இணையதளத்தில் நேரடியாகப் பதிவான 'comments'.பாகம்பிரியாள் கோயில் பற்றிப் படித்ததும் அங்கு சென்று தரிசிக்க ஆவல்கொண்டேன். கோயில் பற்றிய செய்திகள் பயனுள்ளதாக இருந்தது.– மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.சங்கடம் தரும் சந்திப்புகளில் தற்பெருமைக்காரர்களைச் சமாளிப்பதற்குச் சொல்லப்பட்ட யோசனைகள், 'ஏ ஒன்…' அவற்றைப் பின்பற்றி விடுவதென முடிவு செய்து விட்டேன்.– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.பத்ம விபூஷன் டாக்டர் பத்மாவதி மருத்துவ உலகில் செய்த சாதனைகள் பற்றிய செய்திகளைப் படித்து வியந்து போனோம். தன் சகோதரியுடன் சேர்ந்து அறக்கட்டளையை உருவாக்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் நோயாளிகளின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி.டாக்டர் பத்மாவதியின் மருத்துவ சேவை போற்றுதற்குரியது. தனது வாழ்நாள் மற்றும் சேமிப்பு முழுவதையும் மனித குல மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தது மிகப்பெரிய தியாகம். Hats off to her.– எஸ்.ஜெயகாந்தி.கொரோனாவினைக் கடந்து சகஜ நிலைமைக்கு கல்லூரி மாணவ, மாணவியர் திரும்பி விட்டனர் என்பதற்கு உதாரணமாக இருந்தது, 'கொரோனா காலமும்கல்லூரிப் படிப்பும்!' கட்டுரை. தமிழகம் முழுவதும் கல்லூரிக் கல்வி சிறப்புடன் நடக்கிறது என்பதை மங்கையர் மலர் மூலம் அனைவரும் அறிந்துகொண்டோம்.– து.சேரன், ஆலங்குளம்.ரொம்பவும் உபயோகமான தொடர். ஆரம்பமே அசத்தல்!– எஸ். ஜெயகாந்தி.சின்னத்திரை சீரியல்களில் பெண்களுக்குப் பெண்களே எதிரி போல் காட்டப்படுவது பற்றிய கேள்விக்கு ஆசிரியர் சிறந்த மனோதத்துவ முறையில் அளித்த பதில் ரசிக்கக் கூடியதாக இருந்தது. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் அந்த சீரியல்களில் வரும் கேரக்டர்களை நம்மோடு இணைத்துப் பொருத்திப் பார்த்துக்கொள்வதால்தான் சீரியல்கள் பெண்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ஆசிரியர் கூறுவதைப் போல் சீரியல் பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு மற்ற உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்த முற்பட வேண்டும்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி.புனித் மறைவு பெரிய இழப்பு. மறைந்த பிறகும் பிறருக்காக கண் தானம் செய்து தன்னுடைய நல்ல குணத்தை உலகறியச் செய்தவர். இவ்வுலகம் இருக்கும் வரை புனித் புகழும் மணம் வீசும்..சின்னத்திரை சீரியல்களை பெரிதுபடுத்தும் பெண்களின் மனம் மாற அனுஷா மேடத்தின், 'டிப்ஸ்' அருமை.– து.சேரன், ஆலங்குளம்.'மாமி' கதை அருமை. அட்டகாசம். மிகவும் யதார்த்தமாக இருந்தது. ரசித்துப் படித்தோம்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி.விபூதி பார்த்த பலன் கதை அருமை. திருநீறு இல்லாத நெற்றியும், நெய் இல்லாத உணவும் பாழ் என்கிறார் ஔவையார். கடவுளை நன்றி உணர்வுடன் வணங்கும் அடையாளம்தான் விபூதி பூசுவது. மேனியெங்கும் திருநீறு பூசியிருப்பதாக சிவனை தேவாரம் போற்றுகிறது. விபூதி பூசுகின்ற நம் உள்ளமும் தூய்மை பெற இறைவனை வேண்டுவோம்.– வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்,.திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோயிலின் தல வரலாற்றையும், சிறப்புகளையும் படித்து மெய்சிலிர்த்துப் போனேன். தோஷம் நீங்கவும், நோய்கள் தீரவும், கொடிய விஷம் குணமாகவும் அருள்பாலிக்கின்ற பாகம்பிரியாள் தெய்வம் பக்தர்களுக்கெல்லாம் ஓர் வரப்பிரசாதம்!– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.'மாமி' கதை வெகு ஜோர்! இந்தக் காலத்திலும் புத்தகம் வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் அது பாராட்டுதற்குரியது..அனுஷா நடராஜன் அவர்களின், 'ஒரு வார்த்தை' கதை அற்புதம். விடியும் என்று விண்ணை நம்பு! முடியும் என்று உன்னை நம்பு! பிறர் தயவில் நிற்கக் கூடாது, தன்னால் முடியும் என்பதற்கு ஒரு பாடம்.– சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்.சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி, கொரோனா என்ற சோதனை காலத்திலும் கல்வியில் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல்; மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்வழிகாட்டியாய் திகழ்வது மிகவும் பாராட்டுதற்குரிய விஷயமாகும்.– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை
