-எம்.கோதண்டபாணி.வைகாசி மாத முழு நிலவு நாளான பௌர்ணமி தினத்தை பௌத்தர்கள் புத்த பூர்ணிமா என உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அன்பையும் அமைதியையும் அகிலம் யாவும் உணர வைத்த புத்தர் பிரானின் அவதாரத் திருநாள் இது..இன்றைய நேபாள நாட்டின் கபிலவஸ்து நகரத்தில் கி.மு.623ம் ஆண்டு ஒரு அரச தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் புத்தபிரான். 'சித்தார்த்தா' எனப் பெயர் சூட்டப்பட்ட அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் அன்பின் அடையாளத்தை, கருணையின் ஊற்றை மக்களின் மனங்களில் பெருகவைக்கப்போகும் அவதாரம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்க நியாயமில்லை. பிறக்கும்போதே தமது உடலில் முப்பத்தியிரண்டு புனித அடையாளங்களைப் பெற்று அவதரித்ததாம் அந்தக் குழந்தை..குழந்தையின் ஜனன சமயம் அதன் ஜோதிடம் கணிக்கப்பட்டபோது, 'ஒன்று அக்குழந்தை மாபெரும் சக்கரவர்த்தியாக நாடாளும், அல்லது உலகம் போற்றும் தனிப்பெரும் துறவியாகும்' என்று கண்டறியப்பட்டது. இந்தக் கணிப்பினால் கவலையுற்ற அக்குழந்தையின் பெற்றோர் அதன் வாழ்வை நான்கு சுவர்களுக் குள்ளேயே வரையறுத்திருந்தனர். கனன்று எழும் நெருப்பை காகிதத்தினால் மறைக்க இயலுமா? பொங்கியெழும் பேரலையை பூஞ்சாடிக்குள் அடக்கத்தான் முடியுமா? அப்படித்தான் ஆனது சித்தார்த்தனின் வாழ்வும். சிறு வயது முதலே அடுத்தவரின் துன்பத்தைத் தனது துன்பமாகக் கண்டு வாடும் இயல்பு சித்தார்த்தருக்கு இருந்தது..உலக வாழ்வின் சிற்றின்பங்களில் பிடிப்பில்லாமல் வாழ்ந்த சித்தார்த்தனுக்கு, அவனது பதினாறு வயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டது. அதன் பலனாக ஒரு மகவும் அவருக்கு உதித்தது. ஆனாலும், பண்பட்ட மனதை பாத்தியப்படுத்த யாரால்தான் முடியும்? வாழ்வை இழந்த ஒரு வயோதிகரும் ஒரு உயிரற்ற பிணமும், 'துயரங்களாலும், கணிக்க முடியாத இடர்களும் நிறைந்தது வாழ்க்கை' என்பதை அவருக்கு உணர்த்தியது. தனது 29வது வயதில் அரண்மனை ஆடம்பர வாழ்வை உதறி, அகிலமே சொந்தம் கொண்டாடும் மகா துறவியாக வெளியேறினார்.. அரச போக வாழ்விலிருந்து வெளியேறிய அவர், மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தத் துன்பங்களுக்கான காரணத்தைத் தேடி அலைந்தார். கடைசியாக, அவரது கேள்விக்கான பதிலை, கயாவின் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தவம் இயற்றி அறிந்து கொண்டார். அப்படி அவர் தனக்குத்தானே ஞானம் பெற்றது ஒரு வைகாசி பௌர்ணமி தினமாகும். அப்போது அவருக்கு அகவை முப்பத்தாறு. 'அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை' என உணர்ந்த சித்தார்த்தர், வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை அறிந்து மக்களுக்கு அதை உணர்த்தியதால் அன்று முதல் அவர் கௌதம புத்தர் என்று அழைக்கப்பட்டார். போதி மரத்திற்குக் கீழே ஞானம் பெற்ற புத்த பெருமான் உலகம் முழுவதும் தர்மத்தையும் அதன் முக்கியத்துவத்தை தனது போதனைகள் மூலம் பரப்பத் தொடங்கினார்..தனது எண்பதாவது வயதில் நேபாளத்தின் எல்லையில் உள்ள குஷிநகர் பகுதியில் புத்த பெருமான் தங்கியிருந்தார். அன்று சீடர் கண்டா என்பவர் புத்த பெருமானுக்கு உணவு கொடுக்க விரும்பினார். அதனை ஏற்க மறுத்த புத்தர், அந்த உணவை அடுத்த நாள் மதியம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அடுத்த நாள் அந்த உணவு பறிமாறப்பட்டபோது அது விஷமாக மாறியிருந்தது. அதனை தனது ஞானத்தால் முன்கூட்டியே அறிந்திருந்த புத்த பெருமான் தான் மட்டும் அந்த உணவை மகிழ்வுடன் உண்டுவிட்டு, மீதமுள்ள உணவை மண்ணில் புதைத்துவிடும்படி சீடரிடம் கூறினார்..