மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை!.ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள்..ஏன்? என்று ரமணர் கேட்டார்.அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம் சாப்பிட்டபிறகு கடைசியில்தான் அவளுக்கு சாப்பாடு போட வேண்டுமென்றார்..உடனே ரமணர், அவளுக்கு பசிக்காதா? அவளும் நம்மைப் போன்றவள்தானே! ஒருவரை பட்டினியிட்டு மற்றவர் சாப்பிடுவது பாவம். மேலும் மாதவிடாய் என்பது அவளது குற்றமில்லை. அது இயற்கையின் நியதி. அவளுக்கும் உணவு பரிமாறுங்கள். இங்கு அப்படி ஆசாரம் உள்ளவர்கள் ஆட்சேபித்தால் அவர்கள் எழுந்து போகலாம். மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை என்றார்.-ச.லெட்சுமி, செங்கோட்டை.…………………………………….தேவேந்திரன் செய்யும் பூஜை.திருவாரூர் தியாகராஜ சுவாமி தேவ சபையில் தேவேந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம். எனவே இங்குள்ள குருக்கள் பூஜை செய்யும்போது நீண்ட அங்கி மற்றும் தலைப்பாகை அணிந்து கொள்கிறார். இதற்கு திருவந்திக் காப்பு என்று பெயர்.-பே. சண்முகம், செங்கோட்டை.…………………………………….டிப்ஸ்…டிப்ஸ்!.அப்பளம், வடகம் போன்றவற்றின் மேல் சிறிது மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி தூவி வைத்துவிட்டால் எறும்புகளோ வேறு பூச்சிகளோ நெருங்காது.அரிசி டிரம்மில் சிறிது வசம்பு அல்லது வேப்பிலை போட்டு வைத்தால் வண்டுகள் வராது..மஞ்சள் கிழங்குகளில் சிறிது விபூதி சேர்த்து வைத்தால் வண்டு பிடிக்காது.சமையல் சாமான்கள் வைக்கும் இடத்தில் சுக்கு அல்லது வசம்புத் துண்டு போட்டு வைத்தால் புழு, பூச்சிகள் வராது.பருப்பு வைக்கும் டப்பாக்களில் இஞ்சித் துண்டையோ, வெள்ளைப் பூண்டையோ போட்டு வைத்தால் எந்தப் பூச்சியும் நெருங்கி வராது.சமையலறை மூலை முடுக்குகளில் சிறிதளவு டர்பன்டைன் ஸ்ப்ரே செய்தால் பூச்சித் தொல்லை இருக்காது.தனியாவை சூடான வாணலியில் வறுத்துவிட்டு டப்பாவில் வைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது.-ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.. …………………………………….சமையல் டிப்ஸ்!.பொரியல் வதக்கும்போது எண்ணெய் கூடியிருப்பதாகத் தெரிந்தால் சிறிது கொள்ளு மாவைத் தூவினால் அது எண்ணெயை உறிஞ்சிவிடும்.சப்பாத்தி மாவில் அருகம்புல் சாறு கலந்துகொண்டால் மென்மையாக வருவதோடு, தாது உப்புகள், வைட்டமின் சத்துகளும் கிடைக்கும்.கோதுமை மாவுடன், சிறிது அரிசி மாவு அல்லது சாதம் வடித்த கஞ்சி சேர்த்துப் பிசைந்தால் பூரி நீண்ட நேரம் கரகரப்பாக இருக்கும்..சுண்டைக்காயை அரிசி களைந்த நீரில் ஊற வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.-ஆர். பாரதி, ஸ்ரீரங்கம். .……………………………………. அன்புக்கு இனம் தேவையில்லை!.மனிதர்களில்கூட இனம் பார்த்து பழகக் கூடிய மனிதர்கள் இருக்கும் இந்த காலத்தில், இனம் மாறிய இரு உயிரணங்கள் இணை பிரியாமல் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எங்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் சிறு குட்டை ஒன்று அமைத்து, அதில் ஒரு வாத்தை நீந்த விட்டிருக்கிறார்கள் . அதைச் சுற்றி ஒரு வேலி போட்டு, கூடவே ஒரு சேவலும் அங்கு வளர்க்கிறார்கள். இரண்டும் அந்த சிறு குட்டையையே வலம் வந்து கொண்டிருக்கும். "இதில் எங்களுக்கு ஒரு சின்ன மைன்ட் டைவர்சன் கிடைக்கிறது," என்கிறார்கள் பணியாளர்கள். ஒரு நாள் என் மகளுடன் பெட்ரோல் போடப்போன போது, வாத்து கத்திக்கொண்டே குட்டையையே சுத்தி சுத்தி வந்தது.."