"டர்ர..டர்ர்… டர்ர…".டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள் பணி!.முதல் நாளே, முதல் வேலையே, எனக்கு வந்தது இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது..நான் தமிழாக்கம் செய்ததை, எடுத்துக் கொண்டு போன ப்யூன், போன கையோடு திரும்பி வந்து என்னை முதன்மை ஆசிரியர் அழைப்பதாகச் சொன்னார்.."என்ன எழுதியிருக்கீங்க?"."இலங்கை போர் செய்தி!"."'ஜாஃப்னா' என்றால் 'ஜாஃப்னா' என்றே எழுதுவதா?"."பின்ன என்ன எழுதணும்?"."'யாழ்ப்பாணம்'னு எழுதணும். சிங்களப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தணும்!"."ஓ… அப்படியா? இனி அப்படியே எழுதறேன் ஸார்!".அடுத்துத் தரப்பட்டதும் இலங்கை போர் செய்தி!.இந்த முறை உஷாராகி விட்டதால், 'பாட்டிக்கோலா' என்ற மாகாணத்தை மிகச் சரியாக 'மட்டக்களப்பு' என்று எழுதிக் கொண்டு போனேன். ஆசிரியர் மேலோட்டமாகப் பார்த்து 'டிக்' அடித்துக் கொடுத்துவிட்டார்..("சபாஷ்!" சொல்லக் கூடாதோ?).அன்றிலிருந்து அந்த நாளிதழில் நான் பணிபுரிந்த அத்தனை வருடமும் இலங்கைப் போர் செய்திகள் என்னிடம் மட்டுமே விசேஷமாகத் தரப்பட்டன..('பெரிய சண்டைக்காரி'ன்னு தெரிந்துவிட்டது போலும்!).அதன்பிறகு உள்நாட்டுப் போர் ஓரளவுத் தணிந்து, சிற்சில உடன்படிக்கைகள் ஏற்பட்டு, கொஞ்சம் அமைதி திரும்பிய சமயம் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது ஓர் பத்திரிகையாளராக!.'கண்டேன் கண்டி'யை என்று ஒரு கட்டுரை பள்ளிப்பாடத்தில் இருந்தது… எழுதியது மு.வரதராசனார் என்று நினைவு! இயற்கை எழிலரசி கோலோச்சும் நாடு. கேரள நாட்டின் தொடர்ச்சியோ என்று நினைக்கும்படி, பாக்கு, தேக்கு, ரப்பர், மிளகு, பலா, வாழை, தேயிலை என அவ்வளவு பசுமை! புலம் பெயர்ந்த உழைப்பாளிகளை, தோட்டத் தொழிலாளிகளை, ஈழத் தமிழர்களை ஆண்டாண்டு காலமாய் வஞ்சித்ததன் விளைவு? வெறும் சுற்றுலாவை மட்டுமே நம்பி ஜீவிக்க வேண்டிய நிலைமை!.தொடர்ந்த யுத்தச் செலவுகள், குடும்ப அரசியல், ஊழல், நிர்வாகக் கோளாறு, ஏதேச்சதிகாரம் கூடவே கொரோனா என எல்லாமே சேர்ந்து மோசமாக்கியதில் அழகான தீவுக்கு அதன் மக்களே 'தீ' வைக்கும் அளவுக்கு மக்கள் போராட்டம் வலுத்துவிட்டது பரிதாபம்!.அரசியல் பிரமுகர்களின் பிரம்மாண்டமான வீடுகள், வெளிநாட்டுக்கார்கள் கொளுத்தப்பட்டன. கொடிய பஞ்சம், பொருளாதார இழப்பு போன்றவற்றால் மாணவர்களும் புத்த பிட்சுகளுமே தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், அந்த வலியின் தீவிரம் அப்படி! "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்" – குறள்தான் நினைவுக்கு வருகிறது!.இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, ராஜபக்சே அண்ட் கோ, வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம். அல்லது ராணுவ அதிகாரத்தால் பதற்றமும் வன்முறையும் கட்டுக்குள் வந்து, சட்டம், ஒழுங்குநிலை நாட்டப்படலாம். உலக வரைப்படத்தில் பார்த்தால், இலங்கையி்ன் அமைப்பே ஒரு சொட்டுக் கண்ணீர் போலத் தோற்றம் தரும். இனி அது மாற வேண்டும். புதிய அரசு தலைமை ஏற்று, இலங்கையில் நல்லாட்சி வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்..அண்டை அசலான் சுபிட்சமாக வாழ்ந்தால்தான் நாம் அமைதியாக வாழ முடியும்..இலங்கை மீளட்டும்… பழைய அழகு மிளிரட்டும்!