இணையதளத்தில் நேரடியாகப் பதிவான 'comments'.பாகம்பிரியாள் கோயில் பற்றிப் படித்ததும் அங்கு சென்று தரிசிக்க ஆவல்கொண்டேன். கோயில் பற்றிய செய்திகள் பயனுள்ளதாக இருந்தது.– மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.சங்கடம் தரும் சந்திப்புகளில் தற்பெருமைக்காரர்களைச் சமாளிப்பதற்குச் சொல்லப்பட்ட யோசனைகள், 'ஏ ஒன்…' அவற்றைப் பின்பற்றி விடுவதென முடிவு செய்து விட்டேன்.– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.பத்ம விபூஷன் டாக்டர் பத்மாவதி மருத்துவ உலகில் செய்த சாதனைகள் பற்றிய செய்திகளைப் படித்து வியந்து போனோம். தன் சகோதரியுடன் சேர்ந்து அறக்கட்டளையை உருவாக்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் நோயாளிகளின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி.டாக்டர் பத்மாவதியின் மருத்துவ சேவை போற்றுதற்குரியது. தனது வாழ்நாள் மற்றும் சேமிப்பு முழுவதையும் மனித குல மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தது மிகப்பெரிய தியாகம். Hats off to her.– எஸ்.ஜெயகாந்தி.கொரோனாவினைக் கடந்து சகஜ நிலைமைக்கு கல்லூரி மாணவ, மாணவியர் திரும்பி விட்டனர் என்பதற்கு உதாரணமாக இருந்தது, 'கொரோனா காலமும்கல்லூரிப் படிப்பும்!' கட்டுரை. தமிழகம் முழுவதும் கல்லூரிக் கல்வி சிறப்புடன் நடக்கிறது என்பதை மங்கையர் மலர் மூலம் அனைவரும் அறிந்துகொண்டோம்.– து.சேரன், ஆலங்குளம்.ரொம்பவும் உபயோகமான தொடர். ஆரம்பமே அசத்தல்!– எஸ். ஜெயகாந்தி.சின்னத்திரை சீரியல்களில் பெண்களுக்குப் பெண்களே எதிரி போல் காட்டப்படுவது பற்றிய கேள்விக்கு ஆசிரியர் சிறந்த மனோதத்துவ முறையில் அளித்த பதில் ரசிக்கக் கூடியதாக இருந்தது. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் அந்த சீரியல்களில் வரும் கேரக்டர்களை நம்மோடு இணைத்துப் பொருத்திப் பார்த்துக்கொள்வதால்தான் சீரியல்கள் பெண்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ஆசிரியர் கூறுவதைப் போல் சீரியல் பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு மற்ற உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்த முற்பட வேண்டும்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி.புனித் மறைவு பெரிய இழப்பு. மறைந்த பிறகும் பிறருக்காக கண் தானம் செய்து தன்னுடைய நல்ல குணத்தை உலகறியச் செய்தவர். இவ்வுலகம் இருக்கும் வரை புனித் புகழும் மணம் வீசும்..சின்னத்திரை சீரியல்களை பெரிதுபடுத்தும் பெண்களின் மனம் மாற அனுஷா மேடத்தின், 'டிப்ஸ்' அருமை.– து.சேரன், ஆலங்குளம்.'மாமி' கதை அருமை. அட்டகாசம். மிகவும் யதார்த்தமாக இருந்தது. ரசித்துப் படித்தோம்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி.விபூதி பார்த்த பலன் கதை அருமை. திருநீறு இல்லாத நெற்றியும், நெய் இல்லாத உணவும் பாழ் என்கிறார் ஔவையார். கடவுளை நன்றி உணர்வுடன் வணங்கும் அடையாளம்தான் விபூதி பூசுவது. மேனியெங்கும் திருநீறு பூசியிருப்பதாக சிவனை தேவாரம் போற்றுகிறது. விபூதி பூசுகின்ற நம் உள்ளமும் தூய்மை பெற இறைவனை வேண்டுவோம்.– வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்,.திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோயிலின் தல வரலாற்றையும், சிறப்புகளையும் படித்து மெய்சிலிர்த்துப் போனேன். தோஷம் நீங்கவும், நோய்கள் தீரவும், கொடிய விஷம் குணமாகவும் அருள்பாலிக்கின்ற பாகம்பிரியாள் தெய்வம் பக்தர்களுக்கெல்லாம் ஓர் வரப்பிரசாதம்!– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.'மாமி' கதை வெகு ஜோர்! இந்தக் காலத்திலும் புத்தகம் வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் அது பாராட்டுதற்குரியது..அனுஷா நடராஜன் அவர்களின், 'ஒரு வார்த்தை' கதை அற்புதம். விடியும் என்று விண்ணை நம்பு! முடியும் என்று உன்னை நம்பு! பிறர் தயவில் நிற்கக் கூடாது, தன்னால் முடியும் என்பதற்கு ஒரு பாடம்.– சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்.சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி, கொரோனா என்ற சோதனை காலத்திலும் கல்வியில் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல்; மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்வழிகாட்டியாய் திகழ்வது மிகவும் பாராட்டுதற்குரிய விஷயமாகும்.– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை