கதை; –வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்.ஓவியம்: தமிழ்.எனக்கு அப்போது வயது 28. உலகம் முழுவதும் விரிந்து இயங்குகிற ஒரு பெரிய விற்பனை நிறுவனத்தில் தமிழ்நாடு மேலாளராக இருந்தேன். நான் பொறியியல் முடித்து நாட்டின் சிறந்த மேலாண்மை கல்லூரிகளில் ஒன்றில், வணிக மேலாண்மை முதுகலை முடித்தேன். கை நிறைய காசு, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்தவுடனேயே, எனக்கு வரும் பல கல்யாண வரன்களைப் பற்றி, என் அம்மா சில சமயம் என்னிடம் நேரடியாக கூறுவார்.."அத்தை காந்திமதியோட சம்பந்திவீட்டுல, பிஇ முடிச்ச ஒரு பொண்ணு இருக்கா. உனக்கு முடிக்கலாமான்னு அத்தை கேக்கறா. நீ என்ன சொல்ற," என்றார் அம்மா.."எனக்கு என்னம்மா கல்யாணத்துக்கு அவசரம். இப்பதான் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் வருஷமாகுது. " என்றேன் நான்.."இல்லடா. இப்ப ஆரம்பிச்சாத்தான் பொறுமையா தேட முடியும். லேட்டானா ரொம்ப அவசரமா தேடற மாதிரி ஆகிடும். " என்றார் அம்மா..அம்மா தேடுதல் வேட்டையில் இறங்கினார். பல்வேறு உறவுகளிலிருந்து பல்வேறு வரன்களைப் பற்றிய பேச்சு வீட்டில் அடிபடத் தொடங்கின..அப்போது, பல பெண் பார்க்கும் படலங்கள் அரங்கேறின. சில படலங்கள் கோயிலில் சந்திப்பாகவும், சில படலங்கள் ஏதாவதொரு உணவகத்தில் சந்திப்பாகவும் நிகழ்ந்தன..எனக்கு இருந்த சில கற்பனையான எதிர்பார்ப்புகளால், எல்லா பெண்களையும் நிராகரித்தேன். பெண் என்பவள் பார்ப்பதற்கு திரைப்பட நட்சத்திரம் போல, ஒரு வேற்றுகிரக வாசி போல் தெரிய வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தேன். பார்த்தவுடனே, மனதில் ஒரு மணி அடிக்க வேண்டும்; ஒரு புளங்காகிதம், புல்லரிப்பு போன்ற விஷயங்கள் நிகழ வேண்டும்; வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும் என எனக்கு எண்ணமிருந்தது. என்னுடைய கற்பனையான எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு நேரெதிராக இருந்தன. எல்லா பெண்களுமோ அருகிலிருக்கும் பலசரக்கு கடையில், ஒரு பாக்கெட் மீரா கொடுங்கன்னு கேக்கற மாதிரி, சாதாரணமாக இருந்தனர். சாதாரணங்களுக்கிடையே அசாதாரணத்தை தேடிக் கொண்டிருந்தேன். குறிப்பாக, பெண் ஃபேர் அண்டு லவ்லி விளம்பரத்தில் வருவதைப் போல், நல்ல சிவப்பாக இருக்க வேண்டுமென்ற ஒரு பெரியதொரு எதிர்பார்ப்பு கொண்டிருந்தேன்..எனது அம்மா ஒவ்வொரு முறையும் என்னை ஏன் அந்தப் பெண் வேண்டாமென்கிறாய் என்று கேட்கும்போது,."எனக்கு பிடிக்கலம்மா. முகம் பளிச்சுனு இல்லை. டல்லடிக்குது." என்பேன் நான்.."பழக பழக புடிச்சு போயிடும்டா. நல்லா படிச்சுருக்கா. நல்ல குடும்பம்"என்பார் அம்மா.."