-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு .கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை அவர். முதுகலை உயிரியல் பயின்றவர். முதுகலைத் தமிழிலும் தேர்ச்சிப் பெற்றவர். பள்ளி நாட்களில் இருந்தே அவருக்கு வினோதமான எண்ணம், சங்கத் தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப் பெற்றிருந்தன, அது போல திருக்குறளை மா இலைகளில் எழுதிப் பதிவு செய்திட வேண்டும் என்று. அதற்காகப் பல வருடங்கள் காத்திருந்து, சமீபத்தில் தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்..தொட்டியம் அருகே கோடியம்பாளையம் என்கிற கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு ஆசிரியை அமுதா. இருபத்தியோரு ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார். அவரிடம் நாம் பேசியதிலிருந்து சில துளிகள்….உங்களுக்கு மாவிலையில் திருக்குறள் எழுத எண்ணம் எப்படி ஏற்பட்டது? .என் தந்தை தமிழாசிரியர், அதனால் எனக்கு தமிழ் மீது பற்று அதிகம். நானும் முதுகலைத் தமிழ் பயின்றுள்ளேன். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் நம் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொருட்டு, ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து சேகரித்து அரும்பாடு பட்டுள்ளதாகப் படித்துள்ளேன். அதுபோல திருவள்ளுவர் நமக்கு அளித்துள்ள திருக்குறளை மா இலைகளில் எழுதிப் பதிவு செய்திட வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். புதுச்சேரி உலகத் திருக்குறள் மையத்திடம் எனது ஆர்வத்தைத் தெரிவித்தேன்..இதற்கென மா இலைகளை ஏன் தேர்வு செய்தீர்கள்? .பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதிப் பதிவு செய்துள்ளார்கள். அதுபோல நான் செய்திட வேண்டாம், வேறு புதிதாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்போது தான் எனக்கு இந்த மா இலையில் எழுதுகின்ற எண்ணம் தோன்றியது. நம் தமிழர் மரபுகளில், திருவிழாக்களில், வீடுகளில் சுப நிகழ்வுகளில் மா இலை மிக மிக முக்கியமானது. பெருமை வாய்ந்தது. அதனால் மா இலைகளில் அத்தனை திருக்குறளையும் எழுதிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன்..இதற்கென மா இலைகளை சேகரித்தேன். இலைகளின் இருபுறமும் சேதாரம் இல்லாத இலைகள். அதிலும் எழுதுவதற்கு சமன்பாடான இலைகள். அதுபோன்ற இலைகளைச் சேகரித்து அதிலிருந்தும் எழுதுவதற்கு வசதியான நீளமான இலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதன் பின்னரே அந்த உலகத் திருக்குறள் மையத்துக்கு தகவல் தெரிவித்தேன்..இந்தச் சாதனையை எங்கு நிகழ்த்தினீர்கள்? .புதுச்சேரி உலகத் திருக்குறள் மையத்தினர் இதனை என் வீட்டில் இருந்த படியே நிகழ்த்துவதற்கு அனுமதித்திருந்தனர். ஆன்லைனில் கூகுள் மீட்டில் இருபத்தி நான்கு மணி நேரக் கண்காணிப்பில் இதனை நிகழ்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என் வீட்டில் குறிப்பிட்ட நாளில் இதற்கு நான் தயாரானேன். நீள நீளமான மா இலைகள் எடுத்து வைத்துக் கொண்டேன். திருக்குறள் புத்தகம் பார்த்துப் பார்த்து எழுதினேன். வரிசை எண் எழுதி ஒவ்வொரு திருக்குறளையும் வரிசையாக மா இலைகளில் எழுதினேன். ஒன்றிலிருந்து ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் ஒன்று விடாமல் எழுதினேன். சிடி மார்க்கர் பென் கொண்டு எழுதினேன். மா இலைகளில் நான் எழுதிய திருக்குறள் எழுத்துகள் தண்ணீர் பட்டாலும் அது அழியாது. எனக்கு இதற்கு முப்பது மா இலைகள் ஆகின. இருபது மணி நேரம் ஆனது. இடைவிடாமல் எழுதினேன்..அந்த இருபது மணி நேரத்தில் மூன்று தடவை பழச்சாறுகள் மட்டும் அருந்தினேன். இருபது மணி நேரத்தில் ஒய்வு ஏதும் எடுத்துக் கொள்ள வில்லை. மார்ச் மாதம் பன்னிரெண்டாம் தேதி இது நிகழ்ந்தது. மார்ச் இருபதாம் தேதி இந்த உலக சாதனைக்கான விருதினை, புதுச்சேரி உலகத் திருக்குறள் மையம் எனக்கு வழங்கியது. எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறள் எழுதப்பட்ட மா இலைகள் அத்தனையும் பொக்கிஷம் போல நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு .கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை அவர். முதுகலை உயிரியல் பயின்றவர். முதுகலைத் தமிழிலும் தேர்ச்சிப் பெற்றவர். பள்ளி நாட்களில் இருந்தே அவருக்கு வினோதமான எண்ணம், சங்கத் தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப் பெற்றிருந்தன, அது போல திருக்குறளை மா இலைகளில் எழுதிப் பதிவு செய்திட வேண்டும் என்று. அதற்காகப் பல வருடங்கள் காத்திருந்து, சமீபத்தில் தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்..தொட்டியம் அருகே கோடியம்பாளையம் என்கிற கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு ஆசிரியை அமுதா. இருபத்தியோரு ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார். அவரிடம் நாம் பேசியதிலிருந்து சில துளிகள்….உங்களுக்கு மாவிலையில் திருக்குறள் எழுத எண்ணம் எப்படி ஏற்பட்டது? .என் தந்தை தமிழாசிரியர், அதனால் எனக்கு தமிழ் மீது பற்று அதிகம். நானும் முதுகலைத் தமிழ் பயின்றுள்ளேன். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் நம் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொருட்டு, ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து சேகரித்து அரும்பாடு பட்டுள்ளதாகப் படித்துள்ளேன். அதுபோல திருவள்ளுவர் நமக்கு அளித்துள்ள திருக்குறளை மா இலைகளில் எழுதிப் பதிவு செய்திட வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். புதுச்சேரி உலகத் திருக்குறள் மையத்திடம் எனது ஆர்வத்தைத் தெரிவித்தேன்..இதற்கென மா இலைகளை ஏன் தேர்வு செய்தீர்கள்? .பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதிப் பதிவு செய்துள்ளார்கள். அதுபோல நான் செய்திட வேண்டாம், வேறு புதிதாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்போது தான் எனக்கு இந்த மா இலையில் எழுதுகின்ற எண்ணம் தோன்றியது. நம் தமிழர் மரபுகளில், திருவிழாக்களில், வீடுகளில் சுப நிகழ்வுகளில் மா இலை மிக மிக முக்கியமானது. பெருமை வாய்ந்தது. அதனால் மா இலைகளில் அத்தனை திருக்குறளையும் எழுதிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன்..இதற்கென மா இலைகளை சேகரித்தேன். இலைகளின் இருபுறமும் சேதாரம் இல்லாத இலைகள். அதிலும் எழுதுவதற்கு சமன்பாடான இலைகள். அதுபோன்ற இலைகளைச் சேகரித்து அதிலிருந்தும் எழுதுவதற்கு வசதியான நீளமான இலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதன் பின்னரே அந்த உலகத் திருக்குறள் மையத்துக்கு தகவல் தெரிவித்தேன்..இந்தச் சாதனையை எங்கு நிகழ்த்தினீர்கள்? .புதுச்சேரி உலகத் திருக்குறள் மையத்தினர் இதனை என் வீட்டில் இருந்த படியே நிகழ்த்துவதற்கு அனுமதித்திருந்தனர். ஆன்லைனில் கூகுள் மீட்டில் இருபத்தி நான்கு மணி நேரக் கண்காணிப்பில் இதனை நிகழ்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என் வீட்டில் குறிப்பிட்ட நாளில் இதற்கு நான் தயாரானேன். நீள நீளமான மா இலைகள் எடுத்து வைத்துக் கொண்டேன். திருக்குறள் புத்தகம் பார்த்துப் பார்த்து எழுதினேன். வரிசை எண் எழுதி ஒவ்வொரு திருக்குறளையும் வரிசையாக மா இலைகளில் எழுதினேன். ஒன்றிலிருந்து ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் ஒன்று விடாமல் எழுதினேன். சிடி மார்க்கர் பென் கொண்டு எழுதினேன். மா இலைகளில் நான் எழுதிய திருக்குறள் எழுத்துகள் தண்ணீர் பட்டாலும் அது அழியாது. எனக்கு இதற்கு முப்பது மா இலைகள் ஆகின. இருபது மணி நேரம் ஆனது. இடைவிடாமல் எழுதினேன்..அந்த இருபது மணி நேரத்தில் மூன்று தடவை பழச்சாறுகள் மட்டும் அருந்தினேன். இருபது மணி நேரத்தில் ஒய்வு ஏதும் எடுத்துக் கொள்ள வில்லை. மார்ச் மாதம் பன்னிரெண்டாம் தேதி இது நிகழ்ந்தது. மார்ச் இருபதாம் தேதி இந்த உலக சாதனைக்கான விருதினை, புதுச்சேரி உலகத் திருக்குறள் மையம் எனக்கு வழங்கியது. எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறள் எழுதப்பட்ட மா இலைகள் அத்தனையும் பொக்கிஷம் போல நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.