படங்கள் : பிள்ளை."ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!"."நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!"–வி.ரேவதி,தஞ்சை.—————————– ."இந்த ஆஸ்பத்திரியில எப்பவும் ஒரு மாந்திரீகர் இருக்காரே?"."டாக்டரால கண்டுபிடிக்க முடியாத வியாதியை மை போட்டு கண்டுபிடிக்கவாம்!" -வி. ரேவதி, தஞ்சை.—————————– ."ஒரு ஒட்டு வாங்கினவரு பிரபல சோதிடர் கிட்ட ஜாதகத்தைக் கொடுத்து பார்க்கச் சொன்னாராம்!". "என்ன பார்க்கச் சொன்னாராம்?"."தனக்கு கவர்னர் ஆகிற வாய்ப்பு இருக்கான்னுதான்! -வி. ரேவதி, தஞ்சை.—————————– ."கட்சி மாறிடலாம்னு இருக்கேன்யா!"."இனி நீங்க மாறுறதுக்கு எந்தக் கட்சி பாக்கி இருக்கு தலைவரே?"–சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா.—————————– ."நம்ம ஊர்ல விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் தலைவரும் ஒருத்தர்!"."எப்படிச் சொல்றே?"."பள்ளிக்கூடமே போனதில்லையே!"-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா.—————————– ."வருடம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?"."பொழிகிறது. ஆனா முன் மாதிரி இல்ல. தூரலோடு நின்றுவிடுகிறது மன்னா".–ஜெயகாந்தி மகாதேவன்.—————————– ."மனநல மருத்துவர்: சொல்லுங்கம்மா, உங்க மாமியார் கிட்ட என்ன பிரச்னைன்னு கூட்டிட்டு வந்திருக்கிங்க?"."மருமகள்: டாக்டர், அவங்க முன்ன மாதிரி என் கூட சண்டையே போட மாட்டேங்கறாங்க. கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க… ப்ளீஸ்."."மருத்துவர்: ?????"-ஜெயகாந்தி மகாதேவன்
படங்கள் : பிள்ளை."ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!"."நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!"–வி.ரேவதி,தஞ்சை.—————————– ."இந்த ஆஸ்பத்திரியில எப்பவும் ஒரு மாந்திரீகர் இருக்காரே?"."டாக்டரால கண்டுபிடிக்க முடியாத வியாதியை மை போட்டு கண்டுபிடிக்கவாம்!" -வி. ரேவதி, தஞ்சை.—————————– ."ஒரு ஒட்டு வாங்கினவரு பிரபல சோதிடர் கிட்ட ஜாதகத்தைக் கொடுத்து பார்க்கச் சொன்னாராம்!". "என்ன பார்க்கச் சொன்னாராம்?"."தனக்கு கவர்னர் ஆகிற வாய்ப்பு இருக்கான்னுதான்! -வி. ரேவதி, தஞ்சை.—————————– ."கட்சி மாறிடலாம்னு இருக்கேன்யா!"."இனி நீங்க மாறுறதுக்கு எந்தக் கட்சி பாக்கி இருக்கு தலைவரே?"–சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா.—————————– ."நம்ம ஊர்ல விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் தலைவரும் ஒருத்தர்!"."எப்படிச் சொல்றே?"."பள்ளிக்கூடமே போனதில்லையே!"-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா.—————————– ."வருடம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?"."பொழிகிறது. ஆனா முன் மாதிரி இல்ல. தூரலோடு நின்றுவிடுகிறது மன்னா".–ஜெயகாந்தி மகாதேவன்.—————————– ."மனநல மருத்துவர்: சொல்லுங்கம்மா, உங்க மாமியார் கிட்ட என்ன பிரச்னைன்னு கூட்டிட்டு வந்திருக்கிங்க?"."மருமகள்: டாக்டர், அவங்க முன்ன மாதிரி என் கூட சண்டையே போட மாட்டேங்கறாங்க. கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க… ப்ளீஸ்."."மருத்துவர்: ?????"-ஜெயகாந்தி மகாதேவன்