வாத்து ஏன் இப்படி இடைவிடாது கத்திட்டே இருக்கு? " என்று அலுவலரிடம் கேட்டேன்.."இதனுடைய ஜோடி செத்துப் போச்சு, "என்றார்..நான் சற்று சிந்தித்த வண்ணம், "ஒரு வாத்து தானே இருந்தது, இன்னொன்று சேவல் தானே?" என்றேன் .."ஏங்க அன்புக்கு இனம் தேவையில்லையே! அது இல்லாமல் இது சாப்பிட கூட மாட்டேங்குது. அந்த சேவலைத் தேடுது, "என்றார். அதை சொல்லும் போதே அவர் குரலில் ஒரு சோகம். எங்களுக்கும்தான். சென்ற வாரம் என் மகளுடன் அந்த பெட்ரோல் பங்குக்கு மீண்டும் சென்றிருந்தேன். அந்த வாத்து அமைதியாக வலம் கொண்டிருந்தது. காரணம், இறந்து போன சேவல் மாதிரியே ஒரு சேவலை உலவ விட்டிருக்கிறார்கள் அங்கே. அது கொக்கரக்கோ என்று கத்தும் போது, இது கொக்…கொக்… என்று அது பாஷையில் ஏதோ கத்திக்கொண்டே அதனருகில் செல்கிறது. பார்க்க பரவசமாயிருந்தது. வாயில்லா ஜீவன்களுக்கு, ஜீவனுக்குள் வாய் இருக்கிறது!–ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்..…………………………………….விடுகதைகள்!.1) அடிமேல் அடிபட்டும் அசராத சின்ன பையன் குறி வைத்த இடம் பார்த்து தப்பாமல் போய் சேருவான். அது என்ன?2) ஈரப் புடைவைக்காரி இருபத்தியெட்டு சுற்றுக்காரி. அது என்ன?3) உலர்ந்த காம்பிலே விரிந்த பூ. அது என்ன?4) இரு கொம்புகள் உண்டு, மாடல்ல… வேகமாக ஓடும், மானல்ல… கால்கள் உண்டு. மனிதனுமல்ல… அது என்ன?.விடைகள்; 1. கடிதம் 2.வெங்காயம் 3. குடை 4. சைக்கிள்– மு. உமாமகேஸ்வரி, செங்கோட்டை
மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை!.ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள்..ஏன்? என்று ரமணர் கேட்டார்.அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம் சாப்பிட்டபிறகு கடைசியில்தான் அவளுக்கு சாப்பாடு போட வேண்டுமென்றார்..உடனே ரமணர், அவளுக்கு பசிக்காதா? அவளும் நம்மைப் போன்றவள்தானே! ஒருவரை பட்டினியிட்டு மற்றவர் சாப்பிடுவது பாவம். மேலும் மாதவிடாய் என்பது அவளது குற்றமில்லை. அது இயற்கையின் நியதி. அவளுக்கும் உணவு பரிமாறுங்கள். இங்கு அப்படி ஆசாரம் உள்ளவர்கள் ஆட்சேபித்தால் அவர்கள் எழுந்து போகலாம். மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை என்றார்.-ச.லெட்சுமி, செங்கோட்டை.…………………………………….தேவேந்திரன் செய்யும் பூஜை.திருவாரூர் தியாகராஜ சுவாமி தேவ சபையில் தேவேந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம். எனவே இங்குள்ள குருக்கள் பூஜை செய்யும்போது நீண்ட அங்கி மற்றும் தலைப்பாகை அணிந்து கொள்கிறார். இதற்கு திருவந்திக் காப்பு என்று பெயர்.-பே. சண்முகம், செங்கோட்டை.…………………………………….டிப்ஸ்…டிப்ஸ்!.அப்பளம், வடகம் போன்றவற்றின் மேல் சிறிது மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி தூவி வைத்துவிட்டால் எறும்புகளோ வேறு பூச்சிகளோ நெருங்காது.அரிசி டிரம்மில் சிறிது வசம்பு அல்லது வேப்பிலை போட்டு வைத்தால் வண்டுகள் வராது..மஞ்சள் கிழங்குகளில் சிறிது விபூதி சேர்த்து வைத்தால் வண்டு பிடிக்காது.சமையல் சாமான்கள் வைக்கும் இடத்தில் சுக்கு அல்லது வசம்புத் துண்டு போட்டு வைத்தால் புழு, பூச்சிகள் வராது.