இல்லம்மா. எனக்கு ஒரு பிடிப்பு ஏற்படல. கருப்பா இருக்கா. தொட்டு மை இட்டுக்கலாம் போல இருக்கா"."நீ கூட மாநிறம்தான். நான் கூட கருப்பாத்தான் இருக்கேன். உங்கப்பா மாநிறம்தான். உங்கப்பா என்ன ஒத்துகிடலயா?"."அம்மா. அந்த காலம் வேற. இந்த காலம் வேற. அந்த காலத்துல, இந்த மாதிரி ஒரு பெண் இல்லேனா, இன்னொரு பெண் பார்க்கறதெல்லாம் கஷ்டம். இப்ப பொண்ணு பாக்கறது ஈஸி. எனக்கு கண்டிப்பா நான் நினைக்கற மாதிரி பொண்ணு கிடைப்பா"."பொண்ணு பாக்கறபோது, பொண்ணுக்கு ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். ஏதோ ஜவுளிக் கடைல போய், துணி எடுக்கற மாதிரி கிடையாது. ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும். நல்ல பொண்ணை மிஸ் பண்ணிடாத. இந்த மாதிரியெல்லாம், அந்தகாலத்துல, உங்கப்பா பண்ணியிருந்தா, என்னையத்தான் மிஸ் பண்ணியிருப்பாரு"."ஆமாம்டா." என்று திடீரென்று அப்பாவின் குரல் பின்னாடி ஆமோதித்தது..எனக்கு அம்மா, அப்பாவின் அறிவுரைகள் கசக்கவே செய்தது. மூன்று வருடங்கள் மூன்று நிமிடங்கள் போல் கடந்துவிட்டன..எனக்கு 31 வயது இருக்கும்போதுதான், அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு நான் மதுரை செல்ல வேண்டி வந்தது. பெண் பார்க்க வேறு ஊர் செல்வ தென்பது எனக்கு புதிதில்லை. ஏற்கனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு, இதற்காகவே ரயில் வண்டி, பேருந்து, விமானம் ஏறி சென்றுள்ளேன். இந்த முறை, சலித்துப் போன, எனது அப்பா, அம்மாவின் புலம்பல்களுடனே ரயில் வண்டி ஏறினேன். அந்தப் பெண்ணின் பெயர் மீனாட்சி..பாண்டியன் விரைவு வண்டி காலை மதுரை சென்றடைந்தது. எங்களை வரவேற்க பெண்ணின் அப்பா மதுரை சந்திப்புக்கே வந்திருந்தார். எங்களை மிகவும் நலம் விசாரித்தார். எங்களை மதுரை மையத்திலிருந்த ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டவுடன், காலையில் நல்லதொரு சிற்றுண்டி நாங்கள் உண்ண, ஒரு உணவகதுக்கு அழைத்துச் சென்றார். பின், எங்களை அவருடைய வீட்டிற்கு ஏசி வாகனத்தில் அழைத்துச்சென்றார். அவர் வீடு பிரம்மாண்டமாக சுற்றுச்சுவர்கள் சூழ, இரண்டடடுக்குகளுடன் மரங்கள், செடிகள் சூழ இருந்தது..நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, மீனாட்சியையும் என்னையும் ஒரு அறையில் பேசவதற்கு அனுமதித்தனர்.."நான் மீனாட்சி. நான் பிஸிக்ஸ்ல போஸ்ட் கிராஜூவேட் பண்ணிட்டு, காலேஜ் ல அசிஸ்டெண்ட் பொரஃபவஸரா இருக்கேன்," என்றாள் மீனாட்சி.."நான் கதிர். எம்.பி.ஏ பண்ணிட்டு மார்கெட்டிங்ல வேலை பாக்கறேன்," என்றேன் நான்.."பார்க்க ரொம்ப டயர்டா இருக்கீங்களே. டிராவல் செளகரியமா இருந்ததா. வெயில் காலங்கறதால 2 டயர் ஏசில அப்பாவை புக் பண்ண சொல்லியிருந்தேன். நல்லா தூங்க முடிஞ்சதா?"