சற்று நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌதமர், தனது சீடர் ஆனந்தனை அழைத்து, 'கண்டா வழங்கிய உணவில் எந்தக் குறையும் இல்லை. அதுவே நான் சாப்பிட்ட கடைசி சுவையான உணவு' என்பதை அனைவருக்கும் உணர்த்தும்படிக் கூறினார். என்னே புத்த மகானின் மகா கருணை! அதோடு, மரணப்படுக்கையில் இருந்த புத்த பெருமான் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்து, 'உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்' என்று கூறினார். அந்த நிலையில் அவர்களின் மனதில் எந்தக் கேள்வியும் எழவில்லை..ஆனால், தலைமை சீடர் ஆனந்தா மட்டும், "குருவே உங்கள் வாழ்வில் நீங்கள் இறைவனைக் கண்டது உண்டா? அதுபற்றி எதிர்காலத்தில் என்னிடம் யாரேனும் கேட்டால் நான் என்ன பதில் கூறட்டும்?" என்று கேட்டார்..அதற்கு புத்தர், "ஆனந்தா எனது வாழ்வில் நான் இறைவனைக் கண்டதேயில்லை. ஒருவேளை நீ உனது வாழ்வில் இறைவனைக் கண்டால் அதுபற்றி மக்களுக்கு எடுத்துக் கூறலாம்" என்று பதில் உரைத்தார். இறுதியாக, 'அனைத்துக் கலவையான விஷயங்களும் அழியக்கூடியது. வாழ்வின் உனது சொந்த விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடு' என உரைத்தார். அதன்பின் புத்த பெருமான் பரிநிர்வாணம் எனப்படும் மோட்ச கதியை அடைந்தார். அப்படி கௌதம புத்தர் மோட்ச கதியை அடைந்தது ஒரு வைகாசி பௌர்ணமி தினமாகும்..அதாவது, புத்த பெருமான் அவதரித்ததும், அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும், இறுதியில் மோட்ச கதியை அடைந்ததும் என மூன்று விசேஷ நிகழ்வுகளும் அவரது வாழ்வில் நடைபெற்றது வைகாசி விசாக முழு நிலவு நாளான பௌர்ணமி தினத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது..'ஒரு தீபத்தில் இருந்து ஆயிரம் தீபங்களை ஏற்றினாலும் அதன் ஒளி குறைவது இல்லை. உன் அறிவை பிறருடன் பகிர்வதனால் அது என்றும் குறைவதில்லை' என்று உரைத்தவர் கௌதமர். அதுபோல், புத்தர் எனும் ஒரு தீபத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு இன்று உலகம் முழுவதும் அன்பு எனும் வெளிச்சம் பெரும் ஜோதியாகத் தெரிகிறது..'நிம்மதி வேண்டுமென்று தேடுகிறோமே தவிர, ஆசைகளை யாரும் கைவிட நினைப்பதில்லை. ஆசைகளைத் துறந்து பாருங்கள், நிம்மதி என்றும் உங்கள் வசப்படும்' என்று உரைத்த புத்த பெருமான் ஞானம் பெற்ற புத்த கயா புனிதத் தலம், அன்பையும் கருணையையும் போற்றும் உலக மக்களின் யாத்திரைத் தலமாக புகழ் பெற்று விளங்குகிறது..இத்தலத்தில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பௌர்ணமி தினம் புத்த பூர்ணிமாவாக வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அன்பின் அவதாரமாகத் திகழ்ந்த புத்த பெருமானை வணங்கி வழிபடுகின்றனர். இந்த ஆண்டு அத்தினம் மே மாதம் பதினாறாம் நாள் அனுசரிக்கப்படுகிறது..இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் என உலகம் முழுவதும் இன்று புத்த மதம் தழைத்தோங்கி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம், கௌதம புத்தர் விதைத்த அன்பெனும் ஒற்றை விதைதான்..'ஒரு பகைவனால் ஏற்படும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது… பறக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் முதலில் உங்கள் சுமைகளைத் தூக்கி எறியுங்கள்… குறை இல்லாத மனிதன் இல்லை. அதைக் குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை… மகானைப் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்' என்ற உரைத்த மகான் புத்த பெருமானின் அறிவுரைகளைக் கடைபிடித்து அகிலம் போற்ற வாழ்வோம்.