பருப்பு வைக்கும் டப்பாக்களில் இஞ்சித் துண்டையோ, வெள்ளைப் பூண்டையோ போட்டு வைத்தால் எந்தப் பூச்சியும் நெருங்கி வராது.சமையலறை மூலை முடுக்குகளில் சிறிதளவு டர்பன்டைன் ஸ்ப்ரே செய்தால் பூச்சித் தொல்லை இருக்காது.தனியாவை சூடான வாணலியில் வறுத்துவிட்டு டப்பாவில் வைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது.-ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.. …………………………………….சமையல் டிப்ஸ்!.பொரியல் வதக்கும்போது எண்ணெய் கூடியிருப்பதாகத் தெரிந்தால் சிறிது கொள்ளு மாவைத் தூவினால் அது எண்ணெயை உறிஞ்சிவிடும்.சப்பாத்தி மாவில் அருகம்புல் சாறு கலந்துகொண்டால் மென்மையாக வருவதோடு, தாது உப்புகள், வைட்டமின் சத்துகளும் கிடைக்கும்.கோதுமை மாவுடன், சிறிது அரிசி மாவு அல்லது சாதம் வடித்த கஞ்சி சேர்த்துப் பிசைந்தால் பூரி நீண்ட நேரம் கரகரப்பாக இருக்கும்..சுண்டைக்காயை அரிசி களைந்த நீரில் ஊற வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.-ஆர். பாரதி, ஸ்ரீரங்கம். .……………………………………. அன்புக்கு இனம் தேவையில்லை!.மனிதர்களில்கூட இனம் பார்த்து பழகக் கூடிய மனிதர்கள் இருக்கும் இந்த காலத்தில், இனம் மாறிய இரு உயிரணங்கள் இணை பிரியாமல் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எங்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் சிறு குட்டை ஒன்று அமைத்து, அதில் ஒரு வாத்தை நீந்த விட்டிருக்கிறார்கள் . அதைச் சுற்றி ஒரு வேலி போட்டு, கூடவே ஒரு சேவலும் அங்கு வளர்க்கிறார்கள். இரண்டும் அந்த சிறு குட்டையையே வலம் வந்து கொண்டிருக்கும். "இதில் எங்களுக்கு ஒரு சின்ன மைன்ட் டைவர்சன் கிடைக்கிறது," என்கிறார்கள் பணியாளர்கள். ஒரு நாள் என் மகளுடன் பெட்ரோல் போடப்போன போது, வாத்து கத்திக்கொண்டே குட்டையையே சுத்தி சுத்தி வந்தது.."வாத்து ஏன் இப்படி இடைவிடாது கத்திட்டே இருக்கு? " என்று அலுவலரிடம் கேட்டேன்.."இதனுடைய ஜோடி செத்துப் போச்சு, "என்றார்..நான் சற்று சிந்தித்த வண்ணம், "ஒரு வாத்து தானே இருந்தது, இன்னொன்று சேவல் தானே?" என்றேன் .."ஏங்க அன்புக்கு இனம் தேவையில்லையே! அது இல்லாமல் இது சாப்பிட கூட மாட்டேங்குது. அந்த சேவலைத் தேடுது, "என்றார். அதை சொல்லும் போதே அவர் குரலில் ஒரு சோகம். எங்களுக்கும்தான். சென்ற வாரம் என் மகளுடன் அந்த பெட்ரோல் பங்குக்கு மீண்டும் சென்றிருந்தேன். அந்த வாத்து அமைதியாக வலம் கொண்டிருந்தது. காரணம், இறந்து போன சேவல் மாதிரியே ஒரு சேவலை உலவ விட்டிருக்கிறார்கள் அங்கே. அது கொக்கரக்கோ என்று கத்தும் போது, இது கொக்…கொக்… என்று அது பாஷையில் ஏதோ கத்திக்கொண்டே அதனருகில் செல்கிறது. பார்க்க பரவசமாயிருந்தது. வாயில்லா ஜீவன்களுக்கு, ஜீவனுக்குள் வாய் இருக்கிறது!–ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்..…………………………………….விடுகதைகள்!.1) அடிமேல் அடிபட்டும் அசராத சின்ன பையன் குறி வைத்த இடம் பார்த்து தப்பாமல் போய் சேருவான். அது என்ன?2) ஈரப் புடைவைக்காரி இருபத்தியெட்டு சுற்றுக்காரி. அது என்ன?3) உலர்ந்த காம்பிலே விரிந்த பூ. அது என்ன?4) இரு கொம்புகள் உண்டு, மாடல்ல… வேகமாக ஓடும், மானல்ல… கால்கள் உண்டு. மனிதனுமல்ல… அது என்ன?.விடைகள்; 1. கடிதம் 2.வெங்காயம் 3. குடை 4. சைக்கிள்– மு. உமாமகேஸ்வரி, செங்கோட்டை