."ரொம்ப சவுகரியமா இருந்தது."."அப்பாகிட்ட ஏசி ரூமா ஹோட்டல் புக் பண்ண சொல்லியிருந்தேன். இன்னும் கல்யாணம் முடிவாகாததால, மதுரை ஜங்ஷன் வந்து, நேர்ல வந்து உங்கள ரிசீவ் பண்ண முடில. அப்பாகிட்ட உங்களை நல்லா ரிசீவ் பண்ண சொன்னேன்"."ரொம்ப நல்லா பாத்துகிட்டார்"."டிபன் மாடர்ன் லாட்ஜ் ஹோட்டல்ல கூட்டிட்டு போக சொன்னேன். அங்க உங்களுக்கு சாம்பார் வடையை அப்பாகிட்ட மறக்காம ஆர்டர் பண்ண சொன்னேன். உங்களுக்கு அந்த ஹோட்டல் புடிக்கலேனா, மத்தியானம் வேற ஹோட்டலுக்கு நாம போகலாம்" அவள் சேர்ந்துப் போகலாம் என்று கூறியதன் அர்த்தத்தை நான் அறிந்துக் கொள்ளவில்லை.."நீங்க கொஞ்சம் நின்னீங்கன்னா, உங்க பக்கத்துல நான் நின்னு உங்களுக்கு சரியான உயரமான்னு பாருங்க" என்றாள் மீனாட்சி..நாங்கள் இருவரும் அருகருகே நிற்க, அவள் எனக்கு ஏற்ற உயரமாக இருந்தாள். நான் மாநிறம். அவள் கருப்போடு சேர்த்தியாக இருந்தாள். அவளது குரல் பாரதியின் "இன்பத்தேன் வந்துப் பாயுது காதிலினே" என்பதைப் போல், இனிமையாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், பாடகி பி.சுசீலா பாட்டைப் போல் இனிமையாகக் கேட்டது. ஆனால், அவளது கருப்பு நிறமே எனக்கு மற்ற எல்லாவற்றையும் கருப்பு நிற படலத்தால் மூடி மறைத்து, அவளை வேண்டாமென சொல்ல வைத்தது.."நான் உங்களுக்கு ஏத்த உசரமா இருக்கேன்னு நினைக்கறேன்." என்றாள் மீனாட்சி.."ம்." என்றேன்."உங்களுக்கு குளிர்ர மாதிரி இருக்கு. ஏசி டெம்பரேச்சரை கொஞ்சம் கூட்டட்டுமா? "."இல்ல பரவாயில்ல".எங்களுக்காக அங்கு இருந்த காபியை மீனாட்சி பதமாக ஆத்திக் கொடுத்து, என்னிடம் நீட்டினாள். காபி எனக்கு குடிக்கும் சூட்டில், அருமையாக இருந்தது. நான் குடிப்பதை கவனமாக பார்த்தவுடன், தானும் காபி குடிக்க ஆரம்பித்தாள்.."கல்யாணம் முடிவான உடனே, நான் சென்னைல வேலை தேடறேன். உங்களுக்கு சென்னைல ஆபிஸீங்கறதால, என்னோட மதுரை வேலைய விட்டுடறேன்" என்றாள்.."ம்" என்றேன்..அவளின் கல்யாணம் தொடர்பான பேச்சு, அவளது கருப்பு நிறத்தால் எரிச்சலூட்டியது. அவளது எல்லா குணங்களையும் என்னுடைய கருப்புக் கண்ணாடிப் பார்வை மறைத்து, அந்த பிரகாசமா அறையைக் கூட, குகையைப் போலக் காட்டியது.."என்னது இது. நீங்க. வந்ததுலேர்ந்து கல்யாணம் கல்யாணம்னே பேசிக்கிட்டு இருக்கீங்க. பொண்ணு பாக்க வந்தா, கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு நிச்சயம் இல்லை."என்றேன்..நான் அப்படி சொன்னவுடன் அவளது முகம் வாடிவிட்டது. அதன் பிறகு, அவளிடமிருந்து வார்த்தைகள் பெரிதாக வரவில்லை. என்னுடைய கேள்விகளுக்கும் அவளது பதில்கள் ஒற்றை வார்த்தைகளாகவே வந்தன..