வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– எம்.வசந்தா மாரிமுத்து, சென்னை.எள்ளுருண்டை:.தேவையானவை : நாட்டு எள் (வெள்ளை) – 1 கப், வெல்லம் – 1 கப், பச்சரிசி – 1 கைப்பிடி, ஏலத்தூள் – சிட்டிகை.செய்முறை : எள்ளைக் கரைத்து காயவைத்து, வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டுப் பொரிக்கவும். அரிசியை ஊறவைத்து வடிகட்டி, மிக்ஸியில் ரவையாக அரைத்து, இத்துடன் தூள் செய்த வெல்லம், எள்ளு, பொரி, ஏலம் சேர்த்து நன்கு சுற்றி எடுத்து உருண்டை செய்து நிவேதனம் செய்யலாம்..கம்பு பொரி உருண்டை:.தேவையானவை : கம்பு – 1 கப், வெல்லம் – 1 கப், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – சிட்டிகை, நெய் – 1 ஸ்பூன்..செய்முறை : கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு பூப்போல பொரிக்கவும். வேர்க்கடலையை வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். வெல்லத்தை தட்டிப்போட்டு தண்ணீர் சேர்த்து கம்பிப்பாகு வைத்து, இதில் பொரித்த கம்பு, வேர்க்கடலை, ஏலம் போட்டுக் கிளறி நெய் சேர்த்து உருண்டைகள் பிடித்து நிவேதனம் செய்யலாம். கலவையாகப் போட்டுக் கிளறி உடனடியாக கையில் சிறிது அரிசி மாவு அல்லது நெய் தொட்டு உருண்டைகள் பிடிக்கவும்..அரிசி பொரி உருண்டை:.தேவையானவை : பச்சரிசி – 1 கப், வெல்லம் – 1 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் – 1 கப், நெய் – 1 டீஸ்பூன்..செய்முறை : ஒரு வாணலியில் வெறும் பச்சரிசியை பொன்னிறமாக வறுக்கவும். அது ஆறியதும் மிக்ஸியில் ரவை போல பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிதாக தண்ணீர் சேர்த்து கம்பிப்பாகு இல்லாமல் கொதித்தவுடன் இறக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி வறுத்து, அதில் பொடித்த அரிசி மாவை கட்டியில்லாமல் வறுத்து, அதில் வெல்லத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து குறைந்த தணலில் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பின் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். இது பாரம்பரியமான அரிசி பொறி உருண்டை..அவல் பொரி உருண்டை:.தேவையானவை : அவல் பொரி அல்லது அரிசிப் பொரி அல்லது நெல் பொரி (ஏதாவது) – 2 கப், வெல்லத் தூள் – 1 கப், சுக்குப் பொடி – கால் டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், முந்திரி – 10, நெய் – தேவைக்கு..செய்முறை : வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காயை லேசாக வறுக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து மண் போக வடிகட்டி கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். அதில் சுக்குப் பொடி, ஏலப்பொடி, வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய் பொரி போட்டு நன்கு கலந்து, சிறிது நெய் அல்லது அரிசி மாவு தொட்டு பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். ஆறியதும் இறுகிவிடும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்யவும்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– எம்.வசந்தா மாரிமுத்து, சென்னை.எள்ளுருண்டை:.தேவையானவை : நாட்டு எள் (வெள்ளை) – 1 கப், வெல்லம் – 1 கப், பச்சரிசி – 1 கைப்பிடி, ஏலத்தூள் – சிட்டிகை.செய்முறை : எள்ளைக் கரைத்து காயவைத்து, வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டுப் பொரிக்கவும். அரிசியை ஊறவைத்து வடிகட்டி, மிக்ஸியில் ரவையாக அரைத்து, இத்துடன் தூள் செய்த வெல்லம், எள்ளு, பொரி, ஏலம் சேர்த்து நன்கு சுற்றி எடுத்து உருண்டை செய்து நிவேதனம் செய்யலாம்..கம்பு பொரி உருண்டை:.தேவையானவை : கம்பு – 1 கப், வெல்லம் – 1 கப், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் – சிட்டிகை, நெய் – 1 ஸ்பூன்..செய்முறை : கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு பூப்போல பொரிக்கவும். வேர்க்கடலையை வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். வெல்லத்தை தட்டிப்போட்டு தண்ணீர் சேர்த்து கம்பிப்பாகு வைத்து, இதில் பொரித்த கம்பு, வேர்க்கடலை, ஏலம் போட்டுக் கிளறி நெய் சேர்த்து உருண்டைகள் பிடித்து நிவேதனம் செய்யலாம். கலவையாகப் போட்டுக் கிளறி உடனடியாக கையில் சிறிது அரிசி மாவு அல்லது நெய் தொட்டு உருண்டைகள் பிடிக்கவும்..அரிசி பொரி உருண்டை:.தேவையானவை : பச்சரிசி – 1 கப், வெல்லம் – 1 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் – 1 கப், நெய் – 1 டீஸ்பூன்..செய்முறை : ஒரு வாணலியில் வெறும் பச்சரிசியை பொன்னிறமாக வறுக்கவும். அது ஆறியதும் மிக்ஸியில் ரவை போல பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிதாக தண்ணீர் சேர்த்து கம்பிப்பாகு இல்லாமல் கொதித்தவுடன் இறக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி வறுத்து, அதில் பொடித்த அரிசி மாவை கட்டியில்லாமல் வறுத்து, அதில் வெல்லத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து குறைந்த தணலில் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பின் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். இது பாரம்பரியமான அரிசி பொறி உருண்டை..அவல் பொரி உருண்டை:.தேவையானவை : அவல் பொரி அல்லது அரிசிப் பொரி அல்லது நெல் பொரி (ஏதாவது) – 2 கப், வெல்லத் தூள் – 1 கப், சுக்குப் பொடி – கால் டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், முந்திரி – 10, நெய் – தேவைக்கு..செய்முறை : வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காயை லேசாக வறுக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து மண் போக வடிகட்டி கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். அதில் சுக்குப் பொடி, ஏலப்பொடி, வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய் பொரி போட்டு நன்கு கலந்து, சிறிது நெய் அல்லது அரிசி மாவு தொட்டு பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். ஆறியதும் இறுகிவிடும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்யவும்.