படங்கள்: பிள்ளை."உன் புருஷனுக்கு சமைப்பது 'கைவந்த கலை'ங்கிறியே! ரொம்ப வருஷமா சமைத்திருக்கிறாரா?"."இல்லை! நேத்துதான் முதன் முதலா சமைச்சார்! அதுலேயே கையில கொதிக்க, கொதிக்க சாம்பாரை கொட்டிக்கிட்டு, 'கைவெந்த கலை' ஆயிடுச்சு!.-சம்பத்குமாரி, பொன்மலை.…………………………………………."சர்வர் சரியா கிடைக்காததால தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம்கிறாரே! அவர் என்ன ஓட்டல் வச்சிருக்காரா?"."இல்லை. IT கம்பெனி வச்சிருக்கார்!".-சம்பத்குமாரி, பொன்மலை.…………………………………………."அந்த இளைஞர் அப்படி என்ன கேட்டார்…? நம்ம பேங்க் மானேஜர் கடுப்பாயிட்டார்?"."ஸ்டார்ட் – அப் நிறுவனங்களுக்கு கடன் தர்ற மாதிரி, ஸ்டார்ட் – அப் காதலுக்கு கடன் தர முடியுமான்னு கேட்டாராம்!".-சம்பத்குமாரி, பொன்மலை.………………………………………….என்னது? "சாப்பிடற பண்டங்கள் ருசியே தெரியாமல் மண்ணு மாதிரி இருக்கா?"."முப்பது வருஷமா அப்படித்தான் இருக்கு டாக்டர். கல்யாணம் ஆனதில் இருந்து!".– ஆர். யோகமித்ரா, சென்னை.…………………………………………."புலவரே… முதலில் உமது எழுத்தாணியை கூர் தீட்டும்."."ஏன் மன்னா?"."ஓலையில் எழுத்தே பதியவில்லை".– ஆர். யோகமித்ரா, சென்னை.…………………………………………."என்னது இட்லியில மல்லிகைப்பூ வாசனை வருது?"."நீங்கதானே இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்கணும்னு சொன்னீங்க!.– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.…………………………………………."என்ன புது டிபன் செய்தாலும் முதல்ல என் மாமியாருக்கக் கொடுப்பேன்!."டேஸ்ட் பண்ணவா?"."இல்ல டெஸ்ட் பண்ண!.– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்
படங்கள்: பிள்ளை."உன் புருஷனுக்கு சமைப்பது 'கைவந்த கலை'ங்கிறியே! ரொம்ப வருஷமா சமைத்திருக்கிறாரா?"."இல்லை! நேத்துதான் முதன் முதலா சமைச்சார்! அதுலேயே கையில கொதிக்க, கொதிக்க சாம்பாரை கொட்டிக்கிட்டு, 'கைவெந்த கலை' ஆயிடுச்சு!.-சம்பத்குமாரி, பொன்மலை.…………………………………………."சர்வர் சரியா கிடைக்காததால தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம்கிறாரே! அவர் என்ன ஓட்டல் வச்சிருக்காரா?"."இல்லை. IT கம்பெனி வச்சிருக்கார்!".-சம்பத்குமாரி, பொன்மலை.…………………………………………."அந்த இளைஞர் அப்படி என்ன கேட்டார்…? நம்ம பேங்க் மானேஜர் கடுப்பாயிட்டார்?"."ஸ்டார்ட் – அப் நிறுவனங்களுக்கு கடன் தர்ற மாதிரி, ஸ்டார்ட் – அப் காதலுக்கு கடன் தர முடியுமான்னு கேட்டாராம்!".-சம்பத்குமாரி, பொன்மலை.………………………………………….என்னது? "சாப்பிடற பண்டங்கள் ருசியே தெரியாமல் மண்ணு மாதிரி இருக்கா?"."முப்பது வருஷமா அப்படித்தான் இருக்கு டாக்டர். கல்யாணம் ஆனதில் இருந்து!".– ஆர். யோகமித்ரா, சென்னை.…………………………………………."புலவரே… முதலில் உமது எழுத்தாணியை கூர் தீட்டும்."."ஏன் மன்னா?"."ஓலையில் எழுத்தே பதியவில்லை".– ஆர். யோகமித்ரா, சென்னை.…………………………………………."என்னது இட்லியில மல்லிகைப்பூ வாசனை வருது?"."நீங்கதானே இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்கணும்னு சொன்னீங்க!.– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.…………………………………………."என்ன புது டிபன் செய்தாலும் முதல்ல என் மாமியாருக்கக் கொடுப்பேன்!."டேஸ்ட் பண்ணவா?"."இல்ல டெஸ்ட் பண்ண!.– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்