சிறிது நேரம் எங்களுடைய இத்தகைய உரையாடல்கள் தொடர்ந்தது. ஒரு மெளனம் நிலவியது. மீனாட்சியின் வாடிய முகத்தைப் பார்த்தபோதுதான், சிறிது நேரம் முன்பு வரை அவள் எவ்வளவு பிரகாசித்தாள் என விளங்கியது..நாங்கள் இருவரும் பின், பெற்றோர்கள் கூடியிருந்த கூடத்திற்கு சென்றோம். அவளது அப்பா என்னிடம், பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு நான் அமைதி காத்தேன். என்னுடைய அம்மா, அப்பா என்னுடைய முன் நிராகரிப்பு அனுபவங்களின் காரணமாக, பின் தகவல் அளிப்பதாகக் கூறி விடை பெற்றனர்..வீட்டில் வந்தப் பிறகு ஒரு வாரத்திற்கு என் மனதில் பல்வேறு ஓட்டங்கள் நிகழ்ந்தன. வேலை எனக்கு ஒட்டவில்லை. மீனாட்சி முகம் அடிக்கடி மனத்திரையில் தோன்றி மறைந்தது. மீனாட்சி என் மீது காட்டிய அக்கறை, சிறிய விஷயங்களிலும் காட்டிய ஈடுபாடு, மதுரைக்கு சென்ற முதல் அன்று மதியம் வரை என்னை கவனித்துக் கொண்டது போன்ற விஷயங்கள், எனது அம்மாவை ஞாபகப்படுத்தின. கருப்பு என்று ஒதுக்கிய என் மனதின் கருப்பை, அவளது என் மீது காட்டிய அன்பு என்ற சோப்பு சுத்தப்படுத்தியது. என் அம்மாவைக் கூப்பிட்டேன்.."அம்மா. மதுரைக்கு போயிருந்தோமே. அந்த மீனாட்சி பொண்ணை எனக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வச்சுடு" என்றேன்.."என்னடா. நாங்க எவ்வளவோ எடுத்து சொன்னபோது, பொண்ணு கருப்பா இருக்க. எனக்கு ஒத்துவர மாட்டான்னு சொன்னியே…"."இல்லம்மா. அந்த பொண்ணு எனக்காக எவ்வளவோ அக்கறையா ஒவ்வொரு விஷயமும் பாத்து பாத்து ஏற்பாடு பண்ணியிருந்தா. இருந்த அந்த 30 நிமிஷமும் ஒரு குழந்தையைப் போல பாத்துகிட்டா. நான் நோ சொன்னது தப்புதான். எப்படியாவது, இந்த கல்யாணத்தை முடிச்சு வை."."இப்பவாவது புத்தி வந்ததே. நான் உடனே அப்பாவ விட்டு ஃபோன் பண்ண சொல்றேன்.".அப்பா ஃபோன் பண்ணியபோது, மீனாட்சியின் அப்பா எடுத்தார். அப்பா என்னுடைய முடிவை சொன்னவுடன், மீனாட்சியிடம் ஃபோன் கொடுத்து பேச சொன்னார்..மனது திக் திக் என்று அடித்துக் கொண்டது. என்னை வேண்டாம்னு சொல்லிடாத என்று ஒவ்வொரு துடிப்பும் சொன்னது.."எனக்கு அன்னிக்கே ஓகே தான். நீங்க என்ன சொல்வீங்களோன்னு கவலையா இருந்தது."."மீனாட்சி. ஐ ம் சாரி. உங்க மனசு புண்படற மாதிரி நான் நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. என்னை நீங்க சரின்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றேன்.."பரவால்லைங்க. என்னை வாங்க போங்கன்னு கூப்பிடாதீங்க. என்னை மீனாட்சி இல்லேனா, எல்லாரும் கூப்பிடறமாதிரி மீனுன்னு கூப்பிடுங்க.".ஃபோனை வைத்தவுடன், இதயம் மறுபடி சீராக இயங்கத் தொடங்கியது. மனதில் 'கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு' பாட்டு ஓடியது.