-எம்.கோதண்டபாணி.வைகாசி மாத முழு நிலவு நாளான பௌர்ணமி தினத்தை பௌத்தர்கள் புத்த பூர்ணிமா என உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அன்பையும் அமைதியையும் அகிலம் யாவும் உணர வைத்த புத்தர் பிரானின் அவதாரத் திருநாள் இது..இன்றைய நேபாள நாட்டின் கபிலவஸ்து நகரத்தில் கி.மு.623ம் ஆண்டு ஒரு அரச தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் புத்தபிரான். 'சித்தார்த்தா' எனப் பெயர் சூட்டப்பட்ட அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் அன்பின் அடையாளத்தை, கருணையின் ஊற்றை மக்களின் மனங்களில் பெருகவைக்கப்போகும் அவதாரம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்க நியாயமில்லை. பிறக்கும்போதே தமது உடலில் முப்பத்தியிரண்டு புனித அடையாளங்களைப் பெற்று அவதரித்ததாம் அந்தக் குழந்தை..குழந்தையின் ஜனன சமயம் அதன் ஜோதிடம் கணிக்கப்பட்டபோது, 'ஒன்று அக்குழந்தை மாபெரும் சக்கரவர்த்தியாக நாடாளும், அல்லது உலகம் போற்றும் தனிப்பெரும் துறவியாகும்' என்று கண்டறியப்பட்டது. இந்தக் கணிப்பினால் கவலையுற்ற அக்குழந்தையின் பெற்றோர் அதன் வாழ்வை நான்கு சுவர்களுக் குள்ளேயே வரையறுத்திருந்தனர். கனன்று எழும் நெருப்பை காகிதத்தினால் மறைக்க இயலுமா? பொங்கியெழும் பேரலையை பூஞ்சாடிக்குள் அடக்கத்தான் முடியுமா? அப்படித்தான் ஆனது சித்தார்த்தனின் வாழ்வும். சிறு வயது முதலே அடுத்தவரின் துன்பத்தைத் தனது துன்பமாகக் கண்டு வாடும் இயல்பு சித்தார்த்தருக்கு இருந்தது..உலக வாழ்வின் சிற்றின்பங்களில் பிடிப்பில்லாமல் வாழ்ந்த சித்தார்த்தனுக்கு, அவனது பதினாறு வயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டது. அதன் பலனாக ஒரு மகவும் அவருக்கு உதித்தது. ஆனாலும், பண்பட்ட மனதை பாத்தியப்படுத்த யாரால்தான் முடியும்? வாழ்வை இழந்த ஒரு வயோதிகரும் ஒரு உயிரற்ற பிணமும், 'துயரங்களாலும், கணிக்க முடியாத இடர்களும் நிறைந்தது வாழ்க்கை' என்பதை அவருக்கு உணர்த்தியது. தனது 29வது வயதில் அரண்மனை ஆடம்பர வாழ்வை உதறி, அகிலமே சொந்தம் கொண்டாடும் மகா துறவியாக வெளியேறினார்.. அரச போக வாழ்விலிருந்து வெளியேறிய அவர், மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தத் துன்பங்களுக்கான காரணத்தைத் தேடி அலைந்தார். கடைசியாக, அவரது கேள்விக்கான பதிலை, கயாவின் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தவம் இயற்றி அறிந்து கொண்டார். அப்படி அவர் தனக்குத்தானே ஞானம் பெற்றது ஒரு வைகாசி பௌர்ணமி தினமாகும். அப்போது அவருக்கு அகவை முப்பத்தாறு. 'அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை' என உணர்ந்த சித்தார்த்தர், வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை அறிந்து மக்களுக்கு அதை உணர்த்தியதால் அன்று முதல் அவர் கௌதம புத்தர் என்று அழைக்கப்பட்டார். போதி மரத்திற்குக் கீழே ஞானம் பெற்ற புத்த பெருமான் உலகம் முழுவதும் தர்மத்தையும் அதன் முக்கியத்துவத்தை தனது போதனைகள் மூலம் பரப்பத் தொடங்கினார்..தனது எண்பதாவது வயதில் நேபாளத்தின் எல்லையில் உள்ள குஷிநகர் பகுதியில் புத்த பெருமான் தங்கியிருந்தார். அன்று சீடர் கண்டா என்பவர் புத்த பெருமானுக்கு உணவு கொடுக்க விரும்பினார். அதனை ஏற்க மறுத்த புத்தர், அந்த உணவை அடுத்த நாள் மதியம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அடுத்த நாள் அந்த உணவு பறிமாறப்பட்டபோது அது விஷமாக மாறியிருந்தது. அதனை தனது ஞானத்தால் முன்கூட்டியே அறிந்திருந்த புத்த பெருமான் தான் மட்டும் அந்த உணவை மகிழ்வுடன் உண்டுவிட்டு, மீதமுள்ள உணவை மண்ணில் புதைத்துவிடும்படி சீடரிடம் கூறினார்..