"டர்ர..டர்ர்… டர்ர…".டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள் பணி!.முதல் நாளே, முதல் வேலையே, எனக்கு வந்தது இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது..நான் தமிழாக்கம் செய்ததை, எடுத்துக் கொண்டு போன ப்யூன், போன கையோடு திரும்பி வந்து என்னை முதன்மை ஆசிரியர் அழைப்பதாகச் சொன்னார்.."என்ன எழுதியிருக்கீங்க?"."இலங்கை போர் செய்தி!"."'ஜாஃப்னா' என்றால் 'ஜாஃப்னா' என்றே எழுதுவதா?"."பின்ன என்ன எழுதணும்?"."'யாழ்ப்பாணம்'னு எழுதணும். சிங்களப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தணும்!"."ஓ… அப்படியா? இனி அப்படியே எழுதறேன் ஸார்!".அடுத்துத் தரப்பட்டதும் இலங்கை போர் செய்தி!.இந்த முறை உஷாராகி விட்டதால், 'பாட்டிக்கோலா' என்ற மாகாணத்தை மிகச் சரியாக 'மட்டக்களப்பு' என்று எழுதிக் கொண்டு போனேன். ஆசிரியர் மேலோட்டமாகப் பார்த்து 'டிக்' அடித்துக் கொடுத்துவிட்டார்..("சபாஷ்!" சொல்லக் கூடாதோ?).அன்றிலிருந்து அந்த நாளிதழில் நான் பணிபுரிந்த அத்தனை வருடமும் இலங்கைப் போர் செய்திகள் என்னிடம் மட்டுமே விசேஷமாகத் தரப்பட்டன..('பெரிய சண்டைக்காரி'ன்னு தெரிந்துவிட்டது போலும்!).அதன்பிறகு உள்நாட்டுப் போர் ஓரளவுத் தணிந்து, சிற்சில உடன்படிக்கைகள் ஏற்பட்டு, கொஞ்சம் அமைதி திரும்பிய சமயம் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது ஓர் பத்திரிகையாளராக!.'கண்டேன் கண்டி'யை என்று ஒரு கட்டுரை பள்ளிப்பாடத்தில் இருந்தது… எழுதியது மு.வரதராசனார் என்று நினைவு! இயற்கை எழிலரசி கோலோச்சும் நாடு. கேரள நாட்டின் தொடர்ச்சியோ என்று நினைக்கும்படி, பாக்கு, தேக்கு, ரப்பர், மிளகு, பலா, வாழை, தேயிலை என அவ்வளவு பசுமை! புலம் பெயர்ந்த உழைப்பாளிகளை, தோட்டத் தொழிலாளிகளை, ஈழத் தமிழர்களை ஆண்டாண்டு காலமாய் வஞ்சித்ததன் விளைவு? வெறும் சுற்றுலாவை மட்டுமே நம்பி ஜீவிக்க வேண்டிய நிலைமை!.தொடர்ந்த யுத்தச் செலவுகள், குடும்ப அரசியல், ஊழல், நிர்வாகக் கோளாறு, ஏதேச்சதிகாரம் கூடவே கொரோனா என எல்லாமே சேர்ந்து மோசமாக்கியதில் அழகான தீவுக்கு அதன் மக்களே 'தீ' வைக்கும் அளவுக்கு மக்கள் போராட்டம் வலுத்துவிட்டது பரிதாபம்!.அரசியல் பிரமுகர்களின் பிரம்மாண்டமான வீடுகள், வெளிநாட்டுக்கார்கள் கொளுத்தப்பட்டன. கொடிய பஞ்சம், பொருளாதார இழப்பு போன்றவற்றால் மாணவர்களும் புத்த பிட்சுகளுமே தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், அந்த வலியின் தீவிரம் அப்படி! "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்" – குறள்தான் நினைவுக்கு வருகிறது!.இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, ராஜபக்சே அண்ட் கோ, வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம். அல்லது ராணுவ அதிகாரத்தால் பதற்றமும் வன்முறையும் கட்டுக்குள் வந்து, சட்டம், ஒழுங்குநிலை நாட்டப்படலாம். உலக வரைப்படத்தில் பார்த்தால், இலங்கையி்ன் அமைப்பே ஒரு சொட்டுக் கண்ணீர் போலத் தோற்றம் தரும். இனி அது மாற வேண்டும். புதிய அரசு தலைமை ஏற்று, இலங்கையில் நல்லாட்சி வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்..அண்டை அசலான் சுபிட்சமாக வாழ்ந்தால்தான் நாம் அமைதியாக வாழ முடியும்..இலங்கை மீளட்டும்… பழைய அழகு மிளிரட்டும்!