கதை; –வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்.ஓவியம்: தமிழ்.எனக்கு அப்போது வயது 28. உலகம் முழுவதும் விரிந்து இயங்குகிற ஒரு பெரிய விற்பனை நிறுவனத்தில் தமிழ்நாடு மேலாளராக இருந்தேன். நான் பொறியியல் முடித்து நாட்டின் சிறந்த மேலாண்மை கல்லூரிகளில் ஒன்றில், வணிக மேலாண்மை முதுகலை முடித்தேன். கை நிறைய காசு, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்தவுடனேயே, எனக்கு வரும் பல கல்யாண வரன்களைப் பற்றி, என் அம்மா சில சமயம் என்னிடம் நேரடியாக கூறுவார்.."அத்தை காந்திமதியோட சம்பந்திவீட்டுல, பிஇ முடிச்ச ஒரு பொண்ணு இருக்கா. உனக்கு முடிக்கலாமான்னு அத்தை கேக்கறா. நீ என்ன சொல்ற," என்றார் அம்மா.."எனக்கு என்னம்மா கல்யாணத்துக்கு அவசரம். இப்பதான் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் வருஷமாகுது. " என்றேன் நான்.."இல்லடா. இப்ப ஆரம்பிச்சாத்தான் பொறுமையா தேட முடியும். லேட்டானா ரொம்ப அவசரமா தேடற மாதிரி ஆகிடும். " என்றார் அம்மா..அம்மா தேடுதல் வேட்டையில் இறங்கினார். பல்வேறு உறவுகளிலிருந்து பல்வேறு வரன்களைப் பற்றிய பேச்சு வீட்டில் அடிபடத் தொடங்கின..அப்போது, பல பெண் பார்க்கும் படலங்கள் அரங்கேறின. சில படலங்கள் கோயிலில் சந்திப்பாகவும், சில படலங்கள் ஏதாவதொரு உணவகத்தில் சந்திப்பாகவும் நிகழ்ந்தன..எனக்கு இருந்த சில கற்பனையான எதிர்பார்ப்புகளால், எல்லா பெண்களையும் நிராகரித்தேன். பெண் என்பவள் பார்ப்பதற்கு திரைப்பட நட்சத்திரம் போல, ஒரு வேற்றுகிரக வாசி போல் தெரிய வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தேன். பார்த்தவுடனே, மனதில் ஒரு மணி அடிக்க வேண்டும்; ஒரு புளங்காகிதம், புல்லரிப்பு போன்ற விஷயங்கள் நிகழ வேண்டும்; வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும் என எனக்கு எண்ணமிருந்தது. என்னுடைய கற்பனையான எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு நேரெதிராக இருந்தன. எல்லா பெண்களுமோ அருகிலிருக்கும் பலசரக்கு கடையில், ஒரு பாக்கெட் மீரா கொடுங்கன்னு கேக்கற மாதிரி, சாதாரணமாக இருந்தனர். சாதாரணங்களுக்கிடையே அசாதாரணத்தை தேடிக் கொண்டிருந்தேன். குறிப்பாக, பெண் ஃபேர் அண்டு லவ்லி விளம்பரத்தில் வருவதைப் போல், நல்ல சிவப்பாக இருக்க வேண்டுமென்ற ஒரு பெரியதொரு எதிர்பார்ப்பு கொண்டிருந்தேன்..எனது அம்மா ஒவ்வொரு முறையும் என்னை ஏன் அந்தப் பெண் வேண்டாமென்கிறாய் என்று கேட்கும்போது,."எனக்கு பிடிக்கலம்மா. முகம் பளிச்சுனு இல்லை. டல்லடிக்குது." என்பேன் நான்.."பழக பழக புடிச்சு போயிடும்டா. நல்லா படிச்சுருக்கா. நல்ல குடும்பம்"என்பார் அம்மா.."