சற்று நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌதமர், தனது சீடர் ஆனந்தனை அழைத்து, 'கண்டா வழங்கிய உணவில் எந்தக் குறையும் இல்லை. அதுவே நான் சாப்பிட்ட கடைசி சுவையான உணவு' என்பதை அனைவருக்கும் உணர்த்தும்படிக் கூறினார். என்னே புத்த மகானின் மகா கருணை! அதோடு, மரணப்படுக்கையில் இருந்த புத்த பெருமான் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்து, 'உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்' என்று கூறினார். அந்த நிலையில் அவர்களின் மனதில் எந்தக் கேள்வியும் எழவில்லை..ஆனால், தலைமை சீடர் ஆனந்தா மட்டும், "குருவே உங்கள் வாழ்வில் நீங்கள் இறைவனைக் கண்டது உண்டா? அதுபற்றி எதிர்காலத்தில் என்னிடம் யாரேனும் கேட்டால் நான் என்ன பதில் கூறட்டும்?" என்று கேட்டார்..அதற்கு புத்தர், "ஆனந்தா எனது வாழ்வில் நான் இறைவனைக் கண்டதேயில்லை. ஒருவேளை நீ உனது வாழ்வில் இறைவனைக் கண்டால் அதுபற்றி மக்களுக்கு எடுத்துக் கூறலாம்" என்று பதில் உரைத்தார். இறுதியாக, 'அனைத்துக் கலவையான விஷயங்களும் அழியக்கூடியது. வாழ்வின் உனது சொந்த விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடு' என உரைத்தார். அதன்பின் புத்த பெருமான் பரிநிர்வாணம் எனப்படும் மோட்ச கதியை அடைந்தார். அப்படி கௌதம புத்தர் மோட்ச கதியை அடைந்தது ஒரு வைகாசி பௌர்ணமி தினமாகும்..அதாவது, புத்த பெருமான் அவதரித்ததும், அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும், இறுதியில் மோட்ச கதியை அடைந்ததும் என மூன்று விசேஷ நிகழ்வுகளும் அவரது வாழ்வில் நடைபெற்றது வைகாசி விசாக முழு நிலவு நாளான பௌர்ணமி தினத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது..'ஒரு தீபத்தில் இருந்து ஆயிரம் தீபங்களை ஏற்றினாலும் அதன் ஒளி குறைவது இல்லை. உன் அறிவை பிறருடன் பகிர்வதனால் அது என்றும் குறைவதில்லை' என்று உரைத்தவர் கௌதமர். அதுபோல், புத்தர் எனும் ஒரு தீபத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு இன்று உலகம் முழுவதும் அன்பு எனும் வெளிச்சம் பெரும் ஜோதியாகத் தெரிகிறது..'நிம்மதி வேண்டுமென்று தேடுகிறோமே தவிர, ஆசைகளை யாரும் கைவிட நினைப்பதில்லை. ஆசைகளைத் துறந்து பாருங்கள், நிம்மதி என்றும் உங்கள் வசப்படும்' என்று உரைத்த புத்த பெருமான் ஞானம் பெற்ற புத்த கயா புனிதத் தலம், அன்பையும் கருணையையும் போற்றும் உலக மக்களின் யாத்திரைத் தலமாக புகழ் பெற்று விளங்குகிறது..இத்தலத்தில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பௌர்ணமி தினம் புத்த பூர்ணிமாவாக வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அன்பின் அவதாரமாகத் திகழ்ந்த புத்த பெருமானை வணங்கி வழிபடுகின்றனர். இந்த ஆண்டு அத்தினம் மே மாதம் பதினாறாம் நாள் அனுசரிக்கப்படுகிறது..இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் என உலகம் முழுவதும் இன்று புத்த மதம் தழைத்தோங்கி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம், கௌதம புத்தர் விதைத்த அன்பெனும் ஒற்றை விதைதான்..'ஒரு பகைவனால் ஏற்படும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது… பறக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் முதலில் உங்கள் சுமைகளைத் தூக்கி எறியுங்கள்… குறை இல்லாத மனிதன் இல்லை. அதைக் குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை… மகானைப் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்' என்ற உரைத்த மகான் புத்த பெருமானின் அறிவுரைகளைக் கடைபிடித்து அகிலம் போற்ற வாழ்வோம்.