் தவிர்க்கலாம்..l மழையுடன் புயல் காற்று வீசினால் வண்டியை சாலையோரம் கூட்டம் நிறைந்த இடத்தில் நிறுத்தவும். அல்லது சாலையோரம் வண்டியை நிறுத்தி கார் கண்ணாடியை மூடவும். லைட்டை போட வேண்டாம். மழை குறைந்த பிறகு கார்ஓட்டவும். அவ்வப்போது மொபைலில் தங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் தாங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் கூறவும்..இவை அனைத்தையும் பின்பற்றினால் மழைக்காலம் சந்தோஷமாக நிறைவுறும்.