இல்லம்மா. எனக்கு ஒரு பிடிப்பு ஏற்படல. கருப்பா இருக்கா. தொட்டு மை இட்டுக்கலாம் போல இருக்கா"."நீ கூட மாநிறம்தான். நான் கூட கருப்பாத்தான் இருக்கேன். உங்கப்பா மாநிறம்தான். உங்கப்பா என்ன ஒத்துகிடலயா?"."அம்மா. அந்த காலம் வேற. இந்த காலம் வேற. அந்த காலத்துல, இந்த மாதிரி ஒரு பெண் இல்லேனா, இன்னொரு பெண் பார்க்கறதெல்லாம் கஷ்டம். இப்ப பொண்ணு பாக்கறது ஈஸி. எனக்கு கண்டிப்பா நான் நினைக்கற மாதிரி பொண்ணு கிடைப்பா"."பொண்ணு பாக்கறபோது, பொண்ணுக்கு ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். ஏதோ ஜவுளிக் கடைல போய், துணி எடுக்கற மாதிரி கிடையாது. ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும். நல்ல பொண்ணை மிஸ் பண்ணிடாத. இந்த மாதிரியெல்லாம், அந்தகாலத்துல, உங்கப்பா பண்ணியிருந்தா, என்னையத்தான் மிஸ் பண்ணியிருப்பாரு"."ஆமாம்டா." என்று திடீரென்று அப்பாவின் குரல் பின்னாடி ஆமோதித்தது..எனக்கு அம்மா, அப்பாவின் அறிவுரைகள் கசக்கவே செய்தது. மூன்று வருடங்கள் மூன்று நிமிடங்கள் போல் கடந்துவிட்டன..எனக்கு 31 வயது இருக்கும்போதுதான், அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு நான் மதுரை செல்ல வேண்டி வந்தது. பெண் பார்க்க வேறு ஊர் செல்வ தென்பது எனக்கு புதிதில்லை. ஏற்கனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு, இதற்காகவே ரயில் வண்டி, பேருந்து, விமானம் ஏறி சென்றுள்ளேன். இந்த முறை, சலித்துப் போன, எனது அப்பா, அம்மாவின் புலம்பல்களுடனே ரயில் வண்டி ஏறினேன். அந்தப் பெண்ணின் பெயர் மீனாட்சி..பாண்டியன் விரைவு வண்டி காலை மதுரை சென்றடைந்தது. எங்களை வரவேற்க பெண்ணின் அப்பா மதுரை சந்திப்புக்கே வந்திருந்தார். எங்களை மிகவும் நலம் விசாரித்தார். எங்களை மதுரை மையத்திலிருந்த ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டவுடன், காலையில் நல்லதொரு சிற்றுண்டி நாங்கள் உண்ண, ஒரு உணவகதுக்கு அழைத்துச் சென்றார். பின், எங்களை அவருடைய வீட்டிற்கு ஏசி வாகனத்தில் அழைத்துச்சென்றார். அவர் வீடு பிரம்மாண்டமாக சுற்றுச்சுவர்கள் சூழ, இரண்டடடுக்குகளுடன் மரங்கள், செடிகள் சூழ இருந்தது..நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, மீனாட்சியையும் என்னையும் ஒரு அறையில் பேசவதற்கு அனுமதித்தனர்.."நான் மீனாட்சி. நான் பிஸிக்ஸ்ல போஸ்ட் கிராஜூவேட் பண்ணிட்டு, காலேஜ் ல அசிஸ்டெண்ட் பொரஃபவஸரா இருக்கேன்," என்றாள் மீனாட்சி.."நான் கதிர். எம்.பி.ஏ பண்ணிட்டு மார்கெட்டிங்ல வேலை பாக்கறேன்," என்றேன் நான்.."பார்க்க ரொம்ப டயர்டா இருக்கீங்களே. டிராவல் செளகரியமா இருந்ததா. வெயில் காலங்கறதால 2 டயர் ஏசில அப்பாவை புக் பண்ண சொல்லியிருந்தேன். நல்லா தூங்க முடிஞ்சதா?"."ரொம்ப சவுகரியமா இருந்தது."."அப்பாகிட்ட ஏசி ரூமா ஹோட்டல் புக் பண்ண சொல்லியிருந்தேன். இன்னும் கல்யாணம் முடிவாகாததால, மதுரை ஜங்ஷன் வந்து, நேர்ல வந்து உங்கள ரிசீவ் பண்ண முடில. அப்பாகிட்ட உங்களை நல்லா ரிசீவ் பண்ண சொன்னேன்"."ரொம்ப நல்லா பாத்துகிட்டார்"."டிபன் மாடர்ன் லாட்ஜ் ஹோட்டல்ல கூட்டிட்டு போக சொன்னேன். அங்க உங்களுக்கு சாம்பார் வடையை அப்பாகிட்ட மறக்காம ஆர்டர் பண்ண சொன்னேன். உங்களுக்கு அந்த ஹோட்டல் புடிக்கலேனா, மத்தியானம் வேற ஹோட்டலுக்கு நாம போகலாம்" அவள் சேர்ந்துப் போகலாம் என்று கூறியதன் அர்த்தத்தை நான் அறிந்துக் கொள்ளவில்லை.."நீங்க கொஞ்சம் நின்னீங்கன்னா, உங்க பக்கத்துல நான் நின்னு உங்களுக்கு சரியான உயரமான்னு பாருங்க" என்றாள் மீனாட்சி..நாங்கள் இருவரும் அருகருகே நிற்க, அவள் எனக்கு ஏற்ற உயரமாக இருந்தாள். நான் மாநிறம். அவள் கருப்போடு சேர்த்தியாக இருந்தாள். அவளது குரல் பாரதியின் "இன்பத்தேன் வந்துப் பாயுது காதிலினே" என்பதைப் போல், இனிமையாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், பாடகி பி.சுசீலா பாட்டைப் போல் இனிமையாகக் கேட்டது. ஆனால், அவளது கருப்பு நிறமே எனக்கு மற்ற எல்லாவற்றையும் கருப்பு நிற படலத்தால் மூடி மறைத்து, அவளை வேண்டாமென சொல்ல வைத்தது.."நான் உங்களுக்கு ஏத்த உசரமா இருக்கேன்னு நினைக்கறேன்." என்றாள் மீனாட்சி.."ம்." என்றேன்."உங்களுக்கு குளிர்ர மாதிரி இருக்கு. ஏசி டெம்பரேச்சரை கொஞ்சம் கூட்டட்டுமா? "."இல்ல பரவாயில்ல".எங்களுக்காக அங்கு இருந்த காபியை மீனாட்சி பதமாக ஆத்திக் கொடுத்து, என்னிடம் நீட்டினாள். காபி எனக்கு குடிக்கும் சூட்டில், அருமையாக இருந்தது. நான் குடிப்பதை கவனமாக பார்த்தவுடன், தானும் காபி குடிக்க ஆரம்பித்தாள்.."கல்யாணம் முடிவான உடனே, நான் சென்னைல வேலை தேடறேன். உங்களுக்கு சென்னைல ஆபிஸீங்கறதால, என்னோட மதுரை வேலைய விட்டுடறேன்" என்றாள்.."ம்" என்றேன்..அவளின் கல்யாணம் தொடர்பான பேச்சு, அவளது கருப்பு நிறத்தால் எரிச்சலூட்டியது. அவளது எல்லா குணங்களையும் என்னுடைய கருப்புக் கண்ணாடிப் பார்வை மறைத்து, அந்த பிரகாசமா அறையைக் கூட, குகையைப் போலக் காட்டியது.."என்னது இது. நீங்க. வந்ததுலேர்ந்து கல்யாணம் கல்யாணம்னே பேசிக்கிட்டு இருக்கீங்க. பொண்ணு பாக்க வந்தா, கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு நிச்சயம் இல்லை."என்றேன்..நான் அப்படி சொன்னவுடன் அவளது முகம் வாடிவிட்டது. அதன் பிறகு, அவளிடமிருந்து வார்த்தைகள் பெரிதாக வரவில்லை. என்னுடைய கேள்விகளுக்கும் அவளது பதில்கள் ஒற்றை வார்த்தைகளாகவே வந்தன..சிறிது நேரம் எங்களுடைய இத்தகைய உரையாடல்கள் தொடர்ந்தது. ஒரு மெளனம் நிலவியது. மீனாட்சியின் வாடிய முகத்தைப் பார்த்தபோதுதான், சிறிது நேரம் முன்பு வரை அவள் எவ்வளவு பிரகாசித்தாள் என விளங்கியது..நாங்கள் இருவரும் பின், பெற்றோர்கள் கூடியிருந்த கூடத்திற்கு சென்றோம். அவளது அப்பா என்னிடம், பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு நான் அமைதி காத்தேன். என்னுடைய அம்மா, அப்பா என்னுடைய முன் நிராகரிப்பு அனுபவங்களின் காரணமாக, பின் தகவல் அளிப்பதாகக் கூறி விடை பெற்றனர்..வீட்டில் வந்தப் பிறகு ஒரு வாரத்திற்கு என் மனதில் பல்வேறு ஓட்டங்கள் நிகழ்ந்தன. வேலை எனக்கு ஒட்டவில்லை. மீனாட்சி முகம் அடிக்கடி மனத்திரையில் தோன்றி மறைந்தது. மீனாட்சி என் மீது காட்டிய அக்கறை, சிறிய விஷயங்களிலும் காட்டிய ஈடுபாடு, மதுரைக்கு சென்ற முதல் அன்று மதியம் வரை என்னை கவனித்துக் கொண்டது போன்ற விஷயங்கள், எனது அம்மாவை ஞாபகப்படுத்தின. கருப்பு என்று ஒதுக்கிய என் மனதின் கருப்பை, அவளது என் மீது காட்டிய அன்பு என்ற சோப்பு சுத்தப்படுத்தியது. என் அம்மாவைக் கூப்பிட்டேன்.."அம்மா. மதுரைக்கு போயிருந்தோமே. அந்த மீனாட்சி பொண்ணை எனக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வச்சுடு" என்றேன்.."என்னடா. நாங்க எவ்வளவோ எடுத்து சொன்னபோது, பொண்ணு கருப்பா இருக்க. எனக்கு ஒத்துவர மாட்டான்னு சொன்னியே…"."இல்லம்மா. அந்த பொண்ணு எனக்காக எவ்வளவோ அக்கறையா ஒவ்வொரு விஷயமும் பாத்து பாத்து ஏற்பாடு பண்ணியிருந்தா. இருந்த அந்த 30 நிமிஷமும் ஒரு குழந்தையைப் போல பாத்துகிட்டா. நான் நோ சொன்னது தப்புதான். எப்படியாவது, இந்த கல்யாணத்தை முடிச்சு வை."."இப்பவாவது புத்தி வந்ததே. நான் உடனே அப்பாவ விட்டு ஃபோன் பண்ண சொல்றேன்.".அப்பா ஃபோன் பண்ணியபோது, மீனாட்சியின் அப்பா எடுத்தார். அப்பா என்னுடைய முடிவை சொன்னவுடன், மீனாட்சியிடம் ஃபோன் கொடுத்து பேச சொன்னார்..மனது திக் திக் என்று அடித்துக் கொண்டது. என்னை வேண்டாம்னு சொல்லிடாத என்று ஒவ்வொரு துடிப்பும் சொன்னது.."எனக்கு அன்னிக்கே ஓகே தான். நீங்க என்ன சொல்வீங்களோன்னு கவலையா இருந்தது."."மீனாட்சி. ஐ ம் சாரி. உங்க மனசு புண்படற மாதிரி நான் நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. என்னை நீங்க சரின்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றேன்.."பரவால்லைங்க. என்னை வாங்க போங்கன்னு கூப்பிடாதீங்க. என்னை மீனாட்சி இல்லேனா, எல்லாரும் கூப்பிடறமாதிரி மீனுன்னு கூப்பிடுங்க.".ஃபோனை வைத்தவுடன், இதயம் மறுபடி சீராக இயங்கத் தொடங்கியது. மனதில் 'கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு' பாட்டு ஓடியது.